Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaattrum Kathitavanum
Kaattrum Kathitavanum
Kaattrum Kathitavanum
Ebook119 pages1 hour

Kaattrum Kathitavanum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"கடவுளுடைய வார்த்தை நம் கால்களுக்கு தீபமும், பாதைக்கு வெளிச்சமும்" என்கிறது வேதம். நம்முடைய நடைமுறை வாழ்வில் கடவுளுடைய வார்த்தையை செயல்படுத்தும்போது இருளான வாழ்வும் வெளிச்சத்தைக் காண்கிறது, என்பதை இந்த குட்டி சிறுகதையின் மூலம் அறிகிறோம். இதிலுள்ள மற்ற சிறுகதைகளையும் அறிந்து பிரகாசிப்போம் வாருங்கள்.

Languageதமிழ்
Release dateJun 5, 2023
ISBN6580109909890
Kaattrum Kathitavanum

Read more from Kanchana Jeyathilagar

Related to Kaattrum Kathitavanum

Related ebooks

Reviews for Kaattrum Kathitavanum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaattrum Kathitavanum - Kanchana Jeyathilagar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    காற்றும் கதிரவனும்

    (சிறுகதைகள்)

    Kaattrum Kathitavanum

    (Sirukathaigal)

    Author:

    காஞ்சனா ஜெயதிலகர்

    Kanchana Jeyathilagar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kanchana-jeyathilagar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. தேடலும்... திருப்தியும்...

    2. திறமையிலும் தாழ்மை

    3. வேண்டியதை வேண்டு!

    4. எறும்பு புத்தி

    5. நல்ல ஆரம்பம்

    6. சறுக்கல் சுலபம்!

    7. பயமில்லாமல் நடைபோடு

    8. விளையச் செய்பவர்...!

    9. குண அழகி!

    10. ஒவ்வொரு கதவிற்கும் பின்னால்...

    11. ஒவ்வொன்றிற்கும் ஒரு காலம்

    12. தேடல்கள்

    13. தைரியம் பழகு

    14. உறவுகள் வளர்ப்போம்

    15. காற்றும் கதிரவனும்!

    16. பட்டத்தின் பின்னே...

    17. குயிலம்மா

    18. காத்திருப்பதும் ஒரு கலை!

    19. மேகத்தினூடே சூரியன்

    20. அவர் நினைவுகள் அவர் வழிகள்...

    21. ஞானமுள்ளவை நாலும்... நாமும்!

    22. பயண பாடம்

    23. பரம வைத்தியர்

    24. பவுசுக்காய் நன்றி!

    25. காயல்ல... கனி!

    1. தேடலும்... திருப்தியும்...

    அடடே... இதை முப்பத்தஞ்சு வருஷத்துக்கு முன்னேயில்ல யோசிச்சிருக்க வேணும்?

    தனக்குள்ளாக முணங்கினார் அப்பெரியவர்.

    அவர் நாற்காலியைச் சுற்றி செய்தித்தாளும், புத்தகங்களுமாய் இறைந்து கிடந்தன. அத்தனையையும் வாசித்து விடுவார் போக, இப்படி அவர் வாய்விட்டு முணங்கும் நேரங்களில் போய் விசாரித்தால் சுவாரஸ்யமான தகவல்களும் கிடைக்கும்.

    பேரன் விஜய்யும் போய் நின்று கேட்டான்.

    என்ன தாத்தா?

    பழங்கால நினைவுகளில் மூழ்கியிருந்தவர் மீண்டார்.

    ம்... ம்... நான் இளைஞனாயிருந்த காலத்துல ‘டேவிட் மக்ளீன்’னு ஒரு சினிமா நடிகன் உண்டு. அமெரிக்க Cowboy படங்கள் நடிச்சவர். அந்த ஆளிடம் ஒரு முரட்டுத்தனமான கவர்ச்சி இருக்கும். ஆக ‘மால்பரோ’ சிகரெட் விளம்பரங்களுக்கு போஸ் கொடுத்தார்...

    அதாவது சிகரெட் மாடல்?

    ஆமா, சமீபத்துல தனது 73வது வயசிலே நுரையீரல் புற்றுநோய் கண்டு இறந்துட்டாராம்.

    சிகரெட் புகைத்ததாலதான் அங்கே புற்றுநோய் வந்திருக்குமில்லையா தாத்தா?

    நிச்சயமாய். தன் மாடலிங் பணிக்காய் மக்ளீன் ஒரு நாளைக்கு 5 பெட்டி சிகரெட்டுகளைக் கூட புகைச்சுத் தள்ளினாராம்.

    ஐயோ... பிறகு அதுவே பழக்கமாயிருக்கும் கூட!

    "1964க்குப் பிறகுதான் ‘புகைப்பது உடல் நலனுக்குத் தீங்கு விளைவிப்பது’ன்னு சிகரெட் பெட்டிகளில் அச்சிட சட்டம் உத்தரவிட்டது. ‘என் கணவர் அதற்கும் முன்பே இத்தொழிலில் ஈடுபட்டு தன் உடல்நலனைக் கெடுத்துக்கொண்டார்’ன்னு இப்போ அவரோட மனைவி லிவோ மக்ளீன் சிகரெட் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறாராம்."

    உங்க விளம்பரங்களுக்காய் அளவின்றி புகைத்து இவருக்கு நோய் வந்ததுன்னா?

    ம்... ம்... புகழ், பணத்திற்காய்ச் செய்த காரியம் மக்ளீனை அழிச்சட்டது. தவறான விஷயங்கள் மீது நாம் ஆசை கொண்டால் அழிவுதான்.

    ஆசைப்படுவதே தப்பா தாத்தா?

    மனுஷனுக்கு பசிபோல, ஆசையும் இயல்பானதுதான். பசி கிள்கிறபோது ருசியான சாப்பாடு கிடைக்காட்டாலும் கிடைச்சதைக் கொண்டு நாம வயிற்றை நிரப்பறதில்லையா?

    பர்மாவிலேயிருந்து அகதிகளால் இந்தியாவிற்கு நடந்தே வந்த உங்க நண்பர்கள் உணவில்லாம, புல்லை, இலைகளைச் சாப்பிட்டு உயிர் பிழைச்சதாய் சொல்லியிருக்கீங்களே!

    ஆமா! அதுபோல ஆத்ம பசிக்கும் மனுஷன் தவிச்சு தேடுறான். அது கிடைக்காதபோது உலகப் பிரகாரமானவைகளில் திருப்தி தேடுறான்.

    கடவுளை அறிஞ்சு, அவர் அன்பில் திருப்தி அடைஞ்சவங்க, தவறான அழிவு வழியிலே போகமாட்டாங்க இல்லையா?

    ஆனா அவங்களுக்கு இயேசுவின் அன்பைப் பற்றி அறிஞ்சவங்க எடுத்துச் சொல்லாட்டா, அவங்களுடைய தேடல் முடியாதே... அவர்தானே நம்முடைய ஜீவ அப்பம்?

    அவரில்லாமல் போனா, நாமும் அளவுக்கு மீறிய பணம், தவறான புகழ்னு உலக உணவை உண்டு அழிவோம். நானும் இனி ஆண்டவரின் அன்பு பற்றி அதை அறியாதவங்களுக்கு சொல்லுவேன் தாத்தா…

    நல்லதுடா. நாமும் அனுதின வேத வாசிப்பு, ஜெயம், பிறருக்கு உதவற வாழ்வுன்னு அவரில் ஆரோக்கியமாய் வளரணும்.

    சரி தாத்தா... புரிந்து ஆமோதித்தான் பேரன்.

    அழிந்து போகிற போஜனத்திற்காக அல்ல, நித்திய ஜீவன் வரைக்கும் நிலைதிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள் (யோவான் 6:27)

    2. திறமையிலும் தாழ்மை

    பள்ளி மணி ஒலிக்க, நான் எப்போதும் போல கிளம்பினேன்.

    சார், சார்... மறந்திட்டீங்களா! இன்னைக்கு நம் நாடக ஒத்திகை ஆரம்பமாகுதே?

    எட்டாம் வகுப்பின் சில மாணவர்கள் என்னைச் சூழ்ந்து கொள்ள, வேறு பல மாணவர்களும் ஆவலாய் என் முகம் பாத்தனர்.

    ம்ம்... வரேன். நீங்க சிகாமணி சார்கிட்டே முதல்ல போங்க... சிடுசிடுத்தேன்.

    இந்த வருஷம் நீங்களும் நாடக தயாரிப்பிலே உதவுவீங்க இல்லையா சார்?

    போங்கடா? பிரியத்துடன் பற்றிய சின்ன கைகளை உதறிவிட்டு ஓய்வறைக்குள் அடைந்துகொண்டேன்.

    முழுக் கச்சேரி செய்யும் வலுவுள்ள வித்வானை ஜால்ரா தட்டச் சொல்லுவதா?

    கல்லூரி விழா நாடகங்களில், போட்டிகளில் நடிப்பு, இயக்கம், வசனம், இசை என்று சக்ரவர்த்தியாக, சர்வாதிகாரியாக கோலாச்சிய நான் இந்த சிகாமணி கிழத்திற்கு தைக்தடியாவதா? என் மனது முழுக்க குமுறல்.

    சென்ற வாரம் என்னை அழைத்த தலைமையாசிரியர்-

    விக்டர், இன்னும் ஒரு மாசத்திலே நம் பள்ளியின் பெற்றோர் தினவிழா. எட்டு, ஒன்பதாவது படிக்கும் மாணவர்களைக் கொண்டு நல்லதாய் ஒரு நாடகம் மேடையேற்றிடுங்க. இதுவரை சிகாமணி சார்தான் நாடகத் தயாரிப்பிலே முழுப் பொறுப்பும். புதுசா சேர்ந்திருக்கும் நீங்களும் இனி அவருடன் ஒத்துழைச்சு உதவியாய் நிற்கணும் என்று சொல்ல என் மனது நொறுங்கிப் போனது.

    படிக்கும் காலத்தில் நான்தான் மேடைகளில் ஹீரோ. தவிர கதை, வசனம், இயக்கம் என்ற அஷ்டாவதானியும் கூட.

    டேய் விக்டர், இந்த வசனம் எப்படிரா சொல்றது?

    அவன் பேசும்போது என் ரியாக்‌ஷன் என்ன?

    "நான் எந்த தோரணையில் நடந்து மேடைக்குள்

    Enjoying the preview?
    Page 1 of 1