Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vetrikku Sila Puthagangal Part 4
Vetrikku Sila Puthagangal Part 4
Vetrikku Sila Puthagangal Part 4
Ebook206 pages1 hour

Vetrikku Sila Puthagangal Part 4

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Nagasubramanian Chokkanathan (born January 17) better known by his pen name N.Chokkan is a Tamil Writer who has written two novels and nearly 100 short stories. His works has been translated into other Indian languages. Apart from this, he has written columns in several Tamil magazines. His interest for writing came from his blind aunt for whom he used to read a lot of books. His love for Books then made him to write few detective stories,which are not yet published.His first short story was published in 1997. His entry into Non-fiction area was kick started by a publishing house approaching him to write Biography of Sachin Tendulkar.He then wrote Biographies of famous Businessmen,Politicians and people who shaped the world.The list includes Narayana murthy, Azim Premji, Dhirubhai Ambani, Walt Disney, Charlie Chaplin,to mention a few.
Languageதமிழ்
Release dateFeb 9, 2017
ISBN6580105001818
Vetrikku Sila Puthagangal Part 4

Read more from N. Chokkan

Related to Vetrikku Sila Puthagangal Part 4

Related ebooks

Reviews for Vetrikku Sila Puthagangal Part 4

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vetrikku Sila Puthagangal Part 4 - N. Chokkan

    http://www.pustaka.co.in

    வெற்றிக்குச் சில புத்தகங்கள் பாகம் 4

    Vetrikku Sila Puthagangal Part 4

    Author:

    என். சொக்கன்

    N. Chokkan

    For more books
    http://www.pustaka.co.in/home/author/n-chokkan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    உள்ளே

    1. இருபது பாடங்கள்

    2. வாத்தியார் தேனீ!

    3. மைண்ட் மேப்!

    4. திறமை + ஆர்வம்!

    5. ஆனந்த மழை

    6. முழுமையான வாழ்க்கை!

    7. ஃபோகஸ் ப்ளீஸ்!

    8. தினசரிப் பரீட்சை!

    9. ஆப்பிளுக்கு ஆறு பக்கம்!

    10. தள்ளாதே!

    11. எகிறிக் குதி!

    12. விஷுவல் வித்தை!

    13. ஆறு சல்லடைகள்

    14. கற்றுத்தரும் 'கம்பெனி'கள்!

    15. மயக்கு கண்ணா மயக்கு!

    16. மெமரி கொக்கிகள்

    17. ஒபாமாவின் பாடங்கள்

    18. 'மூளை'தனம்

    19. வாழ்க்கைச் சக்கரம்

    20. ஐந்து வில்லன்கள்

    21. எக்ஸ்பர்ட் ஆகலாம்

    22. சாணக்யா, சாணக்யா...

    23. அன்பு எனும் ஆயுதம்

    24. அட்வைஸ் மழை

    25. விளையாட்டுப் பாடங்கள்

    26. மேகப் பயணம்

    27. திருடாதே!

    28. நீங்கதான் நாட்டாமை!

    29. கொஞ்சம் சூப் சாப்பிடுங்க!

    30. பத்தோடு பன்னிரண்டு

    31. திறமை வெர்ஸஸ் உழைப்பு!

    32. எங்கே எனது பாதை?

    வெற்றிக்கு சில புத்தகங்கள்
    பாகம் 4
    என். சொக்கன்

    1. இருபது பாடங்கள்

    வெற்றிக்கான சூத்திரங்களைச் சொல்லித்தரும் புத்தகங்கள் எத்தனையோ இருக்கின்றன. வாரம் ஏழெட்டுப் புது 'ஃபார்முலா'க்களும் வந்துவிடுகின்றன. இவற்றில் எதைப் படிப்பது? எதை விடுவது? எல்லாவற்றையும் படிக்க யாருக்கு நேரம் இருக்கிறது?

    ஆயிரக்கணக்கான புத்தகங்களை வைத்துக்கொண்டு அல்லாடாமல் முக்கியமான சக்ஸஸ் விதிமுறைகள் எல்லாம் ஒரே இடத்தில், ஒரே புத்தகத்தில் மொத்தமாகக் கிடைத்தால் எப்படி இருக்கும்! அப்படி ஒரு வித்தியாசமான புத்தகம் இருக்கிறது.

    மனித மனம் எப்படிப்பட்டது என்பதில் தொடங்கி திட்டமிடுதல், வித்தியாசமாகச் சிந்தித்தல், கனவு காணுதல், விடாமுயற்சி, பாஸிட்டிவ் சிந்தனை, ரிஸ்க் எடுப்பது, விட்டுக்கொடுப்பது, ஈகோ, பொறாமை, பர்ஃபெக்ஷன், கோபம், அடுத்தவர்களுக்கு உதவுவது, தகவல் தொடர்பு, உறவுகள், நேரத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வது, பணம் சம்பாதிப்பது, தலைமைப் பண்புகள் என்று சகலத்தையும் குட்டிக் குட்டிக் கட்டுரைகளாக அமைத்துக் கொடுத்திருக்கிற அந்த அருமையான புத்தகம், ஹல் அர்பன் எழுதிய 'லைஃப்'ஸ் க்ரேட்டஸ்ட் லெஸன்ஸ்' (Life's Greatest Lessons).

    ஹல் அர்பன் முப்பத்தைந்து வருடங்கள் ஆசிரியராகப் பணியாற்றியவர். அந்த அனுபவத்தின் அடிப்படையில் தன்னுடைய குழந்தைகளுக்குச் சொல்ல விரும்பிய வாழ்க்கைப் பாடங்களைக் கட்டுரைகளாக எழுதினார். பின்னர் இவை எல்லோருக்கும் பயன்படும்வண்ணம் நூல்வடிவம் பெற்றுப் பல லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்திருக்கின்றன, ஏராளமானோரின் வாழ்க்கையையே தடம் மாற்றி வழிகாட்டியிருக்கின்றன.

    நூற்றைம்பது பக்கங்களுக்குள் பலநூறு கதைகள், அனுபவக் குறிப்புகள், சின்னச் சின்ன வாழ்வியல் சிந்தனைகள், தத்துவங்கள் என்று கொட்டி நிரப்பியிருக்கும் இந்தப் புத்தகத்திலிருந்து அந்த இருபது வாழ்க்கைப் பாடங்கள் இங்கே சுருக்கமாக:

    பாடம் 1 நீங்கள் விரும்பும் 'வெற்றி' எது என்று தெளிவாக வரையறுத்துக்கொள்ளுங்கள். வெறுமனே பணம் சம்பாதிப்பதுமட்டும் வெற்றியாகிவிடாது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

    பாடம் 2 வாழ்க்கையில் எதுவும் சுலபமாக நடந்துவிடுவதில்லை. எல்லாம் உங்கள் கையில் வந்து விழும் என்று எதிர்பார்க்காதீர்கள். ரொம்பச் சிரமப்பட்டு எதிர்நீச்சல் போட்டுதான் முன்னேறியாகவேண்டும். அதேநேரம், உங்களைப்போல் கஷ்டப்பட்டு உழைக்காமல் முன்னுக்கு வருகிறவர்களும் இருப்பார்கள். அவர்களைப் பார்த்துப் புலம்பாமல், உங்கள் முன்னேற்றத்தில்மட்டும் கவனம் செலுத்துங்கள்.

    பாடம் 3 எப்போதும் வேகம், வேகம் என்று ஓடிக்கொண்டே இருக்காதீர்கள். வாழ்க்கை அழகானது, மகிழ்ச்சியானது அவ்வப்போது நின்று நிதானித்து அதை அனுபவியுங்கள். அதன்பிறகு பயணத்தைத் தொடரலாம்!

    பாடம் 4 உங்களுடைய வெற்றி, தோல்வி இரண்டுமே எதேச்சையாக வருபவை இல்லை. அதிர்ஷ்டத்தாலோ துரதிருஷ்டத்தாலோ நிகழ்பவை இல்லை. எல்லாம் நீங்கள் எடுக்கும் முடிவுகளில்தான் இருக்கிறது. உங்கள் வாழ்க்கைக் குதிரையின் கடிவாளம் உங்களுடைய கையில்தான் இருக்கிறது என்பதை எப்போதும் மறந்துவிடாதீர்கள்.

    பாடம் 5 ஒவ்வொரு வாழ்நாளையும் சந்தோஷமாக அனுபவிக்கவேண்டுமா அல்லது துயரத்துடன் பிடித்துத் தள்ளவேண்டுமா என்று முடிவெடுக்கவேண்டியது நீங்கள்தான். வேறு யாரும் அல்ல.

    பாடம் 6 வெற்றிக்குச் சில பழக்கங்கள், ஒழுக்கங்கள், கட்டுப்பாடுகள் அவசியம். ஜெயித்தவர்களைக் கூர்ந்து கவனியுங்கள். அவர்களிடம் உள்ள எந்தெந்தப் பழக்கங்கள் உங்களிடம் உள்ளன? எவையெல்லாம் விடுபடுகிறது? ஏன்? யோசியுங்கள்.

    பாடம் 7 உங்களுக்குச் சின்னச் சின்ன உதவி செய்தவர்களுக்குக்கூட மனமார நன்றி சொல்லப் பழகுங்கள்.

    பாடம் 8 திறமை உள்ளவர்களுக்கு மரியாதை கொடுங்கள். மற்றவர்களைவிட நீங்கள்தான் உசத்தி என்கிற அகம்பாவம் வேண்டாம்.

    பாடம் 9 எப்போதும் எதிலும் நேர்மையாக நடந்துகொள்ளுங்கள். இந்த விஷயத்தில் சமரசங்களே கூடாது.

    பாடம் 10 அடுத்தவர்களிடம் பேசும்போது அன்பான, ஆதரவான, அவர்களை ஊக்கப்படுத்துகிற, அக்கறை காட்டுகிற வார்த்தைகளையே பயன்படுத்துங்கள். நீங்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் அவர்கள் உள்ளத்தில் இருக்கக்கூடிய காயங்களுக்கு மருந்து போடும், உங்கள் நட்பை வலுவாக்கும், உங்களையும்.

    பாடம் 11 உங்களை உழைக்கத் தூண்டுவதற்கு இன்னொருவரை எதிர்பார்க்காதீர்கள். நம்மை நாமே உற்சாகப்படுத்தி வேலை வாங்கிக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்.

    பாடம் 12 நிறையக் கனவு காணுங்கள். அவை ஒவ்வொன்றையும் எந்தத் தேதிக்குள் நிஜமாக்கவேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துக்கொண்டு அதற்கு ஏற்பத் திட்டமிடுங்கள், உழைக்கத் தொடங்குங்கள். எப்பேர்ப்பட்ட கனவும் நிஜமாகும்.

    பாடம் 13 கடின உழைப்புக்கு ஈடு இணையே கிடையாது. வேறு எந்தக் குறுக்கு வழியிலும் நீங்கள் முன்னேறமுடியாது.

    பாடம் 14 சில சமயங்களில் ஒன்றைப் பெறுவதற்காக நீங்கள் இன்னொன்றை இழக்கவேண்டியிருக்கலாம். அதுமாதிரி தருணங்களில் எது முக்கியம் என்று நன்றாக யோசித்து முடிவெடுங்கள். 'இரண்டுமே வேண்டும்' என்று பிடிவாதம் பிடித்துக்கொண்டு இழப்பைச் சந்திக்காதீர்கள்.

    பாடம் 15 எல்லோருக்கும் 24 மணி நேரம்தான். ஆகவே 'எனக்கு நேரமே போதலை' என்று புலம்பாதீர்கள். நேரத்தை ஒழுங்காகக் கையாள்கிறவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கவனித்துப் பின்பற்றுங்கள். ஒரு விஷயம் உங்களுக்குத் தேவை என்றால் அதற்கான நேரத்தை நீங்கள்தான் உருவாக்கிக்கொள்ளவேண்டும்!

    பாடம் 16 சுயமரியாதை முக்கியம். அதை மற்றவர்கள் உங்களுக்கு ஊட்டமுடியாது. நீங்களே முயன்று வளர்த்துக்கொள்ளவேண்டிய விஷயம் அது.

    பாடம் 17 வெற்றியைத் துரத்தும் அவசரத்தில் உங்கள் உடம்பை மறந்துவிடாதீர்கள். வேளாவேளைக்குச் சரிவிகித ஊட்டச்சத்துகளைக் கொண்ட உணவை உட்கொள்ளுங்கள். நாள்தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். அது உங்கள் மனத்தையும் உற்சாகமாக வைக்கும்.

    பாடம் 18 தோல்வியே இல்லாத வாழ்க்கை போரடிக்கும். பெரிய வெற்றியாளர்கள்கூட அவ்வப்போது தோற்றிருக்கிறார்கள். நீங்களும் எப்போதாவது தோற்கலாம். தப்பில்லை. அதையே நினைத்துக்கொண்டிருக்காமல் துடைத்துப்போட்டுவிட்டு மேலே வாருங்கள்.

    பாடம் 19 எதை எதையோ யோசித்து வாழ்க்கையைச் சிக்கலாக்கிக்கொள்ளாதீர்கள். இந்த அடிப்படைப் பாடங்களை நன்றாகப் புரிந்துவைத்திருந்தால் வாழ்க்கை மிக எளிமையானது என்பது புரியும்.

    பாடம் 20 நீங்கள் எவ்வளவு ஜெயித்தாலும் சரி, எத்தனை உயரத்துக்குச் சென்றாலும் சரி, 'நல்ல மனிதர்' என்று பெயர் எடுக்காவிட்டால் அவை எல்லாம் அர்த்தம் இழந்துவிடுகின்றன. வெற்றிக்காகக் குணத்தை விட்டுக்கொடுக்காதீர்கள். 'நான் நல்லவனாக வாழ்ந்தேன்' என்கிற திருப்திதான் மற்ற எல்லாவற்றையும்விட மிகப் பெரியது!

    ***

    2. வாத்தியார் தேனீ!

    எப்போதும் ஓய்வின்றி உழைக்கிற ஒருவரை 'தேனீமாதிரி சுறுசுறுப்பு' என்று சொல்வார்கள்.

    தேனீக்கள் சுறுசுறுப்பானவைமட்டுமில்லை, அவற்றிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் ஏராளமாக உண்டு என்கிறது ஒரு சமீபத்திய புத்தகம்!

    பலவிதமான தேனீக்களின் வாழ்க்கைமுறையை அலசி ஆராய்ந்து அதிலிருந்து 25 முக்கியமான பாடங்களை உறிஞ்சித் தந்திருக்கிற அந்தப் புத்தகத்தின் பெயர் 'தி விஸ்டம் ஆஃப் பீஸ்' (The Wisdom Of Bees). ஆசிரியர் டாக்டர் மைக்கேல் ஓ'மாலெ. பெங்குவின் வெளியீடு. விலை ரூ 399/

    அடிப்படையில் ஒரு சமூக ஆய்வாளரான மைக்கேல் ஓ'மாலெ எட்டு வருடங்களுக்கு முன்னால் பொழுதுபோக்காகத் தேனீ வளர்க்கத் தொடங்கினார். கொஞ்சம் கொஞ்சமாக அதில் ஆர்வம் அதிகரித்து மூழ்கிப்போனார். தேனீக்கள் நமக்கு நல்ல 'வாத்தியார்'களாகவும் இருப்பதைக் கண்டுகொண்டார். இந்தத் துறையில் தனது பலவருட அனுபவ ஞானத்தை இந்தப் புத்தகத்தில் இறக்கிவைத்திருக்கிறார்.

    தேனீக்களை மையமாக வைத்து டாக்டர் மைக்கேல் ஓ'மாலெ விவரிக்கும் இருபத்தைந்து வாழ்க்கைப் பாடங்களில் முக்கியமானவை இங்கே சுருக்கமாக:

    1. தேவையானதைமட்டும் பேசுங்கள், அநாவசியச் சுற்றிவளைத்தல் வேண்டாம்:

    தேனீக்கள் தங்களுக்குள் தகவல் பரிமாறிக்கொள்ளும் 'மொழி' மிகவும் விநோதமானது. அதில் தேவையில்லாத குசல விசாரிப்புகளோ, வம்புவழக்குகளோ இருக்காது. இதுதான் தகவல், நான் அந்தப் பக்கம் போகிறேன், நீ இந்தப் பக்கம் போ, இந்த வேலையைச் செய் என்று மேட்டரைச் சொல்லிவிட்டு டாட்டாகூடக் காட்டாமல் போய்க்கொண்டே இருக்கும்.

    இப்படி மனிதர்களும் நடந்துகொண்டால் அரட்டை குறையும், செயல்திறன் அதிகரிக்கும், குறைந்த நேரத்தில் அதிக வேலைகளைத் தரமாக முடித்துவிடலாம்!

    2. தொலைநோக்குப் பார்வை அவசியம்:

    ஒரு தேனீக்கூட்டம். வழக்கமாகப் பறந்து செல்லும்

    Enjoying the preview?
    Page 1 of 1