Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kai Arugil Vaanam
Kai Arugil Vaanam
Kai Arugil Vaanam
Ebook96 pages31 minutes

Kai Arugil Vaanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By V.Usha
Languageதமிழ்
Release dateMay 2, 2020
ISBN9781043466961
Kai Arugil Vaanam

Read more from V.Usha

Related to Kai Arugil Vaanam

Related ebooks

Related categories

Reviews for Kai Arugil Vaanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kai Arugil Vaanam - V.Usha

    1

    வங்கக் கடல் உற்சாகத்துடன் அலை அடித்துக் கொண்டிருந்தது.

    ‘ஓ’வென்ற இரைச்சலுடன் நான்கு கட்டுமரங்கள் உள்ளே பாய்ந்தன.

    சுனாமியின் சுருட்டலில் சிதைந்து விடாமல் கலங்கரை விளக்கம் நிமிர்ந்து நின்றது.

    நேர் எதிரே, கம்பீரமாகக் காட்சி அளித்தது அந்தப் பெண்கள் கல்லூரி.

    தன்யா, இரண்டாவது தளத்தில் முதுகலை வகுப்பில் இருந்தாள். அவளைச் சுற்றி தோழிகள்.

    வழக்கமான சிரிப்பும், பேச்சும், குறும்பும், கும்மாளமும் இன்று இல்லை. அவர்களின் முகங்கள் வாடிப்போயிருந்தன.

    இதழ்கள் வறண்டு போய் ஈரப்பசையின்றி தெரிந்தன. கன்னம் கறுத்துக் கிடந்தன.

    வாசற்படியில் நிழல் ஆடியது.

    பேராசிரியை சொர்ணவதி வந்துவிட்டார்.

    மாணவிகள் எழுந்து நின்றார்கள்.

    ‘வணக்கம்’ என்றபோது குரல்கள் ஓய்ந்திருந்தன.

    சொர்ணவதி வியப்புடன் மாணவிகளைப் பார்த்தார்.

    எல்லோருக்கும் என்ன ஆச்சு? ஏன் இப்படி கப்பல் கவிழ்ந்த மாதிரி இருக்கீங்க? ஏதாவது பிரச்சினையா? என்றார், யோசனையுடன்.

    எல்லோரும் மவுனமாக இருந்தார்கள்.

    ஏய் லலி... வாயாடிப் பொண்ணு... நீ கூட அமைதி ஆகிட்டியே? சொல்லு லலி... என்ன விஷயம்?

    லலிதா மெல்ல நிமிர்ந்து வகுப்பில் இது எங்க கடைசி நாள்... ரொம்ப கஷ்டமா இருக்கு மேடம் என்றாள், குரல் கரகரக்க.

    ஆமா.

    சொர்ணவதி உட்கார்ந்தார். கண்ணாடியைக் கழற்றி வைத்தார். விழிகள் நிமிர்ந்து, மாணவிகளை வலம் வந்தன.

    நேற்று வரை சிறகில்லாமல் பறந்த வண்ணத்துப் பூச்சிகளா இவை? தரையில் கால் பாவாமல் காற்றைப் பிடித்தபடி மிதந்து கொண்டிருந்த தட்டாரப் பூச்சிகளா?

    நின்றால் சிரிப்பு, நடந்தால் குறும்பு, பேசினால் கிண்டல், உட்கார்ந்தால் அரட்டை என்று மரத்தடிகளிலும் மைதானத்திலும் கலகலப்பை தூவி, கல்லூரியையே கல்யாண மண்டபம் போல ஆக்கி வைத்திருந்த அந்தச் சிட்டுக் குருவிகளா?

    ஒரே நாளில் எத்தனை பிரளய மாற்றம்!

    ஆனால் –

    இதுதான் இயற்கை!

    இதுதான் வாழ்க்கை!!

    எல்லா வசந்தங்களும் ஒரு நாள் முடிவுக்கு வரும். பருவங்கள் மாறும். கடும் குளிர், கோடை என்று சூழல் மாறும்.

    மாற்றம் நிறைந்ததுதான் வாழ்க்கை. மாற்றம் இல்லாவிட்டால் உலகம் இல்லை. மார்க்ஸ் சொன்னது போல மாற்றம் என்ற சொல்லைத் தவிர எல்லாமே மாறிக் கொண்டிருக்கும்.

    இவர்களுக்கும் கல்லூரி என்ற வசந்த காலம் முடிவுக்கு வருகிறது. துள்ளித் திரிந்த காலம் இதோ விடைபெறப் போகிறது. இந்தா பிடி என்று சுமைகளையும் பொறுப்புகளையும் வைத்துக்கொண்டு வெளியில் காத்திருக்கிறது ஒரு யதார்த்த வாழ்க்கை.

    சொர்ணவதி செருமிக் கொண்டார்.

    கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டார்.

    எனக்கு உங்க உணர்வுகள் புரியுது. வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமில்லை. அழகு, வயசு, பேச்சு, சிரிப்பு எதுவும் நிரந்தரம் கிடையாது. ஆனா, நாம முயற்சி செஞ்சா, சில விஷயங்களை நிரந்தரம் ஆக்கிக்க முடியும். உதாரணமா, நட்பு... என்று நிறுத்தினார்.

    மாணவிகள் நிமிர்ந்தார்கள்.

    இமைகள் படபடத்தன.

    ஆமா... நட்புதான் நிரந்தரமாக்கத் தகுந்தது என்றபோது சொர்ணவதி முகம் நெகிழ்ந்திருந்தது.

    நினைவுகளுக்கு நிரந்தரத் தன்மை உண்டு. அந்த நினைவுகள் நட்பை அடிப்படையா வைச்சிருந்தா இன்னும் ஆழமா நிலைக்கிற தன்மை வந்துடும்... இங்கே இருக்கிற முப்பத்திரண்டு பேருக்கும் முப்பத்திரண்டு விதங்களில் வாழ்க்கை காத்துகிட்டிருக்கு... ஆனா, ஒரே நட்புதான் அந்த வாழ்க்கைகளை இணைக்க முடியும், இல்லையா?

    கவிதா நிமிர்ந்தாள்.

    நீங்க சொல்றது ரொம்ப சரி மேடம்

    ஜலஜாவின் தொண்டை வழுவழுத்தது.

    நல்ல... சின்னச் சின்ன விஷயங்கள்தான் நம்ம நாட்களை சுவாரசியமாக்கும். இல்லேன்னா சாப்பிட்டுகிட்டே வாழுறது, வாழ்ந்துகிட்டே சாப்பிடுறதுன்னு ரெண்டே ரெண்டு வட்டத்துல வாழ்க்கை குறுகிடும். நட்பு ஒரு உற்சாக ‘டானிக்’ குறைந்த பட்சம் உங்களில் அஞ்சு பேராவது கடைசிவரை தோழிகளா இருங்க. என் அன்பான அறிவுரை இது

    சொர்ணவதி சிரித்தார்.

    திடீரென்று ஒரு விசும்பல் கேட்டது.

    திடுக்கிட்டுப் போய் பார்த்தார்கள்.

    நளினி அழுது கொண்டிருந்தாள்.

    மற்றவர்கள் குழப்பத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

    சொர்ணவதி, நகர்ந்து நளினியிடம் வந்தார்.

    நளினி... என்னம்மா ஆச்சு? ஏன் அழுறே? என்றபடி தலையைத் தொட்டார்.

    நளினியின் விசும்பல் இன்னும் கூடியது.

    என்னம்மா ஆச்சு அப்படி? ஏன் இவ்வளவு வருத்தம் உனக்கு? சொல்லு.

    நளினி மெல்ல தலை உயர்த்தினாள்.

    வார்த்தைகளில் மெல்லிய நடுக்கம்.

    நீங்க சொன்னீங்களே மேடம்... நட்பு! அடுத்த மாசம் எனக்குக் கல்யாணம்... அமெரிக்கா போகணும். எப்படி நான் நட்பு வைச்சுக்குவேன்? என்றபோது, சொர்ணவதி சிரித்தார்.

    மற்ற முகங்களும் மலர்ந்தன.

    இறுக்கம் குறைந்து புன்னகைத்தன.

    "இந்த உலகத்துல முடியாதுன்னு எதுவுமே இல்லே, நளினி புரியுதா? மனசு

    Enjoying the preview?
    Page 1 of 1