Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aalayamagum Mangai Manathu
Aalayamagum Mangai Manathu
Aalayamagum Mangai Manathu
Ebook116 pages40 minutes

Aalayamagum Mangai Manathu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஓர் அழகான மங்கையின் வாழ்வில் அணுஅணுவாய் ரசித்து வாழ வேண்டிய நிமிடங்களை தொலைத்து, அணுஅணுவாய் அவள் கஷ்டங்களை அனுபவிக்கிறாள். கடமை, கன்னியம், கட்டுப்பாடு, யாரையும் புண்படுத்தாத மனம், என்று நகரும் அவள் வாழ்வில், எதையும் அனுபவிக்காமல் முற்றும் துறந்தவளாய் வாழ்வில் போராட்டங்களையும், இடர்பாடுகளையும் மட்டுமே அணுபவித்து, தன்னை இழந்து கனவில் கூட அவற்றை நினைக்க கூடாதவளாய், தன்னை மட்டுமே நம்பி இருக்கும் மூன்று உயிர்களுக்காக உயிர் வாழும் ஓர் உயிரை பற்றினதே ஆலயமாகும் மங்கை மனது.

Languageதமிழ்
Release dateApr 14, 2021
ISBN6580140606464
Aalayamagum Mangai Manathu

Read more from R. Manimala

Related to Aalayamagum Mangai Manathu

Related ebooks

Reviews for Aalayamagum Mangai Manathu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aalayamagum Mangai Manathu - R. Manimala

    https://www.pustaka.co.in

    ஆலயமாகும் மங்கை மனது!

    Aalayamagum Mangai Manathu!

    Author:

    ஆர். மணிமாலா

    R. Manimala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-manimala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    ‘நானா? நேற்றா? அழுதேனா? நோ... சான்ஸ்!’ என்று கதிரவனை துணைக்கழைத்து அழிச்சாட்டியமாய் சத்தியம் செய்தன... வெண்ணிற மேகங்கள்!

    ‘வான் மேகம்…

    பூப்பூவாய் தூவும்...’

    எப்.எம். ரேடியோவிலிருந்து, யார் வீட்டிலிருந்தோ கசிந்து வந்த பாடலுக்கு, மெல்ல தலையாட்டி ரசித்தபடி, நேற்றுக் கொடுத்த டயலாக் பேப்பரை ஏற்ற இறக்கத்துடன் படித்து உள்வாங்கிக் கொண்டிருந்தாள்... கனிகா என்கிற கன்னிகா பரமேஸ்வரி.

    சிவந்த நிறம், கச்சிதமான உடற்கட்டு, மான் விழி, குடைபிடித்த இமைகள், நேர்த்தியாய் செதுக்கப்பட்ட உதடு, வியந்து சிரிக்கும் போது சற்றே உயர்ந்து இன்னும் வளையும் புருவங்கள், அவள் என்ன பேசினாலும் சிரித்தாலும் கோபப்பட்டாலும் ரசித்துக் கொண்டே இருக்கச் சொல்லும் வசீகரிக்கும் முகம். அருமையான குரல்வளம். அவள் எங்கும் யாரிடமும் பயிற்சி எடுத்துக் கொண்டதில்லை. ஆனால், அவ்வளவு அருமையாய் பாடுவாள். படித்தது பிளஸ்டூ. சினிமா படங்கள், டி.வி. சீரியல்களுக்கு டப்பிங் பேசுவாள். கச்சேரிகளில் பாடுவாள். இந்த குரூப்தான் என்றில்லை. ப்ரீலான்சர் ரிப்போர்ட்டர் மாதிரி, நான்கைந்து குரூப்களில் பாடுவாள். பெருமழையாய் கொட்டவில்லை என்றாலும் தூறலாய் வருமானம் வந்தது.

    அக்கா...

    உள்ளே நுழைந்த தாரிணி விஸ்காம் கடைசி வருடம் படிப்பவள். வயதுக்கு மீறிய வளர்ச்சியோடு, அழகாய், கனிகாவுக்கு அக்கா போலிருந்தாள்.

    'என்ன?' என்பதுப் போல் கையசைத்துக் கேட்டாள்.

    ''இந்த டிரஸ்ஸுக்கு மேட்ச்சாய் ஹேர் க்ளிப்...''

    எடுத்துக்க! என்று கூறிவிட்டு மறுபடி டயலாக் பேப்பரில் மூழ்கிப் போனாள்.

    "கனிம்மா...'' கீழேயிருந்து அம்மா சித்ரா அழைத்தாள்.

    என்னம்மா?

    சாப்பிட வா!

    "ப்ளீஸ்ம்மா... மேலேயே குடுத்துவிடேன்...''

    சரி...

    காற்றில், எண்ணெயில் பெருத்து குதித்து நடனமாடிய பூரியின் வாசம்!

    கனிகாவுக்கு பிடித்தமான உணவு! எல்லாரையும் போல் பூரிக்கு மசாலா வைத்து சாப்பிட பிடிக்காது. தேங்காய்ச் சட்னி வேண்டும். அதுவும் கெட்டியாக! சித்ரா பல விஷயங்களில் அம்மாஞ்சியாக இருந்தாலும் சமையலில் கெட்டியாகத்தான் இருந்தாள்.

    சின்ன வீடுதான்.

    கீழே ஹால், கிச்சன், பாத்ரூம், பெட்ரூம். மாடியில் இரண்டு பெட்ரூம். ஆறாயிரம் வாடகை.

    கீழ் அறையில் சித்ராவும், தாரிணியும் பயன்படுத்திக் கொள்ள, மாடி அறையில் ஒன்றில் கனிகாவும், மற்றொன்றில் ஷியாமும் இருந்தனர். ஒரு வருடமாய் ஷியாமின் அறை காலியாகத்தான் இருக்கிறது. இங்கில்லை. மதுரையில்தான் படிப்பேன் என்று அடம்பிடித்து அங்குள்ள பாலிடெக்னிக்கில் படிக்கிறான். இதில் யாருக்கும் உடன்பாடில்லை என்றாலும் அவன் பிடிவாதத்தின் முன் பணிந்தாக வேண்டி இருந்தது.

    அக்கா... கிளம்பறேன்... டயமாய்டுச்சு! இறுக்கி பிடித்த சல்வாருடன், பொங்கும் இளமையுடன் வந்து நின்றாள் தாரிணி.

    ம்... போய் வா!

    செமஸ்டர் வருதுக்கா!

    பீஸ் கட்டணுமா?

    "ம்...''

    ரெண்டு நாள்ல தர்றேன்!

    தேங்க்ஸ்க்கா!

    ஒரு ஹெல்ப் பண்ணு தாரிணி. அம்மா டிபன் தருவாங்க... இங்கே எடுத்துட்டு வாயேன் ப்ளீஸ்

    "இதுக்கு ஏன் ப்ளீஸ்? எடுத்துட்டு வர்றேன்!''

    சற்று நேரத்தில்... சித்ரா டிபன் தட்டும், தண்ணீர் டம்ளருமாய் வந்தாள். முகத்தில் களைப்பு! சரிவர உறங்காத கண்கள். நெற்றியில் சிலும்பிய முடிகள். அதில் சில நரைகள்.

    நீ ஏம்மா எடுத்துட்டு வந்தே? தாரிணிக்கிட்டே குடுத்து விட்டிருக்கலாமே!

    எடுத்துட்டுப் போறேன்னு கேட்டா. நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்னு... தட்டை முக்காலி மீது வைத்தாள். பேப்பரை ஓரமாய் வைத்து... பறந்து விடாதிருக்க பாடி ஸ்பிரே பாட்டிலை வைத்து விட்டு சேரில் அமர்ந்தாள் கனிகா.

    சித்ராவும் சிங்கிள் சோபாவில் அமர்ந்துக் கொண்டாள்.

    என்னம்மா.... சொல்லு?! பூரியை ஆள்காட்டி விரலால் அழுத்தினாள்.

    ஆவியும், வாசமும் வெளியேற... புஸ்ஸென்று அமுங்கிய அழகை ரசித்தபடி பிய்த்து சாப்பிட்டாள்.

    சூப்பர்... வெரி டேஸ்ட்டி!

    இன்னும் ரெண்டு சுட்டு எடுத்து வரவா?

    ''இந்த நாலு பூரியில மூணுதான் சாப்பிடப் போறேன். சொல்லும்மா... என்ன பேசணும்?"

    ''இன்னைக்கு தங்கம் விலையப் பார்த்தியா?"

    ............?!

    டிவியில டெய்லி... ஏலம் போடற மாதிரி விலைய ஏத்தி ஏத்திச் சொல்ல சொல்ல... பி.பி. ஏறுது கனிம்மா! என்னன்னு சேர்த்து, எத்தனைன்னு வாங்கி அவளை கரையேத்தறது?

    அம்மாவின் கவலை தாரிணியைப் பற்றியதாய் இருக்க... கனிகாவின் மனசும் பூரியைப் போன்று புஸ்ஸானது.

    நீ மட்டுமே கவலைப்பட்டு என்ன ஆகப் போகுது? உன் புருஷனும் கவலைப்படணுமில்லையா?

    சித்ராவின் முகம் சடுதியில் கவலையில் கறுத்துப் போனது.

    கனிம்மா... என்னப் பேசறே நீ?

    அந்தக் குரலில் தெரிந்த நடுக்கம் அவளை இளக வைத்தது.

    சும்மா சொன்னேன்ம்மா... அதை விடு! விலைவாசிக்கேத்த மாதிரி குறைச்சுக்க வேண்டியதுதான். தாரிணியை கல்யாணம் பண்ணிக்க யாருக்கு கசக்கும்?

    திமுதிமுன்னு வளர்ந்து நிக்கறதைப் பார்க்கறப்ப பயமாயிருக்கு கனி. என்னை மாதிரி அவளும்...

    அம்மா ப்ளீஸ்! எனக்கு முக்கியமான டப்பிங் இருக்கு. டென்ஷனாக்கி அனுப்பிடாதே! கண்டித்தாள்.

    இல்லே... பேசலே... கேஸ் வரும்... பணம் வேணும்.

    Enjoying the preview?
    Page 1 of 1