Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Keekkee
Keekkee
Keekkee
Ebook108 pages40 minutes

Keekkee

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மிருகங்களை வேட்டையாட நினைக்கும் மனிதனை காக்கும் குரங்கை பற்றி அழகுற எடுத்துரைக்கும் ஒரு பகுதியாக கீக்கீ அமைந்துள்ளது.
மனிதனுள்ளே இருக்கும் மிருகத்தையும், மிருகத்தினுள்ளே இருக்கும் மனிதத்தையும் அழகுற எடுத்துரைக்கும் சிறுகதையாக அமைந்துள்ளது.
Languageதமிழ்
Release dateSep 3, 2022
ISBN6580136608949
Keekkee

Read more from Tamilvanan

Related to Keekkee

Related ebooks

Reviews for Keekkee

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Keekkee - Tamilvanan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கீக்கீ

    Keekkee

    Author:

    தமிழ்வாணன்

    Tamilvanan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/tamilvanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    பேச்சும் நின்றது! மூச்சும் நின்றது!

    நன்றி கொன்றேன் நான் வாழலாமா?

    வெறிகொண்டாள் வீணாகவா?

    உயிர் காத்தாயே, உன்னை மறப்பேனா?

    ஓடிவந்த ஒட்டகமே!

    வாலை அறுத்தாயே, வாழ்ந்தாயா?

    கீக்கீ

    என் கன்றின் வீரம் எனக்கில்லையே!

    கண்களை இழந்தால் என்ன?

    வெட்டியடிக்குது மின்னல் கொட்டியிடிக்குது மேகம்

    உன் பாட்டிலே பாடம் உண்டு!

    பேச்சும் நின்றது! மூச்சும் நின்றது!

    அந்த அகன்ற ஆழமான ஏரிக்கரை ஓரமாகப் பெரும் கூட்டம் கூடியிருந்தது. ஊரே அங்குத் திரண்டு விட்டதோ என்று கேட்கும்படி, கரையோரத்திலே முண்டியடித்துக்கொண்டு நூற்றுக்கணக்கானவர்கள் இடித்துத் தள்ளிய படி நின்றுகொண்டிருந்தார்கள்.

    அனைவருடைய விழிகளும் கலங்கியிருந்தன. கடும் துன்பத்தில் ஆழ்ந்திருந்தன. அந்த ஏரி நீரின் அசைவையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தன. சுடும் நெடுமூச்சுக்கு நடுவே -

    வயதான ஒருவர் பேசினார்: நம்பவே முடியவில்லை! சின்னானை முதலை இழுத்துக்கொண்டு போயிருக்குமா? ஏரியில் ஏது முதலை? எனக்குத் தெரிந்து, இடுப்பளவு நீரில் நின்று எத்தனையோ ஆண்டுகளாக நான் மீன் பிடித்து வருகிறேன். முதலையையே நான் பார்த்ததில்லை! இந்தச் செய்தி என்னைக் கலக்குகிறதே! முதலையைப் பார்த்தது யார்?

    நான் தான்! - தொங்கிய தலைக்குக் கீழேயிருந்து மெல்ல ஒரு வாய் சொல்லிற்று. அந்த வாய்க்குரியவனுக்கு நாற்பது வயது இருக்கும். நாகன் என்பது பெயர்.

    இடுப்பளவு நீரில் நின்றுகொண்டு சின்னான் வலை வீசிக்கொண்டிருந்தான். இருந்தாற்போலிருந்து அவன், ‘ஐயோ!’ என்று வீறிட்டலறியதையும் நீரில் மூழ்குவதையும் கண்டேன். பதறிக்கொண்டே அந்தப் பக்கமாக நான் பார்த்தபோது, நீரைப் பிளந்துகொண்டு முதலை ஒன்று போய்க்கொண்டிருந்தது, தெளிவாகத் தெரிந்தது! என்று நாகன் ஈனக் குரலில் சொல்லிவிட்டுத் தலையைக் கவிழ்த்துக்கொண்டு அழுதான்.

    சிறிது நேரத்திற்குப் பிறகு கூட்டம் அங்கிருந்து திரும்பியதும், உடனே இந்தச் செய்தியை அந்தக் குப்பத்துக்குத் தலைவனாக இருந்த தலையாரியிடம் சொல்லிவிடவேண்டும் என்று முடிவு எடுத்தது.

    தலையாரி, செய்தி கேட்டுத் துன்பம் கொண்டான். ஏரிக்குள் எப்படி முதலை வந்திருக்க முடியும் என்பது பற்றிப் பேச்சு எழுந்தபோது, சில நாட்களுக்கு முன்னால் பெய்த பெருமழையினால் ஏரியின் கண்வாயில், ஆற்றுநீர்ப் பெருக்கெடுத்துப் பாய்ந்திருக்கிறது. அப்பொழுது முதலை, வெள்ளத்தில் அடித்துக்கொண்டு வந்திருக்க வேண்டும் என்று தலையாரிக்குத் தோன்றியது.

    சின்னானை முதலை இழுத்துக்கொண்டு போனது குறித்து மிக வருந்துகிறேன். இனி இந்தத் துன்பத்தை நீடிக்கவிடக்கூடாது. உடனே முதலையை வெட்டி வீழ்த்த வழி என்ன என்பதில் நாம் கவனம் காட்ட வேண்டும். இல்லாவிடில் இது போன்ற உயிர்ப்பலி ஏற்பட்டுக் கொண்டே இருக்கும் என்று தலையாரி சொல்லி விட்டு, முதலையை வெளியேற்ற என்ன வழி என்பதில் கவனம் கொண்டான்.

    ***

    ‘ஏரியில் முதலை இருக்கிறது. சின்னான் அதற்கு முதல்பலி’ என்ற செய்தி ஏரிக்குப்பம் முழுவதும் பரவியது. அங்கு வாழ்ந்து வந்த மீனவர்களின் உள்ளங்களில் தூண்டி முள்ளினால் நறுக்கென்று குத்தியது போன்ற உணர்வு ஏற்பட்டது.

    அங்கிருந்தவர்களுக்கு மீன் பிடிப்பதே தொழில், அவர்களுடைய வாழ்வு, அந்த ஏரியையும் அதிலிருந்த மீன்களையுமே பின்னிக்கொண்டிருந்தது. ஏரிக்குப் பத்து மீன்கள் என்றால் அவைகளின் சுவையே தனி என்று பக்கத்து நகரங்களில் பாராட்டுக் கிடைத்திருந்தது. எனவே, அந்தக் குப்பத்து வாழ்வோர் மட்டும்தான் அந்த ஏரியில் மீன் பிடிக்கலாம் என்ற தனி உரிமையை ஆளுவோர் அளித்திருந்தார்கள். ஒவ்வொரு நாளும் அந்தக் குப்பத்திலிருந்த மீனவர்கள், ஏரிக்குள் இடுப்பளவு நீரில் இறங்கி நின்றுகொண்டு, மாலை மங்கும்வரையில் மீன் பிடித்துக் குவிப்பார்கள். தோளிலே தொங்கும் கூடை நிரம்பினால்தான் அவர்கள் கும்பி நிரம்பும். மீனவர்கள் பிடித்துக் குவித்த மீன்களைத் தலையாரிக்கு முன்னால் கொண்டுவந்து கொட்டுவார்கள். தலையாரி, மீன்களை நிறுத்துப் பக்கத்து நகர்ப்புறத்துக் கடைத்தெருவுக்கு அனுப்பிப் பணமாக்குவான். பங்கிட்டுத் தருவான்.

    அப்படிப்பட்ட நல்வாழ்வுக்குத் திடீரென்று முதலையினால் பெரிய தாக்குதல் ஏற்பட்டிருந்தது!

    மீனவர்கள் -

    ஏரிக்குச் செல்லத் தயங்கினார்கள். தோளிலே வலையும் உள்ளத்திலே கவலையும் வாடும் வயிற்றிலே சுருக்கமும் நடையிலே தயக்கமும் அவர்களிடமிருந்தன. மீனவிகள், மீனவர்களை வழிமறித்து, அத்தான், ஏரித் தண்ணீரிலே இறங்காமல் மீன் பிடிக்க முடியாதா? என்று கேட்டுக் கண் கலங்கினார்கள். ஆனால், ஏரியில் இறங்கி நின்று வலை வீசினால்தானே ஏராளமான மீன்களைப் பிடிக்க இயலும்? நீரில் இறங்கினால் அந்த முதலை -

    அதுவே கவலை!

    மீனவர்கள் முதலயைப் பிடிக்க எத்தனையோ வழிகளைக் கையாண்டார்கள். எதுவும் பயன் தரவில்லை.

    வலை விரித்தார்கள். கண்ணி வைத்தார்கள். கத்திகளை வரிசையாக நட்டு வைத்தார்கள்.

    பயன் இல்லை.

    சுவை மிகுந்த சுறாமீன் துண்டங்களையும் ஆசை கொள்ளும் ஆவின் துண்டங்களையும் எச்சிலை ஊறவைக்கும் எலும்புத் துண்டுகளையும் போட்டு, அவைகளைக் தின்ன அது வரும்போது, துப்பாக்கியால் அதைச்சுட்டு விடுவது என்று முடிவு எடுத்தார்கள். முதலை வந்தால் தானே?

    மனிதர்கள் நீரில் இறங்கினால் மட்டும் நீந்தி வந்தது முதலை! முதலைக்கு மூளை இல்லை என்கிறார்களே!

    நான்கு நாட்களுக்குப் பிறகு இன்னொரு செய்தி தலையாரிக்கு எட்டியது. இடும்பன் என்ற மீனவனை முதலை இழுத்துக்கொண்டு போய்விட்டது என்ற துன்பச் செய்திதான் அது!

    தலையாரி தலை குனிந்தான். இப்படியே பலிக்கணக்கு ஏறிக்கொண்டே போனால் குப்பம் என்னாவது, மீனவர்களின் பிழைப்பு என்னாவது

    Enjoying the preview?
    Page 1 of 1