Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mennulagam
Mennulagam
Mennulagam
Ebook229 pages3 hours

Mennulagam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Nagasubramanian Chokkanathan (born January 17) better known by his pen name N.Chokkan is a Tamil Writer who has written two novels and nearly 100 short stories. His works has been translated into other Indian languages. Apart from this, he has written columns in several Tamil magazines. His interest for writing came from his blind aunt for whom he used to read a lot of books. His love for Books then made him to write few detective stories,which are not yet published.His first short story was published in 1997. His entry into Non-fiction area was kick started by a publishing house approaching him to write Biography of Sachin Tendulkar.He then wrote Biographies of famous Businessmen,Politicians and people who shaped the world.The list includes Narayana murthy, Azim Premji, Dhirubhai Ambani, Walt Disney, Charlie Chaplin,to mention a few.
Languageதமிழ்
Release dateJan 6, 2017
ISBN6580105001801
Mennulagam

Read more from N. Chokkan

Related to Mennulagam

Related ebooks

Reviews for Mennulagam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mennulagam - N. Chokkan

    http://www.pustaka.co.in

    மென்னுலகம்

    Mennulagam

    Author:

    என். சொக்கன்

    N. Chokkan

    For more books
    http://www.pustaka.co.in/home/author/n-chokkan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    மென்னுலகம்

    என். சொக்கன்

    1

    என் மகள் நங்கைக்கு வயது ஆறு. ஒன்றாம் வகுப்பு படிக்கிறாள்.

    பல மாதங்களுக்கு முன்னால் அவளைப் பள்ளியில் சேர்க்கச் சென்றபோது, புத்தகப் பட்டியலில் 'கம்ப்யூட்டர் சைன்ஸ்' என்று பார்த்து ஆச்சர்யப்பட்டேன். 'ஒண்ணாங்கிளாஸ் பிள்ளைக்குக் கம்ப்யூட்டர் சொல்லித்தரப்போறாங்களா? எப்படி? எதுக்கு?'

    நண்பர்களிடம் விசாரித்தபோது 'அதுவே லேட்' என்றார்கள். 'என் பையன், மூணு வயசுகூட ஆகலை, இப்பவே கம்ப்யூட்டர்லயும் டச் ஃபோன்லயும் பூந்து விளையாடறான்' என்று பெருமைப்பட்டுக்கொண்டார் ஒருவர்.

    எனக்கென்னவோ இது சரியாகப் படவில்லை. நங்கையின் கம்ப்யூட்டர் வகுப்புகளில் என்ன சொல்லித்தருகிறார்கள் என்று கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன்.

    முதலில் 'கம்ப்யூட்டர் என்பது மானிட்டர், கீபோர்ட், மவுஸ், சிபியு ஆகியவற்றைக் கொண்ட ஒரு சாதனம்' என்கிற ரேஞ்சுக்குத் தொடங்கினார்கள். அதன் படங்களைக் காண்பித்துக் கலர் அடிக்கச் சொன்னார்கள். அப்புறம் கம்ப்யூட்டரிலேயே  படம் வரைவதற்கான 'பெயின்ட்' என்ற மென்பொருளைச் சொல்லிக்கொடுத்தார்கள்.

    பத்தே நாள். நங்கைக்குப் பெயின்ட் பித்துப் பிடித்துவிட்டது. பள்ளியில்மட்டுமின்றி எங்களுடைய வீட்டுக் கம்ப்யூட்டரையும் பறிமுதல் செய்துகொண்டு விதவிதமான ஓவியங்களைத் தீட்டிக் காண்பித்தாள். ஒவ்வோர் ஓவியத்திலும் குறைந்தபட்சம் நாற்பது வண்ணங்களையாவது அள்ளித் தெறித்தாகவேண்டும் என்கிற ஆவேசமான இலக்கோடு செயல்பட்டாள் அவள்.

    போனவாரத்தில் ஒருநாள், நான் வேலை செய்கிற கணினி மென்பொருள் நிறுவனத்தில் ஏதோ விழாக் கொண்டாடினார்கள். அதன் ஒரு பகுதியாக எல்லோரும் அவரவர் குழந்தைகளை அலுவலகத்துக்கு அழைத்துவருமாறு கேட்டுக்கொண்டார்கள். நான் நங்கையை அழைத்துச்சென்றேன்.

    அடுத்த ஒரு மணி நேரம், நங்கையிடம் பேச்சு மூச்சு இல்லை. அமைதியாக எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்தாள். வேலை செய்கிறவர்களை உற்றுக் கவனித்தாள். காலியாக இருந்த கம்ப்யூட்டர்களின் மவுஸ்களை நகர்த்திவைத்தாள். கீபோர்ட்களில் தன் பெயரைத் தட்டிப் பார்த்தாள். கடைசியாக என்னிடம் வந்து ஒரு கேள்வி கேட்டாள். 'அப்பா, இந்த ஆஃபீஸ்ல எத்தனை பேர் வேலை பார்க்கறீங்க?'

    'எழுபது, எண்பது பேர் இருக்கும். ஏன் கேட்கிறே?'

    'டெய்லி இத்தனை பேரும் வரையற படத்தையெல்லாம் நீங்க என்ன செய்வீங்க?'

    இதை ஓர் ஆறு வயதுப் பெண்ணின் அப்பாவித்தனமான கேள்வியாக ஒதுக்கிவிடமுடியாது. கம்ப்யூட்டரைப் படம் வரைவதற்கான கருவியாகமட்டுமே அறிந்துவைத்திருக்கும் நங்கைக்கு, எங்கள் அலுவலகத்தில் உள்ள எல்லோரும் ஓவியர்களாகத் தெரிந்திருக்கிறார்கள். நாங்கள் அதே கம்ப்யூட்டரை வைத்து வேறு வேலைகளையும் செய்யக்கூடும் என்று அவளால் கற்பனைகூடச் செய்யமுடியவில்லை.

    கிட்டத்தட்ட இதேமாதிரி மனோநிலையோடுதான் நம் சமூகம் சாஃப்ட்வேர் ஊழியர்களைப் பார்க்கிறது. 'அவங்களுக்கென்னப்பா? நாள்முழுக்கக் கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து லொட்டுலொட்டுன்னு தட்டிட்டு எழுந்தா கை மேல சம்பளம், ராத்திரி முழுக்கப் பார்ட்டி, சனி, ஞாயிறுல ஊர் சுத்தறது, ஜாலியாச் செலவழிக்கறது, காசை அள்ளி வீசறது, அவ்ளோதானே?' என்று தங்களுடைய கண்ணாடியைப் போட்டுக்கொண்டு இவர்களைப் பார்க்கிறது.

    உண்மையில், சாஃப்ட்வேர் துறையில் அப்படி என்னதான் நடக்கிறது? அங்கே இருக்கும் மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள்? அவர்கள் என்னமாதிரியான வேலைகளைச் செய்கிறார்கள்? அவர்களுக்கும் பிரச்னைகள் உண்டா? ஆம் எனில் என்னவிதமான பிரச்னைகள்? உலக மார்க்கெட்டை நம்பி வாழும் உள்ளூர் ஜீவன்களா இவர்கள்? என்றைக்காவது அமெரிக்கா விழித்தெழுந்து நமக்குத் தடா போட்டுவிட்டால் உடனே சாஃப்ட்வேர் மக்களெல்லாம் தெருவுக்கு வந்து சட்டி, பானை விற்க ஆரம்பித்துவிடுவார்களா? இவர்களால்தான் ஊரில் விலைவாசி ஏறுகிறது என்று சொல்கிறார்களே, அது உண்மையா? இவர்களால் சமுதாயத்தில் ஒழுக்கக் குறைபாடு ஏற்படுவதாகப் பேசிக்கொள்கிறார்களே, அது உண்மையா? சாஃப்ட்வேர் மக்களுக்குமட்டும் அவ்வளவு சம்பளம், சலுகைகள் ஏன்? இவர்களால் நாட்டுக்கு அன்னியச் செலவாணி குவிகிறது என்பதைத்தவிர வேறு பிரயோஜனம் உண்டா? நாமும் சாஃப்ட்வேர் பக்கம் ஒதுங்கவேண்டுமென்றால் என்ன வழி? ஒருவேளை எனக்கு சாஃப்ட்வேர் வேலை வேண்டாம் என்று நான் மறுத்தால் உலகம் என்னைத் தீண்டத்தகாதவனாக ஒதுக்கிவிடுமா? எல்லோரும் சாஃப்ட்வேர், சாஃப்ட்வேர் என்று அலைந்துகொண்டிருந்தால் மற்ற வேலைகளைச் செய்வது யார்?

    இதையெல்லாம் இந்தத் தொடரில் விரிவாகப் பேசப்போகிறோம். இந்த மென்னுலகத்தை அதற்குள்ளிருந்து ஒரு பார்வை, சமுதாயத்தால் அதன்மீது ஏற்றிவைக்கப்படும் காவியத்தன்மை, அல்லது வில்லத்தனம் இரண்டையும் ஒதுக்கிவிட்டு 'இவங்க இப்படிதான்' என்று பிட்டுக்காண்பித்துவிடுகிற முயற்சி.

    நம் ஊரில் சாஃப்ட்வேர் ஊழியர் என்றாலே அவர்களுக்குச் சில அடையாளங்களை வைத்திருப்பார்கள். டிஷர்ட், ஜீன்ஸ், நுனி நாக்கு ஆங்கிலம், பேச்சில், உடல்மொழியில் ஓர் அலட்சியம், எல்லோர்முன்னாலும் கால் மேல் கால் போட்டு உட்கார்வார்கள், ஆண், பெண் வித்தியாசமில்லாமல் ஈஷிக்கொள்வார்கள், கையில் எந்நேரமும் மொபைல் ஃபோன், ஐபாட், டாப்லட் கம்ப்யூட்டர், இன்னபிற அதிநவீன சாதனங்கள், சகலவகைக் கம்ப்யூட்டரின் உச்சிமுதல் பாதம்வரை இவர்களுக்குத் தெரிந்திருக்கும், திரையைப் பார்த்து டைப் செய்ய ஆரம்பித்தார்கள் என்றால் எந்த ராஜா எந்தப் பட்டணம் போனாலும் திரும்பிப் பார்க்கமாட்டார்கள், சமூகப் பிரச்னைகளில் தலையிடமாட்டார்கள், தங்களுக்கே ஏதாவது சொந்தப் பிரச்னை என்றால்கூட, அதைப் பணத்தாலே அடிக்கப் பார்ப்பார்கள், தங்களுடைய பேங்க் அக்கவுன்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதே இவர்களுக்குத் தெரியாது, ஆகவே கண்டபடி இஷ்டம்போல் செலவழிப்பார்கள், காசு தீர்ந்துவிட்டாலும் க்ரெடிட் கார்டில் கடன் வாங்கித் தள்ளுவார்கள், சின்ன வாய்ப்புக் கிடைத்தாலும் சரேலென்று வெளிநாட்டுக்குப் பறந்துவிடுவார்கள்...

    இந்த அடையாளங்கள் அனைத்தும் சரியானவை அல்ல, தப்பானவையும் அல்ல, பெரும்பான்மை சாஃப்ட்வேர் மக்கள் இவற்றில் ஏதேனும் ஒன்று, அல்லது பலவற்றுக்குப் பொருந்திப்போகிறார்கள் என்பதுதான் உண்மை. அதேசமயம் அவர்கள் எல்லோர்மீதும் இந்த முத்திரைகள் எல்லாவற்றையும் குத்துவது, அந்த முன்முடிவுகளோடு நாம் அவர்களைப் பார்ப்பது சுத்தமான அயோக்கியத்தனம். 'பாகிஸ்தானில் பிறந்த எல்லோரும் இந்தியாவின் எதிரிகள்' என்பது எந்த அளவு முட்டாள்தனமான சிந்தனையோ, அதுபோல்தான் இதுவும்!

    உதாரணமாக, எங்கள் அலுவலகத்தில் வேலை செய்கிற ஒருவரைப்பற்றிச் சொல்கிறேன். அவர் பெயர் பார்த்தசாரதி. ஏழெட்டு வருடங்களாக சாஃப்ட்வேர் துறையில்தான் குப்பை கொட்டிக்கொண்டிருக்கிறார்.

    ஆனால், மிஸ்டர் பார்த்தசாரதிக்குக் கம்ப்யூட்டர் என்றாலே செம அலர்ஜி. ஒரு நாளைக்கு அரை மணி நேரம் அவர் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்தால் அதிகம். பாக்கி நேரமெல்லாம் நோட்டுப் புத்தகமும் கையுமாகதான் அலைந்துகொண்டிருப்பார். எப்போதாவது ஈமெயில் பார்ப்பார், பதில் அனுப்பிவிட்டால் மழையே வந்துவிடும்!

    'ஏன் சார் இப்படி இருக்கீங்க?' என்று நாங்கள் அவரிடம் பலமுறை கேட்டிருக்கிறோம். 'சாஃப்ட்வேர் கம்பெனியில வேலை பார்க்கறீங்க, கொஞ்சம் மாடர்னா ஈமெயில், எஸ்.எம்.எஸ்., ட்விட்டர், ஃபேஸ்புக்ன்னு அப்டேட்டடா இருக்கக்கூடாதா? இப்படிக் கர்நாடகமாப் பின்தங்கியிருக்கீங்களே!'

    'பரவாயில்லை சார். எனக்கு இப்படி இருக்கறதுதான் சந்தோஷம்' என்பார் அவர். 'அதென்னவோ, அந்தக் கம்ப்யூட்டரைத் திறந்துவெச்சாலே யாரோ என்னை அங்கே கட்டிப்போட்டமாதிரி ஒரு ஃபீலிங். எப்படா அங்கிருந்து விடுதலையாகி வெளியே வருவோம்ன்னு தோணுது!'

    இப்படிக் கம்ப்யூட்டர்களின்மீது தீவிர ஒவ்வாமையை வளர்த்துக்கொண்டிருக்கும் பார்த்தசாரதியால், ஒரு கணினித்துறை சார்ந்த நிறுவனத்தில் வேலை செய்யமுடிவது எப்படி? சாஃப்ட்வேர் கம்பெனி என்றால் எந்நேரமும் கம்ப்யூட்டரில் தட்டிக்கொண்டே இருக்கவேண்டும் என்று அர்த்தமில்லையா?

    ம்ஹூம். இல்லை. இங்கே பாதிக்குப் பாதி கம்ப்யூட்டரில் பொட்டி தட்டுகிற உத்தியோகம் என்றால், மீதி மொத்தமும் மூளையைக் கசக்குகிற வேலைதான். சொல்லப்போனால், பார்த்தசாரதியைப்போன்ற மூளை வித்தைக்காரர்கள் இல்லாவிட்டால், ப்ரொக்ராம் எழுதுகிற டெக்னிகல் வித்தகர்களுக்கு வேலையே இருக்காது.

    அதைப்பற்றிப் பார்ப்பதற்குமுன்னால், 'சாஃப்ட்வேர் கம்பெனி' என்று நாம் பொதுவாகச்  சொல்கிற அந்தப் பதத்தைக் கொஞ்சம் பிரித்து மேய்ந்துவிடுவோம்!

    கம்ப்யூட்டர், அதோடு இணைக்கப்பட்டுள்ள மானிட்டர் திரை, கீ போர்ட், மவுஸ், ஸ்பீப்பர், மைக் போன்ற உப கருவிகளையெல்லாம் ஹார்ட்வேர் என்று சொல்வார்கள். இவற்றை மனித உடலின் வெவ்வேறு பாகங்கள் என்று வைத்துக்கொண்டால், இவை இயங்குவதற்குத் துணைபுரிகிற மூளைதான் சாஃப்ட்வேர்.

    உலகெங்கும் கம்ப்யூட்டர், அதுதொடர்பான மற்ற சாதனங்களைத் தயாரிக்கும் ஹார்ட்வேர் நிறுவனங்கள் இருக்கின்றன. இவர்கள் உற்பத்தி செய்து வெளியே அனுப்புகிற கணினிகளில் இயங்கக்கூடிய மென்பொருள்களை எழுதும் நிறுவனங்களைதான் நாம் 'சாஃப்ட்வேர் கம்பெனி'கள் என்கிறோம்.

    இந்த சாஃப்ட்வேர் கம்பெனிகளிலும் இரண்டு வகை உண்டு: பொருள்களைத் தயாரிக்கிறவர்கள் (Product Companies) மற்றும் சேவை வழங்குநர்கள் (Service Companies).

    இங்கே 'பொருள்' என்பது, சாஃப்ட்வேர் தொகுப்பு. அதை ஒருமுறை எழுதித் தயாரித்துக்கொண்டு, உலகெங்கும் உள்ள பல நூறு, பல ஆயிரம், பல லட்சம் கம்ப்யூட்டர் பயன்பாட்டாளர்களுக்கு அவற்றை விற்பவர்கள்தான் முதல் வகை.

    உதாரணமாக, உங்கள் வீட்டில் இருக்கும் பைக் அல்லது கார் ஒரு பொருள். அதைத் தயாரித்த நிறுவனம் சரியானமுறையில் வடிவமைத்து, உற்பத்தி செய்து, வெவ்வேறு கடைகளின்மூலமாக இந்தியாமுழுவதும் விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறது. நீங்கள் அதைக் காசு கொடுத்து வாங்கிப் படிக்கிறீர்கள்.

    இங்கே பைக் / காருக்குப் பதிலாக, ஒரு சாஃப்ட்வேரை நினைத்துக்கொள்ளுங்கள். அவற்றைத் தயாரிப்பதுதான் 'ப்ராடக்ட்' வகைக் கம்பெனிகளின் வேலை.

    'சர்வீஸ்' நிறுவனங்கள் இதற்கு நேர் எதிரானவை. இவர்கள் எந்தப் பொருளையும் தயாரிப்பதில்லை. அடுத்தவர்கள் யாரோ தயாரித்த பொருள்களைப்பற்றி நன்றாகத் தெரிந்துவைத்துக்கொள்கிறார்கள், அதுதொடர்பான சேவைகளை வழங்கிச் சம்பாதிக்கிறார்கள்.

    உதாரணமாக, தெருமுனையில் மெக்கானிக் ஷாப் வைத்திருக்கும் ராஜூவுக்கு பைக் தயாரிக்கத் தெரியாது, கார் தயாரிக்கத் தெரியாது. ஆனால் எந்த வண்டியில் எந்தப் பிரச்னை வந்தாலும் பிரித்துப் போட்டுச் சரி செய்துவிடுவார். அதற்குத் தகுந்த கட்டணத்தை வாங்கிக்கொள்வார். இதுதான் 'சர்வீஸ்' வகைக் கம்பெனிகளின் வேலை.

    'ப்ராடக்ட்' வகை சாஃப்ட்வேர் நிறுவனங்களுக்குப் பிரபலமான உதாரணங்கள், மைக்ரோசாஃப்ட், கூகுள் போன்றவை. 'சர்வீஸ்' வகை சாஃப்ட்வேர் நிறுவனங்களுக்கு உதாரணங்கள் ஆக்சஞ்சர், இன்ஃபோசிஸ், விப்ரோ போன்றவை. இந்த இரண்டு வேலைகளையும் சேர்த்துச் செய்து ஜமாய்க்கிற நிறுவனங்களும் உண்டு. உதாரணமாக, ஆரக்கிள்!

    இந்த இரண்டு வகை நிறுவனங்களுக்கும் அடிப்படை வித்தியாசம், ப்ராடக்ட் கம்பெனிகளில் ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள். புதுப்புது விஷயங்களை யோசித்துக் கண்டுபிடிப்பார்கள். தங்களுடைய வாடிக்கையாளர்களிடம் பேசுவார்கள். அவர்கள் சொல்லும் விமர்சனங்களின் அடிப்படையில் புதுமையான சாஃப்ட்வேர்களை உருவாக்குவார்கள், அல்லது ஏற்கெனவே உள்ள சாஃப்ட்வேரை இன்னும் இன்னும் மேம்படுத்திக்கொண்டே இருப்பார்கள்.

    சர்வீஸ் கம்பெனிகள் அந்த அளவு மெனக்கெடவேண்டியதில்லை. அவர்களுக்கு ஒரு வேலை முடிந்தால் இன்னொரு வேலை வந்துகொண்டே இருக்கிறதா என்பதுதான் ரொம்ப முக்கியம். பல நூறு ஊழியர்களைக் கட்டி மேய்த்து ஒவ்வொரு ப்ராஜெக்டையும் சரியான நேரத்தில், சரியான செலவில், சரியான தரத்தில் முடிக்கவேண்டும். சந்தையில் புதிதாக வருகிற சாஃப்ட்வேர்கள், தொழில்நுட்பங்களையெல்லாம் உடனுக்குடன் புரிந்துகொண்டு அதிவேகமாக முன்னேறத் தெரியவேண்டும்.

    'கம்பெனி' இலக்கணம் விளங்கிவிட்டது. இன்னும் கொஞ்சம் உள்ளே போய், அவற்றில் இருக்கும் மனிதர்களையும் புரிந்துகொள்ளலாம்!

    2

    சில தினங்களுக்கு முன்னால் நண்பர் ஒருவர் எங்களுடைய அலுவலகத்துக்கு வந்திருந்தார். உள்ளே நுழைந்த விநாடி தொடங்கி அவர் முகத்தில் ஏகப்பட்ட ஏமாற்றம் தெரிந்தது.

    சிறிது நேரம் பொறுத்துப் பார்த்தேன். பிறகு அவரிடமே நேரடியாகக் கேட்டுவிட்டேன். 'என்னாச்சு சார்? ஏன் ஒருமாதிரி இருக்கீங்க?'

    அவர் கொஞ்சம் தயக்கத்தோடு பேசினார். 'நீங்க சாஃப்ட்வேர் கம்பெனியில வேலை பார்க்கறீங்கன்னதும் பெரிய பந்தாவான ஒரு ஆஃபீஸ் கட்டடத்தை

    Enjoying the preview?
    Page 1 of 1