Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mugizh Nagai
Mugizh Nagai
Mugizh Nagai
Ebook101 pages36 minutes

Mugizh Nagai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வாழ்க்கையில் பிரச்சனைகளுக்குப் பஞ்சம் இல்லை. பொழுதுபோக்கு என்று எண்ணி சினிமா, சீரியல் பார்க்கப் போனால் அங்கும் ஒரே வெட்டு, குத்து அழுகை, ஆர்ப்பாட்டம், அப்பப்பா...

அறுசுவை இருந்தாலும் வயது வித்தியாசம் பார்க்காமல் என்றைக்கும் நமக்கு கைக்கொடுக்கும் ஒரே சுவை நகைச்சுவை தான். அந்த நகைச்சுவையை தாங்கி வரும் இந்தப் படைப்பு உங்கள் கவலைகளை சிறிது நேரமாவது மறக்க உதவும் என நம்புகிறோம்!

Languageதமிழ்
Release dateMar 2, 2024
ISBN6580168010738
Mugizh Nagai

Read more from Uma Aparna

Related to Mugizh Nagai

Related ebooks

Reviews for Mugizh Nagai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mugizh Nagai - Uma Aparna

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    முகிழ்நகை

    Mugizh Nagai

    Author:

    காயத்ரி முரளிதரன்

    Gayathri Muralidharan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/uma-aparna

    பொருளடக்கம்

    ஆசிரியர் குறிப்பு

    1. நேருக்கு நேர்

    2. வயிற்றுக்கு வாய் இருந்தால்...

    3. தீபா எழுத்தாளரானாள்!!

    4. அபிநயாவின் ஆன்லைன் அட்ராசிட்டீஸ்

    5. நீயா, நானா?

    6. சாப்பாடு பெரும்பாடு

    7. டெஸ்ஸாவும் ஆன்ட்டியும்

    8. ஓடக்கார ஓச்சாயி

    9. மஞ்சு என்கிற மஞ்சுளா

    10. நண்பர்கள் நாங்கள்

    11. கோவன்னா பரமசிவம்

    12. வாய் சிவக்க சிரிக்கலாமா?

    13. சம்சாரம் என்பது வீணை

    14. அலமேலுவும் அக்குபங்ச்சரும்

    ஆசிரியர் குறிப்பு

    காயத்ரி முரளிதரன்

    MBA பட்டதாரியான காயத்ரி முரளிதரன், பெண்கள், குழந்தைகள், அறிவியல் எனப் பல்வகை கதைகள் எழுதி வருபவர். இது இவருக்கு நாலாவது கதை தொகுப்பு.

    சுபஸ்ரீ ரவிச்சந்திரன்

    வேதியியல் பாடத்தை கற்றுக் கொடுத்த ஆசிரியை வாழ்வியல் கதைகளை நகைச்சுவையுடன் இளம் வாசகர்களுக்கு நயம்பட உரைக்கும் எழுத்தாளராக புது அவதாரம் எடுத்துள்ளார். ஐந்தாவது புத்தகத்தில் இவரது பங்களிப்பு இது.

    மேல்மங்கலம் வி. சியாமளா

    சமீபகாலமாக கதைகள் எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டு இதுவரை எட்டு அருமையான கதைகளை எழுதியுள்ள இளம் எழுத்தாளரான இவர், இந்த புத்தகத்தில் நகைச்சுவை இழையோட மேலும் இரண்டு கதைகளை சிறப்பாக (சிரிப்பாக) வழங்கியுள்ளார்.

    வசந்தி ஜனார்த்தனன்

    BSNL-லில் பணியாற்றி, ஓய்வுக்கு பின் ஒரு எழுத்தாளராக வளர்ந்து வரும் இவர் நான்கு புத்தகங்களுக்குப் பிறகு, நகைச்சுவையிலும் தனது முத்திரையை பதிக்கும் வண்ணம் இங்கு இரண்டு கதைகளை அளிக்கிறார்.

    பார்வதி நாகமணி

    அஞ்சல்துறையில் இருந்து ஓய்வுபெற்ற பின் தமிழ் மேல் தீராக் காதல் கொண்டு சிறுகதைகள் எழுத ஆரம்பித்திருக்கிறார். இது இவரது மூன்றாவது புத்தகம்.

    வி. பிரபாவதி

    தமிழ் ஆர்வத்தினால் இதுவரை ஆறு கதைகள் எழுதி மேலும் இரண்டு கதைகளை நகைச்சுவையுடன் இதில் எழுதி உள்ள இவர், தான் ஒரு பெரும் எழுத்தாளராக வர விரும்புகிறார்.

    வி. மாதங்கி

    தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து கொண்டே, லெட்ஸ் ஹெல்ப் என்ற ஒரு குழு ஏற்படுத்தி, ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக உதவும் இவர், தன் தாயைப் பார்த்து எழுத்தார்வம் ஏற்பட்டு தனது நாலாவது புத்தகத்தில் இரண்டு கதைகளை எழுதி இருக்கிறார்.

    1. நேருக்கு நேர்

    ஆஹா... வந்துட்டான்யா வந்துட்டான்! என்று நான் அலற, என் மகன், மறுபடியும் ஆரம்பிச்சிட்டியா! என்று குரல் மட்டும் கொடுத்துவிட்டு இருந்த இடத்திலிருந்து சிறிதும் அசையாமல் தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

    என்ன ஒரு வில்லத்தனம்! சரி, எல்லாத்தையும் சமாளிச்சு தானே ஆகணும் என்று ஒரு கை பார்க்க எண்ணி, டேய் அவனா நீ...? அன்னிக்கு வந்தியே, இன்னும் போகலையா? என்று துடைப்பத்தை எடுத்து விரட்டப் பார்க்க, அது மீண்டும் என்னை நோக்கி ஓடி வர, நான் அதனிடம் பேசத் தொடங்கினேன்.

    இந்தக் கோட்டை நானும் தாண்டமாட்டேன், நீயும் தாண்டக்கூடாது. நான் உனக்கு என்ன பாவம் செஞ்சேன்? நீ சாப்பிட வீட்டுக்கு வெளிய அவ்ளோ பூச்சி பொட்டெல்லாம் இருக்கும்போது, என் சமையலறை தான் உனக்கு கெடச்சதா? நான் தொடர்ந்தேன்.

    உங்கள எல்லாம் பார்த்தா ரொம்ப பாவமா இருக்கு. இப்படித்தான் உன் சொந்தக்கார பசங்க சில பேர் பெரிசா எதையோ எதிர்பார்த்து என் சமையலறையில வந்து மாட்டிக்கிட்டாங்க. இதுவரைக்கும் இங்க வந்தவங்க யாரும் உசுரோட திரும்பினதில்லை. அதனால சொல்றேன், டீசென்டா முடிச்சுக்கலாம். இங்கிருந்து உடனே வெளிய போயிடு என்று நான் மிகவும் பக்குவமாகப் பேசிக் கொண்டிருக்கும்போதே, அது இன்னும் ஓர் அடி என் பக்கம் நகரப் பார்க்க, எனக்கு வந்ததே கோபம்...

    எனக்கு கோபம் வந்துது, நீ தாங்கமாட்டே... பீ கேர்ஃபுல்! என்று நான் அதை மிரட்ட, அது என்னவோ பாம்புக்குச் சகோதரன் போல் பாவலா பண்ணி என்னை பயமுறுத்த, நான் உடனே, நான் என்னை சொன்னேன்! என்று கூறிக்கொண்டே பின்வாங்க,

    இப்பவே ரோலிங் ஆகுதே என்று அப்படியே உட்கார்ந்துவிட்டேன்.

    நானும் அசையவில்லை, அதுவும் அசையவில்லை. உருவத்தில் சின்னது, பல்லு, கொம்பு என்று எதுவும் இல்லை, ஆனாலும் உடம்பு முழுக்க வெஷம் வெஷம்

    Enjoying the preview?
    Page 1 of 1