Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Idhayathil Idam Irukkiratha?
Idhayathil Idam Irukkiratha?
Idhayathil Idam Irukkiratha?
Ebook82 pages34 minutes

Idhayathil Idam Irukkiratha?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழ்நாட்டின் முன்னனி எழுத்தார்களுல் என்னையும் ஒருவனாய் கொண்டாடும் வாசக உள்ளங்களுக்கு பனிவான வணக்கம். உங்கள் இதயத்தில் எனக்கென ஒரு இடத்தை தந்திருக்கும் அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன். நன்றி.

இந்த இடத்தைத்தொட நான் பட்ட சிரமங்கள் கொஞ்சமல்ல. என் பதினேழு வயதில் எழுத்து பயணம் தொடங்கியது. தற்போது 45 வயதாகிறது. இந்த இருபத்தியெட்டு வருடங்களில் 500க்கும் மேற்ப்பட்ட சிறுகதைகள் மற்றும் 400 நாவல்கள் வரை எழுதிவிட்டேன்.

குமுதம் வைரமோதிரம் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, குமுதம் லட்ச ரூபாய் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, தேவி வார இதழ் நாவல் போட்டியில் முதல் பரிசு, கண்மணி நாவல் போட்டியில் பரிசு, இலக்கிய சிந்தனை விருது, விகடன், கல்கி இதழ்களில் பரிசு என ஏராளமானப் பரிசுகளை வாங்கியிருக்கிறேன். அனைத்து இதழ்களிலும் எனது படைப்புகள் வெளியாகிருக்கிறது.

வாசிப்பதன் மூலம் மனம் ஒரு நிலைப்படுகிறது. வாசிக்கிறபோது தங்கள் கவலைகளை மறந்து வேறொரு உலகத்திற்க்கு செல்கிறார்கள். எனது நாவல்களை வாசிக்கிறபோது விறுவிறுப்பான திரைப்படத்தைப் பார்ப்பது போல காட்சிகள் கண்களுக்குள் விரியும். முடிக்கும் வரை கீழே வைக்க மாட்டார்கள். காதல் ஆகட்டும், குடும்பம் ஆகட்டும், அமானுஷ்யம் ஆகட்டும், வாசிக்கும் கண்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடக்கூடாது. தரமான படைப்புகளை படைப்பதே எனது நோக்கம். வாழ்த்துங்கள், வளர்கிறேன்!! உங்கள் விமர்சனங்கள் என்னை மேலும் வலுவூட்டும்.

மிக்க அன்புடன்
மகேஷ்வரன்

Languageதமிழ்
Release dateNov 10, 2019
ISBN6580128304623
Idhayathil Idam Irukkiratha?

Read more from Maheshwaran

Related to Idhayathil Idam Irukkiratha?

Related ebooks

Reviews for Idhayathil Idam Irukkiratha?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Idhayathil Idam Irukkiratha? - Maheshwaran

    http://www.pustaka.co.in

    இதயத்தில் இடம் இருக்கிறதா?

    Idhayathil Idam Irukkiratha?

    Author:

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    http://pustaka.co.in/home/author/maheshwaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    அஸ்மிதா... கனிவாய் அழைத்தார் கனகசபை.

    சொல்லுங்க டாடி...

    நீ இன்னைக்கு காலேஜ்க்கு போக வேணாம்மா...

    எதாவது விஷேசமா டாடி?

    அஸ்மிதா புருவங்களை உயர்த்தினாள்.

    அழகிய அகலமான விழிகள் அலைபாய்ந்தன.

    விஷேசம்தான்...

    என்ன விஷேசம் டாடி ...?

    உன்னைப் பொண்ணு பார்க்க வர்றாங்க...

    சிரித்தபடியே கனகசபை சொல்ல, திடுக்கிட்டாள் அஸ்மிதா.

    சொக்கத் தங்கத்தில் பண்ணிய மஞ்சள் நிலா முகம் கருமையானது.

    எனக்கு கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம் டாடி...?

    நல்லா கேட்டே...! கல்யாணம் இப்ப பண்ணாம எப்ப பண்றதாம்...? வயசு இருபத்தியொண்ணு முடிஞ்சிருச்சு....! என்னோட கல்யாணத்தப்போ உன் அம்மாவுக்கு வயசு பதினேழு...! காலத்துல கல்யாணம் பண்ணி... உனக்குப் பொறக்கப்போற பையனையோ பொண்ணையோ தாக்கிக் கொஞ்சினாத்தானே... நானும் உங்கம்மாவும்... நிம்மதியா கண்மூட முடியும்...! பிடிவாதம் பிடிக்காம சரின்னு சொல்லும்மா...

    அஸ்மிதாவைக் கெஞ்சுவது மாதிரி பார்த்தார் கனகசபை. எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டே அங்கே வந்தாள் சூடாமணி. அஸ்மிதாகிட்டே எதுக்காக கெஞ்சிகிட்டு இருக்கீங்க...! இன்னும் ரெண்டுவருஷம் கழிச்சு கேட்டாலும் அவ கல்யாணம் வேண்டாம்னுதான் சொல்லுவா! அதையெல்லாம் காதுலயே வாங்காதீங்க. நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை வரச் சொல்லுங்க. மத்ததை நா பார்த்துக்கறேன்... சூடாமணி படபடத்தாள்.

    ஓகே டாடி... அதான் சொல்லிட்டாங்கள்ல...! நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை வரச் சொல்லிடுங்க... அவங்க முன்னாடி இதான் பொண்ணுனு அவங்களையே கொண்டுபோய் நிறுத்திடுங்க. அஸ்மிதா சிரித்தபடியே சொன்னாள்.

    செருப்பாலேயே அடிப்பேன்... அம்மாகிட்டே பேசற பேச்சாடி இது... சூடாமணி சீறினாள்.

    பெத்த பொண்ணைப் புரிஞ்சுக்க தெரியாத அம்மாகிட்டே வேற எப்படி பேசறதாம்...?

    உன்னை என்னடி புரிஞ்சுக்கலை...

    நா இப்ப கல்யாணம் வேணாம்னா விட்டுட வேண்டியதுதானே...

    பொண்ணுன்னா கல்யாணமாகி புருஷன் வீட்டுக்கு போகத்தானே வேணும்

    மாட்டேன்னு சொல்லலையே... கொஞ்சம் பொறுங்கன்னுதானே சொல்றேன்...

    பொறுங்கன்னா... எவ்வளவு நாள்?

    ஆறுமாசம்....

    அதென்ன ஆறுமாசம்...

    படிப்பு முடிஞ்சிடட்டும்...

    படிப்புக்கும் கல்யாணத்துக்கும் என்னடி சம்பந்தம்? நீ படிப்பை முடிச்சு வேலைக்குப் போய் சம்பாதிச்சு குடும்பத்தை காப்பாத்த வேண்டிய கட்டாயத்துலயா இருக்கோம்! கல்யாணமே ஆயிட்டாலும் மாப்பிள்ளை வீட்லேர்ந்து காலேஜுக்கு போ...! யாரு வேணாம்னா...? சூடாமணி மாப்பிள்ளை வீட்டாரை வரவழைப்பதிலேயே குறியாய் இருந்தாள். அஸ்மிதா இருவரையும் மாறிமாறிப் பார்த்தாள்.

    ஸாரி டாடி... எனக்கு இப்ப கல்யாணம் வேணாம். யாரையும் வரச் சொல்லாதீங்க...

    அஸ்மிதா... சொன்னாக் கேளும்மா....

    நாஞ்சொல்றதை நீங்க கேளுங்க டாடி...! ஆறுமாசம் பொறுங்க, படிப்பு முடிஞ்சதும்... நீங்க யாரைக் காட்டினாலும் நா கழுத்தை நீட்டறேன்...

    கனகசபையின் கழுத்தை இறுக்கமாய் கட்டிக் கொண்டு, நெற்றியில் மென்மையாய் முத்தம் பதித்தாள்.

    "குட் பை டாடி.....!

    Enjoying the preview?
    Page 1 of 1