Vetrikku Sila Puthagangal Part 5
By N. Chokkan
()
About this ebook
Read more from N. Chokkan
Mossad Rating: 3 out of 5 stars3/5A. R. Rahman Rating: 5 out of 5 stars5/5Salman Rushdie Rating: 0 out of 5 stars0 ratingsVeerappan: Vazhvum Vathamum Rating: 0 out of 5 stars0 ratingsBookmarks Rating: 0 out of 5 stars0 ratingsBakthi Thamizh - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsKaasu, Panam, Dhuttu, Money Rating: 0 out of 5 stars0 ratingsFBI Rating: 0 out of 5 stars0 ratingsNalla Tamizh Ezhuthuvom Rating: 0 out of 5 stars0 ratingsWindows 7 Rating: 4 out of 5 stars4/5Kathai Sollum Paadangal Rating: 0 out of 5 stars0 ratingsVetrikku Sila Puthagangal Part 3 Rating: 4 out of 5 stars4/5Bakthi Thamizh Part 4 Rating: 0 out of 5 stars0 ratingsAdutha Kattam Rating: 0 out of 5 stars0 ratingsMaadevan Malarthogai Rating: 0 out of 5 stars0 ratingsAzim Premji Rating: 0 out of 5 stars0 ratingsPlus One Rating: 0 out of 5 stars0 ratingsBhoologam Ananthathin Ellai Rating: 0 out of 5 stars0 ratingsBakthi Thamizh Anaithu Pagangal Rating: 0 out of 5 stars0 ratingsBakthi Thamizh - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsVetri Ettu Dhikkum! Rating: 0 out of 5 stars0 ratingsBakthi Thamizh - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsKhushwant Singh Rating: 0 out of 5 stars0 ratingsMennulagam Rating: 0 out of 5 stars0 ratingsMen Kalaikal Rating: 0 out of 5 stars0 ratingsThiruppu Munaigal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Vetrikku Sila Puthagangal Part 5
Related ebooks
More + Rasam = Munnetram Rating: 0 out of 5 stars0 ratingsNeengal Innum Yen Kodeesvarar Agavillai? Rating: 0 out of 5 stars0 ratingsThedalgal Rating: 0 out of 5 stars0 ratingsKodigalai Kottum Success Ragasiyangal! Rating: 0 out of 5 stars0 ratingsOttangal Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 7 Rating: 0 out of 5 stars0 ratingsMuttalthanamana Kelvigalai Ketkaatheergal! Rating: 0 out of 5 stars0 ratingsநாம் எதை நோக்கி ஓடுகிறோம்? Rating: 0 out of 5 stars0 ratingsPanakkaararaaga 10 Ragasiyangal Rating: 0 out of 5 stars0 ratingsVetri Muzhakangal Rating: 0 out of 5 stars0 ratingsAthirum Uthiram Rating: 0 out of 5 stars0 ratingsJohari Jannal Rating: 0 out of 5 stars0 ratingsNaan Kanda Periyavargal Rating: 0 out of 5 stars0 ratingsSunduvin Sanniyasam Rating: 0 out of 5 stars0 ratingsManam Sinthanai Seyalpadu Rating: 0 out of 5 stars0 ratingsThulli Thiriyum Ninaivalaigal - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsEnnangal Tharum Abaara Vetri Rating: 3 out of 5 stars3/5Ungalukkulle Oru Arputha Manithar Rating: 0 out of 5 stars0 ratingsAvan Aanathu Rating: 0 out of 5 stars0 ratingsPrachanaigal... Theervugal Rating: 0 out of 5 stars0 ratingsIndirabai Allathu Indirajala Kallan Rating: 0 out of 5 stars0 ratingsUratha Sindhanai Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - November 2022 Rating: 0 out of 5 stars0 ratingsதேடல்கள் Rating: 5 out of 5 stars5/5Thanga Thamarai - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsUnakkum Oru Idam Undu Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Kaanungal Rating: 0 out of 5 stars0 ratingsYutha Satham Rating: 5 out of 5 stars5/5யுத்த சத்தம் Rating: 0 out of 5 stars0 ratingsKatturai Kothu 50 Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Vetrikku Sila Puthagangal Part 5
0 ratings0 reviews
Book preview
Vetrikku Sila Puthagangal Part 5 - N. Chokkan
http://www.pustaka.co.in
வெற்றிக்குச் சில புத்தகங்கள் பாகம் 5
Vetrikku Sila Puthagangal Part 5
Author:
என். சொக்கன்
N. Chokkan
For more books
http://www.pustaka.co.in/home/author/n-chokkan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
உள்ளே
1. உங்களுக்கென்று ஒரு தேசம்
2. மூவகைச் சிந்தனை
3. மதிப்பான 'மெடல்'கள்
4. பேச்சுக்கு மரியாதை
5. பஸ் ... பயணம் ... பாடங்கள்
6. ஒரு 'முக்கிய'த் தகவல்!
7. கோட்டையா, கூடாரமா?
8. தலைவன் ஆகலாம்
9. எட்டடுக்கு மாற்றம்
10. சின்னக் குச்சியா நம்மைச் சிறைப்படுத்துவது?
11. வாயுள்ள பிள்ளை
12. கதை சொல்லிக் கலக்கலாம்
13. இரண்டாம் கட்டம்
14. இன்னா இருபது
15. இறகைப் போலே ...
16. ஏழு முகம்
17. எது முக்கியம்?
18. 'சுருக்' சூத்திரங்கள்
19. ஹலோ, என் பெயர்
20. மகாசக்தி
21. பேரம் பழகு!
22. குப்பை லாரி!
23. பரிசுகள்
24. நான் மகான்!
25. சந்தோஷ ரகசியங்கள்
26. ஜீனியஸ்!
27. தலைவா!
28. யானை, ப்ளஸ் எலி!
29. ஸ்பீட் சிந்தனை
30. நேரம் நல்லாருக்கு!
31. 'டிக்டிக்டிக்'
32. இலக்கு!
வெற்றிக்கு சில புத்தகங்கள்
பாகம் 5
என். சொக்கன்
1. உங்களுக்கென்று ஒரு தேசம்
அதிநவீனமான ஒரு காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்த வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வோர் அசைவும் 'லேட்டஸ்ட்' தொழில்நுட்பங்களால் வழிநடத்தப்படுகின்றன. தனிப்பட்ட உறவுமுறைகள் தொடங்கி, அலுவலகம், பிஸினஸ், பொழுதுபோக்கு, சமூகசேவை என்று சகலமும் டிஜிட்டல்மயமாகிவிட்டது.
ஆனால் இப்போதும், குழந்தைகளுக்குக் கதை சொல்ல உட்காரும்போதுமட்டும், 'ஒரே ஒரு ஊரிலே, ஒரே ஒரு ராஜா' என்று ஆரம்பித்தால்தான் அவர்களுக்குச் சந்தோஷம். சிக்கல்கள், குழப்பங்கள் இல்லாத இனிமையான அந்த 'தேவதை'க் கதைகளின் உலகம் அவர்களுக்குமட்டுமில்லை, நமக்கும் ஆனந்தம் தரக்கூடியது.
சின்ன வயதிலிருந்து இப்படிக் கதை கேட்டு வளர்கிற நாம், 'ஒருவேளை, நானும் ஒரு நாட்டுக்கு ராஜாவா இருந்தா எப்படி இருக்கும்?' என்று சும்மா விளையாட்டுக்காவது கற்பனை செய்துபார்ப்பது இயல்புதான். அசட்டுத்தனமாகத் தோன்றுகிற அந்தக் கேள்வியை அடிப்படையாகக் கொண்டு, நாம் மற்றவர்களுடன் பழகுவதற்கான முறைகளைச் சொல்லித்தருவதற்கு ஒரு சுவாரஸ்யமான புத்தகம் வந்திருக்கிறது.
'Kingdomality' என்ற அந்தப் புத்தகத்தின் மையக்கருத்தை உருவாக்கியவர், மனித வள நிபுணர், ஆலோசகர் ரிச்சர்ட் சில்வனோ, அவரோடு அவரது மனைவி சூஸன், ஷெல்டன் பவுல்ஸ் என்ற இருவர் சேர்ந்து இதனைப் புத்தக வடிவில் உருவாக்கியுள்ளார்கள்.
அதென்ன Kingdomality?
முதலில், நாம் இருக்கும் இந்த உலகத்தை ஒரு பழைய, சிறிய தேசத்தைப்போல் கற்பனை செய்துகொள்ளுங்கள். நாமும் நம்மைச் சுற்றியுள்ள மற்றவர்களும்தான் அந்தத் தேசத்தின் குடிமக்கள்.
ஆச்சா. அடுத்து, அந்தத் தேசத்தில் உள்ளவர்களை (அதாவது நம்முடன் வீட்டில், அலுவலகத்தில், வேறு இடங்களில் தினசரி பழகுபவர்களை) நான்கு வகையாகப் பிரித்துப் பார்க்கப்போகிறோம்:
சவால் பிரியர்கள்
தேடல் பிரியர்கள்
பராமரிப்பாளர்கள்
துணைபோகிறவர்கள்
முதல் வகை, 'சவால் பிரியர்கள்'. இவர்கள் எப்போதும் உணர்ச்சிக்கு அடிமையாகாமல் தர்க்கரீதியாக(லாஜிக்கல்)ச் சிந்திக்கிறவர்கள். 'ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்' என்று பாடுகிற முரட்டுக் காளைகள், புதுப்புதுச் சவால்களைத் தேடிச் சென்று சந்திப்பது, சமாளிப்பதுதான் இவர்களுடைய முழு நேர வேலை.
இரண்டாவது வகை, 'தேடல் பிரியர்கள்'. இவர்கள் அந்தக் காலக் கொலம்பஸ், வாஸ்கோடகாமாபோலக் கப்பலில் பயணம் செய்யாவிட்டாலும், புதுப்புது விஷயங்களைக் கண்டுபிடிப்பதில் ஆர்வம் கொண்ட 'க்ரியேட்டிவ்' பேர்வழிகள். ஏதாவது ஒரு பிரச்னை என்றால் தலையில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிடமாட்டார்கள், அதை ஒரு புது விஷயம் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பாகவே நினைப்பார்கள்.
மூன்றாவது வகை, 'பராமரிப்பாளர்கள்'. இவர்களுக்குப் புதுசு கண்டுபிடிப்பதைவிட, இருப்பதை ஒழுங்காகப் பார்த்துக்கொள்வதில்தான் அதிக அக்கறை. வானத்தில் கண்டபடி கோட்டை கட்டாமல் எதார்த்தமாகச் சிந்திக்கிறவர்கள். 'அடுத்த வருஷம் நான் பெரிய பிஸினஸ்மேனாயிடுவேன்' என்று யாராவது சொன்னால், 'அது சரி, இந்த மாசம் கரன்ட் பில் கட்டிட்டியா?' என்று ஞாபகப்படுத்தி அவர்களைப் பூமிக்குக் கொண்டுவருவார்கள்.
கடைசியாக, 'துணைபோகிறவர்கள்'. மற்ற மூன்று வகைகளோடு ஒப்பிட்டால், இவர்கள் உணர்ச்சிக்குக் கட்டுப்படுகிறவர்கள். அதனாலேயே, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு உதவவேண்டும் என்கிற எண்ணம் இவர்களுக்கு அதிகம். ஒரு சமூகத்தை வழிநடத்துகிற பொறுப்பைப் பெரும்பாலும் இவர்களால்தான் சரிவர நடத்தமுடியும்.
இந்த நான்கு வகைகளில் எது உசத்தி, எது மட்டம் என்று யோசிக்கக்கூடாது. எல்லாமே முக்கியம்தான். இப்படி எல்லாவகை மக்களும் இருந்தால்தான் அந்தத் தேசம் முன்னேறமுடியும்.
Kingdomality இதோடு நின்றுவிடுவதில்லை. அடுத்த நிலைக்குச் சென்று, சவால் பிரியர்கள், தேடல் பிரியர்கள், பராமரிப்பாளர்கள், துணைபோகிறவர்கள் என்கிற இந்த நான்கு வகைகளிலும் தலா மூன்று துணைப்பிரிவுகளைக் குறிப்பிட்டு, அவற்றுக்கான விளக்கங்களைத் தருகிறது.
சவால் பிரியர்களில் மூன்று வகை:
கறுப்புப் போர்வீரர் ஜெயிப்பதைமட்டுமே முக்கியமாக நினைக்கிறவர், தோல்வி இவருக்குப் பிடிக்காது, ஒவ்வொரு வெற்றியின்போதும் இவருக்குப் பரிசுகள், பாராட்டுகள் குவியவேண்டும், கச்சிதமாகத் திட்டம் தயாரித்துச் செயல்படுகிறவர், 'என் வழி, தனி வழி' என்று தன்னைமட்டுமே நம்பியிருக்கிறவர்
பிரதம மந்திரி இவருக்கு அதிகாரம் என்றால் பிடிக்கும், நீண்டகால நோக்கில் சிந்தித்துத் திட்டம் உருவாக்குவார், அதைச் சரியாக நிறைவேற்றிப் பலன்களைக் கண்ணெதிரே காட்டுவார், ஆனால் பரிசு, பாராட்டுகள் என்று புகழ் வெளிச்சத்துக்கு வருவது பிடிக்காது
வியாபாரி இந்த வகை மனிதர்கள் யாரிடம் பேசினாலும் அதில் தனக்குச் சாதகமாக ஏதாவது கிடைக்குமா என்றுதான் யோசிப்பார்கள், ஒரு விஷயம் எதிர்காலத்தில் எப்படி மாறும், அதன்மூலம் தங்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்றெல்லாம் கவனமாக யோசித்துச் செயல்படுகிறவர்கள், முழுத் தகவல்களைச் சேகரிக்காமல் அவசரப்பட்டு முடிவெடுப்பது இவர்களுக்கு அலர்ஜி
தேடல் பிரியர்களில் மூன்று வகை:
பிஷப் இவர்கள் 'கருத்து கந்தசாமி'களாக இருப்பார்கள், எந்த விஷயத்திலும் தாங்கள் என்ன நினைக்கிறோம் என்பதைச் சொல்வார்கள், விவாதங்களை வழிநடத்துவார்கள், புதுப்புது யோசனைகளைச் சொல்வார்கள். ஆனால், 'இதெல்லாம் சரி என்பதற்கு என்ன ஆதாரம்?' என்று யாராவது கேட்டால் இவர்களுக்குப் பிடிக்காது. 'நான் சொல்வதை நம்பிப் பின்பற்றுங்கள். அவ்வளவுதான்' என்று சொல்லி முடித்துக்கொண்டுவிடுவார்கள்!
பயணி புது மனிதர்கள், புது இடங்கள், புது விஷயங்களைத் தேடிச் செல்லும் பயணப் பிரியர்கள். எப்போதும் எதையாவது புதிதாகச் செய்யவேண்டும், தங்களுடைய உள்ளுணர்வைப் பின்பற்றவேண்டும் என்கிற ஆசை கொண்டவர்கள், ஒரேமாதிரி விஷயங்களைத் திரும்பத் திரும்பச் செய்வது இவர்களுக்குப் பிடிக்காது.
நல்ல ஆட்சியாளர் இவர்கள் எப்போதும் நீண்டகால நோக்கில் சிந்திக்கிறவர்கள், தாங்கள் சொல்வதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும், தங்களிடம் விசுவாசமாக நடக்கவேண்டும் என்று நினைக்கிறவர்கள், கிட்டத்தட்ட 'பிஷப்'மாதிரியேதான், ஆனால் வெறும் பேச்சோடு நிறுத்திவிடாமல் அதைச் செயலிலும் காட்டுவார்க, இவர்களுக்குத் தங்களைப் பின்பற்றுகிறவர்கள்மேல் மிகுந்த அக்கறை உண்டு
பராமரிப்பாளர்களில் மூன்று வகை:
விஞ்ஞானி எப்போதும் அறிவைத் தேடுகிறவர்கள், எதையும் அலசி, ஆராய்ந்து, விமர்சித்து, அதன்பிறகே பின்பற்றவேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள், சும்மா ஊகங்களின் அடிப்படையில் ஏதாவது செய்தால் முறைப்பார்கள்
எஞ்சினியர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எந்தப் பிரச்னையையும் தீர்த்துவிடலாம் என்று நம்புகிறவர்கள், குத்துமதிப்பான தகவல்களை வைத்துக்கொண்டு எதையும் செய்யமுடியாது என்று கோபிப்பார்கள், துல்லியமான விவரங்களை வைத்துக்கொண்டு ஏதாவது ஒன்றைக் கட்டிமுடிப்பது என்றால் இவர்களுக்குப் பாதாம் அல்வா சாப்பிடுகிறமாதிரி!
மருத்துவர் ஒரு லட்சிய நோக்கத்துடன் செயல்படுகிறவர்கள், எதையும் இப்படிதான் செய்யவேண்டும் என்கிற ஒழுங்கு இவர்களிடம் உண்டு, பொறுமையில்லாமல் அவசரப்படுவதன்மூலம் ஆபத்துதான் வரும் என்று உறுதியாக நம்புகிறவர்கள்
துணைபோகிறவர்களில் மூன்று வகை:
வெள்ளைப் போர்வீரர் இவர்கள்தான் ஒவ்வொரு தேசத்தின் நிஜ 'ஹீரோ'க்களாக இருப்பார்கள். மேலே நாம் பார்த்த கறுப்புப் போர்வீரர்களைப்போலவே செயல்படுவார்கள், ஆனால் தங்களுடைய சொந்த நலன்களைவிட, தாங்கள் சார்ந்திருக்கும் மக்களுடைய நலனைப் பெரிதாக நினைத்து அதற்காக வியர்வை சிந்துவார்கள், ரத்தமும் சிந்துவார்கள்
கனவு காண்கிறவர் பெயரைக் கேட்டாலே புரியும், எப்போதும் கனவு வாழ்க்கை வாழ்கிறவர்கள், எதையும் ஆனந்தமாக ரசிக்கவேண்டும், வம்பு தும்பு ஆகாது, சுருக்கமாகச் சொன்னால் 'சுகஜீவனம்'!
மேய்ப்பர் மிகவும் இனிமையாகப் பழகுபவர்கள், உறவுமுறைகளை மதிக்கிறவர்கள், அடுத்தவர்களுடன் ஒத்துழைப்பதன்மூலம்தான் பெரிய விஷயங்களைச் சாதிக்கமுடியும் என்று நம்புகிறவர்கள், ஒருவருக்குத் துரோகம் செய்வது கொலைக்குச் சமம் என்று நினைக்கிற 'ரொம்ப நல்லவர்'கள்
இந்தப் பன்னிரண்டில் நீங்கள் எந்த வகை? உங்களைச் சுற்றியிருப்பவர்கள் ஒவ்வொருவரும் எந்த வகை? அது புரிந்துவிட்டால், அதற்கு ஏற்ப அவர்களுடன் பழகும்விதத்தை மாற்றி நீங்கள் எல்லோரிடமும் நல்ல மார்க் 'ஸ்கோர்' பண்ணலாம், சிறப்பாக வெற்றியடையலாம். இதைச் சொல்லித்தருவதுதான் Kingdomalityயின் முக்கியமான நோக்கம்.
அது சரி, நம்முடைய வகையை எப்படிக் கண்டுபிடிப்பது?
ரொம்பச் சுலபம். http://kingdomality.com/ என்ற இணைய தளத்துக்கு வாருங்கள். சில கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள், உங்களுடைய கற்பனை தேசத்தில் நீங்கள் எந்த வகை மனிதர் என்பதை உடனே தெரிந்துகொள்ளலாம்!
***
2. மூவகைச் சிந்தனை
உங்களுக்கு 20-20 தெரிந்திருக்கும். 10-10-10 தெரியுமா?
இது கிரிக்கெட் இல்லை, முடிவெடுப்பதற்கான ஓர் உத்தி. சமீபத்தில் வெளியாகியிருக்கும் '10-10-10' என்கிற புதிய புத்தகத்தில் (Scribner Book Company விலை ரூ 645/) இதனை விரிவாக அறிமுகப்படுத்தியிருப்பவர், உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர், மேலாண்மை நிபுணர், ஆலோசகர் சூஸி வெல்ஷ்.
சூஸி ஏற்கெனவே சர்வதேச வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்தான். தன்னுடைய கணவர் ஜாக் வெல்ஷுடன் இணைந்து இவர் எழுதிய 'வின்னிங்' புத்தகம் கடந்த பல ஆண்டுகளாக 'பெஸ்ட்செல்லர்ஸ்' வரிசையில் நிரந்தர இடம் பிடித்திருக்கிறது.
'10-10-10' உத்தியின் விசேஷம், அதன் எளிமை.
பொதுவாக, முடிவெடுக்கும் உத்திகள் அனைத்தும், அலுவலகச் சூழலில், பிஸினஸ் முடிவுகளை எடுப்பதற்காகப் பயன்படுகிறவை. அதனால்தான், பெரும்பாலான மேனேஜ்மென்ட் கல்லூரிகளில் இவற்றைக் கட்டாயப் பாடமாக வைத்துச் சொல்லித்தருவார்கள்.
ஆனால், '10-10-10' அப்படி உச்சியில் ஏறி உட்கார்ந்துகொள்வதில்லை. இந்தச் சுலபமான உத்தியை நீங்களும் நானும், இன்னும் சாதாரணப்