Kurai Ondrum Illai
By Uma Aparna
()
About this ebook
நேர்மை தான் முக்கியம், வெற்றியல்ல என்று வலியுறுத்தும் தந்தை, பிள்ளையின் அருகாமையை வேண்டும் தாய், பெற்றோரின் அன்புக்காக ஏங்கும் மகன், தாய்மைக்கு ஏற்பட்ட தொய்வை நிமிர்த்தும் மகள், தம்பிக்கு நல்லுதாரணமாக நின்ற அக்கா, என்று பலவித குணச்சித்திரங்களை பிரதிபலிக்கும் கதைகளின் தொகுப்பு, வாழ்வில் குறை ஒன்றும் இல்லை என்று எடுத்துச் சொல்லும் விதமாக அற்புதமாக அமைந்துள்ளது. தேசிய உணர்வும், நகைச்சுவையும் சேர்ந்து மேலும் இந்த புத்தகம் பரிமளிக்கிறது.
Read more from Uma Aparna
Urulaikilangu Chellakutty Rating: 0 out of 5 stars0 ratingsVallamai Thaaraayo Rating: 0 out of 5 stars0 ratingsSuttum Vizhisudarey! Rating: 0 out of 5 stars0 ratingsThoduvaanam Rating: 0 out of 5 stars0 ratingsIppadikku... Rating: 0 out of 5 stars0 ratingsMakizha Malargal Rating: 0 out of 5 stars0 ratingsSaranagadhi Rating: 0 out of 5 stars0 ratingsKaniyidai Yeriya Suvaiyum Rating: 0 out of 5 stars0 ratingsVeezhvenendru Ninaithayo Rating: 0 out of 5 stars0 ratingsKavin Kalaigal Rating: 0 out of 5 stars0 ratingsIlaiya Bharatham Rating: 0 out of 5 stars0 ratingsThalaiyali Rating: 0 out of 5 stars0 ratingsMugizh Nagai Rating: 0 out of 5 stars0 ratingsNalam Nalamariya Aaval Rating: 0 out of 5 stars0 ratingsAathichoodi Kadhaigal Rating: 0 out of 5 stars0 ratingsMalar Vanam Rating: 0 out of 5 stars0 ratingsKannadi Rating: 0 out of 5 stars0 ratingsKaviya Nayagigal Rating: 0 out of 5 stars0 ratingsAnbulla Rating: 0 out of 5 stars0 ratingsVakkiniley Inimai Vendum Rating: 0 out of 5 stars0 ratingsKasangiya Kaakithangal Rating: 0 out of 5 stars0 ratingsKadhamba Vanam Rating: 0 out of 5 stars0 ratingsGunamathu Kaividel Rating: 0 out of 5 stars0 ratingsPattampoochi Devathai Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kurai Ondrum Illai
Related ebooks
நிறம் மாறும் பூக்கள் Rating: 0 out of 5 stars0 ratingsNiram Maarum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsVensangu Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsVizhikkul Vizhundha Macham Rating: 0 out of 5 stars0 ratingsOondru Kol Rating: 0 out of 5 stars0 ratingsVaarisu Rating: 0 out of 5 stars0 ratingsChinna Chinna Minnalgal Rating: 0 out of 5 stars0 ratingsManoratham Rating: 4 out of 5 stars4/5மனோரதம் Rating: 0 out of 5 stars0 ratingsUnmai Oomaiyalla Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalagi Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsBommai Vizhigal Rating: 0 out of 5 stars0 ratingsKadavul Thantha Vazhvu! Rating: 0 out of 5 stars0 ratingsMayam Seithayo... Rating: 4 out of 5 stars4/5Athirum Uthiram Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsபொன்னாடை Rating: 0 out of 5 stars0 ratingsPonnaadai Rating: 4 out of 5 stars4/5Enaiyalum Ejamaney...! Rating: 0 out of 5 stars0 ratingsPoove VenPoove Rating: 0 out of 5 stars0 ratingsUyir Painkili Rating: 0 out of 5 stars0 ratingsKooramal Sanyasam Rating: 0 out of 5 stars0 ratingsNee Varum Paathaiyil... Rating: 5 out of 5 stars5/5Sigappaaga Oru Nizhal Rating: 5 out of 5 stars5/5அதிகாலைச் சூரியன் Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Yaarendru Enni... Rating: 0 out of 5 stars0 ratingsVaanavil Kanavugal Rating: 5 out of 5 stars5/5Sol Sol Ennuyire Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kurai Ondrum Illai
0 ratings0 reviews
Book preview
Kurai Ondrum Illai - Uma Aparna
https://www.pustaka.co.in
குறை ஒன்றும் இல்லை
(சிறுகதைகள்)
Kurai Ondrum Illai
(Sirukadhaigal)
Author:
உமா அபர்ணா
Uma Aparna
For more books
https://www.pustaka.co.in/home/author/uma-aparna
பொருளடக்கம்
1. உன்கண்ணில் நீர்வழிந்தால்...
2. குழந்தைசாமி
3. சிறகுகள் பெற்ற பணம்
4. ஊமை மொழிகள்
5. நேர்மை நெகிழ்ந்தது
6. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
7. நான் இல்லாத ஒரு நாள்
8. நந்தினி
9. எங்கெங்கினும் தாய்மை
10. துளசி மிஸ்
11. ஒரு துண்டு காகிதம்
12. ஒரு 500 ரூபாய் நோட்டு
13. விதை
14. நம்பிக்கை
மேல்மங்கலம். வி. சியாமளாஸ்
ஆசிரியர் குறிப்பு
மேல்மங்கலம் வி. சியாமளா அவர்களின் எழுத்து நுண்ணிய உணர்வுகளைப் பிரதிபலிக்கும். தன் கதைகள் மூலம் சமூகத்திற்கு ஒரு நல்ல தகவலைத் தர வேண்டும் என்று நினைக்கிறார். தன்னால் ஆன உதவியை எளியவர்களுக்குச் செய்யும் பரந்த மனம் படைத்தவர். கைவேலைப்பாடுகளில் மிகவும் ஈடுபாடு உள்ளவர். 36 வருடங்கள் மத்திய அரசுக் காரியாலயத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 73 வயதில் மிகவும் ஆர்வத்தோடு கதைகள் எழுதும் ஒரு எழுத்தாளர்.
1. உன்கண்ணில் நீர்வழிந்தால்...
15 நாள் விடுப்பில் ரகு தாயகம் வந்திருந்தான்.
கணேசன் அவனுக்கு இரண்டு வரன்கள் பார்த்து வைத்திருந்தார். பெண்ணைப் பார்த்துப் பிடித்திருந்தால் கல்யாணம் செய்து கொண்டுதான் அவன் திரும்பிப் போகவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். பெண் கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கிற நிலையில் இரண்டு ஜாதகங்களும் ரொம்பவே நன்றாகப் பொருந்தி இருந்தன. பிள்ளைக்கு வயது வேறு ஏறிக்கொண்டே போகிறது. ஒரு கால்கட்டுப் போடவேண்டும் என்று குறியாக இருந்தார்.
அம்மாவிடம் ரகு தனக்கு இன்னும் இரண்டு வருடங்கள் போகட்டும் என்று கெஞ்சிப் பார்த்தான். காலா காலத்தில் நடக்க வேண்டியதுதானேப்பா. எங்களுக்கும் வயதாகி விட்டது. நீயும் தனியாக ஏன் அவஸ்தைப் படணும்? நாங்களும் ஒரு பேரன் பேத்தி பார்க்க வேண்டாமா?
விசாலம் அவனைச் சமாதானப்படுத்திச் சம்மதிக்க வைத்திருந்தாள். பெட்டியை எடுத்துக்கொண்டு டாக்ஸியிலிருந்து இறங்கி வீட்டுக்குள்ளே போனான்.
வாடா. பிரயாணம் எல்லாம் சௌகரியமாக இருந்ததா?
கணேசன் பெட்டியை வாங்கித் தள்ளிக்கொண்டு உள்ளே வந்தார்.
வாப்பா ரகு. என்ன இளைச்சுப் போயிட்டியே. வேளைக்குச் சாப்பிடறதில்லையோ? காலை அலம்பிட்டு வா. நான் சூடாய் காப்பி கலந்து கொண்டு வரேன்.
விசாலம் வாஞ்சையுடன் விசாரித்தாள்.
அப்பா, ராமசாமி மாமா வீட்டு வாசலில் கோலமே இல்லையே! களையே இல்லாமல் வெறிச்சென்று இருக்கிறது. நிலா தெருவை அடைத்த மாதிரி பெரிசா கோலம் போடுவது ஊர்ப்பிரசித்தம் ஆச்சே.
நீ காப்பியை முதலில் குடி. வந்ததும் வராததுமா அதைப்பற்றி என்ன பேச்சு. அப்புறம் பேசிக்கலாம்.
என்ன ஆச்சு? ஏன் உங்க முகமே சரியில்லை? மாமா ஓகேவா?
அவருக்கு ஒன்றும் இல்லை.
அவர் பொண்ணு நிலா எப்படி இருக்கா?
ராமசாமி ஒரு மாஜி ராணுவ அதிகாரி. அவர் பெண் நிலாவும், ரகுவும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். ரகு இரண்டு கிளாஸ் மூத்தவன். நிலா ரொம்ப சாது. படிப்பில் வரும் சந்தேகங்களைப் பள்ளியிலிருந்து வீட்டுக்கு நடந்து வரும்போது ரகு அவளுக்குத் தீர்த்துவைப்பான். மேற்படிப்புக்கு அவன் பிலாய் சென்று, அங்கிருந்து அமெரிக்காவில் தொடர்ந்து படித்தான். டாக்டரேட் பட்டமும் வாங்கினான். அவன் திறமையைக் கூர்ந்து கவனித்த ஒரு பெரிய கம்பெனி அவனுக்கு நல்ல வேலை கொடுத்தது. நடுவில் ஒருமுறை ஊருக்கு வந்திருந்தான்.
ராமசாமி ராணுவத்திலிருந்து ரிடையர் ஆனதும் ஊரிலேயே உள்ள பிள்ளைகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்து வந்தார். அவர் மனைவி கரோனாக் காலத்தில் போய்விட்டதால், பெண் நிலாவைச் சீக்கிரமே கல்யாணம் செய்து கொடுக்க நினைத்தார். ஓர் ஆர்மிக்காரனுக்குத்தான் கட்டிக் கொடுப்பேன் என்று தேடிப்பிடித்து அர்ஜுனைத் தேர்ந்தெடுத்தார்.
தேசப்பற்று மிகுந்த குடும்பத்தில் பிறந்தவன். அர்ஜுனுடைய தாத்தா பெரிய சுதந்திரப் போராட்ட வீரர். அப்பாவும் ராணுவத்தில் வீரமரணம் அடைந்தவர். ராமசாமியின் உயிர் நண்பர். அர்ஜுனுக்கு யாரும் உறவு என்று பெரியதாகச் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. அர்ஜுன் - நிலா கல்யாணத்தைத் தன் கிராமத்தில் மிகவும் எளிமையாகக் கோவிலில் நடத்தினார். ஒரு பெரிய கடமையை முடித்துவிட்ட நிம்மதியுடன் வீடுவந்து சேர்ந்தார்.
நான்கு நாட்களில் அர்ஜுனுக்கு மேலதிகாரியிடம் இருந்து உடனே எல்லைக்கு வரும்படி அழைப்பு வந்தது. கடமை ஒருபுறம் அழைக்க, கட்டிய ஆசை மனைவியிடம் நான் திரும்பி வந்து உன்னைக் கூட்டிச் செல்வேன்
என்று பிரியாவிடை பெற்றுக் கிளம்பிச் சென்றான்.
ஏம்பா, இவ்வளவு நடந்திருக்கு. நீங்க எதுவுமே எனக்குச் சொல்லவில்லையே?
ஆமாம். நீ தனியா இருக்கிறாய். மனசு கஷ்டப்படுவாய் என்றுதான் சொல்லவில்லை.
கணேசன் ஜன்னலில்