Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pennendru Bhoomithanil...
Pennendru Bhoomithanil...
Pennendru Bhoomithanil...
Ebook176 pages1 hour

Pennendru Bhoomithanil...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மாதராக பிறந்த பெண் தன்னை காலம் முழுக்க சுமந்த குடும்பத்தையும், தான் காலம் முழுக்க சுமக்க வேண்டிய குடும்பத்தையும் எண்ணி எண்ணி தன்னுடைய ஆசைகளை துறவாமல் துறக்கும் துறவி. ஏற்றமிறக்கம் இருக்கும் பூமிதனில் அனைவரையும் தாங்கும் பூமித்தாய் போல அனைத்து இன்ப துன்பங்களையும் தாங்கும் பெண்மணியின் கதையே...

Languageதமிழ்
Release dateAug 27, 2022
ISBN6580157908981
Pennendru Bhoomithanil...

Read more from Godha Parthasarathy

Related to Pennendru Bhoomithanil...

Related ebooks

Reviews for Pennendru Bhoomithanil...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pennendru Bhoomithanil... - Godha Parthasarathy

    http://www.pustaka.co.in

    பெண்ணென்று பூமிதனில்...

    சிறுகதைகள்

    Pennendru Bhoomithanil...

    Sirukadhaigal

    Author:

    கோதா பார்த்தசாரதி

    Godha Parthasarathy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/godha-parthasarathy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரையாக...

    1. சிறுமைகண்டு பொங்குவாய்

    2. கிழக்கும் மேற்கும்

    3. கோபுர தரிசனம்

    4. அறிவுக்கு அப்பால்

    5. பெண்ணென்று பூமிதனில்...

    6. மனிதனின் மறுபக்கம்

    7. ஒரு மயானத்தின் மரணம்

    8. பிராயச்சித்தம்

    9. வேர்கள் மண்ணோடுதான்

    10. தழும்பு

    முன்னுரையாக...

    மகுடக் கதையான ‘பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால்...’ என்பதின் கடைசி வரி..!

    ‘ஏனோ தன் பின்னால் பல பெண்கள் தொடர்ந்து வருவது போன்ற ஒரு பிரமை அவளுக்கு ஏற்பட்டது?’ என்று முடிகிறது.

    அழுத்தமான சிந்தனைகளை வெகு இயல்பாக வெளிப்படுத்துகிறவர் கோதா பார்த்தசாரதி. சம்பிரதாயங்கள் பண்பாடு, நாகரிகம் எல்லாவற்றிலும் அளவு கடந்த நம்பிக்கையுடையவர். அதே நேரத்தில் பாரதி சொன்னது போல் ‘சிறுமை கண்டு பொங்க’வும் தயங்காதவர்.

    மேல்தட்டு மக்களை மட்டும் சிந்திக்காமல், வாழ்க்கையின் அடிமட்டத்தில் உள்ளவர்களைப் பற்றியும் சிந்திப்பவர் கோதா. பார்த்தசாரதி. ஏழாவது கதை அதற்கு ஓர் அடையாளம்.

    நூறு கதைகள் வரை எழுதியுள்ள இவருடைய இரண்டாவது சிறுகதைத் தொகுதி இது. காயம்படாத, யாரையும் காயப்படுத்தாத நல்ல கதைகளை நாடுகிறவர்கள் வரவேற்க வேண்டிய நல்ல தொகுப்புக்களுள் இதுவும் ஒன்று. பாராட்டுக்கள்!

    சுப்ரபாலன்

    சென்னை 45

    28 – 5 – 2000

    1. சிறுமைகண்டு பொங்குவாய்

    உற்சாகமாய்ச் சில குரல்கள் பாட கேலியாய்ப் பல குரல்கள் சிரிக்க, மெதுவாக உள்ளே தள்ளப்பட்டாள் பாரதி.

    கதவை வெளியே மூடிக்கொண்டு அவர்கள் கிளம்பவும், படபடவென்று துடிக்கும் நெஞ்சை அழுத்திய வண்ணம் கதவின் மேல் சாய்ந்துகொண்டு சுற்றிலும் பார்வையை ஓடவிட்டாள்.

    கட்டிலின் மேல் கால்மாடு தலைமாடாக ஓர் ஒழுங்கில்லாமல் கிடந்து தூங்கும் கணவனைப் பார்த்தாள். உண்மையிலேயே தூங்கிப்போய் விட்டாரா? இன்று - இந்த இரவு - முக்கியம் இல்லையா அவருக்கு?

    மெல்லப்போய்க் கட்டிலில் அமர்ந்து அவன் தலையைத்தூக்கித் தன் மடியில் வைத்துக் கொண்டாள்.

    ‘ஏமாந்தியா - நீயே வலுவில் வந்து என்னைத் தொடணும்னு தான் சும்மா தூங்கற மாதிரி பாவனை பண்ணினேன்’ என்று பாய்ந்து தன் கழுத்தைக் கட்டிக் கொள்ளப்போகிறான் பாலு என்று எண்ணியவளுக்கு ஏமாற்றம்தான்.

    அவனிடம் எந்தச் சலனமும் இல்லை. மாறாகத் தன் முகத்தை அவள் மடியில் இன்னும் நன்றாகப் புதைத்துக்கொண்டு தூங்கினான்.

    இதற்குமேலும் அவனை எப்படி எழுப்ப? எத்தனை எத்தனை ஆசைக் கனவுகளை மனதில் தேக்கி, அவள் இந்த அறையினுள் நுழைந்திருந்தாள்?

    ம்ஹும். ஆரம்பத்திலிருந்து எதுவுமே சரியில்லை.

    ***

    "பெண்ணை நன்னாப் பார்த்துக்கோ, பாலு! அப்புறம் குத்தம் குறை சொல்லக்கூடாது."

    பாலுவின் மன்னி சொல்லிவிட்டுச் சிரித்தாள்.

    நீயும்தாம்மா. நன்னாப் பார்த்துக்கோ.

    பாரதியின் தோழி கீதா காதருகில் கிசுகிசுத்தாள். மெதுவாகத் தலையைத் தூக்கி ஏறிட்டுப் பார்த்தாள் பாரதி.

    சற்றே பெண்மையின் சாயல் கலந்த முகம். அமைதியில்லாமல் அலையும் கண்கள். பார்த்தவுடன் மனதுக்குப் பிடிக்கும்படி எதுவும்...

    ஏதோ நெஞ்சுக்குள் ஒருபட்சி, ‘வேண்டாமே’ என்கிறது.

    அவன் அருகில் மன்னி - வெகு உரிமையாய் அவன் தோளில் கை போட்டுச் சிரித்துப் பேசுகிறாள். அவள் முகமும் சரியில்லை.

    அண்ணா குனிந்த தலையை நிமிரவில்லை. எதையோ பறி கொடுத்தது போல் ஒரு நிரந்தர சோகம் முகத்தில். பலியாடுபோல் மிரள மிரள விழித்தபடி, இவரும் ஏன் இப்படி இருக்கிறார்?

    எங்கோ எதுவோ இடிக்கிறது.

    எங்களுக்கு பிடிச்சுப்போச்சு, பையனுக்கு இஷ்டம்னு அவன் முகமே சொல்கிறது. முகூர்த்தம் எப்ப வச்சுக்கலாம்?

    மன்னிதான் ஆரம்பிக்கிறாள்.

    அம்மாவின் முகம் மலர்கிறது. வாயெல்லாம் பல்லாகிறது. பாரதிக்குத்தான் மனம் பதைக்கிறது. அவர்களே தீர்மானம் பண்ணி விட்டால் போதுமா?

    ஒரு பேச்சுக்கு, ஒரு நாகரிகத்துக்கு, உங்க பெண்ணையும் ஒரு வார்த்தை கேட்டுச் சொல்லுங்கோன்னு சொல்லலாமே. சொல்லல்லையே, அந்த இங்கிதம்கூட தெரியல்லையே!

    பெண்ணோட கொஞ்சம் தனியாப் பேச முடியுமா?

    இப்படி பாது கேட்பான். தனிமையில் கொஞ்சம் அவனுடன் பேசிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் மண் விழுந்தது.

    தனக்குத் திருமணமாகிவிட்டால் தாய் தனிமையில் வாடுவாள். அவளையும் தன்னுடன் கொண்டு வைத்துக் கொள்ள வேண்டும். அது முடியாவிட்டாலும் இந்த ஊரிலேயே இருக்க வேண்டும். தன் சம்பளத்தை அம்மாவுக்குக் கொடுத்து உதவவேண்டும் என்றெல்லாம் மனசுக்குள் ஆசை அவளுக்கு.

    இதற்கெல்லாம் அவன் சம்மதிப்பானா என்று கேட்க எண்ணம். ஆனால் வாய்ப்புக் கிடைக்காது போல் இருக்கிறதே!

    அம்மா முகூர்த்த நாளைப் பற்றி ஏதோ வாயைத் திறக்குமுன், சைகை காட்டிவிட்டு உள்ளே போனாள் பாரதி. தொடர்ந்து வந்த அம்மாவிடம், பிறகு சொல்லியனுப்புவதாக அவர்களை அனுப்பிவிட்டுவா, அம்மா. பிறகு பேசலாம் என்றாள்.

    வெளியே வந்த அம்மா அசட்டுச் சிரிப்புடன் கைகூப்பி, எங்க ஜோஸ்யர்கிட்ட நாள் பார்த்துச் சொல்லியனுப்பறேன் - ரொம்ப சந்தோஷம் என்றாள்.

    அப்ப நாங்க வரோம். சீக்கிரம் ஒரு நல்லநாளைப் பார்த்துச் சொல்லி அனுப்புங்கோ, வரேம்மா பாரதி! என்று விடை பெற்றுக்கொண்டு நடந்தாள் மன்னி. அவள்பின் இரண்டு மெழுகுப் பொம்மைகள் போல் அண்ணாவும் தம்பியும் தொடர.

    ஒருமுறை, ஒரே ஒருமுறை, அவன் திரும்புவானா. திரும்பித் தன்னைப் பார்க்கிறானா என்று ஜன்னலருகில் காத்திருந்த பாரதிக்கு ஏமாற்றமே.

    வழியனுப்பிவிட்டுத் திரும்பி வந்த அம்மாவிடம் இதைச் சொன்னபோது அவள் சிரித்தாள்.

    நீ சிறு பெண் பாரதி. மனிதர்களை அப்படி ஒரு பார்வையில் எடைபோட முடியாது. இதுதான் உன் ஆட்சேபணையா? என்றாள்.

    எனக்குக் கல்யாணத்துக்கு என்ன அவசரம்மா? நானும் உங்களை விட்டுட்டுப் போயிட்டா, நீங்க தனியா... விம்மினாள் பாரதி.

    அசடே நான் வாழ்ந்து முடிச்சகட்டை. நீ நன்னா வாழணும். பெண்ணாப் பிறந்தவா புருஷன் வீட்டுக்குப் போகணும்கிறதுதானே உலக நியதி. கொஞ்ச நாளானா பழகிப்போயிடும்.

    அம்மா தேற்றினாள். பாரதி மௌனமானாள்.

    ‘மௌனம் சம்மதத்தின் அறிகுறி’ என்று எடுத்துக் கொண்ட அம்மா அவர்களுக்குச் சொல்லி அனுப்பிவிட்டு லௌகிகம் பேசப்போனாள்.

    அன்றிலிருந்து அம்மாவுக்கு ஒரே அலைச்சல்தான்.

    நிலம் விற்றுப் பணம் வந்துவிட்டது. வீடும் தெரிந்தவர்கள் வாங்கிக்கொண்டு, அம்மாவே தொடர்ந்து வாடகைக்கு இருக்கட்டும் என்று ஏற்பாடாகிவிட்டது. புடவைக்கடை, பாத்திரக்கடை, நகைக்கடை என்று அலைந்து எல்லாம் வாங்கியாயிற்று.

    அப்பா இல்லாத குறை இப்போது அதிகமாகவே தெரிந்தது பாரதிக்கு.

    அன்று தன் தோழிகளுக்கெல்லாம் இன்விடேஷன் கொடுக்கவென்று காலையிலேயே வீட்டைவிட்டுக் கிளம்பி விட்டாள் பாரதி.

    மாலையில் திரும்பி வந்தபோது உள்ளே பேச்சுக்குரல் கேட்டது. பாலுவின் மன்னி குரல்தான். இப்போது எங்கே வந்திருக்கிறாள், புடைவை நகைகளைப் பார்க்க வந்திருப்பாளோ?

    பகல் முழுவதும் வெயிலில் அலைந்து களைத்த முகத்துடன் பார்க்க விருப்பமில்லை. ஒரு வேளை அவரும் வந்திருப்பாரோ? கொல்லைக் கதவு திறந்திருந்தது. வீட்டைச் சுற்றிக் கிணற்றடியில் தண்ணீர் இறைத்து முகம் கைகால் அலம்பிக் கொண்டாள். பாத்ரூமில் கிடந்த துண்டை எடுக்கப் போனாள்.

    அவள் வந்ததை யாரும் கவனிக்கவில்லை.

    அவன் அப்படித்தான் எதுவும் வேண்டாம்னு சொல்வான். லட்சம் லட்சமாச் செய்யறேன்னு கியூவிலே நின்னா. ஒரு பெண்ணைத்தான் பார்க்கணும். அவளையே பண்ணிக்கணும், வேண்டாம்னா அந்தப் பெண் மனசு நோகும்னு பார்த்தவுடனே சரின்னுட்டான். அவன் அழகுக்கும் அறிவுக்கும் படிப்புக்கும் ஒசந்த வேலைக்கும் எவ்வளவோ செய்யலாம். நாளைக்கே ஸ்கூட்டர் வாங்கினா உங்க பெண்தானே கூடப் போகப்போறா. அவனுக்கு நான் கேட்டேன்னு தெரியப்படாது. நீங்களாவே செய்யுங்கோ.

    பாரதியின் ரத்தம் கொதித்தது.

    ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு வந்த சுவடு தெரியாமல் மீண்டும் வெளியே போய் விட்டாள். மன்னியின் முகத்தில் விழிக்கப் பிடிக்கவில்லை அவளுக்கு.

    வாசலிலிருந்து ஆட்டோ புறப்பட்டதும் எதுவுமே தெரியாதது போல் வந்தாள்.

    காபி டிபன் தட்டுக்களை எடுத்து சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாள் அம்மா.

    யார் வந்தா, காபி டிபன் எல்லாம் தடபுடலா இருக்கு!

    பாலுவோட மன்னிதான். சும்மா இந்தப்பக்கம் வந்தாளாம். நீ இருந்தா பார்த்துட்டுப் போகலாம்னு வந்தாளாம். புடவை, நகையெல்லாம் வந்திருக்காளேன்னு காண்பிச்சேன். சம்பந்தி மனுஷாளில்லையா. துளி கேசரி கிளறி, பஜ்ஜி போட்டேன் என்று அம்மா சமாளித்தாள்.

    என்ன ஸ்கூட்டர் வாங்கணும்னு சொன்னா?

    தடாலென்று பாரதி கேட்டதும் அம்மா திணறிப் போனாள்.

    ஸ்கூட்டரா? என்று மென்று விழுங்கினாள்.

    முழுப்பூசணிக்காயை சோத்துலே மறைக்க முடியாதும்மா. எல்லாம் நான் கேட்டுண்டுதான் இருந்தேன். அப்பவே வந்துட்டேன். இதுக்கெல்லாம் ஏம்மா இடம் கொடுக்கறே? அந்த டயரியை எடு. நான் இப்பவே போன் பண்ணி அவரிடம் பேசறேன். அவரே வேண்டாம் என்கிறபோது இவர்களுக்கு என்ன?

    பாரதி கோபத்துடன் கத்தினாள்.

    பாரதி ஏன் கத்தறே? ஏதோ அவளுக்கு ஆசை. வீட்டுலே பெரியவா இல்லை. இவதானே எல்லாம். இருந்தா நன்னாயிருக்குமேன்னு கேட்டா. வீடு வித்தபணம் கொஞ்சம் பாக்கி இருக்கே. வாங்கிட்டாப் போச்சு என்றாள் அம்மா சிரித்தபடி.

    மனசுக்குள் ஓர் எரிமலை குமுறிக்கொண்டு இருந்தது.

    ‘இந்தக் கல்யாணம் நல்லபடி முடியட்டும். எல்லாவற்றையும் அவரிடம் சொல்லி நேர் செய்து விடலாம். முடிந்தால் இந்த மன்னியுடன் இல்லாமல் தனிக்குடித்தனம் போய்விடவேண்டும்.’

    முதல் இரவிலேயே அவனிடம் எல்லாவற்றையும் கொட்டிவிட வேண்டுமென்று நினைத்தாள். ஆனால் அவனோ? தூங்கிக் கொண்டிருக்கிறான் நிம்மதியாக.

    ***

    அலாரம் அடித்த சப்தம் கேட்டுத் திடுக்கிட்டு விழித்துக் கொண்டாள் பாரதி. எப்போது தூங்கினாள்? அவளுக்கே தெரியவில்லை.

    பாலு எழுத்து பாத்ரூம் போயிருந்தான்.

    இரவு முழுதும் காத்துக்கிடந்தவளுக்கு அவனைப் பாராமல், பேசாமல், கீழே இறங்கிச் செல்ல மனம் வரவில்லை.

    படுக்கையைச் சுருட்டியவள் தலையணை அடியில் ஓர் இன்ஜக்ஷன் சிரிஞ்ச் இருப்பதைப் பார்த்து வியந்தாள். இது ஏன் இங்கே வந்தது? ஒருவேளை அவருக்கு ஏதும் உடம்பு சரியில்லையோ? டாக்டர் வந்து இன்ஜக்ஷன் போட்டிருப்பாரோ? அதனால்தான் அப்படி அசந்து தூங்கிவிட்டாரா?

    பாத்ரூமிலிருந்து வெளியே வந்த பாலு,

    Enjoying the preview?
    Page 1 of 1