Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Iravukkum Pagalukkum Idaiye...
Iravukkum Pagalukkum Idaiye...
Iravukkum Pagalukkum Idaiye...
Ebook69 pages25 minutes

Iravukkum Pagalukkum Idaiye...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மோஹன் 17 வயது மாணவன். இவனது தந்தையும் தாயும் சட்டப்படி பிரிந்து வாழ்கின்றனர். மோஹன் தந்தையுடன் வாழ்கின்றான். இவர்களின் பிரிவினால் மோகனின் படிப்பு எவ்வாறு பாதித்தது? மோகனின் தந்தை நாராயணசாமி உமா என்ற பெண்ணை மணக்கிறான். மோகன் தனது சித்தி உமாவை புரிந்துகொள்வானா? மோகன் தன் அம்மாவை மீண்டும் சந்திப்பானா? இரவுக்கும் பகலுக்கும் இடையே நிகழ்ந்த மாற்றம் என்ன வாங்க பார்க்கலாம்...

Languageதமிழ்
Release dateFeb 26, 2022
ISBN6580125407766
Iravukkum Pagalukkum Idaiye...

Read more from Vaasanthi

Related to Iravukkum Pagalukkum Idaiye...

Related ebooks

Reviews for Iravukkum Pagalukkum Idaiye...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Iravukkum Pagalukkum Idaiye... - Vaasanthi

    https://www.pustaka.co.in

    இரவுக்கும் பகலுக்கும் இடையே...

    Iravukkum Pagalukkum Idaiye...

    Author:

    வாஸந்தி

    Vaasanthi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vaasanthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. அம்மா!

    2. புதுக் குழப்பம்

    3. இதயக் குமுறல்!

    4. ஒரு புதிய உறவு அறிமுகம்!

    5. எதிர்பாராத சந்திப்பு!

    6. பாச உள்ளங்களின் சங்கமம்!

    7. பரிவா? பயமா?

    8. தீபம் அணைந்தது!

    9. பந்தத்தின் சொந்தம்!

    1. அம்மா!

    டேப்ரெக்கார்டரில் ரவிசங்கரின் கிதார் இசை அப்போதைய சூழலுக்குச் சற்றும் பொருந்தாத வகையில் மென்மையாக ஒலித்துக் கொண்டிருந்தது.

    மோஹன் தரையைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தான். அப்பாவின் கோபப் பார்வையும், சித்தியின் சந்தேகப் பார்வையும் மேலே பதிந்திருக்கையில் இந்த டேப்ரெக்கார்டரில் இது என்ன அசம்பாவிதச் சங்கீதம் என்று அவனுக்கு அலுப்பேற்பட்டது.

    அப்ப, நீ அவளைப் பார்த்தது நிஜம்! என்றார் நாராயணன் லேசான எரிச்சல் தொனிக்க.

    சித்தியின் எதிரில் இப்படிக் கூண்டில் அவர் நிறுத்துவது அவனுள் ஒரு அவமான உணர்வை ஏற்படுத்திற்று. அதை விழுங்கும் வேகத்தில் முகம் சிவந்து போயிற்று.

    அவன் பதில் ஏதும் சொல்லாமல் தலையைக் குனிந்து கொண்டான்.

    என்னடா, நான் கேட்டுக்கிட்டே இருக்கேன் வாயிலே என்ன அடைச்சிருக்கு?

    அவன் க்ரோதத்துடன் பார்வையை நிமிர்த்தினான். சித்தி சட்டென்று சுவர் மேல் ஊர்ந்த பல்லியைப் பார்த்தாள், அப்பாவின் கண்கள் தீர்க்கமாய் அவன் மேல் பதிந்திருந்தது. பார்வையே கொக்கியாய் பதிலை இழுத்து விடும் போல,

    அவன் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள இயலாமல் வெடித்தான்.

    ஆமாம் பார்த்தேன்! அதுக்கென்ன

    அவனது எதிர்ப்பை எதிர்பாராதவர் போல நாராயணன் சற்றுத் தடுமாறினார்.

    இதப் பார்! எதிர்த்துப் பேசாதே! நீ அவளைப் பார்க்கறது எனக்கு இஷ்டமில்லே என்றார் அவர் குரலை லேசாக உயர்த்தி.

    அவனுள் புசுபுசுவென்று கோபம் வெகுண்டது.

    ஏனாம்? நான் ஏன் பார்க்கக் கூடாது? என்று கேள்வி மனசில் பந்தாட்டம் ஆடிற்று.

    அவனது மௌனத்தை சாதகமாக்கிக் கொண்டு அப்பா தொடர்ந்தார்.

    அந்தக் கதை முடிஞ்சுப் போச்சு. நீ விஷயத்தைக் குன்று படியாக்கறே மறுபடி. பேசாம உன் படிப்பு எழுத்து வேலையைப் பாரு! அவளோடு தொடர்பு வைத்துக்கொள்ள முயலாதே!

    ஏன்? என்றான் மோஹன். நாராயணன் ஏதிர்பார்க்காத ஆக்ரோஷத்தோடு அது சட்டப்படி குற்றமா?

    தன் திகைப்பை மறைத்துக் கொண்டு அவர் கடுகடுத்தார்.

    சட்டப்படி பிரிஞ்சப்புறம் தொடர்பு வெச்சுக்கறதிலே அர்த்தமில்லே. வீண்தொல்லைகள் வரும்!

    அவனையே தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருந்த சித்தியின் கண்களில் கவலை தெரிந்தது. அந்தப் பார்வை தோற்றுவித்த பரிதாபத்துக்காக அவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். தான் எதிரில் இருப்பதால்தான் அவன் பேசுவதற்குத் தயங்குகிறான் என்று புரிந்து கொண்டவளாய் உமா, நாராயணனுக்கு ஜாடை காட்டிக் கிளம்பினாள்.

    என்ன, இனிமே பார்க்காதே தெரிஞ்சுதா? என்றார் அப்பா.

    நீங்க என்னைக் கட்டுப்படுத்த முடியாது. என்னுடைய அம்மாவை எனக்குப் பார்க்கணும்னு இருக்கும்போது கண்டிப்பாப் பார்ப்பேன்! என்னுடைய அம்மா அது! நான் தெருவிலே போற எவளையும் பார்க்கப் போகல்லே!

    இப்ப அவ சட்டப்படி உங்கம்மா இல்லே!

    இவர் எப்படி இப்படி சிறுபிள்ளைத்தனமாகப் பேசுகிறார் என்று அவனுக்குச் சிரிப்பு வந்தது.

    "சட்டப்படி

    Enjoying the preview?
    Page 1 of 1