Manasukkul Mazhai
By Maheshwaran
()
About this ebook
தமிழ்நாட்டின் முன்னனி எழுத்தார்களுல் என்னையும் ஒருவனாய் கொண்டாடும் வாசக உள்ளங்களுக்கு பனிவான வணக்கம். உங்கள் இதயத்தில் எனக்கென ஒரு இடத்தை தந்திருக்கும் அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன். நன்றி.
இந்த இடத்தைத்தொட நான் பட்ட சிரமங்கள் கொஞ்சமல்ல. என் பதினேழு வயதில் எழுத்து பயணம் தொடங்கியது. தற்போது 45 வயதாகிறது. இந்த இருபத்தியெட்டு வருடங்களில் 500க்கும் மேற்ப்பட்ட சிறுகதைகள் மற்றும் 400 நாவல்கள் வரை எழுதிவிட்டேன்.
குமுதம் வைரமோதிரம் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, குமுதம் லட்ச ரூபாய் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, தேவி வார இதழ் நாவல் போட்டியில் முதல் பரிசு, கண்மணி நாவல் போட்டியில் பரிசு, இலக்கிய சிந்தனை விருது, விகடன், கல்கி இதழ்களில் பரிசு என ஏராளமானப் பரிசுகளை வாங்கியிருக்கிறேன். அனைத்து இதழ்களிலும் எனது படைப்புகள் வெளியாகிருக்கிறது.
வாசிப்பதன் மூலம் மனம் ஒரு நிலைப்படுகிறது. வாசிக்கிறபோது தங்கள் கவலைகளை மறந்து வேறொரு உலகத்திற்க்கு செல்கிறார்கள். எனது நாவல்களை வாசிக்கிறபோது விறுவிறுப்பான திரைப்படத்தைப் பார்ப்பது போல காட்சிகள் கண்களுக்குள் விரியும். முடிக்கும் வரை கீழே வைக்க மாட்டார்கள். காதல் ஆகட்டும், குடும்பம் ஆகட்டும், அமானுஷ்யம் ஆகட்டும், வாசிக்கும் கண்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடக்கூடாது. தரமான படைப்புகளை படைப்பதே எனது நோக்கம். வாழ்த்துங்கள், வளர்கிறேன்!! உங்கள் விமர்சனங்கள் என்னை மேலும் வலுவூட்டும்.
மிக்க அன்புடன்
மகேஷ்வரன்
Read more from Maheshwaran
Varuvean Naan Rating: 5 out of 5 stars5/5Karuppu Kuthirai Rating: 0 out of 5 stars0 ratingsManal Sirpangal Rating: 0 out of 5 stars0 ratingsTick.. Tick.. Thik. Rating: 4 out of 5 stars4/5Pachaikili Rating: 0 out of 5 stars0 ratingsKuyil Thoppu Marmam Rating: 5 out of 5 stars5/5Aayiram Kodi Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsLinga Pura Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsMullil Vizhuntha Kili Rating: 0 out of 5 stars0 ratingsRaja Nagam Rating: 0 out of 5 stars0 ratingsThappithu Vidu... Kanmani! Rating: 0 out of 5 stars0 ratingsUn Madiyil Naanuranga Rating: 0 out of 5 stars0 ratingsIravum Pagalum Un Uruvam Rating: 0 out of 5 stars0 ratingsThik Thik Thilothi Rating: 0 out of 5 stars0 ratingsMayanginean Solla Thayanginean Rating: 0 out of 5 stars0 ratingsNilavukku Kobam Varum! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Vennila Rating: 0 out of 5 stars0 ratingsMayanguthu Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsUn Manasula Naan Irukkena? Rating: 0 out of 5 stars0 ratingsUyirai Pirikka Mudiyuma? Rating: 0 out of 5 stars0 ratingsMarakka Mudiyavillai...! - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsIdhayathil Vizhuntha Thirumana Maalai! Rating: 0 out of 5 stars0 ratingsIdhayathai Koduthu Vidu Rating: 0 out of 5 stars0 ratingsVirkapadatha Rojakkal Rating: 0 out of 5 stars0 ratingsPovom Ini Kaadhal Desam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Oviyam Kaiyil Serumo! Rating: 0 out of 5 stars0 ratingsPoo Maalaiye Thol Serava? Rating: 0 out of 5 stars0 ratingsElla Muthangalum Enakke! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Kiliye Kobama? Rating: 0 out of 5 stars0 ratingsKanavugal Aayiram Rating: 0 out of 5 stars0 ratings
Related to Manasukkul Mazhai
Related ebooks
Kavithai Arangerum Neram Rating: 0 out of 5 stars0 ratingsPunnagai Pothum Rating: 5 out of 5 stars5/5Lakshmi Rajarathnathin Kurunovelgal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Solla Vaaraayo Rating: 0 out of 5 stars0 ratingsNilavey Mugam Kattu Rating: 5 out of 5 stars5/5Arunaa Nandhiniyin Short Stories Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Vaaniley Rating: 5 out of 5 stars5/5Sooriyakanthi Pookkal Rating: 5 out of 5 stars5/5Oru Coffee Kudikalama? Rating: 4 out of 5 stars4/5Kannethiril Thondrum Kanavu! Rating: 0 out of 5 stars0 ratingsPavala Malli Rating: 0 out of 5 stars0 ratingsNerunji Mull Rating: 0 out of 5 stars0 ratingsநீயென்பது நானல்லவோ...? Rating: 0 out of 5 stars0 ratingsNeeyenbathu Naanallavo Rating: 5 out of 5 stars5/5Udaney Vaazha Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsOttrai Roja Rating: 5 out of 5 stars5/5தேவதையே... திருமகளே... Rating: 0 out of 5 stars0 ratingsNesa Kavithai Solladi Rating: 4 out of 5 stars4/5Thaniye Vida Matten Rating: 0 out of 5 stars0 ratingsKanintha Mana Deepangalai! Part - 2 Rating: 5 out of 5 stars5/5Seivinai Seyapattu Vinai Rating: 0 out of 5 stars0 ratingsPoo Maalaiyil Oru Malligai! Rating: 0 out of 5 stars0 ratingsநீ எங்கே... நான் அங்கே..! Rating: 0 out of 5 stars0 ratingsKanmaniye Kaadhalenbathu… Rating: 0 out of 5 stars0 ratingsDecember Punnagai Rating: 5 out of 5 stars5/5Ninaivellam Kokila Rating: 0 out of 5 stars0 ratings...Enavey, Ennodu Vaa! Rating: 5 out of 5 stars5/5Vaazhkkai Ennum Kavithai Rating: 0 out of 5 stars0 ratingsVeesum Thendral Naan Unakku Rating: 0 out of 5 stars0 ratingsNee Sooriyan, Naan Thamarai Rating: 5 out of 5 stars5/5
Reviews for Manasukkul Mazhai
0 ratings0 reviews
Book preview
Manasukkul Mazhai - Maheshwaran
http://www.pustaka.co.in
மனசுக்குள் மழை
Manasukkul Mazhai
Author:
மகேஷ்வரன்
Maheshwaran
For more books
http://pustaka.co.in/home/author/maheshwaran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அன்பான வாசகர்களுக்கு வணக்கம்!
மனசுக்குள் மழை நாவல் மூலமாய் நாவல் அரசு வாசகர்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. 17 வயதில் எழுத ஆரம்பித்தவன் நான். இப்போது 33 வயது ஆகிறது. இதுவரை 500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும் 70க்கும் மேற்பட்ட நாவல்களும், ஏராளமான கவிதைகளும் 5 தொடர்கதைகளும் எழுதியுள்ளேன். 'இலக்கியச் சிந்தனை' விருது உட்பட ஏராளமான பரிசுகளும் பெற்றுள்ளேன். தரமான படைப்புகளின் மூலம் வாசகர்களின் மனதில் நீங்காத இடம் பிடிக்க வேண்டும் என்பதே எனது லட்சியம். எனது தந்தை திரு.கணபதி அவர்களும்.
எனது தாயார் திருமதி.ஜி.விஜயலட்சுமி அவர்களும் எனது மனைவி திருமதி. இந்திரா அவர்களும் தான் நான் தொடர்ந்து எழுதுவதற்கும் சாதிப்பதற்கும் துணையாக இருக்கிறார்கள்.
எனது மகளுக்கு 3 வயது. பெயர்: மதுமிதாதேவி. எனது மகன் 1½ மாதக் குழந்தை. பெயர்: இராஜாசிவநந்தன். என் மகள் எப்போதும் காகிதத்தில் எதையாவது கிறுக்கி கொண்டேயிருக்கிறாள். 'அப்பா நானும் கதை எழுதட்டுமாப்பா?' என்கிறாள் மழலை மொழியில்.
மன ஆராக்கியத்திற்கு வாசிப்பு ரொம்ப முக்கியம். வாசிப்பு கூட தியானம் மாதிரிதான். தொலைக்காட்சிகளின் தாக்கத்தையும் மீறி வாசிப்பவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பது சந்தோஷமான விஷயம்.
மனசுக்குள் மழை
நாவல் விறுவிறுப்பான கதை. உங்கள் மனசுக்குள் மழை பொழிய வைக்கும் வித்தியாசமான படைப்பு. நான் ரசித்து எழுதிய படைப்பு. இக்கதையின் நாயகி ஓவியாவையும் நரேனையும் உங்களால் மறக்கவே முடியாது.
அவசியம் விமர்சனம் எழுதுங்கள்.
தொடர்ந்து சந்திப்போம்.
-மகேஷ்வரன்
1
மழை வேகம் பிடித்தது.
ஆரம்பத்தில் சின்னச்சின்ன துளிகளாக விழத்தொடங்கிய மழை. போகபோக சாட்டையடி மாதிரி கொட்ட ஆரம்பித்தது.
மழை அழகுதான்.
விடுமுறை நாட்களில் மழை கொட்டினால் சுகம் தான். ஜன்னல் கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு. சில்லென்ற 'சாரலை அனுபவிக்கலாம்தான்.
குடைபிடிக்காமல் மழையில் நனைந்து. குதிக்ககலாம்தான். சிறு குழந்தையாக விளையாடலாம்தான்..
ஆனால், ஓவியா இப்போது மழையை ரசிக்கிற மனநிலையில் இல்லை.
மழை எப்போது விடும்?
எரிச்சலும் கோபமுமாக வந்தது.
மழையின் குணமே தனிதான்
வேண்டும் போது பெய்யாது. வேண்டாத போது பெய்யும். விடாமல் அடித்துக் கொட்டும்..
சாலையெல்லாம் ஆறாய் ஓடும்.
இப்போதும் அப்படித்தான் ஓடியது.
இன்னும் கால் மணி நேரத்தில் ஓவியா தெருமுனையில் இருக்கும் பஸ் நிறுத்தத்தில் நிற்க வேண்டும். சரியாய் எட்டே முக்காலுக்கு அவள் போக வேண்டிய பஸ் வந்துவிடும். அதை விட்டால் அப்புறம் ஒன்பதரை மணிக்குத்தான் பஸ்.
ஒன்பதரை மணி பஸ்சில் போனால் ஆபிஸிற்கு போக பத்தரை ஆகிவிடும்.
ஒரு நிமிடம் தாமதமாகப் போனாலும் மானேஜரை சமாளிக்க முடியாது. 'ஏன் லேட்டு? இனிமே இது மாதிரி வராதீங்க?' சுள்ளென்று எரிந்து விழுவார். மானேஜரை ஓவியாவிற்கு பிடிக்காது. அவருக்கு பதில் சொல்வது போல வைத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காகவே பெரும்பாலும் தாமதத்தை தவிர்த்து விடுவாள்.
வீட்டில் குடை இருக்கிறது. ரெயின்கோட் இருக்கிறது.
எதையும் தொடமாட்டாள் ஓவியா குடையை மடக்கி ஹேண்ட் பேக்கில் வைத்துக் கொள்வது சிரமம். தண்ணீர் சொட்டும். மடியில் வைத்துக் கொண்டால் உடையை நனைத்து விடும். ரெயின்கோட்டை எடுத்துச் செல்ல இன்னொரு பை வேண்டும். கூட்ட நெரிசலில்.. பஸ்சில் எத்தனை பைகளைத் தூக்கி கொண்டு போக முடியும்?
வானத்திற்கு என்னாயிற்று?
அணையை உடைத்துக் கொண்டு சீறிப்பாயும் தண்ணீர் மாறி வானத்தை உடைத்துக்கொண்டு மழை கொட்டுகிறதே!
மழை விடுமா?
விடாதா?
கொட்டற மழையில குடையைத் தூக்கி வீசிட்டு.. உன்னோட கையை இறுக்கமாப் புடிச்சுகிட்டு... சொட்டச்சொட்ட நனைஞ்சபடி… நடக்கணும் ஓவியா..
மழையில நனையறதுன்னா ரொம்ப பிடிக்குமா உங்களுக்கு..
நரேந்திரனின் குரல் காதினுள் ஒலித்தது.
மழையில நனையறது பிடிக்காது... உங்கூட சேர்ந்து நனையறதால பிடிக்கும்..
நீங்க பேசறதைக் கேட்கறப்போ… எனக்கு ஜலதோஷம் பிடிக்கற மாதிரி இருக்கு.
நீ நெத்தியிலயும், நெஞ்சிலயும் தடவிக்கறதா இருந்தா நா தலைவலி மருந்தா மாறவும்.. தயாரா இருக்கேன்..
இப்படியெல்லாம் பேசறதுக்கு எங்கே கத்துகிட்டிங்க?
உன்னைக் காதலிக்க ஆரம்பிச்ச பிறகுதான்..
சில நினைவுகள் தாலாட்டும்..
சில நினைவுகள் பனிச்சாரலாய் நம்மை சிலிர்க்க வைக்கும்.. நினைவுகள் சுகமானது… இதமானது…
நரேந்திரனைப் பற்றி நினைத்ததுமே கண்களிலிருந்து கண்ணீர் கொட்டத் தொடங்கியது.
'நரேந்திரனுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?'
அவன் யாரோ? நான் யாரோ?
அவனைப் பற்றி நான் நினைக்கலாமா?
கல்யாணமாகி மனைவி குழந்தையோடு சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருப்பவனை நான் நினைக்கலாமா?
நானா நினைத்தேன்?
இந்த மழைதான் நினைவுபடுத்தி விட்டது.
நினைக்கவே கூடாது என்றுதான் நினைக்கிறேன். ஆனால் ஏதாவது ஒன்று நரேந்திரனை நினைவுப்படுத்தி விடுகிறது.
கைக்குட்டையினால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
ஓவியா..
ஓவியாவின் முதுகில் இதமாய் கையை வைத்தாள் பவானி.
என்னம்மா..
மழை விடாது போலிருக்குடி…
மழை விட்டாலும் சரி, விடலைன்னாலும் சரி.. நா ஆபிசுக்கு போயே ஆகணும்..
"நீ ஆபிசுக்கு போனாலும் மத்தியானம் லீவு சொல்லிட்டு வீட்டுக்கு வந்துதான் ஆகணும். அதுக்கு… இப்பவே மானேஜருக்கு