Sollattuma Konjam?
()
About this ebook
Read more from Raya Chellappa
Oorkkolam Rating: 0 out of 5 stars0 ratingsAbusi - Thobasi Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsUnmaikku Poy Azhagu Rating: 0 out of 5 stars0 ratingsAbusi - Thobasi Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Pookkal Uthiruma Rating: 0 out of 5 stars0 ratings
Related to Sollattuma Konjam?
Related ebooks
Bhoomikku Kidaitha Puthayal Rating: 0 out of 5 stars0 ratingsThai Mann Rating: 0 out of 5 stars0 ratingsUlagam Enbathu... Rating: 0 out of 5 stars0 ratingsUn Manasula Naan Irukkena? Rating: 0 out of 5 stars0 ratingsIppadikku Indhu... Rating: 0 out of 5 stars0 ratingsEnnakinaru! Rating: 0 out of 5 stars0 ratingsAnalai Kaayum Ambuligal Rating: 5 out of 5 stars5/5Nesathil Nanaintha Nenjangal Rating: 5 out of 5 stars5/5Alaigal Rating: 0 out of 5 stars0 ratingsPanaiyolai Rating: 0 out of 5 stars0 ratingsNinaivugalum Ennangalum Rating: 0 out of 5 stars0 ratingsMithavai Rating: 0 out of 5 stars0 ratingsAagayam Kaanatha Natchathiram Rating: 0 out of 5 stars0 ratingsEliyum Naanum Rating: 0 out of 5 stars0 ratingsIvarthan, Konjam Kavani... Rating: 0 out of 5 stars0 ratingsAppavin Radio Rating: 0 out of 5 stars0 ratingsThakanam Rating: 0 out of 5 stars0 ratingsPasithalum Puli... Rating: 0 out of 5 stars0 ratingsKeralathil Engo... Rating: 0 out of 5 stars0 ratingsSorna Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsNinaipathu Niraiverum Rating: 0 out of 5 stars0 ratingsPallakku Payanam Rating: 0 out of 5 stars0 ratingsKoondukkul Appusami Rating: 0 out of 5 stars0 ratingsTheerkka Sumangali Rating: 0 out of 5 stars0 ratingsAnnachi vs Annachi Rating: 0 out of 5 stars0 ratingsKudumbam Oru Kathambam Rating: 0 out of 5 stars0 ratingsVaazhu Vaazhavidu Rating: 0 out of 5 stars0 ratingsMeendum Nilavu Varum Rating: 5 out of 5 stars5/5Chutti Poonaiyum Kutti Pettiyum Rating: 0 out of 5 stars0 ratingsAnbu Arul Anandham Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Sollattuma Konjam?
0 ratings0 reviews
Book preview
Sollattuma Konjam? - Raya Chellappa
http://www.pustaka.co.in
சொல்லட்டுமா கொஞ்சம்?
Sollattuma Konjam?
Author:
இராய செல்லப்பா
Raya Chellappa
For more books
http://www.pustaka.co.in/home/author/raya-chellappa
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
இராய செல்லப்பா - ஓர் அறிமுகம்
என்னுரை
1 அப்பாவின் சினேகிதிகள்
2. முனியம்மாவின் இளம்கழுதை
3. உள்ளிருந்து பேசும் குரல்
4. காலம் வரும்
5. கனவுகள் பலிக்கும் நேரம்
6. இலஞ்சம் என்னும் அழகு தேவதை
7. அப்துல்லாவிடம் ஏழு பசுக்கள் இருந்தன
8. வோட்டுக்குப் பணம்
9. அவனுக்கு ‘கிரி’ என்று பேர்!
10. பாதிக்கிணறு தாண்டினேன்
11. மீண்டும் பூத்தது கொன்றை மரம்
சொல்லட்டுமா கொஞ்சம்?
அழியாமல் நிற்கும் அனுபவங்கள்
இராய செல்லப்பா
இராய செல்லப்பா - ஓர் அறிமுகம்
தமிழிலும் கணினித்துறையிலும் ஈடுபாடு கொண்ட எழுத்தாளர், இராய செல்லப்பா. பாரதியாரைப் பற்றிய இவரது கவியரங்கக் கவிதைகள் ‘எட்டயபுரத்து மீசைக்காரன்’ என்ற தொகுப்பாக வெளியாகியுள்ளது. தில்லிக் கவிஞர்களின் கவிதைகளைத் ‘தலைநகரில் தமிழ்க் குயில்கள்’ என்ற தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார். சிறுகதைகள் ‘தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்’ என்ற பெயரில் வெளியாகியுள்ளன, ‘அகநாழிகை’ மூலம்.
பன்மொழி அறிந்தவர். அமெரிக்கா, கனடா, மத்தியக் கிழக்கு நாடுகளில் பயணித்தவர். பல்துறை சார்ந்த கட்டுரைகள்/தகவல்களைத் தனது வலைப்பதிவுகள் மூலம் தருவதில் வாசகர்களிடையே கவனம் பெற்றவர்.
ஒரு காலத்தில் பாலாறு பாய்ந்து வளப்படுத்திய வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டையைச் சொந்த ஊராகக் கொண்ட திரு செல்லப்பா, இராணிப்பேட்டையிலும், தேன்கனிக்கோட்டையிலும் தன் பள்ளிப் படிப்பை முடித்தவர். (கணிதத்தில்) பட்டப்படிப்பை மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லூரியிலும், பட்டமேற்படிப்பை சேலம் அரசு கலைக்கல்லூரியிலும் பயின்றவர். இடையில் சிறிது காலம் பள்ளி ஆசிரியராகவும் இருந்தவர். (கும்பகோணம்) சிட்டி யூனியன் வங்கியில் அதிகாரியாகச் சேர்ந்து, வங்கிப்பணியைத் தொடங்கியவர், பின்னர் விலகி, அரசுடைமை வங்கியான கார்ப்பொரேஷன் வங்கியில் சேர்ந்து பணியாற்றி, துணைப் பொது மேலாளராக ஓய்வு பெற்றவர்.
****
என்னுரை
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் என்றொரு சொற்றொடர் தமிழில் உண்டு. வளர்ச்சியைக் குறிப்பிடுவது.
குழந்தை வளருகிறது, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக. உடல் வளரும்போது உள்ளமும் வளருகிறது. இரண்டு சேர்ந்து வளர்கையில் உருவாவதுதான் ‘நான்’ என்பது.
இந்த ‘நான்’ தான், நானாக, நீங்களாக, அவர்களாக நடமாடுவது. என்னுடைய நானும் உங்களுடைய நானும் ஒத்துப்போனால் மகிழ்ச்சி உண்டாகிறது. அமைதி உண்டாகிறது. நிம்மதி உண்டாகிறது. இரண்டு ‘நான்’களும் முறுக்கிக்கொண்டு நின்றால் பகைமை உண்டாகிறது. பொறாமை உண்டாகிறது. நிம்மதி தொலைகிறது.
இப்படிப் பல்வேறு ‘நான்’களின் அழுத்தங்களுக்குள் அகப்பட்டுத் தவிக்கும் ஒரு ‘நான்’ தான் நான். எனது நானின் கதையே ‘சொல்லட்டுமா கொஞ்சம்?’
என்னைத் தெரிந்திருந்தும், என்னுடைய வாழ்வில் இதுவரை நடந்ததைத் தெரிந்திராதவர்களுக்கு இது சுவாரசியமான கதைத் தொகுப்பாகவே தெரியும். கதையின் அடிநாதமாக உண்மைகள் இருப்பது தெரியாமல் போய்விடாது என்பது உறுதி.
படித்தபின் உங்கள் மனதில் தோன்றுவதை எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். பயன்பெறுவேன். (chellappay@gmail.com) எனது வலைத்தளத்திற்கும் வருகை தாருங்கள்.
http://chellappatamildiary.blogspot.com
இராய செல்லப்பா
சென்னை மே 2017
1. அப்பாவின் சினேகிதிகள்
அடுப்பெரிக்க விறகுக் கட்டை அல்லது நிலக்கரி மட்டுமே பயன்படுத்திக்கொண்டிருந்த காலம் அது. 1950 - 1970 என்று வைத்துக் கொள்ளுங்களேன். இண்டேன் கேஸ், எச்பி கேஸ், பாரத் கேஸ் இவையெல்லாம் கண்டுபிடிக்கப்படாத காலம்.
அடுப்பு என்றால் இரும்பிலோ எவர்சில்வரிலோ தயாரித்ததல்ல. சுட்ட களிமண்ணால் ஆன அடுப்புதான். கடையிலும் விற்கும். களிமண் கிடைத்தால் வீட்டுப் பெண்களே செய்து கொள்வார்கள். அம்மாவுக்கு நன்றாகச் செய்யவரும். ஒற்றை அடுப்பு செய்வார். இரண்டு பாத்திரங்களை ஒரே சமயத்தில் வைக்கும் இரட்டை அடுப்பும் செய்வார். அதைக் ‘கொடி அடுப்பு’ என்பார்கள். இரண்டிலும் விறகுக்கட்டையைத்தான் பயன்படுத்தவேண்டும். ‘குமட்டி’ அடுப்பு என்று இன்னொரு வகையும் உண்டு. அதில் நிலக்கரி மட்டுமே பயன்படுத்தவேண்டும். வெந்நீர் வைப்பது, காப்பி போடுவது, மிளகு ரசம் வைப்பது போன்ற சிறிய சமையல்களுக்குத்தான் பயன்படும்.
பச்சைக் களிமண்ணால் அடுப்பு செய்து அதை நிழலில் ஒரு வாரம் உலர்த்தியபின், பகல் வெயிலில் ஒரு வாரம் உலர்த்துவார் அம்மா. பிறகு பசுஞ்சாணத்தைக் குழைத்து மேல்பூச்சாகப் பூசுவார். நல்ல நேரம் பார்த்து, பொட்டு வைத்து, கற்பூரம் காட்டிய பின், முதலில் பாலைக் காய்ச்சுவார். அதன் பிறகுதான் சோற்றுக்கு உலை வைத்தல் முதலியன நிகழும். வேற்றுப் பெண்மணிகள் இல்லாத நேரம் பார்த்துத்தான் புது அடுப்பை ஆரம்பிப்பார். கண்பட்டுவிடுமாம்.
தனக்குச் செய்துகொண்டது போக, கிராமத்தில் இருந்து வரும் வயதான உறவினர்களுக்கும் அடுப்புகளைச் செய்து அனுப்புவார் அம்மா என்பது நன்றாக நினைவில் இருக்கிறது. அதற்கான களிமண்ணைப் பாலாற்றங்கரையில் தோண்டி, சிறிய கோணிப்பையில் வைத்து, தலைச்சுமையாக எடுத்து வந்து கொடுக்கும் பணி அடியேனுடையது. சில சமயம் அக்கா உடன் வருவாள். ஆனால் அவளது கவனம் முழுவதும் பாலாற்றங்கரைக்குச் சற்றுமுன் இருந்த ‘பெரிய வாய்க்கால்’ தாண்டியவுடன் வழியெல்லாம் பூத்திருக்கும் மஞ்சள் கனகாம்பரப் பூக்கள் மீதோ, அல்லது மூன்றடி உயரம் மட்டுமே இருந்த ஈச்சமரங்களில் தேன்கூடு போல் காய்த்துத் தொங்கும் சிவந்த ஈச்சம் பழங்களின் மீதோ தான் இருக்கும். மாதத்தில் ஒருமுறை யல்ல, இரண்டு, மூன்று முறை கூட கோணிப்பை சுமந்த அனுபவம் உண்டு. காலில் செருப்பின்றி, முள் குத்துவதைப் பொறுத்துக்கொண்டு, களிமண் சுமந்ததைப் பிட்டுக்கு மண் சுமந்த கதையோடு ஒப்பிட்டுப் பார்ப்பதுண்டு, பின்னாளில்.
சராசரியாக மூன்று மாதத்திற்கு ஒருமுறை அடுப்பில் விரிசல் விழுந்து விடும். அந்த நேரத்தில் நான் வீட்டில் இருப்பதைத் தவிர்த்துவிடுவேன். சரியான களிமண்ணைத் தேர்ந்தெடுத்து வராத குற்றம் என்மீது விழுமல்லவா? உடனடியாகப் புது அடுப்பு செய்தாகவேண்டும். அவ்வளவுதான், என்ன வேலை இருந்தாலும் பாதியில் விட்டுவிட்டுப் புதிய களிமண் கொண்டுவந்தாக வேண்டும். அவசரமாக அப்படிப் போய்வந்த ஒருநாளில், களிமண் தோண்டுவதற்காகக் கொண்டுபோன உடைந்த சட்டுவத்தை மறந்து வைத்துவிட்டு, மறுபடி போய்த் தேடியதில் அது அகப்படாமல், விசேஷமான திட்டுக்களை வாங்கிய அனுபவமும் நினைவில் இருக்கிறது.
ஆனால், இந்தக் க(தை)ட்டுரை அடுப்பு செய்வதைப் பற்றியதல்ல, அதில் பயன்படுத்தும் விறகுக்கட்டையைப் பற்றியது என்பதைப் பணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன். எனவே எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் விறகுக்கடை வைத்திருந்த கண்ணம்மாவைப் பற்றி நீங்கள் அறிந்தாகவேண்டும்.
கண்ணம்மா என்பவருக்கு அப்போது முப்பது அல்லது முப்பத்தைந்து வயது இருக்கலாம் என்று நினைக்கிறேன். (அப்போது எனக்கு வயது எட்டு அல்லது ஒன்பதுதான். எனவே பெண்களின் சரியான வயதைக் கணிக்கும் ஆற்றல் இருந்திருக்க முடியாதல்லவா?) அவரது பெயரால் ‘கண்ணம்மா தொட்டி’ என்று அந்தக் கடைக்குப் பெயர் ஏற்பட்டிருந்தது. தொட்டி என்றால் விறகுக்கடை என்று பொருள். இராணிப்பேட்டை பஸ் நிலையத்தில் இருந்து வக்கீல் தெருவை நோக்கி நடந்தால், இடதுபுறமாக, தபாலாபீஸ் தெரு பிரியும் இடத்தில் இருந்தது கண்ணம்மா தொட்டி.
ஒருபக்கம் சுவரும், மூன்று பக்கம் மூங்கில் வேலியுமாக இருந்த பெரிய கடை. ‘ஐந்து கிரவுண்டு இடத்தில் விறகுதொட்டி வைத்த ஒரே ஆள் நான்தான்’ என்று கண்ணம்மா பெருமையாகச்