Kadathal Kaatru
()
About this ebook
and horror fiction. He has translated Bram Stoker's Dracula into Malayalam. He created two two fictional detective characters - Marxin and Pushparaj.
Now he lives in Kottayam, Kerala. He had published many books on tourism and other India-related subjects. Many of his books are translated by Sivan to
Tamil language.
Read more from Kottayam Pushpanath
Mohini Silai Rating: 3 out of 5 stars3/5Mohiniyin Kaadhal Rating: 4 out of 5 stars4/5Pei Bungalow Rating: 4 out of 5 stars4/5Sakasa Mohini Rating: 0 out of 5 stars0 ratingsMohini Koyil Rating: 5 out of 5 stars5/5Naaga Salangai Rating: 5 out of 5 stars5/5Marma Maaligai Rating: 0 out of 5 stars0 ratingsMohiniyattam Rating: 0 out of 5 stars0 ratingsBrahmaratshas Rating: 0 out of 5 stars0 ratingsValampuri Sangu Rating: 0 out of 5 stars0 ratingsMohini Rating: 5 out of 5 stars5/5Aranmanai Devathai Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Mandhiram Rating: 0 out of 5 stars0 ratingsMohini Illam Rating: 0 out of 5 stars0 ratingsPathilukku Pathil Rating: 3 out of 5 stars3/5Mandhira Muzhakkam Rating: 4 out of 5 stars4/5Maya Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsDeva Mohini Rating: 4 out of 5 stars4/5Irandavathu Murai Rating: 0 out of 5 stars0 ratingsVennilave… Vennilave! Rating: 0 out of 5 stars0 ratingsVaa! Arugil Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsIrave Uru(ra)vanaval Rating: 2 out of 5 stars2/5Aabathanavargal Rating: 0 out of 5 stars0 ratingsThaandavam Rating: 5 out of 5 stars5/5Nizhal Illatha Manithan Rating: 0 out of 5 stars0 ratingsThamaraikulam Rating: 0 out of 5 stars0 ratingsMohini Sabatham Rating: 0 out of 5 stars0 ratingsOnbathavathu Ward Rating: 0 out of 5 stars0 ratingsDeva Narthagi Rating: 5 out of 5 stars5/5
Related to Kadathal Kaatru
Related ebooks
Avalum Solval Theerpu! Rating: 0 out of 5 stars0 ratingsPoove Neeyum Penthano Rating: 0 out of 5 stars0 ratingsSoorasamharam Rating: 0 out of 5 stars0 ratingsKuri Vechachu Rating: 0 out of 5 stars0 ratingsAasai Mugam Maranthayo Rating: 0 out of 5 stars0 ratingsAthisayam Adhu Rakasiyam Rating: 0 out of 5 stars0 ratingsMudhal Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsAazhkadalin Adiyil… Rating: 0 out of 5 stars0 ratingsMohana Punnagaiyil Oru Naal! Rating: 0 out of 5 stars0 ratingsSubhavin Sirukathaigal - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsThottil Sugam Rating: 5 out of 5 stars5/5Vazhkai Varame Rating: 0 out of 5 stars0 ratingsHassya Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsVendatha Varam Rating: 0 out of 5 stars0 ratingsAnbin Vizhiyil Rating: 0 out of 5 stars0 ratingsAarthikku Aabathu! Rating: 0 out of 5 stars0 ratingsS.S.66 Rating: 0 out of 5 stars0 ratingsPala Naal Kanave! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Neram Rating: 5 out of 5 stars5/5Kaakithap Poo Theen Rating: 5 out of 5 stars5/5Meendum Antha Gnabagangal Rating: 0 out of 5 stars0 ratingsThunaiyiruppaal Durga Rating: 0 out of 5 stars0 ratingsKanne Ethirkkaathe Rating: 4 out of 5 stars4/5En Arukil Nee Irundhaal... Rating: 5 out of 5 stars5/5Mandhira Mohini Rating: 5 out of 5 stars5/5Palkolaikazhagam Rating: 0 out of 5 stars0 ratingsKolla Theriyavillai! Rating: 0 out of 5 stars0 ratingsAarthikku Mugam Sivanthathu Rating: 4 out of 5 stars4/5Oonjaladum Ullangal Rating: 0 out of 5 stars0 ratingsVizhikkul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kadathal Kaatru
0 ratings0 reviews
Book preview
Kadathal Kaatru - Kottayam Pushpanath
http://www.pustaka.co.in
கடத்தல் காற்று
Kadathal Kaatru
Author:
கோட்டயம் புஷ்பநாத்
Kottayam Pushpanath
For more books
http://www.pustaka.co.in/home/author/kottayam-pushpanath-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
1
மும்பையிலிருந்து வரும் ஏர்பஸ் இன்னும் சில நிமிடங்களுக்குள் தரையிறங்கப் போகிறது!
அறிவிப்பு ஒலித்தது. 'ஏர்பஸ் ஃப்ரம் மும்பை வில் அரைவ் வெரிசூன்!'
அதுவரை பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்திப் பேசிக் கொண்டிருந்தவர்கள் கூடச் சட்டென்று தங்கள் பேச்சை நிறுத்திக்கொண்டனர். அங்கிருந்தவர்களின் இதயத்துடிப்பு அவர்களை அறியாமலே சட்டென்று அதிகரித்தது.
அதுவரை மிகவும் ரகசியமாகப் பாதுகாத்து வைத்திருந்த செய்தியாக இருப்பினும் ஒரே ஒரு மாலைப் பத்திரிகை மட்டும் எப்படியோ அந்தச் செய்தியை வெளியிட்டுவிட்டது.
அதைத் தொடர்ந்து நகரமே ஒட்டுமொத்தமாகப் பீதியில் ஆழ்ந்தது.
அப்படி பயமேற்படுத்திய செய்திதான் என்ன?
எதற்காக அவர்கள் பயப்படவேண்டும்?
கோடீஸ்வரர்கள்...
கோடிக்கணக்கில் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் நிதி நிறுவனங்கள்...
கறுப்புப்பணத்தை வெள்ளையாக மாற்றும் மதுபானத் தொழில் சக்ரவர்த்திகள்...
போலீஸ் துறையின் உயரதிகாரிகள்...
மேற்படி மனிதர்கள் எல்லோரது ரத்தக்குழாய்கள் ஒவ்வொன்றிலும் சூடான ரத்தம் வேகமாகப் பாய்ந்தது.
இந்த மனிதர்களையெல்லாம் வருடக் கணக்கில் நடுங்க வைத்துக்கொண்டிருந்த, இந்த நூற்றாண்டின் மிகப் பயங்கரமானவன் என்று பெயரெடுத்த மனிதன், பறந்துவரும் விமானத்துக்குள் இருப்பதாகச் செய்தி ஒன்று ஊருக்குள் பரவியிருந்தது.
யார் அந்த மனிதன்?
ஒவ்வொருவரும் பரஸ்பரம் பார்த்துக் கொண்டனர்.
ஆனால், எவரும் எதுவும் பேசவில்லை.
அந்தப் பெயரை உச்சரித்தால், உச்சரித்த நாக்கே சிலநேரம் இல்லாமல் போகலாம்.
அந்த உருவத்தை போட்டோ எடுத்தால், அந்த புகைப்படக்காரனின் உடல் மறுநாள் தண்டவாளத்தில் துண்டுகளாகிக் கிடக்கும்
தாவூத் இஸ்மாயில்!
இந்தக் காலகட்டத்தின் மிகப்பெரிய கள்ளக்கடத்தல்காரன்.
அழகான தோற்றமுள்ளவன். முப்பத்திரண்டு வயதானவன். இளைஞன். கடைந்தெடுத்த உடம்பு. சிறுத்தைப் புலியின் வேகம் கொண்டவன்.
அந்த வேகம்தான் தாவூத் இஸ்மாயிலின் மிகப்பெரிய சக்தியும், ஆயுதமும்!
அவனைச் சுட்டுத் தள்ளுவதற்காக எதிராளி ஒருவன் துப்பாக்கியை வெளியே எடுக்கலாமா வேண்டாமா என்று யோசிப்பதற்குள் தாவூத் இஸ்மாயில் அந்த மனிதனைச் சுட்டுப் பொசுக்கிவிடுவான்!
உடல் பலத்தைக் கொண்டு அவனை வெற்றி பெறுவதும் சாதாரணமல்ல. குத்துச்சண்டை முதல் ஜூடோ, கராத்தே, சிலம்பம் உட்பட எல்லாவற்றிலும் தேர்ந்தவன். ஒரே நேரத்தில் அவனைப் போன்ற நான்கு மனிதர்களை எதிர்த்து வெற்றிகொள்ளும் வலிமையும் தைரியமும் நிறைந்தவன்.
'ஜிம்னாஸ்டிக்' பேர்வழியான தாவூத், ஆயுதம் எதுவும் கைவசம் இல்லாவிட்டால்கூட டால்பின் மீனைப்போல் மேற்புறம் பாய்ந்து எதிராளியின் தொண்டைப் பகுதியைத் தன் தலையாலேயே மோதித் தகர்க்கும் வித்தை கற்றவன். பார்வைக்கு இளம் ஹீரோ மாதிரித் தோற்றமளிக்கும் தாவூத்தை யாராவது நேரில் பார்க்க நேர்ந்தால் 'இவன்தான் அதையெல்லாம் செய்பவன்!' என்று சத்தியம் செய்து சொன்னால்கூட நம்ப மாட்டார்கள்!
அவன் பார்வையும், புன்னகையும் சரியாகப் பாய்ந்துவிட்டால், எப்படிப்பட்ட இளம்பெண்ணும் அவனிடம் சரணாகதி அடைந்து விடுவாள். அவனது கலகலப்பான பேச்சில் மயங்காத பெண்களே இருக்க முடியாது. மேற்கத்திய இசைக்கருவிகள் சிலவற்றை வாசிப்பதிலும், மேடையில் பாடுவதிலும் பயிற்சி பெற்றவன். சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படத்தில் கூட அவன் புனைபெயரில் பாடியிருப்பதாகப் பேசிக் கொண்டார்கள்.
ஆனால், அருகில் எங்காவது அவன் இருக்கிறான் என்பதைத் தெரிந்து கொண்டாலே, இருந்த இடத்தை விட்டுக்கூட அசையமாட்டார்கள் பெரும்பாலானவர்கள்.
ஒரு முக்கிய அறிவிப்பு, பார்வையாளர்களின் கவனத்துக்கு!
இதே அறிவிப்பு, மறுபடியும் முழுதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து,"பயப்படும்படியாக எதுவும் இல்லை. எனினும் தீயணைப்புப் படை, காவல்துறை, விமான நிலைய ஊழியர்கள் தவிர ஏனையோர் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் விமான நிலைய எல்லையைத் தாண்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மும்பையிலிருந்து புறப்பட்டுவந்து கொண்டிருக்கும் விமானத்துக்குள் வெடிகுண்டு இருக்கலாம் என்று கருதுவதால், பொதுமக்கள் விமான நிலைய எல்லைக்கு வெளியே சென்றுவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்..."
ஒரு சில விநாடிகள் அந்தப் பகுதியில் அமைதி நிலவியது. அங்கிருந்தவர்கள் மூச்சுக்கூட விட மறந்து போனது போல் தோன்றியது.
'செய்தி உண்மையாக இருக்குமோ?' காத்திருந்தவர்கள் ஒருவரையொருவர் கேள்விக்குறி மற்றும் சந்தேகத்துடன் பார்த்துக்கொண்டனர்.
வெடிகுண்டு!
அமைதி நிலவிய அந்தப் பகுதியில் அந்தக் குரல் மட்டும் தனியாக எதிரொலிப்பதுபோல் தோன்றியது.
என்ன செய்வது என்று புரியாமல் எல்லோரும் ஒரு கணம் தடுமாறினர்.
எந்தவிதமான விளைவும் இல்லாததால் மீண்டும் அதே அறிவிப்பு, அதே தொனியில் தொடர்ந்தது.
தொடர்ந்து விரைவிலேயே டாக்ஸிகளும் ஆட்டோக்களும் மனிதர்களுடன் அந்த எல்லையைக் கடந்து கொண்டிருந்தன.
பைலட், கோ-பைலட், ஏர் ஹோஸ்டஸ்கள் இருவர் ஆகியோருடன் நூற்றியெழுபத்தைந்து பயணிகள் விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்தனர். அவர்களில் ஐம்பத்தொரு பேர் வளைகுடா நாடுகளிலிருந்து வருபவர்கள். அவர்களின் உறவினர்கள் வரவேற்பதற்காக விமான நிலையத்துக்கு வந்திருந்தனர். அங்கிருந்து வெளியேற மனமில்லாத பொதுமக்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.
விஷயம் புரியாத சிலர் கத்திக் கூப்பாடு போடவும் செய்தனர். நாலைந்து பெண்மணிகளுடன் வயதான இரண்டு பெரியவர்களும் 'விமானத்தில் இருப்பவர்களின் நிலைமை என்ன ஆகுமோ?' என்ற பயத்தில் மயக்கம் போட்டு விழுந்துவிட்டனர்.
மாலை நேரமானதால் மின்சார விளக்குகள் எரியத் தொடங்கின. இரவு அதிகமான பொழுதாக இருந்தது.
காவல்துறையின் உயர் அதிகாரிகளும், மருத்துவத்துறை நிபுணர்களும், அவசரச் சிகிச்சையளிக்கும் டாக்டர்களும் நர்ஸ்களும், வெடிகுண்டு நிபுணர்களும் விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தனர்.
டி. எஸ். பி. அலெக்ஸ் ஜோன்ஸும், சர்க்கிள் இன்ஸ்பெக்டர் விக்கிரமன் நாயரும் போலீஸ் துறையின் காரில் வந்து இறங்கினர். அவர்களுக்கு முன்பாகவே மற்றவர்கள் வந்து சேர்ந்திருந்தனர்.
விக்கிரமன் சார், ஒருவேளை இது புரளியாகவும் இருக்கலாம்; அல்லது உண்மையாகவும் இருக்கலாம். எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது!
அலெக்ஸ் குறிப்பிட்டார்.
இருபது வருட சர்வீஸில் சிக்கலான எத்தனையோ வழக்குகளைச் சந்தித்து, பெரும்பாலானவற்றில் வெற்றியும் பெற்றவர் அலெக்ஸ்.
சம்பல் காட்டுக் கொள்ளைக்காரர்களை அடக்கி ஒடுக்குவதற்காகப் போன குழுவில் அலெக்ஸ்சம் இருந்தார். பேர்போன கொள்ளைக்காரனான மான்சிங்கைப் பிடித்த குழுவில் இடம் பெற்றிருந்தவரும்கூட.
சம்பல் காட்டுக் கொள்ளைக்காரர்களைவிடப் பயங்கரமானவன் தாவூத் இஸ்மாயில் என்பது அலெக்ஸ் ஜோன்ஸசக்கும் நன்றாகவே தெரியும்.
அதற்கும் காரணமிருந்தது. உலகம் முழுவதும் அவனது தலைமையின்கீழ் ஆங்காங்கே குழுக்கள் சில செயல்பட்டுக் கொண்டிருந்தன. அவர்கள் எல்லோருமே தங்கள் பாஸ்க்காக எதையும் செய்யத் தயங்காதவர்கள். சம்பல் கொள்ளைக்காரர்கள் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே இருந்தனர்.
இன்ஸ்பெக்டர் விக்கிரமன் எதுவும் பதில் பேசவில்லை. டி.எஸ்.பி. தொடர்ந்தார்:
நம்மைவிடப் பயங்கரமான விரோதிகள் தாவூதுக்கு இருக்கிறார்கள். அவனுடைய தொழில்முறை விரோதிகள். ஒரு தடவை மும்பை சர்ச் கேட் ரயில்வே ஸ்டேஷனில் யாரோ ஒருவன் தாவூதைச் சுட்டுவிட்டான். ஸ்டேஷனுக்குள் நிறுத்தி வைத்திருந்த கம்பார்ட்மென்ட் ஒன்றிலிருந்துதான் துப்பாக்கிக் குண்டு வெளிவந்தது. குண்டு அவன் உடம்பில் பாயவும் செய்தது. புல்லட் புரூஃப் உடையணிந்திருந்ததால் அதிலிருந்து தப்பித்த தாவூத் எதுவும் நடக்காததைப்போல் சட்டென்று அருகிலிருந்த மற்றொரு கம்பார்ட்மென்ட்டில் ஏறிக்கொண்டான். அப்போது யாரையோ வழியனுப்புவதற்காக வந்திருந்தான்! எனவே, அவன் எப்போதும் எச்சரிக்கையோடு இருப்பான்!
நிமிடங்கள் சில கடந்தன.
போலீஸ் அதிகாரி ஒருவர், அவர்கள் நின்றிருந்த இடத்தை நெருங்கி சல்யூட் அடித்தார்:சார், மினிஸ்ட்டரோட கார் திடீரென்று ரிப்பேராகி விட்டதாம். தயவுசெய்து உங்கள் காரை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும்!
யோசனையில் ஆழ்ந்த அலெக்ஸிடம் அதே அதிகாரி தொடர்ந்தார்:"சார், நீங்கள் தற்சமயம் பயன்படுத்த தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த ஏ. சி. ஆம்புலன்ஸ் ஒன்று உள்ளது. நீங்கள் ஓய்வெடுப்பதானால்கூட அதில், அதற்கான வசதிகள் உள்ளன.
நல்ல யோசனை மிஸ்டர் விக்கிரமன். எனக்கும் களைப்பாக இருக்கிறது. வாருங்கள் கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கலாம்.
அலெக்ஸ் அழைத்தார்.
இருவரும் நவீன வசதிகள் கொண்ட அந்த ஆம்புலன்ஸுக்குள் நுழைந்தனர். உள்ளே ஒரு சிறிய ஃபிரிட்ஜ்கூட இருந்தது.
டி.எஸ்.பி. ஃபிரிட்ஜைத் திறந்து சில்லென்ற தண்ணீரை எடுத்துக் குடித்தார்.
ஆம்புலன்ஸ் ஏர்போர்ட்டுக்கு முதுகுகாட்டிக் கொண்டு நின்றிருந்தது. ஏ. சி. வேனாக இருந்ததால் வெளியே என்ன நடக்கிறது என்று தெரியாமல் போய்விடும். எனவே, பின்புறக் கதவைத் திறந்துவிடும்படி கூறினார்.
விமான நிலைய ஸ்பீக்கர்களில் மீண்டும் அறிவிப்பு முழங்கியது.
இன்னும் சில விநாடிகளில் ஏர் பஸ் விமான தளத்தை அடையப்போகிறது.
அந்தப் பகுதியே அமைதியாக இருந்தது.
வடக்குத் திசையிலிருந்து மேகங்களை நடுங்கவைத்தபடி விமானத்தின் இரைச்சல் அதிகரிக்கத் தொடங்கியது.
எந்த நேரமும் எதுவும் நடக்கலாம்.
விமானத்தின் முன்புறச் சக்கரங்கள் தரையைத் தொட்டு உருளத்தொடங்கின.
சற்றுத் தூரம் முன்புறமாக ஓடிய விமானம் இடதுபுறமாகத் திரும்பி மெதுவாக நின்றது.
கண்ணிமைக்கும் நேரத்துக்குள் தீயணைப்பு வண்டிகள் விமானத்தைச் சூழ்ந்துகொண்டன. செயல்படத் தயாராயின.
ஒவ்வொரு செயலிலும் பரபரப்புத் தென்பட்டது. விமானத்திலிருந்து வெளியேறுவதற்கான 'கேஸ் வே' பொருத்தப்பட்டது. பயணிகள் ஒவ்வொருவராக இறங்கத் தொடங்கினர். எப்போதென்று தெரியாத விபத்தைத் தவிர்க்கும் பொருட்டு வழக்கமான சோதனைகளை விரைவாக முடித்துக்கொண்டு பயணிகளை வெளியேற்ற விமான நிலையத்தினர் தீர்மானித்தனர்.
நூற்றியெழுபத்தைந்து பேரும் விமானத்திலிருந்து இறங்கினர். கடைசியாக விமானத்தின் உள்ளிருந்த ஊழியர்களும் இறங்கினர்.
நல்லவேளை! இதுவரை எதுவும் நடக்கவில்லை!
அலெக்ஸ் ஜோன்ஸ் நிம்மதிப் பெருமூச்சு விட்டவராகக் கூறினார்.
அவ்வளவு சீக்கிரம் நாம் ஆறுதலடையக் கூடாது சார்!
விக்கிரமன் நாயர் பேசினார்.
விமானத்துக்குள் வெடிகுண்டு இருப்பதால் பயணிகள் வெகுவிரைவில் விமான நிலைய எல்லையைக் கடக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அறிவிப்பு ஒலித்துக் கொண்டிருந்த அதேநேரத்தில் விமானத்துக்குள் ஏதோ ஒன்று வெடிக்கும் சத்தம் கேட்டது. வாகனங்கள் சாரிசாரியாக வெளிப்புறம் செல்லும் பாதையில் விரைந்தன.
ஆம்புலன்ஸின் டிரைவர் எங்கே போனார்?
அலெக்ஸ் பரபரப்புடன் கேட்டார்.
இதோ இங்கேயே இருக்கிறேன் சார்!
எங்கிருந்தோ முளைத்த டிரைவர் சட்டென்று இருக்கையில் ஏறி அமர்ந்து வேனை ஸ்டார்ட் செய்தார்.
சார், நாம் எங்கே போகணும்?
நேரா போலீஸ் ஸ்டேஷனுக்குப் போங்க.
அலெக்ஸ் உத்தரவிட்டார்.
ஆம்புலன்ஸ் நகரத் தொடங்கியது.
சந்தேகத்துக்குரிய - யாரையாவது கைது செஞ்சிருக்காங்களா டிரைவர்?
அலெக்ஸ் கேட்டார்.
எங்கே சார், யாரைக் கைது பண்ணிட்டாங்களான்னு கேக்குறீங்க?
தாவூத் இஸ்மாயிலைத்தான் கேக்கிறேன்.
நான்தான் சார் அது!
அந்தக் குரல் ஓர் இடி முழக்கம்போல் டி. எஸ். பிக்கும், சர்க்கிள் இன்ஸ்பெக்டருக்கும் கேட்டது. இருவரும் சட்டென்று தங்கள் இடுப்பிலிருந்த துப்பாக்கியை உருவினர்.
அவசரப்படாதீங்க சார். உங்களோட குண்டுகள் என்னை ஒண்ணும் பண்ணாது. ஆனா டேஷ்போர்டில் இருக்கிற ஒரு சுவிட்சை அழுத்தினா, உங்க ரெண்டு பேரோட உடம்பும் சல்லடை மாதிரியாயிடும் நீங்க இருக்கிற வேனோட எல்லாப்பக்கமும் கன்னா பின்னான்னு துப்பாக்கியை மறைச்சு தயாரா வெச்சிருக்கானுங்க!
###
2
சொன்னபடியே செய்யக்கூடியவன் தாவூத் இஸ்மாயில்! அந்த வார்த்தைகள் கல்லில் பொறித்த மாதிரியானவை. அதில் சந்தேகமே இல்லை!
"மிஸ்டர் அலெக்ஸ் ஜோன்ஸ்... நான் உங்களை அப்படியே கூப்பிடலாமில்லையா? விமானத்தில் பயணம் செஞ்ச பயணிகள் எல்லோரையும் உங்க செக்யூரிட்டி ஆளுங்க சோதனை செஞ்சாங்க. ஆனா, விமானத்துக்கு உள்ளேயிருந்து வந்த ஊழியர்களை அவங்க சோதனை போடலை. அதுதான் அவங்க செஞ்ச தப்பு.''
அவன் சொன்ன உண்மை உறைத்ததும் சர்க்கிள் இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பியின் முகத்தை ஊன்றிக் கவனித்தார்.
ஒரு விஷயத்தை நினைத்துப் பாருங்கள். தேவைப்பட்டால், மும்பையிலிருந்து எனக்காகவே ஒரு தனி விமானத்தைக் கிளப்பிக் கொண்டு வந்திருக்கலாம்
தாவூத் இஸ்மாயில் சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்தபடி பேசினான்.
இப்போது வந்த விமானமும் என் வேண்டு கோளுக்காகத்தான் விடப்பட்டிருக்கிறது. இதில் நான் பயணம் செய்கிறேன் என்பதைத் தெரிந்து கொண்ட உங்கள் துறையின் சுறுசுறுப்பை நான் பாராட்டுகிறேன். ஒருவேளை என்னுடைய எதிராளிகள் யாராவது 'துப்பு' கொடுத்திருக்கலாம்.
போலீஸ் அதிகாரிகளால் எதுவும் பேசமுடியவில்லை. அவன் பேசுவதை மெளனமாகக் கேட்டுக்கொண்டிருந்தனர். வேறு என்ன செய்ய? அவர்கள் இருவரும் அப்போது அவனிடம் வகையாகச் சிக்கியிருந்தனர்.
மிஸ்டர் தாவூத் இஸ்மாயில்... உண்மையிலேயே உங்க திறமையை நான் பாராட்டுகிறேன். நீங்கள் ஒரு தந்திரசாலி மட்டுமல்ல... கெட்டிக்காரரும்கூட. நீங்கள் இந்த மாதிரியெல்லாம் செயல்படுவீர்கள் என்று நான் நினைக்கவில்லை. வெகு தாமதமாக உணர்கிறேன்
பேசியபடியே அலெக்ஸ் தன்னுடைய பாக்கெட்டிலிருந்து சிகரெட் பெட்டியை எடுத்து அதிலிருந்து சிகரெட்டை உருவி உதட்டில் பொருத்தி லைட்டரால் பற்ற வைத்துக் கொண்டார்.
"மிஸ்டர் அலெக்ஸ், உங்களைப் போன்றவர்களின் திட்டங்கள் குறைந்தபட்சம் ஒரு சதவிகிதமாவது தவறும். அந்தத் தவறுதான் என்னைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. இதுவரையில் வேண்டுமானால் அதை என்னுடைய அதிருஷ்டம் என்றும் சொல்லலாம்.''தாவூத் சிகரெட்டுச் சாம்பலை டாஷ்போர்டில் இருந்த ஆஷ்ட்ரேயில் தட்டியபடி பேசினான்.
"இப்போது நாம் எங்கே போகிறோம்? அலெக்ஸ் விசாரித்தார்.
"உங்களிடமிருந்து இப்படிப்பட்ட முட்டாள்தனமான கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை. நான் எந்த இடத்துக்குப் போய்ச் சேரணும்னு நெனைக்கிறேனோ, அதுவரைக்கும் நீங்க இதுக்குள்ளே இருந்தே ஆகணும். அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. தாவூத் இடது கையை உயர்த்தி டிரைவரின் முன்புற இருக்கைக்கும், பின்புற கேபினுக்கும் நடுவே இருந்த சிறிய சதுரமான துவாரத்தை, ஷட்டரை இழுத்து மூடித் தாழ் போட்டான். அத்துடன் அவர்களுக்கிடையே இருந்த தொடர்பும் துண்டிக்கப்பட்டது.
இவன் எங்கே போகிறான்?
அலெக்ஸ் ரகசியமான குரலில், விக்கிரமன் நாயரிடம் கேட்டார்.
"எங்கே போனா என்ன? எப்படி இருந்தாலும் இவன் நம்ம வலையிலிருந்து தப்பிக்கிறது அவ்வளவு சுலபமில்லை! விக்கிரமன் நாயர் தனது துப்பாக்கியின் மீது கைவைத்தபடி மெதுவான குரலில் கூறினார்.
சரி...பார்க்கலாம்!
அலெக்ஸ் ஜோன்ஸ் தைரியத்துடன் சொல்லிக்கொண்டார்.
இவர்களின் பேச்சைக் கேட்டதினாலோ என்னவோ அவசர அவசரமாக சிகரெட்டை ஆஷ்ட்ரேயில் அழுத்தித் தேய்த்து அணைத்த தாவூத், வைப்பர் சுவிட்ச் போன்ற ஒன்றை அழுத்தினான்.
ஆம்புலன்ஸின் பின்புற அறைக்குள் எங்கிருந்து வருகிறது என்று தெரியாமல் சன்னமான புகை ஒன்று மூச்சுத் திணறும்படி வெளிவந்தது. அங்கு அமர்ந்திருந்த அலெக்ஸம், விக்கிரமன் நாயரும் இருமத் தொடங்கினர்.
விக்கிரமன் நாயர் பின்புறக் கதவைத் திறக்க முயன்றார். முடியவில்லை. அது வெளிப்புறம் பூட்டப்பட்டிருப்பது தெரிந்தது. ஒரு சில விநாடிகளுக்குள் இருவரும் சுயநினைவை இழந்தனர்.
இருவரும் கண்விழித்தபோது போலீஸ் துறையின் காருக்குள் இருந்தனர். விமான நிலையத்துக்குப் போக அவர்கள் பயன்படுத்திய அதே காருக்குள் தாங்கள் படுத்திருப்பதை உணர்ந்தனர். அமைச்சரின் கார் எதிர்பாராதவிதமாக ரிப்பேர் ஆனதாகச் சொல்லி ஏதோ ஓர் அதிகாரி கேட்டு வாங்கிச் சென்ற கார். அதற்குப் பதிலாகத்தான் அவர்கள் ஆம்புலன்ஸில் ஏறினர்.
நகரிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் சாலையில்தான் நின்றிருந்தது. பொழுது புலரும் நேரம்.
மிஸ்டர் விக்கிரமன், நேராக என்னுடைய குவார்ட்டர்ஸுக்கு காரை விடுங்கள். நல்லவேளை என் குடும்பத்தார் நாளைக்குத்தான் ஊரிலிருந்து வருகிறார்கள். நீங்களும் குளித்து அப்படியே ஓய்வெடுத்துக்கொள்ளலாம். நான் மிகவும் களைப்படைந்து விட்டேன். அந்தப் புகை கலந்த காற்றைச் சுவாசித்ததுதான் காரணம் என்று தோன்றுகிறது. என்ன இருந்தாலும் அந்தப் புகை ஆபத்தானதல்ல என்று புரிகிறது,
டி.எஸ்.பி. அபிப்பிராயம் தெரிவித்தார்.
"உண்மைதான். அதுமட்டும் ஆபத்தானதாக இருந்தால் நாம் கண் விழிச்சிருக்கவே முடியாதே! விக்கிரமன் காரை