Khushwant Singh
By N. Chokkan
()
About this ebook
Read more from N. Chokkan
Mossad Rating: 3 out of 5 stars3/5Veerappan: Vazhvum Vathamum Rating: 0 out of 5 stars0 ratingsBookmarks Rating: 0 out of 5 stars0 ratingsA. R. Rahman Rating: 5 out of 5 stars5/5Salman Rushdie Rating: 0 out of 5 stars0 ratingsBakthi Thamizh - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsKaasu, Panam, Dhuttu, Money Rating: 0 out of 5 stars0 ratingsFBI Rating: 0 out of 5 stars0 ratingsNalla Tamizh Ezhuthuvom Rating: 0 out of 5 stars0 ratingsWindows 7 Rating: 4 out of 5 stars4/5Kathai Sollum Paadangal Rating: 0 out of 5 stars0 ratingsVetrikku Sila Puthagangal Part 3 Rating: 4 out of 5 stars4/5Bakthi Thamizh Part 4 Rating: 0 out of 5 stars0 ratingsAdutha Kattam Rating: 0 out of 5 stars0 ratingsMaadevan Malarthogai Rating: 0 out of 5 stars0 ratingsAzim Premji Rating: 0 out of 5 stars0 ratingsPlus One Rating: 0 out of 5 stars0 ratingsBhoologam Ananthathin Ellai Rating: 0 out of 5 stars0 ratingsBakthi Thamizh Anaithu Pagangal Rating: 0 out of 5 stars0 ratingsBakthi Thamizh - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsVetri Ettu Dhikkum! Rating: 0 out of 5 stars0 ratingsMennulagam Rating: 0 out of 5 stars0 ratingsMen Kalaikal Rating: 0 out of 5 stars0 ratingsBakthi Thamizh - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsThiruppu Munaigal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Khushwant Singh
Related ebooks
Ashokamitran's Puthiya Tamil Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsKhan Shahib Rating: 0 out of 5 stars0 ratingsJayakanthanin Velivaratha Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsSabai Naduve Rating: 0 out of 5 stars0 ratingsPulariyin Muthangal Rating: 0 out of 5 stars0 ratingsThaayar Sannathi Rating: 0 out of 5 stars0 ratingsThiraichudargal Rating: 0 out of 5 stars0 ratingsArumugasamiyin Adugal Rating: 0 out of 5 stars0 ratingsRangoon Periyappa Rating: 0 out of 5 stars0 ratingsMouni Padaipugal Rating: 0 out of 5 stars0 ratingsOorukku Nooru Per Rating: 0 out of 5 stars0 ratingsCommunisathirkku Pin Russia Rating: 0 out of 5 stars0 ratingsCelluloid Chozhan! Rating: 0 out of 5 stars0 ratingsNathiyin Pizhaiyandru Narumpunal Inmai Rating: 0 out of 5 stars0 ratingsPon Vilangu Rating: 0 out of 5 stars0 ratingsEnna Thavam Seitheno! Rating: 0 out of 5 stars0 ratingsSunduvin Sanniyasam Rating: 0 out of 5 stars0 ratingsNaattu Kanakku Rating: 0 out of 5 stars0 ratingsSujatha Naveenathin Nayagan Rating: 5 out of 5 stars5/5Muthamizh Arignar Dr. Kalaignar Avargalin Aalumai Kuritha Aaivu Rating: 0 out of 5 stars0 ratingsKalaimamani V.C. Guhanathan Rating: 0 out of 5 stars0 ratingsJayakanthan Munnuraigal Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsOozhiyin Dhinangal Rating: 0 out of 5 stars0 ratingsOru Ilakkiyavathiyin Kalaiulaga Anubavangal Rating: 4 out of 5 stars4/5Lights On Rating: 0 out of 5 stars0 ratingsRhythm Rating: 0 out of 5 stars0 ratingsJayakanthan Munnuraigal Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsBhagavad Gita Rating: 5 out of 5 stars5/5Pudhumaipithan Short Stories - Part 9 Rating: 0 out of 5 stars0 ratingsPudhumaipithan Short Stories - Part 8 Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Khushwant Singh
0 ratings0 reviews
Book preview
Khushwant Singh - N. Chokkan
http://www.pustaka.co.in
குஷ்வந்த் சிங்
Khushwant Singh
Author:
என். சொக்கன்
N. Chokkan
For more books
http://www.pustaka.co.in/home/author/n-chokkan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. தனிமைப் புள்ளி
2. புது நகரம், புதுப் பையன்
3. கதவுகள் திறந்தன
4. முழு நேர எழுத்தாளர்
5. Opus Exegii
6. வீக்லி
7. வெளியேற்றம்
8. அரசியல் முட்டாள்
9. புகழ், பணம், புத்தகங்கள்
10. அரை நூற்றாண்டுப் பட்டியல்
11. எழுத்துலகம்
12. குறும்பான கதைசொல்லி
13. சிரிக்க, சிந்திக்க ...
14. விருதுகள், கௌரவங்கள்
15. நினைவுகளோடு தனியே ...
சமர்ப்பணம்
முதல் வாசகன், இனிய நண்பன் விஜயராகவனுக்கு ...
*****
1. தனிமைப் புள்ளி
'Only Ring The Bell If You Are Expected' - தனிமை சூழ்ந்திருக்கும் அந்த வீட்டுக் கதவில், இப்படி எழுதியிருக்கிறது.
தொண்ணூறு வயது சர்தார் குஷ்வந்த் சிங்கைப்போலவே, அவரது வீடும் அநாவசியப் பூசி மெழுகல்கள் இல்லாமல், நேரடியாகப் பேசுகிறது - அழைப்பு மணியைத் தொடாதீர்கள், மிக அவசியம் இருந்தாலொழிய, அவர் இனிமேல் யாரையும் சந்திப்பதாக இல்லை.
'யாரையும்' என்பதில், குஷ்வந்த் சிங்கின் ரசிகர்கள், வெறியர்கள், சக எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், பதிப்பாளர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்று எல்லாம் அடக்கம். ஐந்து ஆண்டுகளுக்குமுன் மனைவி காவல் மாலிக்கை இழந்த குஷ்வந்த் சிங், அப்போதிலிருந்து இந்தத் தனிமை வாழ்க்கையை விரும்பி ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
ஒருவிதத்தில் பார்க்கிறபோது, எந்நேரமும் பரபரப்பு, ஜொலிஜொலிப்பின் மத்தியிலேயே வாழ்ந்த குஷ்வந்த் சிங்கின் வாழ்க்கை, இப்படியொரு தனிமைப் புள்ளியில் வந்து குவிந்திருப்பதில், ஒரு காவிய நியாயம் இருப்பதாகத் தோன்றுகிறது.
நூறு புத்தகங்களுக்குமேல் எழுதியாகிவிட்டது, நல்லவர்கள், கெட்டவர்கள் என்று எல்லோரிடமும் பாராட்டுகள், வசவுகளை மாறி மாறி ஏற்றுக்கொண்டாகிவிட்டது, ரசிகர்கள், ரசிகைகள் மேலே விழுந்து பிடுங்கும் பிரபல்யத்தைப் பார்த்தாகிவிட்டது, 'பிரமாதமான எழுத்தாளர்' என்பதில் தொடங்கி, 'வெத்துவேட்டு' என்பதுவரை எல்லா விதமான விமர்சனங்களையும் பார்த்தாகிவிட்டது, பெரும்புள்ளிகள், அரசியல்வாதிகளின் நட்பையும், விரோதத்தையும் நிறையவே சம்பாதித்துக்கொண்டாகிவிட்டது. இனிமேல் என்ன?
கடந்த சில ஆண்டுகளாகவே, வெளியுலகத் தொடர்புகளை வெகுவாகக் குறைத்துக்கொண்டுவிட்டார் குஷ்வந்த் சிங். முடிந்தவரை பொதுவாழ்க்கையிலிருந்து விலகியிருக்கவே விரும்பும் அவர், 'உலக வாழ்க்கையிலிருந்து சன்யாசம் வாங்கிக்கொண்டுவிட்டேன்', என்று எழுதுகிறார்.
இப்போதெல்லாம், அவருடைய பெரும்பாலான நேரங்கள் புத்தகங்களோடுதான் கரைகிறது. மூட்டு வலி முதலான உபாதைகளால் அவதிப்படும் தொன்னூறு வயது உடம்பு அனுமதித்தால், தனது சிறிய தோட்டத்தில் உலவுகிறார், இல்லாவிட்டால் பல வருடப் பிரியமான நாற்காலியில் அமர்ந்துகொண்டு, முக்காலியில் காலை நீட்டி வைத்துக்கொண்டு, கதகதப்பான போர்வையைப் போர்த்திக்கொண்டு, பழைய நினைவுகளோடு காலம் கழிக்கிறார்.
இத்தனைக்குப்பிறகும், குஷ்வந்த் சிங் இன்னும் வேகம் குறையாமல் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார் என்பதுதான் முக்கியம். அரசியல், இலக்கியம் மற்றும் இன்னபிற துறைகளில், அவரைச் சுற்றி நடக்கிற ஒவ்வொரு விஷயமும், அவரது கூர்மையான விமர்சனக் கண்களிலிருந்து தப்புவதில்லை, அதே குறும்பான ஆங்கிலம், துள்ளல் நடை, இவர் பெரியவர், முக்கியமான பதவியில் இருக்கிறவர் என்றெல்லாம் கவலைப்படாமல் சடாரென்று உருட்டிப்போடும் அலட்சியமான மொழி லாவகம்.
குஷ்வந்த் சிங்கைப் புரிந்துகொண்டவர்களுக்கு, அவர் இன்னும் எழுதிக்கொண்டிருப்பது நிச்சயமாக ஆச்சரியமளிக்காது. பல வருடங்களுக்குமுன், கையிலிருந்த வக்கீல் தொழிலை, அரசாங்கப் பதவிகளைத் தூக்கிப்போட்டுவிட்டு, இனிமேல் எழுத்துதான் என்று முடிவெடுத்ததில் தொடங்கி, இன்றுவரை எழுத்து என்பது அவருக்குத் தொழில் இல்லை, பொழுதுபோக்கு இல்லை, அவரது வாழ்வின் சுவாசமே அதுவாகதான் இருந்துவந்திருக்கிறது.
இந்திய ஆங்கிலத்தில் குஷ்வந்த் சிங்கிற்கு இணையாக, நிறையவும் நிறைவாகவும் எழுதியவர்கள் மிகக் குறைவு. பத்திரிகை மொழி, இலக்கிய பொழி, பாமர மொழி என்று பாரபட்சம் பார்க்காமல், இவை எல்லாவற்றையும் கலந்துகட்டிய குஷ்வந்த் சிங்கின் எழுத்தும், 'கையில் எடுத்தால், கீழே வைக்கமுடியாது', என்று சொல்வார்களே அப்படிப்பட்ட சுறுசுறுப்பான மொழிநடையும் அவருக்கு மிகப் பெரிய ரசிகர் கூட்டத்தைச் சேர்த்துக்கொடுத்திருக்கிறது.
அதனால்தான், நம் நாட்டின் மிகப் பிரபலமான, அதிக மக்களால் வாசிக்கப்படும் கட்டுரையாளராகப் புகழப்படுகிறார் குஷ்வந்த் சிங். ஆழமான அரசியல், சமூகப் பார்வையுடன், ஜனரஞ்சகமான நடையில், பல கனமான விஷயங்களை எழுதியிருப்பது இவரது குறிப்பிடத்தக்க சாதனை.
எழுத்தாளராக குஷ்வந்த் சிங்கின் மிக முக்கியமான இன்னொரு பங்களிப்பு, சீக்கிய மதத்தைப்பற்றிய விரிவான அறிமுக நூல்களையும் மொழிபெயர்ப்புகளையும் உலக வாசகர்களுக்காக எழுதியது. அடிப்படையில் அவர் ஒரு நாத்திகர். என்றாலும், தனது சமுதாயத்துக்குச் செய்திருக்கும் இந்தப் பணியைப் பெருமையாக நினைக்கிறார்.
சிறுகதை, நாவல், கட்டுரை, நகைச்சுவை, ஆன்மீகம், மொழி, சமூக ஆய்வுகள், மொழிபெயர்ப்பு என்று அநேகமாக எல்லாப் பிரிவுகளிலும் தனது அழுத்தமான அடையாளத்தைப் பதித்திருக்கும் குஷ்வந்த் சிங்கின் நூல்கள் ஒவ்வொன்றும், பல பதிப்புகளாக வெளிவந்து, விற்பனை சாதனைகளைத் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.
வெற்றிகரமான பத்திரிகையாளராகவும் இயங்கியவர் குஷ்வந்த் சிங். எப்போதும் பாசாங்குகள் இன்றி, மனதில் தோன்றியதை அப்படியே நேர்மையாக எழுதி, அதனால் பல அவஸ்தைகளைச் சந்தித்திருக்கிறார்.
நேரு, இந்திரா காலத்திலிருந்து, தற்போதைய அரசியல்வாதிகள்வரை அநேகமாக எல்லோருடனும் பழகியிருக்கும் குஷ்வந்த் சிங், அறுபதுகளில் எல். கே. அத்வானியின் வேட்பு மனுத் தாக்கல் விண்ணப்பத்தில் கையெழுத்திட்டிருக்கிறார், பின்னர், இப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்காக மும்முரமாகத் தேர்தல் பிரசாரம் செய்து, அவர் தோற்றுப்போனபோது, புத்திசாலிகளை, அறிவுஜீவிகளைத் தங்களுடைய பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்க முன்வராத இந்த தேசம் எப்படி உருப்படும் என்று சலித்துக்கொண்டிருக்கிறார்.
இப்படி அவ்வப்போது அரசியலைத் தொட்டுச் சென்றிருந்தாலும், ஒருகாலத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த குஷ்வந்த் சிங், அடிப்படையில் ஓர் எழுத்தாளர், சமூக விமர்சகர். மற்ற அடையாளங்கள் அனைத்தும், யதேச்சையாக அமைந்துவிட்டவைமட்டுமே.
உதாரணமாக, குஷ்வந்த் சிங் தொகுத்து வழங்கிய நகைச்சுவைப் புத்தகங்களான, 'Khushwant Singh's Joke Book' வரிசையில் இதுவரை ஏழு நூல்கள் வெளியாகியுள்ளன. இவை ஒவ்வொன்றும், வெளிவந்த வேகத்தில் பரபரப்பாக விற்றுத் தீர்வதால், இலக்கியப் பரிச்சயம் இல்லாத பல இந்தியர்கள், குஷ்வந்த் சிங்கை ஒரு நகைச்சுவையாளர் / ஜோக் எழுத்தாளர் என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இதேபோல் குஷ்வந்த் சிங்கை, செக்ஸ் எழுத்தாளர், கிசுகிசுப் பிரியர், விஸ்கி முன்னேற்றக் கழகத் தலைவர், பாகிஸ்தான் வெறியர் என்றெல்லாம் ஒரேயடியாக முத்திரை குத்துகிறவர்கள் இப்போதும் உண்டு.
ஆனால், இதுபோன்ற அடாவடி விமர்சனங்களின்மூலம், அவரது தொடர்ந்த எழுத்துப் பங்களிப்பை மூடி மறைத்துவிடமுடியாது. சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த 'இந்திய ஆங்கில' எழுத்தாளர்களில், குஷ்வந்த் சிங்கிற்கு முக்கியமான இடம் உண்டு.
தற்போது தனிமைத் துறவறத்தில் இருக்கும் குஷ்வந்த் சிங், எப்போதாவது மிக அரிதாகப் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதுண்டு. சென்ற ஆண்டு 'தி ஃபினான்ஷியல் டைம்ஸ்' (The Financial Times) இதழின் எட்வர்ட் லூஸ் (Edward Luce) என்பவருக்கு அவர் அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களைக் குறிப்பிட்டிருக்கிறார்.
அந்தப் பேட்டியின்போது குஷ்வந்த் சிங் சொல்லியிருக்கும் ஒரு வாசகத்தை, அவரது மொத்த எழுத்து வாழ்க்கையின் சுருக்கமான பதிவாகக் கொள்ளலாம், 'மனதுக்குத் தோன்றியதை, ஆத்மாவினுள் இருந்து வருவதை அப்படியே எழுதுவேன். இல்லாவிட்டால், எழுதாமலே இருந்துவிடுவேன்!'
எழுத்தாளர், பத்திரிகையாளர் என்ற முறையில், குஷ்வந்த் சிங் இந்த வாசகத்திற்கு எந்த அளவு உண்மையாக இருந்திருக்கிறார் என்பதை முழுவதுமாகப் புரிந்துகொள்ளவேண்டுமானால், அவரது தொண்ணூறு வருட வாழ்க்கையைத் தெரிந்துகொள்வது அவசியம்.
*****
2. புது நகரம், புதுப் பையன்
அவர் மெத்தப் படித்தவர் இல்லை, சாலைகளை, ரயில் பாதைகளை, கட்டடங்களையெல்லாம் வடிவமைப்பதற்கு அறிவியல்ரீதியிலான அணுகுமுறைகள் எவையும் அவருக்குத் தெரியாது. என்றாலும், நம் தேசத்தின் தலைநகரைக் கட்டமைத்ததில், அவருக்கு ஒரு முக்கியமான பங்கு உண்டு.
சுதந்தரத்துக்கு முந்தைய, அகன்று விரிந்திருந்த பஞ்சாப் மாகாணத்தின் 'ஹடாலி' என்ற குட்டியூண்டு ஊரைச் சேர்ந்தவர் சர்தார் சுஜன் சிங். பாலைவனமும் அதுசார்ந்த பகுதிகளுமாக நிறைந்துகிடந்த அந்த வறட்சிப் பிரதேசத்தில், அவருடைய அப்பாவும் தாத்தாவும் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
ஆனால், சுஜன் சிங்கின் ஆர்வமோ, வேறொரு திசையில் குவிந்திருந்தது. வருங்கால வளர்ச்சிக்குச் சாதகமான நல்ல தொழில் ஒன்றில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் அவர்.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் அது. அப்போது ஆட்சியிலிருந்த ஆங்கிலேயர்கள், இங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடுவதென்று தீர்மானித்திருந்தார்களோ என்னவோ, அவர்களுடைய கட்டளையின்படி, இந்தியாவெங்கும் புதுசுபுதுசாகக் குடியிருப்புப் பகுதிகளும், பிரமாதமான போக்குவரத்து வசதிகளும் உருவாகிக்கொண்டிருந்தன.
ஆகவே, இந்தப் புதிய கட்டமைப்புகளைச் செய்து தரும் தொழிலில் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று தீர்மானித்த சுஜன் சிங், அரசாங்கத்துடனான ஒப்பந்த அடிப்படையில், பல கட்டுமானப் பணிகளைச் செய்துகொண்டிருந்தார் - ஒழுங்கற்ற சாலைகளைச் சீர்படுத்துவது, மலைகளைக் குடைந்து சுரங்கப் பாதைகள் செய்வது, இரும்புப் பாதைகள் அமைப்பது இப்படி ஏகப்பட்ட வேலைகளை முன்னின்று நடத்தினார் அவர்.
அரசாங்க கான்டிராக்டர்கள் என்றாலே, அவர்களிடம் எப்படியெல்லாம் பணம் கொழிக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் - சுஜன் சிங்கும் இந்தத் தொழிலில் நன்கு லாபம் சம்பாதித்தார். கூடவே, நல்ல பெயர், கௌரவமான வாழ்க்கை.
ஆகவே, சுஜன் சிங்கின் மகன் சோபா சிங், அம்ரித்ஸரில் பள்ளிப் படிப்பை முடித்த கையோடு அப்பாவுக்கு உதவியாளராகச் சேர்ந்துவிட்டார். அவருடைய மேற்பார்வையில், பஞ்சாப் மற்றும் சுற்றுவட்டாரங்களில் பல முக்கியமான கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தன.
1911ம் ஆண்டு, இந்தியாவின் தலைநகரை மாற்றத் தீர்மானித்தது ஆங்கிலேய அரசு. அதுவரை கல்கத்தாவை மையமாகக் கொண்டு இயங்கிவந்த தேசத்தின் புதிய தலைமையிடமாக, டெல்லி அறிவிக்கப்பட்டது.
கடன் பாக்கியைக் கேட்டு தொல்லைப்படுத்தும் மளிகைக் கடைக்காரரிடம், 'அடுத்த வாரம் வாய்யா, உன் மூஞ்சில காசை விட்டு எறியறேன்' என்று வீரமாகச் சவடால் பேசிவிட்டு, வீட்டுக்குள் வந்ததும், 'எப்படிப் பணம் புரட்டுவது' என்று கவலையில் மூழ்குகிற மத்யம குடும்பத் தலைவர்கள்போல், பந்தாவாக டெல்லியைத் தலைநகரமாக்கிவிட்டு, அதன்பின் பல குழப்பங்களில் ஆழ்ந்தது பிரிட்டிஷ் அரசாங்கம்.
அப்போது அவர்களுடைய முக்கியமான உடனடிக் கவலை -