Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naalaikku Nandhini
Naalaikku Nandhini
Naalaikku Nandhini
Ebook89 pages28 minutes

Naalaikku Nandhini

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateFeb 1, 2018
ISBN9781043466381
Naalaikku Nandhini

Read more from Devibala

Related to Naalaikku Nandhini

Related ebooks

Related categories

Reviews for Naalaikku Nandhini

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naalaikku Nandhini - Devibala

    18

    1

    பாத்ரூமிலிருந்து ஈரம் சொட்டச் சொட்ட உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் நந்தினி வெளிப்பட்டபோது அலறிவிட்டான் அர்ஜுன்!

    சீதா! இங்கே வா? சீக்கிரம் வந்து பாரு?

    என்னங்க ஆச்சு?

    வாயேன் சீதா! இங்க நடக்கற கூத்தைப்பாரு!

    கூச்சலிட்டான்.

    சமையல் கட்டில் ரசத்துக்குப் புளி கரைத்துக் கொண்டிருந்தாள் சீதா.

    போட்டது போட்டபடி பதற்றத்துடன் ஓடி வந்தாள். கவலையோடு உள்ளே நுழைந்தவள், ‘பக்’கென சிரித்து விட்டாள்.

    நான் வந்து குளிப்பாட்டி விடமாட்டேனா? குழம்புக்கு அரைச்சுக்கிட்டு இருக்கற நேரத்துல, இதுவா பாத்ரூமுக்குள்ள நுழைஞ்சு பெரிய மனுஷிமாதிரி, தானே தண்ணியை எடுத்துத் தலைல கொட்டிக்கிட்டா, யார் தப்புங்க அது? என்மேல பாயத்தெரியுது உங்களுக்கு அஞ்சுவயசாகியும் விரல் சப்பற உங்க மகளை கண்டிக்கத் தெரியலை அதெல்லாம் உங்க கண்ணுல படாது!

    அர்ஜுன் சிரித்தாள்.

    குழந்தை நந்தினியை இழுத்து அணைத்து முத்தமிட்டான். தலையை நன்றாகத் துவட்டி டவலை இடுப்பில் கட்டி விட்டான்.

    டாடி... டாடீ!

    என்னடா செல்லம்?

    நாளைக்கு கூல்ல பேரன்ட்த்டே!

    இதை நீ ஏற்கனவே சொல்லிட்டியே ராஜாத்தி!

    நான்... திவாஜியா நடிக்கப் போறேன்!

    திவாஜி இல்லைம்மா! சிவாஜி!

    அவளுக்கு சி.ச... எல்லாம் வராது. நல்ல பொண்ணு நமக்கு

    பாருங்க டாடி!

    குழந்தையை கேலி செஞ்சா, கெட்ட கோவம் வரும் எனக்கு! போ உள்ளே! நீ சொல்லுடா தங்கம்!

    சீதா முகவாயில் இடித்துக்கொண்டு உள்ளே போனாள்.

    நான் நடித்துக்காட்டட்டுமா டாடி?

    சரி

    கையில வாள் வத்துக்கணும் டாடி!

    இந்தா! முருங்கைக்காய்தான் இப்ப வாள் பிடி!

    பிரிட்ஜிலிருந்து முருங்கைக் காயை எடுத்துக் கொடுத்தான்.

    சீதா சிரித்தாள்.

    ஷ் சிரிக்காதே! குழந்தை சென்சிட்டிவ்! டென்ஷனாகப் போகுது! நீ பேசுடா கண்ணு

    நடுக்கூடத்தில் வந்து நின்றது.

    விழிகளை ஒரு முறை சுழற்றியது!

    ஜெய் பவானி! என்று ஆவேசமாகத் தொடங்கியது. பள்ளிக் கூடத்தில் கற்பித்திருந்த வசனத்தை அழகாக ஒப்பித்தது. முடித்தது.

    அர்ஜுன் படபடவெனக் கை தட்டினான்.

    சீதா பெருமிதமாக நின்றுகொண்டிருந்தாள்.

    அர்ஜுன் வாரி இழுத்து மாறி மாறி முத்தமிட்டான்.

    போ டாடி மீதை குத்துது!

    கடவுளே, இவளும், இவதமிழும்!

    இருவரும் சிரித்தார்கள்.

    குழந்தை உள்ளே ஓடிவிட்டது.

    அர்ஜுன்- சீதாவுக்குக் கல்யாணம் முடிந்து ஏழு வருடங்கள் கழித்துப் பிறந்தவள் நந்தினி!

    குழந்தை பிறக்கவில்லையே என்று அவர்கள் போகாத கோயில் இல்லை. பார்க்காத டாக்டர் இல்லை!

    சலித்துப் போய் இனி நமக்குக் குழந்தை இல்லை என்ற முடிவுக்கு அவர்கள் வந்தபோது, நந்தினி வயிற்றில் வந்து விட்டாள்.

    பிறந்தது முதல் நந்தினியைத் தரையில் விடவில்லை!

    சீதாவை விட அர்ஜுனுக்கு உயிர். அதன் மேல் தூசு பட்டால் கூட தாங்கமாட்டான். துடித்துப் போய் விடுவான்.

    ‘யாருக்கும் பொறக்காத குழந்தை இவனுக்குப் பொறந்திருக்கு பாரு!’

    கடுமையான விமர்சனத்தைப் பொருட்படுத்தமாட்டான்.

    சீதா நாளைக்குக் குழந்தையோட ‘ஸ்கூல் டேக்கு’ லீவு போட்ரு! நானும் போட்டுர்றேன்!

    சரிங்க

    குழந்தையை விட அர்ஜுன்தான் அதிக டென்ஷனில் இருந்தான்.

    2

    பள்ளிக் கூடத்தில் அடிட்டோரியத்தில் பிரமாதமான அலங்காரத்துடன் மேடை தயாராக இருந்தது.

    குழந்தைகள், பெற்றவர்கள், விருந்தாளிகள் என கணமான கூட்டம்.

    அந்தப்பிரதேசத்தில் அதுதான் பிரபலமான பள்ளிக்கூடம். எதையும் ஒரு திருவிழா போல நடத்தி, படிக்கும் பிள்ளைகளை உற்சாகப்படுத்தும் அந்தப் பள்ளிக்கூடத்தை மிஞ்ச வட்டாரத்தில் ஒரு பள்ளி இல்லை!

    இடது ஓரமாக உயரமேடை... மேடையில் நாற்காலிகள்... ஒலி பெருக்கி!

    பள்ளி முதல்வர் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்.

    குழந்தைகள் உள்ளே மேக்கப்பில் இருந்தன.

    பெற்றோர்கள் வந்து உட்கார்ந்து விட்டார்கள்.

    யாருங்க சீஃப் கெஸ்ட்? சீதா கேட்டாள்.

    சொக்கலிங்கமா இருக்கணும்! அவர்தான் இந்தப்பள்ளிக்கூடம் உருவாகக் காரணமானவர் இந்த ஊருக்கும் பெரிய மனுஷர் அவர்தானே?

    யாரது?

    நீயும் நானும் இந்த ஊருக்கு வந்தே ரெண்டு வருஷம்தானே ஆகுது? நான் ஒரு தடவைதான் சொக்கலிங்கத்தைப் பார்த்திருக்கேன்! எங்க ஆபீஸ்ல ஒரு கல்சுரல் ஃபங்ஷனுக்காகத் தலைமைதாங்க அழைச்சப்ப பார்த்தேன்

    திடீரென ஒரு சலசலப்பு ஏற்பட்டது.

    ஃபோர்ட் அய்கான் கார் வெள்ளி நிறத்தில் சூரியனைத்

    Enjoying the preview?
    Page 1 of 1