Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Virpanaikkalla
Virpanaikkalla
Virpanaikkalla
Ebook66 pages41 minutes

Virpanaikkalla

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By Rajendrakumar
Languageதமிழ்
Release dateMay 7, 2019
ISBN9781043466497
Virpanaikkalla

Read more from Rajendrakumar

Related to Virpanaikkalla

Related ebooks

Related categories

Reviews for Virpanaikkalla

Rating: 5 out of 5 stars
5/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    G o o o d s t o r y

Book preview

Virpanaikkalla - Rajendrakumar

10

1

"கணேஷ், ஆர்வமாக அவன் கையைப் பற்றிக் கொண்டாள் சரோஜா. ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்ததுக்கு சந்தோஷம், உனக்கு?"

ரொம்பவும் சந்தோஷம். ஒரு விஷயம்தான் எனக்குப் புரியவேயில்லே!"

‘கடற்கரை கண்ணகி வீட்டுக்குப் போ’ என்று சுட்டிக் காட்டினாள். சிமெண்ட் பெஞ்ச் சாய்மானத்தின் மேல் குந்தினாற் போல அமர்ந்தவள் கேட்டாள்: எது? புரியல்லே?

என்னை நேரில பார்க்காம அதெப்படி உங்கம்மா இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சாங்க?

என் மேல அவ்வளவு நம்பிக்கை. அப்பா இருந்திருந்தா கேட்டிருப்பாரோ, என்னமோ! வெளியே வராத அம்மா, வரனைத் தேடி நாலு இடம் அலையமுடியாத அம்மா- நானே தேடிக்கிட்டது, அவங்களுக்கு நிம்மதியாயிருச்சு போலிருக்கு. உடனடியா கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டாங்க. யூநோ, வர்ற வெள்ளிக்கிழமை கோயில்ல கல்யாணம்!

திருநீர்மலை?

இல்லே

வடபழனி?

தலையசைத்தாள். நோ

திருப்பதியா? என்றவன் அவசரமாக தலைமுடியை அழுத்திக் கொள்ளவே, சிரித்து விட்டாள்.

எனக்கே சரியா தெரியல்லே. நாளைக்கு சாயங்காலம் இதே இடத்திலே சந்திப்போம். அதுக்குள்ளே அம்மாவைக் கேட்டு வச்சுக்கறேன். ஓ.கே?

ஓ.கே.

பக்கத்தில் நின்ற மரத்துக்குப் பின்னாலிருந்து பக்கவாட்டில் வந்த ஆள் கை விரல் மரத்தில் தாளம் போட்டது.

சரி புறப்படலாமா? பஸ்சில போய்ச் சேர்றதுக்குள்ளே மணி எட்டு ஆயிடும். எட்டு ரொம்ப கெட்ட நம்பர். உன் ஸ்கூட்டர் கொண்டு வந்தாலாவது லிப்ட் கேட்டிருப்பேன்

சர்வீஸுக்குக் கொடுத்திருக்கேன். நாளை மறு நாள் தான் வரும். அவன் என்னம்மா நாளுக்கொரு பார்ட் இல்ல கேட்கறான்? பஸ்சிலே போகிறதில பிரச்சனையில்லேயே

நோ, நோ! ஆனா, அடையாறிலே இறங்கி இருட்டில நடக்கணும். அதுதான் கொஞ்சம் பயம். பேசறேனேயொழிய எனக்குப் பயம் ரொம்பவும் ஜாஸ்தி!

சரி. பஸ் வர்றதுக்கு முந்தி ஒண்ணு கொடேன்

உதையா?

ச்சீய்! முத்தம். இங்கேதான் யாருமில்லையே?

நான் தரமாட்டேம்பா!

ஏன்?

இது ஒரு விஷயத்திலெ மட்டும் நாங்க கொடுக்கறதை விட வாங்கறதிலே தான் எங்களுக்கு சந்தோஷம் ஜாஸ்தி

சட்டென்று உதட்டை ஒற்றி எடுக்கும் போது-

திரும்பிய கார் ஒன்றின் வெளிச்சம் அவர்களை பளிச்சென்று காட்டியதும் -

காரின் உள்ளே ஸ்டியரிங்கை மெலிதாக பற்றியிருந்த கைகள் உறுதியாக பற்றிக் கொண்டன. கார் சரேலெனப் பாய்ந்து மறைந்தது.

மறு நாள் –

கணேஷ் காத்திருந்தான்.

மணி ஆறேகால் ஆகி, பின் ஏழடித்தது.

காத்திருந்தான்.

எட்டு அடித்தபோது நிமிர்ந்தான். எட்டு ரொம்பவும் கெட்ட நம்பர் என்றாள், அந்த சரோஜா மனதிற்குள்ளாக.

இனிமேலும் காத்திருப்பதில் பயனில்லை என்று நிமிர்ந்தான்.

கிளம்பினான். பீச் ரோடு வழியாகவே நடந்தான்.

அவள் வரவில்லை. வராமலிருக்க மாட்டாளே? இன்றைக்குத்தான் கல்யாணம். எந்தக் கோயிலில் என்று சொல்ல விரும்பினாளே! அதெப்படி வராமல் போவாள்?

சே! வரவில்லை என்றால் உடனே தப்பாகத்தான் நினைக்கணுமா? உடம்பு சரியில்லாமல் போயிருக்கலாம். அம்மாவுக்கு ஏதாவது –

சே, சே! அப்படியெல்லாம் நினைக்காதே! மறுநாள் வியாழக்கிழமை. கிராமத்திலிருக்கும் அப்பா அம்மாவைத் தகவல் சொல்லி வரவேற்கணும். நண்பர்களுக்குச் சொல்லணும். ரிஜிஸ்ட்ராருக்கு தகவல் சொல்லணும்.

சம்பிரதாய சடங்கோட நடந்தாலும் பதிவு செய்ய வேணும் என்கிறது சட்டம்.

இதென்ன இந்தப் பெண்

Enjoying the preview?
Page 1 of 1