Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unmaikku Poy Azhagu
Unmaikku Poy Azhagu
Unmaikku Poy Azhagu
Ebook98 pages38 minutes

Unmaikku Poy Azhagu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கவிஞராக அறிமுகம் ஆகி, கதாசிரியராகவும் கட்டுரையாளராகவும் தன் எழுத்துப் பரப்பை விரித்துக்கொண்டிருக்கும் இராய செல்லப்பா, இதுவரை மூன்று புத்தகங்களின் ஆசிரியராவார். வங்கி அதிகாரியாக இருந்து, இந்தியாவின் பல நகரங்களில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். பலமுறை வெளிநாடு செல்லும் வாய்ப்பினைப் பெற்றவர். அந்த அனுபவங்களைத் தமது எழுத்துக்களில் தக்க முறையில் வெளிப்படுத்துபவர். ‘செல்லப்பா தமிழ் டயரி’ என்ற இணையதளத்தின்மூலம் தொடர்ந்து எழுதிவருபவர். மனித உணர்வுகளும் தனிமனிதப் பிரச்சினைகளும், மனிதாபிமானமும் இவரது எழுத்துக்களின் ஆதாரமாக இருப்பவை.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352859115
Unmaikku Poy Azhagu

Read more from Raya Chellappa

Related authors

Related to Unmaikku Poy Azhagu

Related ebooks

Reviews for Unmaikku Poy Azhagu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Unmaikku Poy Azhagu - Raya Chellappa

    http://www.pustaka.co.in

    உண்மைக்குப் பொய் அழகு

    Unmaikku Poy Azhagu

    Author:

    இராய செல்லப்பா

    Raya Chellappa

    For more books

    http://www.pustaka.co.in/home/author/raya-chellappa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    இராய செல்லப்பா - ஓர் அறிமுகம்

    என்னுரை

    1. பாடம் படிக்கும் வேதாளம்

    2. அப்துல் கலாமும் ஐந்து சிறுவர்களும்

    உண்மைக்குப் பொய் அழகு

    இராய செல்லப்பா

    இராய செல்லப்பா - ஓர் அறிமுகம்

    தமிழிலும் கணினித்துறையிலும் ஈடுபாடு கொண்ட எழுத்தாளர், இராய செல்லப்பா. பாரதியாரைப் பற்றிய இவரது கவியரங்கக் கவிதைகள் ‘எட்டயபுரத்து மீசைக்காரன்’ என்ற தொகுப்பாக வெளியாகியுள்ளது. தில்லிக் கவிஞர்களின் கவிதைகளைத் ‘தலைநகரில் தமிழ்க் குயில்கள்’ என்ற தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார். சிறுகதைகள் ‘தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்’ என்ற பெயரில் வெளியாகியுள்ளன, ‘அகநாழிகை’ மூலம்.

    பன்மொழி அறிந்தவர். அமெரிக்கா, கனடா, மத்தியக் கிழக்கு நாடுகளில் பயணித்தவர். பல்துறை சார்ந்த கட்டுரைகள்/தகவல்களைத் தனது வலைப்பதிவுகள் மூலம் தருவதில் வாசகர்களிடையே கவனம் பெற்றவர்.

    ஒரு காலத்தில் பாலாறு பாய்ந்து வளப்படுத்திய வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டையைச் சொந்த ஊராகக் கொண்ட திரு செல்லப்பா, இராணிப்பேட்டையிலும், தேன்கனிக்கோட்டையிலும் தன் பள்ளிப் படிப்பை முடித்தவர். (கணிதத்தில்) பட்டப்படிப்பை மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லூரியிலும், பட்டமேற்படிப்பை சேலம் அரசு கலைக்கல்லூரியிலும் பயின்றவர். இடையில் சிறிது காலம் பள்ளி ஆசிரியராகவும் இருந்தவர். (கும்பகோணம்) சிட்டி யூனியன் வங்கியில் அதிகாரியாகச் சேர்ந்து, வங்கிப்பணியைத் தொடங்கியவர், பின்னர் விலகி, அரசுடைமை வங்கியான கார்ப்பொரேஷன் வங்கியில் சேர்ந்து பணியாற்றி, துணைப் பொது மேலாளராக ஓய்வு பெற்றவர்.

    என்னுரை

    விக்கிரமாதித்தன் கதைகளும் ஆயிரத்தொரு இரவுக்கதைகளும் எனது இளமைக்காலத்தில் சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த கதைகளாகும் - இன்றும் கூட. விக்கிரமாதித்தனின் முருங்கைமரத்து வேதாளமும், அலாவுதீனின் அற்புத விளக்கு பூதமும், பின்னாளில் ஜீபூம்பா என்ற பட்டணத்தில் பூதமும் சிறுவர்களின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்தவை.

    செயற்கைக் கோள்கள் விடுதல், நிலவில் காலடி வைத்தல், செவ்வாய்க் கோளுக்கு விண்கலம் அனுப்புதல் போன்ற நிகழ்வுகள் அவர்களின் கனவுக்கு இன்னொரு பரிமாணத்தைக் கொடுத்தன. அதற்குக் காரணமானவர்களில் அமரர் அப்துல் கலாம் மிக முக்கியமானவர்.

    இந்தப் பின்னணியில் எழுந்த இரண்டு சிறுகதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இரண்டும் உண்மை போர்த்திய பொய்களே. அல்லது, பொய் போர்த்திய உண்மைகளே. இரண்டையும் படித்தபின் ‘உண்மைக்குப் பொய் அழகு’ என்று நீங்களே சொல்லத் தொடங்குவீர்கள்!

    அமரர் அப்துல் கலாம் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த அஞ்சலிகள். அவர்தானே எல்லாரையும் கனவு காணச் சொன்னவர்!

    படித்தபின் உங்கள் மனதில் தோன்றுவதை எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். பயன்பெறுவேன். (chellappay@gmail.com) எனது வலைத்தளத்திற்கும் வருகை தாருங்கள்.

    http://chellappatamildiary.blogspot.com

    இராய செல்லப்பா

    சென்னை மே 2017

    1. பாடம் படிக்கும் வேதாளம்

    (1)

    ஆவிகளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்ட போது எனக்கு வயது பத்து.

    இராணிப்பேட்டையில் வக்கீல் தெருவில் நடுநாயகமான மூன்றடுக்கு மாடி வீட்டில் பிரபல வக்கீல் ஒருவர் இருந்தார். அவர் வீட்டிற்கு எதிர்ப்புறம் ஒரு சந்து இருக்கும். ‘வக்கீல் தெரு சந்து’ என்று பெயர். மொத்தம் மூன்றே வீடுகள். முதல் வீட்டில் நாங்கள் இருந்தோம். கூடமும், இரண்டு அறைகளும், நுழைந்தவுடன் முற்றத்தில் கிணறும் இருந்த ஓட்டு வீடு.

    ஜெயபால் என்பவர் வீட்டு சொந்தக்காரர். இராணிப்பேட்டையின் உயிர்நாடியாக விளங்கிய ஈ.ஐ.டி. பாரி கம்பெனியில் ஊழியர். அதிகம் படிப்பில்லை. மாதா மாதம் வாடகை வாங்க வரும்போது என் தாத்தா அவரை நீண்ட நேரம் நிற்க வைத்த பிறகுதான் தருவார். அதற்கு முன் வாடகைப்பணம் பன்னிரண்டு ரூபாய் பெற்றுக் கொண்டேன் - இப்படிக்கு ஜெயபால் என்று பாம்பு பஞ்சாங்கத்தின் மீது தைக்கப்பட்டிருந்த பழுப்பு நிற அட்டையில் எழுதவேண்டும். அதுதான் இரசீது.

    எழுதி முடிப்பதற்குள் ஜெயபாலுக்கு வியர்த்துவிடும். ‘ஒரு வரி எழுத இவ்வளவு நேரமா?’ என்பது போல் தாத்தா அவரைப் பொறுமையின்றி பார்த்துக் கொண்டிருப்பார். எழுதிய உடனே கொடுப்பதற்காக பாட்டி கையில் காப்பியுடன் நிற்பார். ஜெயபாலுக்கு வயது முப்பதுக்குள்தான் இருக்கும். பாட்டி காப்பியை அவரிடம் கொடுத்து தூக்கிக் குடிப்பா என்று மென்மையாக உத்தரவிடுவார். அவர் குடித்துக்கொண்டிருக்கும் போதே ஏண்டா ஜெயபால், கூரை ஒழுகுது, சரி பண்றேன்னு மூணு மாசமா சொல்றே, இன்னும் பண்லியே என்பார்.

    அவசரம் அவசரமாகக் காப்பியை விழுங்கிவிட்டு கோவிச்சுக்காதீங்கம்மா! இந்த ஞாயிற்றுக்கிழமை ஆள கூட்டிட்டு வர்றேன் என்று நகருவார், ஜெயபால். ஆனால் அவர் இனிமேல் வரப்போவது அடுத்த மாதம் வாடகை வாங்கும் போதுதான் என்று எல்லாருக்குமே தெரியும். இது ஒவ்வொரு மாதமும் நடக்கும் வாடிக்கையான விஷயம்.

    அப்போது அம்புலிமாமாவில் ‘வேதாளமும் விக்கிரமாதித்தனும்’ என்ற கதை, தொடர் மாதிரி மாதம் தவறாமல் வரும். ‘தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீது ஏறி அதில் தொங்கும் உடலை

    Enjoying the preview?
    Page 1 of 1