Salman Rushdie
By N. Chokkan
()
About this ebook
Read more from N. Chokkan
Veerappan: Vazhvum Vathamum Rating: 0 out of 5 stars0 ratingsA. R. Rahman Rating: 5 out of 5 stars5/5Bakthi Thamizh Anaithu Pagangal Rating: 0 out of 5 stars0 ratingsMossad Rating: 3 out of 5 stars3/5Nalla Tamizh Ezhuthuvom Rating: 0 out of 5 stars0 ratingsBookmarks Rating: 0 out of 5 stars0 ratingsBakthi Thamizh - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsKhushwant Singh Rating: 0 out of 5 stars0 ratingsBakthi Thamizh Part 4 Rating: 0 out of 5 stars0 ratingsPlus One Rating: 0 out of 5 stars0 ratingsNam(n)bargal Rating: 0 out of 5 stars0 ratingsKathai Sollum Paadangal Rating: 0 out of 5 stars0 ratingsFBI Rating: 0 out of 5 stars0 ratingsVetrikku Sila Puthagangal Part 3 Rating: 4 out of 5 stars4/5Mobile Guide Rating: 0 out of 5 stars0 ratingsVetrikku Sila Puthagangal Part 4 Rating: 0 out of 5 stars0 ratingsKaasu, Panam, Dhuttu, Money Rating: 0 out of 5 stars0 ratingsWindows 7 Rating: 4 out of 5 stars4/5Vetrikku Sila Puthagangal Part 5 Rating: 0 out of 5 stars0 ratingsMennulagam Rating: 0 out of 5 stars0 ratingsAzim Premji Rating: 0 out of 5 stars0 ratingsVetri Ettu Dhikkum! Rating: 0 out of 5 stars0 ratingsMen Kalaikal Rating: 0 out of 5 stars0 ratingsBakthi Thamizh - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsThiruppu Munaigal Rating: 0 out of 5 stars0 ratingsVanna Vanna Pookkal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Salman Rushdie
Related ebooks
Ashokamitran's Puthiya Tamil Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsMenaka Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsRasavadhi Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsEzhuthin Kotpadu : Sujatha Rating: 5 out of 5 stars5/5Patchai Kaali Rating: 0 out of 5 stars0 ratingsKumbakonam Vakkil Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsSarvadhesa Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsKadavulai Marutha Ingarsaal! Indhumatha Aatharavu Yates, Romain Rolland, Walt Whitman! Rating: 0 out of 5 stars0 ratingsVidyasaagaram Rating: 0 out of 5 stars0 ratingsSujatha Naveenathin Nayagan Rating: 5 out of 5 stars5/5Oru Kathasiriyarin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsElakkia Munnodigal Rating: 0 out of 5 stars0 ratingsThakkaiyin Meethu Naangu Kangal Rating: 4 out of 5 stars4/5Puththaga Poonga Rating: 0 out of 5 stars0 ratingsVasantha Mallika Rating: 0 out of 5 stars0 ratingsTasmac Echarikkai Rating: 0 out of 5 stars0 ratingsPulariyin Muthangal Rating: 0 out of 5 stars0 ratingsPammal Mudhal Komal Varai Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Thavira Rating: 5 out of 5 stars5/5Pirithoru Maranam Rating: 0 out of 5 stars0 ratingsKamban Tamizhum Kanini Tamizhum Rating: 0 out of 5 stars0 ratingsCherryblossomum Innum Sila Pookkalum Rating: 0 out of 5 stars0 ratingsSatyajit Ray - Vaazhvum Vazhiyum Rating: 0 out of 5 stars0 ratingsUlagam Muzhuthum Paambu Vazhipaadu! Rating: 0 out of 5 stars0 ratingsMuthalil Pootha Roja Rating: 0 out of 5 stars0 ratingsVisaranai Commission Rating: 3 out of 5 stars3/5Diwan Lodabadasingh Bahadhoor Rating: 0 out of 5 stars0 ratingsMu. Varatharasanar Maanavargalukku Sonnathu Rating: 0 out of 5 stars0 ratingsRambaiyum Naachiyaaryum Rating: 0 out of 5 stars0 ratingsC.I.D Chandru Part - 1 Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Salman Rushdie
0 ratings0 reviews
Book preview
Salman Rushdie - N. Chokkan
http://www.pustaka.co.in
சல்மான் ருஷ்டி
Salman Rushdie
Author:
என். சொக்கன்
N. Chokkan
For more books
http://www.pustaka.co.in/home/author/n-chokkan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. மூன்று தாயார்கள்
2. சொர்க்கம், நரகம், அடுத்து...?
3. முதல் நாவல்
4. நள்ளிரவுக் குழந்தைகள்
5. இழுத்துப் பிய்க்கப்படும் பட்டாம்பூச்சிகளைப்பற்றி...
6. தனிமைச்சிறை
7. மேஜிக்கல் ருஷ்டி-யிசம்
8. காதல் மன்னன்
9. ருஷ்டியின் படைப்புகள்
10. கலைத்துறைப் பங்களிப்பு
11. ருஷ்டியும் இந்தியாவும்...
12. விருதுகள், கவுரவங்கள்
13. சல்மான் ருஷ்டி: கால வரிசை
14. தொடரும்...
முன்னுரை
நண்பர் திரு. பா. ராகவனுடன் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் பேச்சுவாக்கில் சொன்ன ஒரு விஷயம், என்னால் என்றைக்கும் மறக்கமுடியாதது, 'ஆங்கிலத்தில் ஓர் எழுத்தாளர், ஒரே ஒரு நல்ல நாவலை எழுதிவிட்டால் போதும், அதன்பின் வாழ்நாள் முழுக்க (பொருளாதாரரீதியில்) அவர் கவலைப்படவேண்டியதில்லை!'
இதற்கு நேரெதிரான உதாரணம், எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் வாழ்க்கை. ஒரே ஒரு கெட்ட, அதாவது சிலருடைய பார்வையில் கெட்டதாகக் கருதப்பட்ட ஒரு நாவலை எழுதிவிட்டதற்காக, அவருடைய வாழ்நாள்களே எண்ணப்பட்டு, தலைக்குமேல் எப்போதும் ஒரு கத்தி, 'இதோ, விழுந்துவிடப்போகிறேன்' எனும் பாவனையில் தொங்கிக்கொண்டிருக்க, உடலளவிலும், மன உளைச்சல்களாகவும் இந்த அனுபவம் அவரை ஏகத்துக்கு அலைக்கழித்துவிட்டது.
'மிகச்சிறந்த பக்தன் யார்?' என்று நாரதர் மகாவிஷ்ணுவைக் கேட்டதாக ஒரு புராணக்கதை உண்டு.
நாரதருக்கு இதை விளக்கிச்சொல்வதற்காக, விளிம்புவரை எண்ணை நிரம்பிய ஒரு பாத்திரத்தை அவர் தலையில் வைத்து (கூம்புபோல் உயர்கிற அந்த ஜடாமுடிக்குமேல் எப்படிதான் பாத்திரத்தை நிறுத்தினாரோ!) நடக்கச்சொன்னாராம் மகா விஷ்ணு. எண்ணை வழிந்துவிடக்கூடாதே என்கிற கவலையோடு, அதி-கவனமாக நடந்த நாரதர், அந்த நடைபயணத்தின்போது, ஒருமுறைகூட இறைவனை நினைக்கவில்லை, நினைக்கத் தோன்றவில்லை.
மகாவிஷ்ணுவின் பெயரை, புகழை அன்றாடம் பாடுகிறவர் நாரதர். ஆனால், இப்படி வேறொரு விஷயத்தில் அவருடைய கவனம் சென்றுவிட்டபோது, அவரால் விஷ்ணுவை நினைக்கக்கூட முடியவில்லை. இதைச் சுட்டிக்காட்டிய விஷ்ணு, 'மனிதர்களுடைய அன்றாட வாழ்க்கையில் ஆயிரம் கஷ்டங்கள், கவலைகள், ஆனால், அவற்றினிடையேயும் என்னை அவ்வப்போது நினைக்கிறவர்கள், மனப்பூர்வமாக வழிபடுகிறவர்கள் இருக்கிறார்கள், அவர்கள்தான் உண்மையான, சிறந்த பக்தர்கள்' என்று பதில் சொன்னாராம்.
ருஷ்டியின் தலைக்கு விலை அறிவிக்கப்பட்டு, எந்நேரமும் யாரேனும் தன்னைக் கொல்ல அலைந்துகொண்டிருக்கிறார்கள் என்கிற நடுக்கமூட்டும் உண்மையின் நடுவே, யார் கண்ணிலும் படாமல், நான்கு சுவர்களுக்குள் தலைமறைவு வாழ்க்கையின் தனிமையில் வாடின அந்த நிலைமையில், இத்தனை கவலைகள், மனக்குழப்பங்களுக்கு இடையிலும் அவர் தனது நம்பிக்கையை, அதைவிட முக்கியமாக தன்னுடைய படைப்பூக்கத்தைக் கைவிட்டுவிடவில்லை என்பதுதான் ருஷ்டியிடமிருந்து நம்மால் கற்கமுடிகிற பாடம்! இந்த கண்ணோட்டத்தில் ருஷ்டியின் வாழ்க்கையை முழுக்க படித்தபிறகு, அவரை 'ஆழ்ந்த எழுத்து உபாசகர்' என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.
சல்மான் ருஷ்டியின் பெரும்பாலான முக்கிய படைப்புகள் இன்னும் தமிழில் மொழிபெயர்க்கப்படாத நிலையில், அவரைப்பற்றிய ஓர் அறிமுகம் தமிழில் அவசியமாகிறது. சல்மான் ருஷ்டியின் வாழ்க்கை மற்றும் படைப்புகள்பற்றி வெளிவருகிற இந்த நூலுக்காக, ருஷ்டியின் தனிப்பட்ட மற்றும் இலக்கிய வாழ்க்கையை ஆழ்ந்து வாசிக்கிற வாய்ப்பு கிடைத்தது மிகவும் உற்சாகமளித்தது.
நூல் தொடர்பான பல தகவல்களைத் தெரிவித்து உதவிய நண்பர்கள் சக்ரபாணி, அபுல் கலாம் ஆசாத் இருவருக்கும் என் நன்றி!
கடைசியாக ஒரு வார்த்தை - ஒரு நாவல்போல, திரைப்படம்போல சுவாரஸ்யமாக விரியும் ருஷ்டியின் வாழ்க்கையை, எப்போதாவது, யாராவது படமாக்க விரும்பினால், இந்த நூல் அதற்குரிய ஒரு குறும் ஆவணமாகப் பயன்படும் நம்புகிறேன், அந்தப் படத்தின் நாயகனாக நடிக்க, எல்லாவிதத்திலும் தகுதியுள்ளவராக நான் நினைப்பது,... வேறு யார், கமலஹாசன்தான்!
என்றும் அன்புடன்,
என். சொக்கன்,
பெங்களூர்.
*****
சமர்ப்பணம்
சென்னையை, எனது இன்னொரு வீடாகவே எண்ணச்செய்த,
நேசமிகு இலக்கிய நண்பர் கண்ணன் ராஜகோபாலன் - லஷ்மி தம்பதியருக்கு...
*****
1. மூன்று தாயார்கள்
1989, பிப்ரவரி 14.
உலகம்முழுவதும் காதலர் தினத்தை மகிழ்ச்சியோடு கொண்டாடிக்கொண்டிருக்கும்போது, ஈரான் நாட்டின் தெஹ்ரான் ரேடியோவில் அந்த திடுக்கிடும் அறிவிப்பு வந்தது. இரானிய புரட்சி இயக்கத்தின் தலைவரான எண்பத்தேழு வயது அயாதுல்லா கொமேனி (Ayatollah Komeni), குரலில் கோபம் தெறிக்கப் பேசினார், 'சாத்தானின் கவிதைகள் என்னும் இந்தப் புத்தகம், நம் இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்துவதாக அமைந்திருக்கிறது. ஆகவே அதை எழுதியவருக்கும் பதிப்பித்தவர்களுக்கும் மேலும் இந்த நூலோடு தொடர்புடைய அனைவருக்கும் மரண தண்டனை விதிக்கிறேன்!'
இரான் தேசமெங்கும் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள், தாங்கள் உயர்ந்த தலைவராக மதிக்கும் கொமேனியின் உரையைக் கேட்டபடி, அவரது கோபத்தையெல்லாம் தங்களுக்குள் நிரப்பிக்கொண்டார்கள், 'இந்த நூலின் ஆசிரியர் சல்மான் ருஷ்டியை உடனடியாகக் கொலை செய்யுமாறு முஸ்லீம்கள் அனைவருக்கும் கட்டளையிடுகிறேன்.'
இஸ்லாமியர்களால், 'ஃபத்வா' என்று அழைக்கப்படும் இந்த 'மரண தண்டனை' அறிவிப்பை அடுத்து, பல தீவீரவாத அமைப்புகளும் ருஷ்டியின்மேல் ஜென்ம விரோதம் கொண்டு, அவரைக் குறிவைத்துத் துரத்தலாயின, அப்போது இங்கிலாந்தில் வசித்துவந்த சல்மான் ருஷ்டி உடனடியாக தலைமறைவாகவேண்டியிருந்தது. பிரிட்டன் காவல் துறையின் உதவியுடன் ரகசிய இடங்களில் மறைந்துகொண்ட அவர், அடுத்த பத்து வருடங்களை ஓட்டமும் ஒளிந்துகொள்வதுமாகவே கழிக்கவேண்டியதாயிற்று.
இத்தனையும் ஒரே ஒரு புத்தகத்திற்காக! சல்மான் ருஷ்டியின் 'தி சாதானிக் வெர்ஸஸ்' (The Satanic Verses) - சாத்தானின் கவிதைகள் என்னும் நாவலின் சில சர்ச்சைக்குரிய பகுதிகள், இஸ்லாம் மதத்தின் தோற்றத்தையும், இறைதூதர் முகமது நபி (ஸல்) அவர்களையும் அவமானப்படுத்துவதாக கருதப்பட்டதால், அந்த நூல் வெளியான சில மாதங்களுக்குள் மொத்த இஸ்லாமியர்களின் எதிரிபோல் சித்தரிக்கப்பட்டார் சல்மான் ருஷ்டி. ஃபத்வாவின்கீழ் அவரது தலைக்கு மில்லியன் டாலர் கணக்கில் விலை வைக்கப்பட்டிருந்ததால், கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளுக்குமேல், சூரியனையே கண்ணில் பார்க்காமல் பதுங்கி வாழவேண்டிய கட்டாயம்.
1998ல் ஈரான் அரசு ஃபத்வாவை விலக்கிக்கொண்டது, அதற்குள் சல்மான் ருஷ்டி அவரது நாவல்களையெல்லாம்விட அதிபிரபலமான மனிதராகிவிட்டார்.
இந்தச் சர்ச்சைகளுக்கெல்லாம் நாயகனான சல்மான் அகமது ருஷ்டி, 1947ம் ஆண்டு இந்தியாவின் பம்பாய் நகரத்தில் வசதியான வியாபாரக் குடும்பத்தில் பிறந்தவர். இந்திய மற்றும் மேற்கத்திய கலாசாரங்களின் கலவையாக வளர்க்கப்பட்ட ருஷ்டி, முதலில் பம்பாயிலும், பின்னர் இங்கிலாந்தின் ரக்பி நகரிலும் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார், அவரது கல்லூரிப் படிப்பு முடிவதற்குள், அவரது குடும்பம் பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்திருந்தது.
1968ல் கேம்பிரிட்ஜ் (Cambridge) பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை பட்டம் பெற்றார் ருஷ்டி. அங்கிருந்து பாகிஸ்தான் திரும்பிய அவர், பல சொந்தக் காரணங்களால், மீண்டும் இங்கிலாந்துக்கே செல்வதாக முடிவெடுக்க நேர்ந்தது. அதன்பின் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு, இங்கிலாந்து அவரது மூன்றாவது தாயகமாகிவிட்டது.
அவர் எழுதிய 'ஷேம்' (வெட்கம்) என்ற நாவலின் கதாநாயகனுக்கு., மூன்று தாயார்கள். தானும் அதுபோல்தான் என்றெண்ணுகிறார் சல்மான் ருஷ்டி. ஏனெனில், இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய மூன்று நாடுகளுமே, அவரைப் பெருமளவு பாதித்திருக்கின்றன, அவரது கலாசாரம், எண்ணங்கள், சிந்தனை மற்றும் பழக்கவழக்கஙக்ளுக்குக் அடிப்படைக் காரணிகளாக இருக்கின்றன, 'மூன்று தேசங்களுக்கும் என்மேல் சம உரிமை உண்டு' என்கிறார் ருஷ்டி.
இங்கிலாந்தில் குடியேறியதும், முதலில் ஒரு நாடக நடிகராக விரும்பிய சல்மான் ருஷ்டி, தனது நடிப்புத் திறமை போதாது என்பதை உணர்ந்துகொண்டபின், தன் இன்னொரு ஆர்வமான எழுத்துத் துறையின்மேல் பார்வையைத் திருப்பினார். பிழைப்பிற்காக விளம்பர வாசகங்கள் எழுதும் தொழில், அதில் கிடைக்கிற ஓய்வு நேரங்களிலெல்லாம் இலக்கிய முயற்சிகள் என்று தனது முதல் நாவலை எழுதத் தொடங்கினார் ருஷ்டி. சிறுவயதிலிருந்தே தரமான ஆங்கிலப் படிப்பு மற்றும் பழக்கவழக்கங்களில் ஊறியிருந்ததால், அவர் தன்னுடைய இந்திய அனுபவங்களை, நினைவுகளை வளமான ஆங்கிலத்தில் எழுதமுடிந்தது, பின்னாள்களில் அவரது படைப்புகளின் அடிநாதமாக அமைந்த இந்த எழுத்துபாணி, 'இந்திய ஆங்கில' இலக்கியத்துறைக்கு அவருடைய மிகச் சிறந்த பங்களிப்பாக ஆனது.
1975ம் ஆண்டு வெளியான ருஷ்டியின் முதல் நாவல் 'க்ரிமஸ்' (Grimus), ஓர் அறிவியல் புனைகதை. அந்தப் படைப்பு இலக்கிய உலகில் பெரும் சலனங்களை ஏற்படுத்தியதாக சொல்வதற்கில்லை. ஆனால் ஐந்து ஆண்டுகள் கழித்து, 1980ல் தனது இரண்டாவது நாவலின்மூலம், ஆங்கில இலக்கியத்தில் தனக்கென்று ஒரு கம்பீரமான இடத்தை உறுதிசெய்துகொண்டார் ருஷ்டி. 'மிட்நைட் சில்ரன்' (Midnight Children) - நள்ளிரவுக் குழந்தைகள் எனும் அந்த நாவல், புகழ்பெற்ற 'புக்கர்' பரிசை வென்றது, அதேசமயம் பல சர்ச்சைகளுக்கும் அரசியல் / நீதிமன்றப் போராட்டங்களுக்கும் காரணமானது.
'மிட்நைட் சில்ரன்' நாவல், மற்றும் அதைப்பற்றிய சர்ச்சைகளின்மூலம் ஒரே இரவில் உலகப் புகழ்பெற்றார் ருஷ்டி, தொடர்ந்து வெளியான அவரது அடுத்த நாவல், 'ஷேம்' (Shame), பாகிஸ்தான் பின்னணியில் எழுதப்பட்டிருந்ததால், அதுவும் பல அரசியல் தலைவர்களைக் கோபமுறச் செய்தது. மேலும் சர்ச்சைகள், மேலும் புகழ்.
இவற்றுக்கெல்லாம் உச்சமாக, 1988ம் ஆண்டில் வெளியான அவரது நான்காவது நாவல், 'சாத்தானிக் வெர்ஸஸ்', ருஷ்டியின் வாழ்க்கையையே திசைதிருப்பிவிட்டது. பல நாடுகளில் விற்பனை தடைசெய்யப்பட்ட அந்த நாவலினால், உலகெங்கிலுமுள்ள இஸ்லாம் மக்களின் கோபத்திற்கும் ஈரானியர்களின் 'ஃபத்வா'விற்கும் ஆளான ருஷ்டி, அதன்பின் அநேகமாக உலகத் தொடர்பையே முற்றிலும் இழந்து வாழவேண்டியவரானார், 'என் நாவலை எதிர்ப்பவர்களெல்லாம் தயவுசெய்து ஒரே ஒருமுறை அதை வாசித்துப் பாருங்கள், அதன்பின் என்மேல் ஏதும் தவறில்லை என்பதைப் புரிந்துகொள்வீர்கள்' என்று கோபமாக, ரோஷமாக, கெஞ்சலாக சொல்லிப்பார்த்தும்கூட, 1998ம் ஆண்டுவரை, அவருக்கு அஞ்ஞாத வாசம்தான்.
இன்றைய பொழுது உயிருக்கு ஆபத்தில்லாமல் கழிவதே நிச்சயமில்லை என்ற நிலைமையிலும், ருஷ்டி தனது இலக்கிய ஆர்வத்தைக் கைவிட்டுவிடவில்லை என்பதுதான் ஒரே ஆறுதல். தலைமறைவு வாழ்க்கையிலும், தனது வாசிப்பு மற்றும் படைப்பாக்க முயற்சிகளைத் தொடர்ந்துவந்த அவர், அந்த ஒன்பது ஆண்டுகளுக்குள் இரண்டு நாவல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, ஒரு கட்டுரைத் தொகுப்பு ஆகியவற்றை எழுதி வெளியிட்டார்.
இந்தப் படைப்புகளை வாசித்து வரவேற்ற இலக்கிய ரசிகர்கள், யாருக்கோ, எதற்கோ பயந்து ஒளிந்துவாழ்வது, ருஷ்டியின் மனதைப் பாதித்ததோ தெரியாது, நிச்சயமாக அவரது எழுத்தை பாதிக்கவில்லை என்று நிம்மதி கலந்த மகிழ்ச்சியோடு குறிக்கிறார்கள்.
பிரிட்டன் அரசின் தொடர்ந்த முயற்சிகள் மற்றும் பயமுறுத்தல்களால், 1998ம் ஆண்டு ஈரான் அரசு, சல்மான் ருஷ்டியின்மீதான தனது மரண தண்டனையை விலக்கிக்கொண்டுவிட்டது. என்றபோதும், விடாத தூவானமாக, ஒவ்வொரு ஆண்டு