Neruppu Kozhi
By Maharishi
()
About this ebook
கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.
இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.
தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.
தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன. எனினும், தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.
Read more from Maharishi
Spatikam Rating: 0 out of 5 stars0 ratingsBhadrakali Rating: 0 out of 5 stars0 ratingsPattu Kudai Rating: 0 out of 5 stars0 ratingsIppadiye Oru Vazhkkai Rating: 0 out of 5 stars0 ratingsKanneer Thuliyil Kadalosai Rating: 0 out of 5 stars0 ratingsAndha Poonai Rating: 0 out of 5 stars0 ratingsMaanilam Enna Vilai? Rating: 0 out of 5 stars0 ratingsKalaintha Suruthi Rating: 0 out of 5 stars0 ratingsAdharam Madhuram Rating: 0 out of 5 stars0 ratingsSakkaram Ini Suzhalum Rating: 0 out of 5 stars0 ratingsIraval Karu Rating: 0 out of 5 stars0 ratingsMohanasthiram Rating: 0 out of 5 stars0 ratingsTharaiyil Piditha Meen Rating: 0 out of 5 stars0 ratingsSabthapathi Rating: 0 out of 5 stars0 ratingsParvaiyile Sevaganai..! Rating: 0 out of 5 stars0 ratingsVaanathu Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsVensangu Rating: 0 out of 5 stars0 ratingsParadesi Kolam Padi Thaandi Vittathu Rating: 0 out of 5 stars0 ratingsNinaivugal Unnoduthan... Rating: 0 out of 5 stars0 ratingsYaagam Rating: 0 out of 5 stars0 ratingsPoo Potta Thaavani Rating: 0 out of 5 stars0 ratingsVittil Rating: 0 out of 5 stars0 ratingsMaanasa Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Parisu Rating: 0 out of 5 stars0 ratingsManam Kavarndhavan Rating: 0 out of 5 stars0 ratingsThattaamaalai Rating: 0 out of 5 stars0 ratingsMega Chithirangal Rating: 0 out of 5 stars0 ratingsKanavodu Sila Naatkal Rating: 0 out of 5 stars0 ratingsVilayada Vanthaval Rating: 0 out of 5 stars0 ratings
Related to Neruppu Kozhi
Related ebooks
Sathamillamal Oru Satham Rating: 0 out of 5 stars0 ratingsDinasari Moondru Kolaigal Rating: 4 out of 5 stars4/5Thinasari Moondru Kolaikal Rating: 0 out of 5 stars0 ratingsKaatrin Niram Karuppu Rating: 5 out of 5 stars5/5Naruk Rating: 0 out of 5 stars0 ratingsNaan Yaar Theriyuma? Rating: 0 out of 5 stars0 ratingsMangalaa Suba Mangalaa Rating: 4 out of 5 stars4/5Naga Vanam Rating: 5 out of 5 stars5/5Vanamellam Sivappoo! Rating: 0 out of 5 stars0 ratingsRajini Raajyam Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Pattampoochi Rating: 0 out of 5 stars0 ratingsMeen Kothi! Rating: 0 out of 5 stars0 ratingsKaialavu Boogambam! Rating: 2 out of 5 stars2/5Intha Sathi Pothatha? Rating: 0 out of 5 stars0 ratingsIthu Enna Sorgam? Rating: 0 out of 5 stars0 ratingsThimingala Vettai Rating: 1 out of 5 stars1/5Thulasidhalam Rating: 3 out of 5 stars3/5Kuttrangal Kuraivathillai Rating: 5 out of 5 stars5/5Pulan Visaranai? Rating: 0 out of 5 stars0 ratingsAabathanavargal Rating: 0 out of 5 stars0 ratingsMoongil Kaadugale..! Rating: 4 out of 5 stars4/5Aatril Oru Kaal Setril Oru Kaal Rating: 0 out of 5 stars0 ratingsKolvathellam Unmai Rating: 0 out of 5 stars0 ratingsUyire Uyire Rating: 0 out of 5 stars0 ratingsParisil Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsSindhu Ratham Sindhu Rating: 4 out of 5 stars4/5Lights On Rating: 0 out of 5 stars0 ratingsRatha Kaatteri Rating: 0 out of 5 stars0 ratingsIrul Thesaththu Sathi Rating: 0 out of 5 stars0 ratingsNaalai Yaaro! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Neruppu Kozhi
0 ratings0 reviews
Book preview
Neruppu Kozhi - Maharishi
http://www.pustaka.co.in
நெருப்புக்கோழி
Neruppu Kozhi
Author:
மகரிஷி
Maharishi
For more books
http://www.pustaka.co.in/home/author/maharishi
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1 span
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
1
பிரபல ஓவியர் ரங்கப்பா கொலை.
மரங்கள் அடர்ந்த மலைப் பகுதி ஒன்றின் நடுவில் துப்பாக்கியால் சுடப்பட்டு மரணமானடந்தான்.
அவன் இறந்து சுமார் 24 மணி நேரம் தாமதமாக தான், அவன் உடல் கண்டு பிடிக்கப்பட்டது.
அவன் பிரபலமான கம்பெனியொன்றில் முக்கிய வேலையில் இருக்கிறான்.
வார விடுமுறையை உல்லாசமாக கழிக்கும் பழக்கமுள்ளவன்.
சிறந்த ஓவியன் அதிலும் நிர்வாண ஓவியங்கள் வரைவதில் ஆர்வம் மிக்கவன் அவனது பல் நியூட் பெயிண்டிங்குகள் நல்ல விலைக்கு விற்றிருக்கின்ற
.
சிறந்த புகைப் படக்காரன் அம்மாதிரி படங்களே அதிகம் எடுப்பான். அம்மாதிரி படங்கள் எடுத்து விற்றான் என்பதால் ஆபாச வெளியீடுகள் மற்றும் பிரசுரங்கள் சட்டம் இ.பி.கோ.372(A) கீழ் அவன் இரண்டு முறை தண்டிக்கப்பட்டிருக்கிறான்
சென்ற வாரக் கடைசியில் வார விடுமுறையின் போது படம் வரையும் உபகரணங்கள் மற்றும் மடக்கி எடுத்துச் செல்லும் மரஸ்டாண்ட் வர்ணக்குழாய் சலாகை கான் வாஸ் சுருள்கள் இவற்றுடன். தனது மோட்டார் சைக்கிளில் அவன் வழக்கமாக படம் போடத் தேர்ந்தெடுத்திருக்கும் மலைச் சரிவு தோட்டமொன்றிற்கு சென்றிருக்கிறான்.
ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு போனவன் அன்று பூராவும் அறைக்குத் திரும்பவில்லை.
அப்படிப் போகும் அவன் மாலைக்குள் திரும்பி விடுவது வழக்கம்.
அவன் மாலையில் அறைக்கு திரும்பி வராததை யாரும் கவனிக்கவில்லை.
மறுநாள் காலை அந்த மலைச் சரிவு காட்டுப் பிரதேசத்தில் விறகு பொறுக்கப் போன இரண்டு பெண்கள் பார்த்து விட்டு பயந்து போய் ஓடி வந்திருக்கின்றனர்.
அதன்பின் அருகில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிராம மக்கள் ஓடி வந்து பார்த்திருக்கிறார்கள்.
அதில் ஒருவர் போலீஸ் நிலையத்திற்குத் தகவல் கொடுத்திருக்கிறார்.
போலீஸார், வந்து பார்த்தபோது நிலைமை இத்தனை மோசமாக இருக்குமென்று நினைக்கவில்லை. உடனே, கொலை நடந்த இடத்திற்கு போலீஸ் புகைப்பட பிரிவு நிபுணர். தடைய நிபுணர் ஆகியோரும் வரவழைக்கப் பட்டனர்.
தடையங்களையும், அடையாளங்களையும், கொலை நடந்த இடத்து சூழ்நிலைகளையும் குறித்துக் கொண்டு பிரேதம் நகர மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது.
கொலை நடந்த இடத்தை அடைய வளைவான ஒற்றையடித்தடம் ஒன்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த ஒன்றையடித்தடம் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் போகும் மலைச் சரிவை யொட்டிச் செல்லும் தார்சாலையில் ஓரிடத்தில் பிரிகிறது. ரொம்பவும் சாமர்த்தியமும், திறமைசாலியாகவும் இருந்தால் தான் அந்த ஒற்றையடித்தடத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்ட முடியும். கொலையுண்ட ரங்கப்பா, திறமையாக மோட்டார் சைக்கிள் ஓட்டக் கூடியவன் என்பது தெரிய வருகிறது. அவன் விழுந்து கிடந்த இடத்திற்கு கொஞ்ச தூரத்தில் அவனுடைய சிகப்புநிற மோட்டார் சைக்கிள் நின்று கொண்டிருந்தது.
மேலும் கொலை நடந்த இடத்து விவரங்களைப் பார்ப்போம்.
மோட்டார் சைக்கிள் நம்பர் 217, அது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கும் ரங்கப்பா விழுந்து கிடந்த இடத்திற்கும் உள்ள தூரம் சுமார் நூறு அடி இருக்கும். வெளிர் நிலத்தில் பேண்டும் கிட்டத்தட்ட அதை விட கொஞ்சம் வெளிரிய நிறத்தில் காலர் இல்லாத அரைக்க ஜூப்பாவும் அணிந்தான்.
அவன் வரைந்து கொண்டிருந்த நியூட் படம் ஒன்று ஸ்டாண்டில் இருந்தது.
மலைப் பாறையின் பின்புறமாக வானுயர்ந்த மரங்கள், ஏராளாமான மலைக்குன்றுகள் - அந்தப் பாதையில் அந்த நிர்வாணப் பெண் கால்களை மடக்கி கையை பாறையில் ஊன்றி உட்கார்ந்திருக்கிறாள். அவன் பார்வை தூரத்தில் எங்கோ பார்க்கிறது.
நிர்வாணப் படம் ஏற்கனவே வரையப்பட்டு அதற்கான பின் புலனன மட்டும் அவன் வரைய வந்திருக்கிறான் என்பது அதைப் பார்த்தவுடனே தெரிந்தது.
ஓவியம் முழுமையாக முற்றுப் பெற்றிருந்தது.
ரோஜா வண்ணத்தில் பெண்ணின் உருவத்தை அத்தனை அழகாக வரைத்திருந்தான். ஒவ்வொரு அங்கத்தையும் ரசித்து வரைந்த மாதிரி ரியாலிஸம் தெரிந்தது.
தளர்வில்லாத மார்பகம. எந்த இடத்திலும் சுருக்கங்கள் இல்லாத வயிற்றுப்பகுதி. அவள் வலப்புறமாக கொஞ்சம் சாய்ந்திருப்பதால் அந்த இடத்து வயிறு மட்டும் சுருக்கம். கேசம் வலப்புறம் விழுந்து கிடக்கிறது.
தர்மாசில் ஒரு கால் பகுதி ஷிவாஸ் ரீகல் அப்படியே இருந்தது. படம் எழுத உபயோகிக்கும் வர்ணக்குழாய்கள் வின்சர்அண்ட் நீயூடன், பிரஷ்கள், வர்ணக்குழாய்கள் உபயோகப்படுத்தும் டர்பன்டைன் இவை ஓரிடத்தில்.
கையில் கட்டியிருந்த டிஜிட்டல் காசியோ ஓடிக் கொண்டேயிருந்தது.
கீழே சரிந்ததாலோ அல்லது கடைசி நேர - அதிர்ச்சியாலோ, இடது காலில் மட்டும் செருப்பு இருந்தது. மற்றொன்று காணவில்லை...
சரியாக இடது மார்பில் ஒரு குண்டும், நெற்றிப் பொட்டி என் ஒன்றும் மிக ஆழமாக உள்ளே போயிருந்தன.
ரத்தம் முகத்தை மறைத்து உரைந்திருந்தது. முன் உடம்பு பூராவும் ரத்தம்...
போலீசார் வரும் வரையில் யாரும் கிட்டே போக வில்லை, தூரமாக வட்டமாக உட்கார்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அதை பார்க்க வந்து போலீஸ் இலாகாவினர் கூட தங்கள் ஜீப்களை மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள் ள மலைச்சாலையில் நிறுத்தி விட்டு ஒற்றையடி காட்டுத் தடத்தில் ஒருவர் பின் ஒருவராக நடந்து தான் வந்தார்கள்.
அந்த இடத்து சூழ்நினலனயப் பார்த்தார்கள், இங்கே எது நடந்தாலும் வெளியே தெரிய வாய்ப்பில்லை. இயற்கை அத்தனை ரகசியமாக தன் திரைகளை அவிழ்த்துத் தொங்க விட்டிருந்தது.
அவசரப்படாமல் மிக நிதானமாக தங்கள் வேலைகள் செய்தார்கள். கிராமத்து மக்கள் ஏதோ திரைப்படமொன்றைப் பார்ப்பது போல மெளனமாக தூரமாகவே உட்கார்ந்திருந்தனர்.
கொலை நடந்த இடத்தில் அவர்கள் ஆராய்ச்சிகள், விசாரணைகள் எல்லாம் முடிய பிற்பகலுக்கு மேலாகி விட்டது.
ஒயர்லெஸ்சில் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.
பிரேதத்தை ஏற்றிக் கொண்டு அவர்கள் புறப்பட்டு விட்டார்கள்.
கொலை பற்றி போலீஸ் அதிகாரி குமாரின் அறிக்கை விரிவாக வெளியாகியிருந்தது.
மேலும் விசாரனை தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாக பத்திரிகை நிருபர்களுக்கு பேட்டி அளித்திருந்தார்.
போல்ஸாரின் அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு பத்திரிகைகள் வெளியிட்ட செய்தி இது.
ரங்கப்பா கைத்தறி மற்றும் பட்டு ஏற்றுமதி செய்யும் பாரகன் நிறுவனத்தில் முக்கிய பகுதியொன்றில் வேலை செய்கிறார்.
அவர் சிறந்த ஓவியர், புகைப்படமெடுப்பவர்.
குறிப்பிட்ட தினத்தன்று ஞாயிற்றுக்கிழமை படம் வரைவதற்கான பொருட்களை தன் கிட்பேக்கில் போட்டுக் கொண்டு பத்து மணிக்கு தன் அறையைப் பூட்டி சாவியை அடுத்த அறையில் குடியிருக்கும் ஒரு கல்லூரி மாணவனிடம் கொடுத்து விட்டு போயிருக்கிறார் தான் எங்கே போகிறோம் என்பதை அவர் யாரிடமும் சொல்லவில்லை.
கிராமத்து ஆள் ஒருவன் சொன்ன தகவலின் பேரில் ஏற்காடு போலீஸார் ஸ்தாலத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர்.
ரங்கப்பா விவாகமாகாதவர் என்பது விசாரணரின் போது தெரிய வந்தது.
சென்னை மற்றும் திருச்சியில் இருக்கும் அவருடைய உறவினர்களுக்கு தகவல் தரப்பட்டது.
மார்பில் ஒரு குண்டும், நெற்றிப் பொட்டில் ஒரு குண்டும் ஆக இரண்டு குண்டுகள் அவர் உயிர் பிரியக் காரணமாக இருந்திருக்கிறது.
குண்டுகள் நூறு அல்லது நூற்றி ஐம்பது மீட்டர் தூரத்திலிருந்து வந்திருக்கின்றன என்பது பிரத பரிசோதனையில் தெரிகிறது. உபயோகப்படுத்தப்பட்ட துப்பாக்கி, மற்றும் குண்டுகள் இவை பற்றி ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
கொலையாளிக்கு ரங்கப்பாவின் உயிர் மட்டுமே பீரதானமாக இருந்திருக்க வேண்டும். எனவே இறந்து போன அவருடைய உடைமைகள் எதுவும் களவாடப்படவில்லை. அவர் பையில் இருந்த மணிப்பர்ஸ் அதில் இருந்த சுமார் இரண்டாயிரத்து பத்து ரூபாயும், நாற்பது காசுகளும் அப்படியே இருந்தன. அவர் கழுத்தில் அணித்திருந்த நான்கு பவுன் எடையுள்ள தங்க சங்கிலி அப்படியே இருந்தது. அதை விட அவர் இடதுகை விரலின் அணிந்து இருந்த வைர மோதிரத்தின் விலை கிட்டத்தட்ட மூவாயிரம் வரைபெறுமானமுள்ளது அதுவும் அப்படியே இருந்தது.
இதிலிருந்து அவரைக் கொலை செய்த நபர் அவரை கொலை செய்வதை மட்டுமே குறிக்கோளாகக்