Thulli Thiriyum Ninaivalaigal - Part 2
By Kulashekar T
()
About this ebook
குழந்தை மனது பிரபஞ்சத்தையே நேசிக்கச் செய்யும் வல்லமை கொண்டது. அதன் விசாலம் எல்லையற்றது. எல்லாத் திசைகளிலும் வியாபித்திருப்பது. அணிச்ச மலரையும்விட மென்மையானது. அதனைக் காப்பாற்றுவதும், உணர்வில் தக்கவைத்துக் கொள்வதுமே ஒவ்வொரு உயிரின் உன்னதத்தை உயிர்ப்போடு இயங்கச் செய்வதற்கான எளிய சூத்திரம். எழுத்தாளர் ஆர்.கே. நாராயணனின் மால்குடி தினங்கள் , மக்சீம் கார்கியின் எனது குழந்தைப் பருவம் போல தமிழில் ஒரு யதார்த்த தளத்தில் இயங்கக் கூடிய குழந்தை இலக்கியமாய் அதே நேரம் யாரும் படிக்க முடிகிற எளிய பதிவாய் ஆக்க வேண்டும் என்கிற எண்ணத்தின் பிரதிபலிப்பே இந்தக் கட்டுரைகளில் இடம்பெற்றிருக்கிற கடிதங்கள்.
இதில் உள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஒரு அனுபவம் மற்றும் அதன் கிளை அனுபவங்கள். அப்படி இதில் எத்தனை எத்தனையோ அனுபவங்கள். அந்த அனுபவங்கள் எழுத்துக்களைக் கடந்து செல்கையில் வளர்ந்தவர்களின் குழந்தைப் பருவத்தைக் கிள்ளிவிட்டு, அவர்களுக்குள் காலம் ஜெயித்து மாறா சாசுவதத்துடன் மாற்றமற்று அப்படியப்படியே ஒளிந்திருக்கும் குழந்தைப் பருவத்திற்குள் ஆட்காட்டி விரல் பிடித்து அழைத்துச் செல்லும்.
இதில் குழந்தைப் பருவத்து அனுபவங்களும், குழந்தை மனதோடான அனுபவங்களுமாய் நிறைந்திருக்கும். குழந்தைகள், டீன்ஏஜ் பருவத்தினர் என்றழைக்கப்படும் இளந்தளிர்த் தலைமுறைகள் மற்றும் குழந்தை மனது மாறாதிருப்பவர்கள் அனைவருக்குமான பதிவுகளாய் இதன் வீச்சு படிப்பவர் நினைவுகளில் தடம் பதிக்கும். இதன் வழித் தடங்களில் உங்களின் அனுபவங்களோடு ஒத்திருக்கிற சம்பவங்கள் தட்டுப்பட்டுக் கொண்டேயிருக்கும். அதன் தொடர்ச்சியாய் உங்களின் மனதில் எஞ்சிய பிரத்யேக குழந்தை உலகத்தின் அனுபவங்களின் நீட்சியாய், ஞாபகத்தில் கொண்டு வந்து, வார்த்தைகள் கடந்த இனம்புரியாத குதூகலத்திற்குள் மனதின் கைபிடித்து அழைத்துச் செல்லும்.
அதனால் அந்த அனுபவப் பகிர்வினை அவர்களால் உள்வாங்கிக் கொள்ள முடிகிறது. அனுபவங்களாகவோ, கதை வடிவங்களாகவோ சொல்லப்படுகிற எண்ணங்கள் அவர்களை லெகுவில் சென்றடைகின்றன. அவர்கள் அதனைத் தங்களின் தேவைக்கேற்பப் புதுப்பித்துக் கொள்ளவும் அதில் இடம் இருக்கிறபடியால் அந்த உத்தி அவர்களுக்கு ஏற்புடையதாகிறது. பெற்றோர்கள் அன்பாகி, அன்புடன் தயாரித்துத் தருகிற எளிய உணவுகூட அவர்கள் உடம்பிற்கு மிகவும் உகந்ததாக மாறிப் போகிறது. வெறுப்போடோ, சலிப்போடோ தயாரித்துத் தருகிற ஊட்டமான உணவுகூட அவர்களுக்கு ஒத்துக் கொள்ளாததாகி விடுகிறது என்கிறது அறிவியல். எதையும் பரந்த, பேதமற்ற அன்பிதத்துடன் செய்தால் குழந்தை உள்ளங்கள் அந்த இதத்தில் கதகதப்பு கொள்ளும்.
இன்றைய அதி வேகமான நகரச் சூழ்நிலையில் ஒரு குடும்பத்தில் எல்லோரும் ஒரே நேரத்தில் இருப்பதென்பது அரிது. அப்படியே இருந்தாலும் தொலைக்காட்சி அவர்கள் நேரத்தை பிடுங்கிக் கொள்ளாமல் இருக்கிறதென்பது அரிதிலும் அரிது. அப்பிடியே ஒன்றாயிருந்து தொலைக்காட்சியும் குறுக்கிடாமல் இருக்கிற நேரத்திலும் மனசு விட்டுப் பேசிக்கொள்வதென்பது அரிதிலும் அரிதரிது.
ஒரு வகையில் இது என்னுடைய சுருக்கி எழுதப்பட்ட சுயசரிதத்தின் முதல் பாகம் என்று கூட சொல்ல முடிகிற அளவிற்கு இந்த கட்டுரைத் தொகுப்பு கல் எறி வட்டங்களாய் விரிந்திருக்கிறது. அது என்னையும் மீறித் தன்னிச்சையாய் வழுக்கிக் கொண்டு வந்து உடன் சேர்ந்து கொண்டவை. எழுத எழுத உள்ளிருந்து தோண்டி எடுக்க வேண்டிய நினைவுகளின் புதையல் கூடிக்கொண்டே போவது ஒரு அதிசயம்.
விடலைப் பருவம் என்கிற துளிர் இளம்பருவத்திலிருக்கும் இளைய மகன் வருணிடம் பொது அறிவு மற்றும் பரஸ்பர அனுபவப் பகிர்தலின் மூலம் புரிதலை மேம்படுத்திக் கொள்வதற்காக ஒரு திட்டத்தைப் புகுத்தினேன். கணினியில் எது வேண்டுமானாலும் பிடித்ததை எழுதுவேன். அதில் பல சின்னச் சின்ன கேள்விகள், தகவல்கள், எண்ணங்கள், கருத்துக்கள், ஆலோசனைகள், வேண்டுகோள்கள், அபிப்பிராயங்கள், நடந்தவை, பிடித்தவை, உணர்ந்தவை என்று பல விசயங்கள் இருக்கும்.
அதற்கு இன்னொரு நாள் அதை வாசிக்கிற வேளையில் அவன் பதிலளிப்பதோடு, அவனுக்குத் தோன்றியவைகள் எது வேண்டுமானாலும் அதில் எழுதலாம். அவைகள் பதில்களாகவோ, வேறு கோணத்திலான கேள்விகளாகவோ விரியும். இப்படி நீட்டித்த விசயத்தின் நீட்சியாகவே இந்தப் பதிவுளைக் கொண்டுவர எண்ணம் துணிந்தது. இதை ஒரு முறையாக வைத்துப் பாலியல் கல்வி குறித்த சிந்தனை உட்பட இந்தத் தொடரைப் பல கோணங்களில் நீட்டலாம் என செயல்படத் தொடங்கினேன். அதற்காக மலரின் பாலியல் வழிமுறை யிலிருந்து துவங்கி மானுடத்தின் உடலியல் மற்றும் பாலியல் கல்வி வரை எளிமையாய், நுண்மையாய் இயல்பாய் உணர்த்த முயன்றிருக்கிறேன்.
நட்புடன், தி. குலசேகர்
Read more from Kulashekar T
White Nights - Venmayamana Iravugal Rating: 0 out of 5 stars0 ratingsVikramadithanukku Vedhalam Sonna Puthir Kathaigal Rating: 5 out of 5 stars5/5Children of Heaven Rating: 0 out of 5 stars0 ratingsCity Lights Rating: 0 out of 5 stars0 ratingsMr and Mrs Iyer Rating: 0 out of 5 stars0 ratingsBiggboss - Oviya Varaiyum Devathai Padimam Rating: 0 out of 5 stars0 ratingsThe Day I Became A Woman Rating: 0 out of 5 stars0 ratingsBigg Boss 2 - Episode 2 Rating: 0 out of 5 stars0 ratingsThulli Thiriyum Ninaivalaigal - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsA Separation Rating: 0 out of 5 stars0 ratingsFirst Teacher Rating: 0 out of 5 stars0 ratingsThe Road Home Rating: 0 out of 5 stars0 ratingsOre Kadal Rating: 0 out of 5 stars0 ratingsOru Snegithikkaga... Rating: 0 out of 5 stars0 ratingsNinaivellam Poovasam! Rating: 0 out of 5 stars0 ratingsKop Meyor Rating: 0 out of 5 stars0 ratingsDevadas - Azhiyaa Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsSpring Autumn Winter Summer Spring Rating: 0 out of 5 stars0 ratingsBigg Boss 2 - Episode 10 Rating: 0 out of 5 stars0 ratingsTaxi Rating: 0 out of 5 stars0 ratingsBaran Rating: 0 out of 5 stars0 ratingsBigg Boss 2 - Episode 12 Rating: 0 out of 5 stars0 ratingsBigg Boss 2 - Episode 7 Rating: 0 out of 5 stars0 ratingsUnnil Ennai Kaangirean Rating: 0 out of 5 stars0 ratingsUyirkaadhal Rating: 0 out of 5 stars0 ratingsBigg Boss 2 - Episode 3 Rating: 0 out of 5 stars0 ratingsCharlie Chaplin - Oru Muzhumayana Dharisanam Rating: 0 out of 5 stars0 ratingsW.P.A Soundrapandian Rating: 0 out of 5 stars0 ratingsBigg Boss 2 - Episode 5 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Thulli Thiriyum Ninaivalaigal - Part 2
Related ebooks
Jannal Rating: 0 out of 5 stars0 ratingsBodhi Maram Rating: 0 out of 5 stars0 ratingsMallikavin Veedu Rating: 5 out of 5 stars5/5Aagasa Thoothu Rating: 5 out of 5 stars5/5Bhoomikku Kidaitha Puthayal Rating: 0 out of 5 stars0 ratingsThaatha Sonna Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsUshaar Ulavaali Rating: 0 out of 5 stars0 ratingsParakkum Yaanaiyum Pesum Pookkalum Rating: 0 out of 5 stars0 ratingsKuruthu Rating: 0 out of 5 stars0 ratingsBodhimara Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsYasothaigal Rating: 0 out of 5 stars0 ratingsPaathai Amaikkum Paathangal Rating: 0 out of 5 stars0 ratingsGnanathin Vaayil Rating: 0 out of 5 stars0 ratingsUrulaikilangu Chellakutty Rating: 0 out of 5 stars0 ratingsVeezhvenendru Ninaithayo Rating: 0 out of 5 stars0 ratingsNilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsVaasanthiyin Katturai Thoguppu Rating: 0 out of 5 stars0 ratingsSwarna Vetkai Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - April 2022 Rating: 0 out of 5 stars0 ratingsAppaavi Varikuthirai Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - January 2019 Rating: 0 out of 5 stars0 ratingsPesum Oviyam Rating: 0 out of 5 stars0 ratingsMaayakannadi Rating: 0 out of 5 stars0 ratingsEngey Antha Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsThirumarai Nabimozhi Islamiya Neethikathaigal - Thoguthi 2 Rating: 0 out of 5 stars0 ratingsEllarukkum Pidikkum Kavithai! Rating: 0 out of 5 stars0 ratingsAmmai Vadumugaththu Oru Naadodiyin Ninaivu Kurippugal Rating: 5 out of 5 stars5/5Yali Rating: 0 out of 5 stars0 ratingsTheerkka Sumangali Rating: 0 out of 5 stars0 ratingsKarna Parambarai Rating: 5 out of 5 stars5/5
Reviews for Thulli Thiriyum Ninaivalaigal - Part 2
0 ratings0 reviews
Book preview
Thulli Thiriyum Ninaivalaigal - Part 2 - Kulashekar T
http://www.pustaka.co.in
துள்ளித் திரியும் நினைவலைகள் - பாகம் - 2
Thulli Thiriyum Ninaivalaigal - Part 2
Author:
தி. குலசேகர்
T. Kulashekar
For more books
http://www.pustaka.co.in/home/author/kulashekar
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. தாய் மொழி
2. சில கதைகளும் சொன்னவர்களும்
3. முனியாண்டி மாமா
4. மாமம்மா
5. குட்டி
6. பேதங்களற்ற
7. பாரதி பெரியார்
8. அதன் மீது காதல் வந்த வரலாறு
9. முதல் பரு
10. சூட்சும மந்திரம்
11. கோழி நேசம்
12. முரண்கள்
13. நிறைவின் வால்
14. மனசு வச்சா
15. மாத்தி யோசி
16. கீழேயும் இல்லை மேலேயும் இல்லை
17. நகரத்தின் சாபம்
18.அனுபவங்கள் புதுமையானவை
19. சகவாசம்
20. நம்பிக்கை
21. உணர்வு மேலிடுதல்
22. தொலைக்காட்சி
23. வயிறு
24. மூதாதையர்
25. பிரபஞ்சம்
26. ஏமாறாதே ஏமாற்றாதே
27. தியானம்
28. ஜென் கதைகள்
1. தாய் மொழி
நாம் எதைச் சிந்தித்தாலும் தாய் மொழியில் தான் சிந்திப்போம் என்பதால் தாய்மொழியில் நாம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமாகிறது. ஜப்பான், சீனா, கொரியா எல்லாம் இந்த விசயத்தில் தெளிவாக இருக்கிறார்கள். அவர்கள் தாய்மொழியிலேயே அனைத்துப் பாடங்களையும் கற்கிறார்கள். அப்படிக் கற்பதற்குத் தோதுவாக கணினி மொழி உட்படத் தேவையான சொற்களஞ்சியங்கள் உருவாக்கிப் பயன்பாட்டில் வைத்திருக்கிறார்கள். பிற மொழிகள் கூடுதலாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதும் தேவையின் அத்யாவசியம்.
தமிழ் மொழி உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்று. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த குடி. தமிழ்மொழி பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய புராதன மொழி. இலக்கண ஒழுங்குடன் உருவாக்கப்பட்ட மென்மையான மொழி. தென்னிந்திய மொழிகளின் தாய் மொழி. உலகின் மூத்த மொழி. உலகின் ஆறு செம்மொழிகளில் ஒன்று.
செம்மொழி அந்தஸ்து வழங்கியபோது பிரதமர் மன்மோகன்சிங் தமிழ் மொழி தொன்மையான, கலைநயம் கொண்ட, கவித்துவமான மொழி என்று குறிப்பிட்டிருக்கிறார். பழ. கருப்பையா தமிழ் மொழியில் பிறமொழி கலப்பு கூடாது என்று கூறுவதற்கு வித்யாசமான ஒரு காரணம் தெரிவித்திருந்தது யோசிக்க வைக்கிறது. தமிழ் மொழி மென்மையான மொழி. அது நாவிலிருந்தே உச்சரித்தால் போதுமானது. அதிக சக்கி பிரயோகம் தேவையில்லை. வடமொழி கலப்பினால் அது அடிவயிற்றிலிருந்து உச்சரிக்க வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்படுகிறது. அது தமிழின் ஒழுங்கைச் சிதைப்பதாய் ஆகிவிடுகிறது. அதனால் தான் தூய தமிழில் பேசிப் பழக வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறோம் என்று பேசியும் காட்டினார். அவர் சொல்வதில் யோசிக்க விசயங்கள் இருப்பதாய்த் தான் படுகிறது.
தாய் மொழி கற்றுக் கொள்வதென்பது தாயின் அடையாளம் தெரியாமல் வளர்வதற்குச் சமம். தாய்மொழியில் செலுமையாய் இருக்கிற, அதனை விஞ்ஞானம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் வளர்த்தெடுத்துச் செல்கிற ஜப்பான், கொரியா, சீனா போன்ற நாடுகளில் விவசாயம், தொழில்வளம், கணினித்துறை, பொருளாதாரம், மொழியியல் என்று எதிலும் சோடை போகவில்லை என்பது நமக்கான நடைமுறை உதாரணம்.
அதற்காகப் பிறமொழி கற்கக் கூடாதென்று யாரும் சொல்லவில்லை. எவ்வளவு கூடுதலாகப் பிறமொழிகள் கற்க முடிகிறதோ அத்தனையும் கற்கலாம். ஒவ்வொரு புதிய மொழியைக் கற்றுக் கொள்கிற போதும் ஒரு புதிய உலகத்தின் தரிசனம் கிடைக்கிறது என்று மொழி வல்லுநர்கள் சொல்கிறார்கள்.
தமிழ் ஆர்வலர் வைகறை குறிப்பிடுகையில், ஒரு மொழி ஆட்சி மொழியாக வேண்டுமெனில் அதற்கான மொழியியல்தன்மையில் எவ்வளவோ விசயங்கள் கையாளப்படவேண்டும். உலகின் அத்தனை வகையான கலைச்சொற்கள், அறிவியற் சொற்கள்யாவும் அம்மொழியில் படைக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டாக வேண்டும் என்று எளிய அரிய உண்மை சொல்வார். அதற்கான முயற்சிகளில் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் இயக்கமாய் இயந்து செயல்பட்டு அதனை அனைத்து மக்களிடமும் கொண்டுபோய்ச் சேர்க்க முயற்சிக்கலாம்.
தமிழ் வழிக் கல்வி அர்த்தமுள்ளதாக ஆக்கப்படவேண்டுமானால் அந்தப் படிப்பு படித்து வருகிறவர் களுக்குச் சமுதாயத்தில் கூடுதல் மரியாதை, வேலை வாய்ப்பு கிடைக்கிற வகையில் அரசு அதெற்கென ஒரு கணிசமான தொகையை ஒதுக்கினால் தான் அதை சாத்தியப்படுத்த முடியும் என்று தோன்றுகிறது. அதன் துவக்கமாய் தமிழ்வழிக் கல்வி பயில்வோர்க்கு அரசுத் துறையில் பணி நியமனத்தின்போது முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது.
தாய் மொழியில் பாடம் கற்கிறதென்பது அத்தனை வலிமையானது. நம்முடைய கற்பனைகள் எல்லாம் தாய்மொழியில் தான் சுரக்கும். அதனால் தாய்மொழி வழிக் கல்வி என்பது அர்த்தமுள்ளதாய் இருப்பதோடு ஆழமானதாயும் இருக்கும். அதே நேரத்தில் இந்தி மொழி உடன் கற்று வைத்திருப்பதால் இந்தியாவில் எங்கு செல்வதாயிருந்தாலும் தொடர்பு மொழியாக பயன் படும். ஆங்கிலம் கற்றுக் கொள்வதால்
உலகெங்கிலும் செல்கையில் சமாளிக்க முடியும். மொழிகள் எத்தனை கற்க முடியுகிறதோ கற்றுக் கொண்டே போகலாம். முதலில் தாய் மொழியிலிருந்து அதனைத் துவங்கலாம்.
செம்மொழி அந்தஸ்துள்ள தமிழ் மொழியை ஆட்சி மொழிகளில் ஒன்றாய் மத்திய அரசு ஏற்றுக்கொள்வதற்கான அனைத்துத் தகுதிகளும் கொண்டிருக்கிற மொழி தமிழ் மொழி. கணினி இயலிலும் நிறைய முன்னேற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருப்பதால் கூடிய விரைவில் தமிழ்மொழி ஆட்சி மொழிகளில் ஒன்றாய் ஆக்கப்படும் என்கிற நம்பிக்கையிருக்கிறது.
2. சில கதைகளும் சொன்னவர்களும்
கதைகள் படித்துப் பழக்கப்படாத குழந்தைப் பிராயங்களிலேயே நிறைய கேட்டுப் பழக்கப்பட்டிருக்கிறேன். ஆதியில் என் அய்யப்பா சங்கரநாராயணன் விக்கிரமாதித்தன் கதைகள் பற்றிச் சொல்வார். வேதாளத்தை முறுங்கை மரத்திலிருந்து தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு செல்கையில் அது ஒரு கதை சொல்லும். முடிவில் அதில் ஒரு புதிர் வைக்கும். அந்தப் புதிருக்குச் சரியான பதிலைச் சொல்லாவிட்டால் தலை வெடித்துச் சிதறி விடும் என்று பயங்காட்டும். ஆனால் விக்ரமாதித்தன் சமயோசிதமாய்ப் பதிலளித்துக் கொண்டே வருவான். கடைசியாய் ஒரு கதை கேட்கும். அதற்கு விக்ரமாதித்தன் பதில் சொல்லத் திணறுவான். அது என்ன கதை தெரியுமா?
ஒரு அப்பாவும், மகனும் தனிமையில் காட்டோரம் நடந்து செல்கிறார்கள். வழியில் இரண்டு கால் தடம் தெரிகிறது. அந்தக் கால் தடத்தின் மென்மையான அழுந்தலை கணித்து இவைகள் பெண்களின் கால் தடம் என்று அனுமானிக்கிறார்கள். சின்னக் கால்தடத்தை மகனும், பெரிய கால்தடம் கொண்டவளை அப்பாவும் திருமணம் செய்து கொள்வதென தீர்மானித்துக்கொள்கிறார்கள்.
அவர்கள் அந்தக் கால் தடங்களைத் தொடர்ந்து அந்த இரண்டு பெண்களையும் கண்டுபிடிக்கிறார்கள். ஆனால் அங்கே சிறிய கால்தடம் கொண்டவள் தாய். பெரிய கால்தடம் கொண்டவள் மகள்.
அவர்கள் சொன்ன சங்கல்பத்தையும் மீற முடியாது. ஆகவே அவர்கள் சொன்னபடி திருமணம் செய்து கொள்கிறார்கள். இப்போது யார் யாருக்கு என்ன உறவு என்று ஒரு கேள்வி கேட்கிறது. இந்தக் கேள்விக்கு விக்ரமாதித்தன் இப்போதும் அங்கேயே உட்கார்ந்து பதில் தேடிக்கொண்டிருக்கிறானாம்.
மகாபாரதக் கதைகள் நிறையச் சொல்வார். கர்ணன் பற்றிய கதைகளைச் சொல்வார். அவர் எப்போதும் இரண்டு புத்தகங்களை வாழ்நாள் முழுவதும் திகட்டாமல் திரும்பத் திரும்பப் படித்துக்கொண்டேயிருந்தார். ஒன்று. மகாபாரதம். இன்னொன்று. விக்ரமாதித்தன் கதைகள்.
அவர் நூறு வயது வாழ்ந்தார். இறக்கும் வரை தினம் சாமக்கோட்டை மேடு கடந்து அய்யம்பாளையம் வரை மாலையில் நடந்து வருவதை வழக்கமாக வைத்திருந்தார். பாரதி போல மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டேயிருப்பார். காபி அருந்தும் போது வெள்ளை மீசை நனைந்து விடும். பிறகு ஆள்காட்டிவிரலால் இருபக்கமும் துடைத்துவிட்டுக் கொள்வார். சிலம்பம் பிரமாதமாய்ச் சுற்றிக் காட்டுவார். பயம் அறியாதவர். இளம்பிராயத்தில் கொஞ்சம் சண்டியர். ஆனால் வீட்டில் அய்யம்மாவிடமும், பேரன் பேத்திகளிடமும் அப்படிப் பயப்படுவார். பாசம்.
அய்யம்மா ஆவுடையம்மாளை பாப்பாத்தி என்று செல்லமாக அழைப்பார். அய்யம்மா அப்படி
வெள்ளைக்காரி போல வெண்சிவப்பாய் இருப்பார்கள். அய்யப்பா முறைப் பையன் தான் என்றாலும், வசதி படைத்தவர் தான் என்றாலும், அவரின் சண்டியர்த்தனம் அவரின் மாமாவிற்குத் தன் மகளை கட்டிவைக்க ஒப்பவில்லை.
இதற்கிடையில் சண்டியருக்கும், என் அய்யம்மாவிற்கும் காதல் ஒரு ஓரத்தில் தளிர்த்திருந்திருக்கிறது. இந்த நேரத்தில் வத்தலக்குண்டு அருகேயுள்ள ஒரு கிராமத்தில் மாப்பிள்ளை கல் தூக்கும் போட்டியில் போய் அந்த கல்லை யாரும் தூக்கமுடியாதபோது இவர் தூக்கி அசத்தியிருக்கிறார்.
அந்தக் காலத்தில் வெண்டிச்செடி பெரிதாய் குற்றுமரம் போல் ஆனபிறகு காய் காய்க்காது. அதனைத் தோண்டி எடுத்துவிடுவார்கள். அப்படி அதைத் தோண்டி எடுக்காமல் ஊரில் பலவானை சோதிப்பதற்காகப் போட்டி வைப்பார்கள். யார் அதைக் கைகளாலேயே பிடுங்கி எடுக்கிறார்கள் என்று போட்டி வைப்பார்கள். அதற்குப் பரிசாக ஊரின் மிகச் சிறந்த அழகியையே சாதி மத பேதமின்றி கட்டி வைப்பார்கள்.
அப்படியரு போட்டியிலும் அய்யப்பா அசத்தியிருக்கிறார்.
உடனே அந்த ஊரின் பேரழகியை அவருக்குக் கட்டித்தர முன்வந்திருக்கின்றனர். உடனே அய்யப்பா இதைச் செய்தது என் வீரத்தைக் காட்ட மட்டுந்தான் என்றும், தான் தன்னுடைய முறைப் பெண்ணை விரும்புவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
அன்றிலிருந்து அந்தப் பேரழகியின் குடும்பத்தாரும், அந்தக் கிராம மக்களும் வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதும் அய்யப்பாவைமாப்ளே என்று தான் அழைப்பார்களாம். அவர் இறக்கும்வரை அப்படித் தான் அந்தக் குடும்பத்தார் அழைத்திருந்திருக்கிறார்கள்.
அவர் தேர்ந்தெடுத்துத் தந்த பையனையே அந்தப் பெண்ணும் திருமணம் முடித்திருந்திருக்கிறார். இவர் பின்னாளில் மாடி விட்டு மாடி போல்வால்ட் தாவி என் அய்யம்மாவோடு காதலை வளர்த்து, ஒரு கட்டத்தில் தூக்கிக்கொண்டு போய் கல்யாணம் செய்து கொள்வேன் என பயமுறுத்தப், பின்னர் அவரின் மாமா வேறு வழியின்றி வழிக்கு வந்திருக்கிறார். இவர் பெயர் தான் நம்ம தெருவிற்கு வைத்திருக்கிறார்கள்.
மாமா மகள் வெண்ணிலா விடுமுறைக்கு இங்கு வந்திருந்தபோது சொந்தக் கற்பனையில் நிறைய கதைகள் உருவாக்கி எடுத்து விடுவாள். அப்படி அவள் சொன்ன கதைகளில் சுண்டைக்காய் கதை மிகவும் பிடிக்கும். எல்லாருக்கும் உதவியாய் அந்தக் குடும்பத்தில் இருக்கும் சுண்டைக்காய் ஒரு முறை அந்த வீட்டிற்கு வரும் திருடனைப் பிடித்துக் கொடுக்கும்போது அந்தத் திருடன் திருடிய வெள்ளிப் பானையால் நசுங்கிப் போய் துடிதுடித்து உயிர் துறக்கிற தியாகக் கதை மனதிற்குள் புதைந்து கொண்டு இளக்கமாய் நெருடும்.