காதலாய் வந்து போகிறாய்
By R.Sumathi
()
About this ebook
நிலவைப் போல்தான் நின்றிருந்தாள் அவள்.
ஆதிரா!
ஆம், ஆடைகட்டி மேடைக்கு வந்த நிலவு. சுடிதார் அணிந்த ஒரு சுந்தர நிலவு...
சுகமாக இருந்தது! பார்ப்பதற்கும் அந்தப் பாராட்டைக் கேட்பதற்கும்! எல்லா விழிகளும் விண்மீன்களாகப் பிரகாசித்து அந்த எல்லோராவை ரசித்தன.
சும்மா பார்ப்பதற்கும், சுகமாய்ப் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருப்பதை உணர்ந்தான் விஷ்ணு.
சும்மா பார்ப்பது சுவரொட்டியைப் பார்ப்பதைப் போல.
சுகமாகப் பார்ப்பது சுவரில் வரைந்த ஓவியத்தைப் பார்ப்பதைப் போல,...
விஷ்ணுவின் பார்வை சுகத்தை உணர்ந்தது. அந்தப் பாராட்டு மழையில் பனிபட்ட பூவாய் மாறி மனம் ஆனந்தத்தில் நாவாய் போல் மிதந்தது.
"நம் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளும் கலந்து கொண்ட சிறுகதைப் போட்டியில் நம் கல்லூரி மாணவி ஆதிரா கலந்து கொண்டு முதல் பரிசைத் தட்டிக் கொண்டு வந்திருப்பது நம் அனைவருக்கும் பெருமையையும் பெரு மகிழ்ச்சியையும் அளிக்கின்றது. போட்டிக்குச் சென்றபோதே எங்களுக்குத் தெரியும், வென்று வருவாள் பரிசையென்று. எங்களின் நினைப்பை நிஜமாக்கிய ஆதிராவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இயற்கையாகவே இலக்கியச் செறிவும், தரமான தமிழ் அறிவும், நளினமான நடையழகும், கடல் போன்ற கருத்தாழமும் கைவரப்பெற்ற அவளுடைய எழுத்துக்கள் நமக்குப் பரிச்சயமானவையே! இக்கல்லூரியின் பட்டிமன்றங்களிலும் பாட்டரங்கங்களிலும் நாம் ஆதிராவின் எழுத்துத் தேனைப் பருகியிருக்கிறோம். கல்லூரி ஆண்டு மலர்களில் மலர்ந்த அந்த எழுத்துப் பூக்களை எடுத்து முகர்ந்திருக்கிறோம்எதிர்காலத்தில் எழுத்துலகில் நிலவாகப் பிரசித்து இந்தக் கல்லூரிக்குப் புகழைச் சேர்க்கப்போகும் ஆதிராவின் எழுத்து சுடர்விட்டுப் பிரகாசிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு நிறையவே இருக்கிறது.
'மனிதன் எங்கே போக விரும்புகிறானோ அங்கேதான் அவன் இருப்பிடம்' என அறிஞர் வான்பிரான் கூறியதைப்போல், ஆதிரா எழுத்துத் துறையில் செல்ல வேண்டும் என்று வாழ்த்துக் கூறி, விழாத் தலைவர் தன் பொற்கரங்களால் இந்தப் பரிசை மாணவி ஆதிராவிற்குத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்."
விழாத் தலைவரும் தன் பங்கிற்குப் பாராட்டு மழையைப் பொழியத் தொடங்கினார்.
தரணி போற்றும் தஞ்சாவூர்க் கோவில் கண்களைப் பறிக்கும்படி கண்ணாடிக்குள் அடைக்கப்பட்டு அவளுடைய கையில் கொடுக்கப்பட்டது. கல்லூரி கரகோஷத்தில் அதிர்ந்தது. விழிகள் மொய்த்து அவள் முகத்தைத் தைத்தன. ஒரு விண்வெளி ஓடத்தைப் பார்ப்பதைப் போல் வியப்பாக வினோதமாக அத்தனை விழிகளும் மொத்தமாக அம்பாளுக்கு ஆயிரம் கற்பூரத்தட்டுக்களைக் காட்டியதைப் போல் பார்த்தன.
"எழுதுகோல் என்பது ஓர் அருமையான ஆயுதம். பாரதியின் கையில் அது ஒரு பட்டாக்கத்தி. அடிமைத்தளையை அறுத்துப் போட்டது. பெண்ணடிமையைக் குத்திக் கிழித்தது. பாரதிதாசனின் கையிலிருந்து பாரதத்தின் புரட்சிக்குப் பாதை போட்டது. பெரியாரின் கையில் மூடத்தனத்தின் மூலத்தை அறுக்கும் சரியானதொரு ஆயுதமாக இருந்தது. அண்ணாவின் கையிலிருந்து மக்களின் எண்ணங்களை நேராக்கியது. சீராக்கியது.
ஏதோ எழுதுவதற்கு எடுக்கக் கூடாது எழுதுகோலை! ஏரெடுத்து மண்ணைச் சீராக்குவதைப் போல் எழுது கோலெடுத்துச் சமுதாயத்தைச் சீராக்க வேண்டும்.
எல்லாத்துறைகளிலும் ஏந்திழையர் வெல்லும் யுகம் இது. எழுத்துத் துறையிலும் ஏற்றம் காண்கின்றார். அந்த அற்புதத் துறையில் அரிய சாதனைகளைப் படைத்துப் பேரும் புகழும் அடைய மாணவி ஆதிராவை வாழ்த்துகிறேன். அவர் தன்னுடைய திறமையை நன்றாக வளர்த்துக் கெண்டு சிறப்புகள் பல பெற வாழ்த்துகிறேன்."
தலைமை தாங்க வந்திருந்த புகழ் பெற்ற கவிஞர் ஒருவர் புகழ்ந்து முடித்தார்முழுமனதோடு கைதட்டியது அரங்கம். நாணத்துடன் நன்றி நவின்றாள் ஆதிரா. கோவில்தான் கலசத்தைத் தாங்கும். இங்கு - கலசம் கோவிலைக் கைகளில் தாங்கியிருக்கிறது. தரையிறங்கிய நிலவாக மேடையை விட்டுத் தரைக்கு வந்தாள்.
திரை நீக்கியதும் திரைப்படத்தைக் காணும் ஆவலோடு தோழிகள் அவளை நோக்கினர். சூழ்ந்தனர்.
விழா முடிந்ததோ இல்லையோ, அனைவரும் அவளை நோக்கியே விரைந்தனர்.
கலவையான பாரட்டு மாலை! காளை ஒருவனுக்கு மட்டும் கவலை. அவளை நெருங்கிவிட வேண்டும். பாராட்ட வேண்டும். பூரிக்கும் முகத்தைப் பார்க்க வேண்டும். தன்னை ஈர்க்கும் அந்த இருவிழிகளையும் ரசிக்க வேண்டும்!
தேனீக்களாகச் சூழ்ந்திருக்கும் தோழியர் கூட்டத்தை விலக்கிச் செல்வது இயலாத காரியம் போலிருந்தது. மனம் நாடும் மங்கையைக் கூட்டத்தில் ஒருவனாகயிருந்து வாழ்த்த மனம் கூடவில்லை.
அவள் தனிமைப்படும் நிமிடத்திற்காகத் தவமிருந்தான்; தனித்திருந்தான்; தவித்திருந்தான்.
Read more from R.Sumathi
கையருகில் பூமாலை Rating: 0 out of 5 stars0 ratingsஉறவில்லை... பிரிவில்லை..! Rating: 0 out of 5 stars0 ratingsஅன்பே... ஆருயிரே..! Rating: 0 out of 5 stars0 ratingsஎனது மலர் மடியிலே... Rating: 0 out of 5 stars0 ratingsபொன் நிலாவில் என் கனாவே! Rating: 0 out of 5 stars0 ratingsஅச்சம் விடு பச்சைக் கிளியே! Rating: 0 out of 5 stars0 ratingsதாய்ப் பறவை Rating: 0 out of 5 stars0 ratingsதேடினேன் வந்தது! Rating: 0 out of 5 stars0 ratingsமாணிக்கத் தொட்டில் இங்கிருக்க... Rating: 0 out of 5 stars0 ratingsஎங்கெங்கும் உன் வண்ணம் Rating: 0 out of 5 stars0 ratingsநெஞ்சுக்கு நீ அழகு..! Rating: 0 out of 5 stars0 ratingsஎல்லைக் கோடுகள் Rating: 0 out of 5 stars0 ratingsஉன் அருகில்... உன் நிழலில்! Rating: 0 out of 5 stars0 ratingsஅந்த நெஞ்சம் என்னிடம்... Rating: 0 out of 5 stars0 ratingsகானலைத் தேடும் காவிரி Rating: 0 out of 5 stars0 ratingsகூடு மறந்த குயில்கள் Rating: 0 out of 5 stars0 ratingsகுங்குமக் கோலங்கள் Rating: 0 out of 5 stars0 ratingsதேன் சிந்தும் பூக்கள் Rating: 0 out of 5 stars0 ratingsநிலவே முகம் காட்டு! Rating: 0 out of 5 stars0 ratingsபோய் வா... நதியலையே..! Rating: 0 out of 5 stars0 ratingsஅவள் வருவாளா? Rating: 0 out of 5 stars0 ratingsஎப்படி சொல்வேனடி! Rating: 0 out of 5 stars0 ratingsகண்ணாளனே... Rating: 0 out of 5 stars0 ratingsபேசும் உள்ளம் பேசாத கண்கள் Rating: 0 out of 5 stars0 ratingsநீயிருந்த மனசு Rating: 0 out of 5 stars0 ratingsகாத்திருப்பேன் கண்ணா Rating: 0 out of 5 stars0 ratingsகாதல் காலமடி கண்ணே! Rating: 0 out of 5 stars0 ratingsதொடுவானைத் தொட்டுவிடு! Rating: 0 out of 5 stars0 ratingsஇணையான இளமானே Rating: 0 out of 5 stars0 ratingsநீயென்பது நானல்லவோ...? Rating: 0 out of 5 stars0 ratings
Related to காதலாய் வந்து போகிறாய்
Related ebooks
Kaathalaai Vanthu Pogiraai Rating: 5 out of 5 stars5/5Panneeril Aadum Rojakkal... Rating: 3 out of 5 stars3/5Maariyathu Yeno Maragatha Pathumaiye Rating: 0 out of 5 stars0 ratingsAalayamaagum Mangai Manathu Rating: 0 out of 5 stars0 ratingsநீயில்லாமல் நானும் நானல்ல... Rating: 0 out of 5 stars0 ratingsIththanai Naalai Engirunthaai Rating: 4 out of 5 stars4/5Nenjirkoru Vanchikkodi Rating: 5 out of 5 stars5/5Chithirame…. Senthen Mazhaiye Rating: 0 out of 5 stars0 ratingsThedu Kidaikathu..! Rating: 0 out of 5 stars0 ratingsKottaipurathu Veedu Rating: 5 out of 5 stars5/5Kaadhal Vennila Rating: 0 out of 5 stars0 ratingsErimalai Pookkal Rating: 4 out of 5 stars4/5Thirumagal Thedi Vandhaal… Rating: 5 out of 5 stars5/5என்னை... மறந்ததேன் தென்றலே..! Rating: 0 out of 5 stars0 ratingsபேசும் பொற்சித்திரமே..! Rating: 0 out of 5 stars0 ratingsPesum Porchithirame Rating: 5 out of 5 stars5/5Maayam Seithayo Mayava Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Tharumo En Megam? Rating: 0 out of 5 stars0 ratingsNeerodu Selkindra Odam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Neram Rating: 5 out of 5 stars5/5Uyire Unaithedi Rating: 4 out of 5 stars4/5Thedu Kidaikathu Rating: 0 out of 5 stars0 ratingsKanavodu Vanthaal Rating: 0 out of 5 stars0 ratingsIndruvarai Kanavan Rating: 5 out of 5 stars5/5Kaaviyama Nenjin Ooviyama Rating: 0 out of 5 stars0 ratingsUyiril Kalantha Geetham! Rating: 0 out of 5 stars0 ratingsKan Simittum Neraththi Rating: 0 out of 5 stars0 ratingsAbhaya Thendral Rating: 0 out of 5 stars0 ratingsஉன்னைக் கண் தேடுதே..! Rating: 0 out of 5 stars0 ratingsUnnaik Kan Theduthey Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for காதலாய் வந்து போகிறாய்
0 ratings0 reviews