Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Urulaikilangu Chellakutty
Urulaikilangu Chellakutty
Urulaikilangu Chellakutty
Ebook78 pages25 minutes

Urulaikilangu Chellakutty

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த துரிதயுகத்தில் குழந்தைகள் வித்யாசம் வித்யாசம் என்று போய் இயற்கையாகக் கிடைக்கக் கூடிய ஆரோக்யத்தை இழந்து கொண்டிருக்கின்றனர். எப்பொழுதும் ஃபாஸ்ட் புட் ,ஃப்ரைஸ்,ஜங்க் ஃபுட் என்று சாப்பிட்டுக் கொண்டு உடல் வலிமையையும் ஆற்றலயும் இழந்து கொண்டிருக்கின்றனர். காய்கறிகளின் அருமை பெருமைகளை குழந்தைகளுக்கு எடுத்துரைத்து அவர்கள் விரும்பும் வகையில் கதை வடிவிலும் காய்கறிகளே பேசிக் கொள்வது போன்றும் ஒவ்வொரு காய்களிலும் இருக்கும் சத்துக்களைப் பற்றியும் குழந்தைகளுக்கு புரியும் வகையில் எழுதிய கூட்டு முயற்சியே “உருளைக் கிழங்கு செல்லக்குட்டி” என்ன குழந்தைகளே புத்தகத்தைப் படித்து எல்லா சத்தான காய்கறிகளையும் சாப்பிடுவீர்களா செல்லங்களா?

Languageதமிழ்
Release dateMar 23, 2024
ISBN6580168010675
Urulaikilangu Chellakutty

Related to Urulaikilangu Chellakutty

Related ebooks

Reviews for Urulaikilangu Chellakutty

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Urulaikilangu Chellakutty - Uma Aparna

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    உருளைக்கிழங்கு செல்லக்குட்டி

    Urulaikilangu Chellakutty

    Author:

    உமா அபர்ணா

    Uma Aparna

    For more books

    https://www.pustaka.co.in/home/author/uma-aparna

    பொருளடக்கம்

    ஆசிரியர் குறிப்பு

    அணிந்துரை

    நித்தம் ஒரு காய்

    மனதில் பதித்த விதைகள்

    சாலடுக்கு ஜே!!

    ஹாய் காய்ஸ்

    கீரையும் கொண்டாட்டமும்

    சுண்டைக்காய்

    க்ரீன் கோர்ட்

    பாலிகா என்கிற பாகற்காய்

    சின்ன அவரை பாப்பா!

    அவசரக் கூட்டம்

    நோயற்ற வாழ்வு

    ஆசிரியர் குறிப்பு

    காயத்ரி முரளிதரன்

    M.B.A. பட்டதாரியான காயத்ரி முரளிதரன், பெண்கள், குழந்தைகள், அறிவியல் எனப் பல்வகை கதைகள் எழுதி வருபவர். இது இவருக்கு நாலாவது கதை தொகுப்பு.

    சுபஸ்ரீ ரவிச்சந்திரன்

    வேதியியல் பாடத்தை கற்றுக் கொடுத்த ஆசிரியை வாழ்வியல் கதைகளை நகைச்சுவையுடன் இளம் வாசகர்களுக்கு நயம்பட உரைக்கும் எழுத்தாளராக புது அவதாரம் எடுத்துள்ளார். ஐந்தாவது புத்தகத்தில் இவரது பங்களிப்பு இது.

    மேல்மங்கலம் வி. சியாமளா

    சமீப காலமாக கதைகள் எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டு இதுவரை எட்டு அருமையான கதைகளை எழுதியுள்ள இளம் எழுத்தாளரான இவர், இந்த புத்தகத்தில் நகைச்சுவை இழையோட மேலும் இரண்டு கதைகளை சிறப்பாக (சிரிப்பாக) வழங்கியுள்ளார்

    வசந்தி ஜனார்த்தனன்

    BSNLல் பணியாற்றி, ஓய்வுக்கு பின் ஒரு எழுத்தாளராக வளர்ந்து வரும் இவர் நான்கு புத்தகங்களுக்குப் பிறகு, நகைச்சுவையிலும் தனது முத்திரையை பதிக்கும் வண்ணம் இங்கு இரண்டு கதைகளை அளிக்கிறார்.

    பார்வதி நாகமணி

    அஞ்சல் துறையில் இருந்து ஓய்வு பெற்ற பின் தமிழ் மேல் தீராக் காதல் கொண்டு சிறுகதைகள் எழுத ஆரம்பித்திருக்கிறார். இது இவரது ஏழாவது புத்தகம்.

    உமா அபர்ணா

    பேக்கிடெர்ம்டேல்ஸ் இணை நிறுவனர். இவர் இதுவரை 25-ற்கும் மேற்பட்ட நூல்களில் எழுதியுள்ளார். இவர் ஒரு பெண்ணிய எழுத்தாளர்

    அணிந்துரை

    டயரி அல்லது வழிகாட்டி

    வேதா கோபாலன்.

    இது கதையல்ல, கட்டுரையல்ல, ஆரோக்கியத்தை விரும்புகிறவர்களின் டயரி. அல்லது வழிகாட்டி. இந்தப் புத்தகத்தை அச்சிட்டு யாராவது ஸ்பான்ஸர் உதவினால் பல பள்ளிகளுக்குப் போய் எல்லாக் குழந்தைகளுக்கும் கொடுத்தால் அடுத்து வரும் சமுதாயத்தின் ஆரோக்கியம் மேம்படும்.

    பார்வதி நாகமணியின் நித்தம் ஒரு காய் கதையில்,

    ‘உன் ஃபிரண்ட் அம்மா நான் இருக்கும் பொழுது, உனக்குப் பிரச்சினையே இல்ல.’ இது போல் அம்மாக்கள் இருந்தால் குழந்தைகளின் பிரச்சினைகள் காணாமல் ஓடிடும்.

    நித்தம் நித்தம் எங்கள் வீட்டில் எல்லாக் காய்கறிளும் உண்டு!

    என்ற பாடல் வெகு நேர்த்தி.

    இதே ஆசிரியரின் சாலடுக்கு ஜே!! என்ற தலைப்பே ஒரு புகழ் பெற்ற பாடலை நினைவுபடுத்தும்படி அமைத்திருப்பதால் ஆசிரியருக்கு ஒரு ஜே...

    பொதுவாய்க் கதைகளில் வரும் பாத்திரங்களுக்குப் பெயர் வைக்கத் திணறுவேன். பார்வதி என்னடாவென்றால் சுஜா, வந்தனா, வைஷாலி, தீபா, சுபா, கலா, ப்ரனேஷ், ராகேஷ், முகுந்த், முரளி என்று

    Enjoying the preview?
    Page 1 of 1