Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kuri Vechachu
Kuri Vechachu
Kuri Vechachu
Ebook107 pages1 hour

Kuri Vechachu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateFeb 1, 2018
ISBN9781043466381
Kuri Vechachu

Read more from Rajeshkumar

Related to Kuri Vechachu

Related ebooks

Related categories

Reviews for Kuri Vechachu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kuri Vechachu - Rajeshkumar

    22

    1

    ஐந்து டிகிரி செல்ஸியஸ் குளிரின் உக்கிரத்தில் உறைந்துபோன மும்பை. நேரம் 1.40. மும்பையின் நூற்றி சொச்ச தியேட்டர்களில் இரவுக்காட்சிகள் முடிந்து ஹிரித்திக் ரோஷன், ஷாருக்கான், அமிர்கான், அஜய்தேவ்கன், சல்மான்கான் ராட்சஸ கட் அவுட்கள் இருட்டுக்குள் விழுந்து பனியில் நனைய ஆரம்பித்திருந்தன.

    டாக்ஸி டிரைவர்கள் ரோட்டோரமாய் டாக்ஸிகளை நிறுத்திவிட்டு பிராக்கெட் குறிகளாக மாறி பின் சீட்டில் சாராய போதையோடு தூங்கிக் கொண்டிருந்தார்கள். பிளாட்பாரங்களில், கிரீடங்கள் இல்லாத இந்நாட்டு மன்னர்களும், அரசிகளும் எந்தப் பாதுகாப்பும் இல்லாமல், வால் போஸ்டர்களை போர்வையாக போர்த்திக் கொண்டு, நித்திரைக்குள் விழுந்திருந்தார்கள்,

    இந்த இரவு நேர மும்பையைப் பற்றி இன்னும் ஒரு பேராகிராப் வர்ணிப்பதற்குள் - வாலஸ் ரோட்டின் வளைவில் வேகமாய் திரும்பும் - அந்த வெள்ளை நிற செவர்லே கார் நம் கண்ணில்பட்டு விடுகிறது. வர்ணனையை நிறுத்திக் கொண்டு - அந்தக் காரைக் கவனிப்போம்.

    காருக்குள் அடைசலாய் ஆறுபேர் உட்கார்ந்திருந்தார்கள். எல்லோருமே ஏர்ஃபோர்ஸ் வெள்ளை யூனிபார்ம்களில் தெரிந்தார்கள். கார் பானெட்டின் நெற்றியில் சிறகு விரித்த பட்சி சின்னமும் அதற்கு கீழே - ஏர்விங்க் - செக்யூரிட்டி ஃபோர்ஸ் என்ற ஆங்கில இந்தி வாசகங்களும் - எனக்ரேவ் செய்யப்பட்ட எவர்சில்வர் பிளேட்டில் மின்னியது. காரின் மண்டையில் ஒரு சிவப்பு விளக்கு சத்தமில்லாமல் சுழன்று கொண்டிருந்தது.

    கோர்தன்!

    பின் சீட்டிலிருந்து குரல் கேட்க

    காரின் ஸ்டீயரிங்கை கையாண்டு கொண்டிருந்தவர் திரும்பினார். வழுக்கை மண்டை, தெரு விளக்கில் அபாரமாய் மின்னியது.

    ஸார்!

    கார் இவ்வளவு வேகம் வேண்டாம்... இப்போ என்ன வேகத்துல போயிட்டிருக்கே...?

    எண்பது ஸார்...

    அறுபதுக்குவா...

    எஸ்... ஸார்...

    "செவர்லேயின் வேகம் சட்டென்று குறைந்தது. காரின் என்ஜின் வேறு சுருதியில் ‘ஹம்’ பண்ணியது. டிரைவரைத் தவிர மற்ற ஐந்து பேரும் யூனிபார்மில் டாலடிக்கும் நட்சத்திரங்களோடு நேர்பார்வை பார்த்துக் கொண்டு வந்தார்கள். அதி தீவிரமான சிந்தனை முகங்கள்.

    போர்ப்பந்தர் ரோட்டில் கார் திரும்பியபோது ஒருவர் குரல் கொடுத்தார். உத்தம்சிங்! கமிஷனரோடு பேச்சுவார்த்தை நடத்த மூணு பேர் மட்டும் போனாபோதும் நாம் எல்லோருமே உள்ளே போக வேண்டாம்.

    இது ஏற்கனவே பேசினதுதானே...?

    யார் யார் போறதுங்கிற முடிவுக்கு வந்துட்டீங்களா?

    எஸ்...! நான், குரு கோவிந்த், சர்தார்...

    பேச்சுவார்த்தையை ஒழுங்கா முடிப்பீங்களா...? இல்லே நாங்களும் உள்ளே வரணுமா...?

    வேண்டியதில்லை... பேசிக் கொண்டிருக்கும் போதே காரின் வேகம் இன்னமும் குறைந்தது. ஒரு கிளைப்பாதையில் திரும்பியது. பாதையின் ரெண்டு பக்கத்திலும் மரங்கள் கும்பலாய் தெரிய சோடியம் வேபர் விளக்குகள் தன் பாதாம் நிற வெளிச்சத்தை மரங்களின் தலைகளின் மேல் பொழிந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. மரங்களும், கீழே இருந்த குடிசைகளுக்குள் காடா விளக்குகள் எரிவதும் தெரிந்தது. போக்குவரத்து சுத்தமாய் செத்துப் போன அந்த ரோட்டில் மேலும் நீளமாய் ஒரு ஐந்து நிமிஷப் பயணம். போலீஸ் கமிஷனர் பங்களா சிப்ரஸ் மரங்களுக்கு மத்தியில் இருட்டில் தெரிய காம்பௌண்ட் கேட்டின் முன்புறம் ரைபிள் ஏந்திய கான்ஸ்டபிள்கள் நின்றிருந்தார்கள். லேசான அசைவுகளோடு தெரிந்தார்கள்.

    கார் இன்னும் வேகம் குறைந்து காம்பௌண்ட் கேட்டுக்கு முன்னால் போய் நின்று மௌனமானது. ஆறு பேரில் ஒருவர் இறங்கி, கான்ஸ்டபிள்களை நோக்கிப் போனார். சொன்னார்.

    ஏர் விங்க். செக்யூரிட்டி ஃபோர்ஸிலிருந்து வர்றோம். கமிஷனரை உடனடியாய்ப் பார்க்க வேண்டும்.

    கான்ஸ்டபிள் ஏறிட்டார்.

    என்ன விஷயமாய்?

    இண்டர்நேஷனல் ஸ்மக்ளர் ஒருத்தனை நாளைக்கு விடிகாலையில் ஏர்போர்ட்டில் வைத்து கைது செய்ய வேண்டும். அது குறித்து அவரிடம் ஆலோசனை நடத்த வேண்டும்.

    இந்த நேரத்திலா?

    விஷயம் அவசரம். டெல்லியிலிருந்து தகவல் கிடைத்து உடனே வருகிறோம்.

    ஒரு நிமிஷம் கான்ஸ்டபிள் செக்யூரிட்டி கூண்டுக்குள் நுழைந்து இண்டர்காமை உசுப்பி, ரிஸீவரில் தொடர்பு கொண்டார். கமிஷனர் விஷ்ணுவர்தன் தூக்கக்குரலில் பேசினார்.

    என்ன விஷயம்?

    கான்ஸ்டபிள் ஒப்புவித்தார்.

    ஏர்விங்க் செக்யூரிட்ரி ஆபீஸர்ஸ் உங்களைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறார்கள் ஒரு ஸ்மக்ளரை ஏர்போர்ட்டில் வைத்து கைது செய்ய வேண்டுமாம். அது சம்பந்தமாய் உங்களோடு பேச அதிகாரிகள் வந்திருக்கிறார்கள்.

    எதில் வந்திருக்கிறார்கள்.

    ஏர்விங்க் செக்யூரிட்டிபோர்ஸ் காரில்

    உள்ளே அனுப்பு.

    கான்ஸ்டபிள் ரிஸிவரை வைத்து விட்டு செக்யூரிட்டி கூண்டினின்றும் வெளியே வந்தார், வெளியே காத்திருந்தவரைப் பார்த்து நீங்கள் உள்ளே போகலாம் என்றார்.

    காரினின்றும் உத்தம்சிங், கோவிந்த், சர்தார் இறங்கினார்கள். உத்தம்சிங் காருக்குள் குனிந்து பார்த்து கமிஷனரிடம் பேச்சு வார்த்தைகளை முடித்துக் கொண்டு ஏர்போர்ட் வந்து விடுகிறாம். கார் எங்களுக்காக காத்திருக்க வேண்டாம். நீங்கள் புறப்பட்டுவிடுங்கள்."

    நல்லது ஏர்போர்ட்ல சந்திப்போம் பின்சீட்டில் உட்கார்ந்திருந்தவர் டிரைவர்க்கு சைகை காட்ட கார் ரிவர்ஸில் வந்து இடதுகை பக்கமாய் திரும்பி ஓடியது.

    மூன்று பேரும் பூட்ஸ் சத்தங்களோடு உள்ளே நுழைந்தார்கள். கமிஷனரின் வரவேற்பறை ட்யூப்லைட் வெளிச்சத்தோடு தயாராய் காத்திருந்தது.

    நைட்கவுனின் முடிச்சை இறுகக் கட்டிக்கொண்டு தூக்கம் தொலைந்து போன முகத்தோடு கமிஷனர் விஷ்ணுவர்தன் - மாடியிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தார். விஷ்ணுவர்தன் - உரம்

    Enjoying the preview?
    Page 1 of 1