Kolvathellam Unmai
()
About this ebook
நகரத்தில் அடுத்தடுத்து சில கொலைகள் நடக்கின்றன. கொலை செய்யப்பட்டவர்களின் கையில் வினோதமாக சில எண்கள் கத்தியால் எழுதப்பட்டிருக்கின்றன. இந்த கொலைகளை யார் எதற்காக செய்கிறார்கள் என்பதை அருண் வினோத் என்னும் துப்பறியும் ஜோடிகள் கண்டு பிடிப்பதுதான் கதை!
Read more from Erode Karthik
Aaru Mani Nerangal Rating: 5 out of 5 stars5/5Mannil Maraiyum Minnal Rating: 0 out of 5 stars0 ratingsKaala Vettai Rating: 0 out of 5 stars0 ratingsAvan Peyar Aathithan Rating: 0 out of 5 stars0 ratingsMeendum Athithan Rating: 0 out of 5 stars0 ratingsSiraiyil Oru Siruthai Rating: 0 out of 5 stars0 ratingsIdhayathai Thirudiyavan Rating: 0 out of 5 stars0 ratingsVengiyin Mohini Rating: 0 out of 5 stars0 ratingsMarma Yogi Rating: 0 out of 5 stars0 ratingsThedathey! Kidaikkathu! Rating: 0 out of 5 stars0 ratingsNaangu Paathai Vazhi Ondru Rating: 0 out of 5 stars0 ratingsKulire! Kulire! Kollathey! Rating: 5 out of 5 stars5/5Ragasiya Theevu Rating: 0 out of 5 stars0 ratingsOonjal Rating: 0 out of 5 stars0 ratingsEllaiyil Oru Ethan Rating: 0 out of 5 stars0 ratingsAabathu Aarambam Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kolvathellam Unmai
Related ebooks
Thedathey! Kidaikkathu! Rating: 0 out of 5 stars0 ratingsUn Parvai Oru Varam Rating: 0 out of 5 stars0 ratingsUn Paarvai Oru Varam Rating: 0 out of 5 stars0 ratingsRaathirigal Jakkirathai! Rating: 0 out of 5 stars0 ratingsApril Raathiri Rating: 0 out of 5 stars0 ratingsOru Koodai Punnagai Rating: 0 out of 5 stars0 ratingsKulire! Kulire! Kollathey! Rating: 5 out of 5 stars5/5Thuppakki Vidu Thoothu Rating: 0 out of 5 stars0 ratingsVayathu 17 Rating: 3 out of 5 stars3/5Sathamillamal Oru Satham Rating: 0 out of 5 stars0 ratingsMakeup Punnagai Rating: 5 out of 5 stars5/5Ninaikka Therindha Manamey! Rating: 0 out of 5 stars0 ratingsUnnale... Unnale… Rating: 5 out of 5 stars5/5Konal Nizhalai Thurathi! Rating: 0 out of 5 stars0 ratingsPagal Nera Alligal Rating: 5 out of 5 stars5/5En Kannathil Un Vannathupoochi Rating: 0 out of 5 stars0 ratingsKannai Nambathey Rating: 3 out of 5 stars3/5கண்ணை நம்பாதே Rating: 0 out of 5 stars0 ratingsOlivatharkku Vazhiillai Rating: 5 out of 5 stars5/5Pathungi Vaa Bharath! Rating: 0 out of 5 stars0 ratingsIndru Mudhal Ethiri Rating: 0 out of 5 stars0 ratingsNalliravu Droham Rating: 5 out of 5 stars5/5Unnidathil Ennai Koduthean Rating: 0 out of 5 stars0 ratingsAval Oru Savithri Rating: 5 out of 5 stars5/5Sirappu Yethiri Rating: 5 out of 5 stars5/5Uyir Painkili Rating: 0 out of 5 stars0 ratingsNaangu Paathai Vazhi Ondru Rating: 0 out of 5 stars0 ratingsஉன் பார்வை நான் அறிவேன்! Rating: 0 out of 5 stars0 ratingsUn Paarvai Naan Ariven Rating: 4 out of 5 stars4/5Innoru Seruppu Engey? Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Kolvathellam Unmai
0 ratings0 reviews
Book preview
Kolvathellam Unmai - Erode Karthik
https://www.pustaka.co.in
கொல்வதெல்லாம் உண்மை
Kolvathellam Unmai
Author:
ஈரோடு கார்த்திக்
Erode Karthik
For more books
https://www.pustaka.co.in/home/author/erode-karthik
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 1
அவன் ஒரு கொலை செய்வதற்காக இரவின் இருளில் காத்திருந்தான். அது ஒரு நெடுஞ்சாலை.சாலையோர மரங்களில் இருந்து உதிர்ந்த பூக்கள் நிறமிழந்து வாடிப்போய் கிடந்தன. அவற்றின் மீது கால் வைத்து அவன் நடந்து கொண்டிருந்தான். தூரத்து வானில் பெளர்ணமி நிலா யாரும் பார்க்காமல் காய்ந்து கொண்டிருந்தது. தெருவோர விளக்கு ஒன்று விட்டு விட்டு எரிந்து கொண்டிருந்தது. அதன் மின்னல் வெட்டு வெளிச்சத்தில் அவன் ஜெர்கினும் காட்டன் பேண்டும் அணிந்திருப்பது தெரிந்தது. தூரத்தில் தெரிந்த ஒன்றிரண்டு வீடுகளில் மட்டும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. எங்கோ ஒரு நாய் தனியாக ஊளையிட்டு கொண்டிருந்தது.
அவன் நிலை கொள்ளாமல் தவித்து கொண்டிருந்தான். முன்னும் பின்னுமாக பூக்களின் மேல் நடக்கத் துவங்கியவன் படபடப்பாக இருந்தான். கையில் கட்டியிருந்த வாட்சை நிமிடத்திற்கு ஒரு முறை பார்த்து கொண்டிருந்தான். அவனது அவசரம் புரியாமல் சின்னமுள் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. அவன் எதிர்பார்த்திருந்த ஆள் வரக்கூடிய நேரம் நெருங்கி கொண்டிருந்தது. அவன் அவசர அவசரமாக பேண்ட் பாக்கெட்டில் இருந்து கையுறைகளை எடுத்து சாவகாசமாக அணிந்து கொண்டான்.
பேண்டின் பின்புறத்தில் சொருகி வைத்திருந்த அந்த வினோத வடிவமைப்பு கொண்ட கத்தியை உருவிக்கொண்டான். அந்த கத்தி நடுவில் ஓட்டைகளோடு துணியில் ரம்ப பற்களோடு இருந்தது. அது அவனே உருவாக்கிய கத்தி. கடைகளில் அந்த மாதிரியான கத்தியை நீங்கள் தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது.
தன்னுடைய பழி தீர்க்கும் வைபவத்திற்காக அவனே பிரத்யேகமாக உருவாக்கிய அந்த கத்தி நிலவின் ஒளியில் பளபளத்தது. அந்த கத்தியை லாவகமாக ஒரு சுற்று சுற்றியவன் அதை காற்றில் ஒரு வீசுவிசினான். கத்தியின் கூர்முனை பட்டு அருகிலிருந்த செடியின் இலை ஒன்று துண்டிக்கப்பட்டு காற்றில் மிதந்து தரையிறங்கியது. அவன் திருப்தியுடன் தலையசைத்து சிரித்து கொண்டான். மீண்டும் கடிகாரத்தை பார்த்தவனின் முகத்தில் பரபரப்பு கூடியது. அவன் வரும் நேரம் நெருங்கி விட்டது. அவன் ஜெர்கினுக்குள் கத்தியை பதுக்கினான்
சாலையின் வளைவை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான். அவனது பிடறியில் ஒரு வேர்வை கோடு இறங்க ஆரம்பித்தது. அவனது இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது. பெருமூச்சு விட்டு அவன் மூச்சை ஸ்திரப்படுத்தி கொண்டான். சாலையின் வளைவில் வெளிச்சப்புள்ளிகள் இரண்டு தோன்றின. அவை காரின் ஹெட்லைட்டுகள் அவனது கண்கள் கூர்மையாகின. ஹெட்லைட் வெளிச்சத்திற்கு கீழே இருந்த நெம்பர் பிளேட்டை பார்த்தவன் முகத்தில் மகிழ்ச்சி ரேகைகள். அவன் எதிர்பார்த்த வண்டி இதுதான். வளைவிற்கு பிறகு இரண்டாம் கியரிலிருந்து மூன்றாம் கியருக்கு மாறிவண்டி வேகம் பிடித்தது.
அவன் நடுச்சாலைக்கு வந்தான். தனது வலது கையின் கட்டை விரலை தலைகீழாக காட்டினான். வேகம் பிடித்த கார் பிரேக்கடித்து தன் வேகத்தை குறைத்தது. காரை ஓட்டி வந்தவனுக்கு எரிச்சல் மண்டியது. இதுவரை சாலை ஓரத்தில் லிப்ட் கேட்பவர்களை அவன் பார்த்திருக்கிறான். யார் இவன்? நடுரோட்டில் நின்று லிப்ட் கேட்கிறான். அவன் கோபத்தோடு வண்டியை நிறுத்தினான்.
ஹெட்லைட் வெளிச்சத்தில் நடுரோட்டில் நின்றவன் தன் முகத்தை மறைத்திருந்த இடது கையை எடுத்தான்.
காரை நிறுத்தி கோபத்துடன் இறங்கியவன் அவனது முகத்தை பார்த்ததும் ஆச்சர்யத்துடன் நீங்களா? இங்கே எங்கே வந்தீர்கள்?
என்றான்.
நடுச்சாலையில் நின்றவன் காரை நெருங்கினான். உன்னை பார்க்கத்தான் இவ்வளவு நேரமாக காத்திருக்கிறேன்
போன் செய்திருந்தால் நானே உங்களை பார்க்க வந்திருப்பேனே? என்னை எதற்காக சந்திக்க நினைத்தீர்கள்?
உன்னை கர்த்தரிடம் அனுப்ப.
என்ன சொல்கிறிர்கள்?
அவன் மின்னல் வேகத்தில் ஜெர்கினில் இருந்த கத்தியை உருவினான். கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் என்ன நடக்கிறதென்று சுதாரிக்கும் முன்பாக அவன் நெஞ்சில் சரமாரியாக குத்தினான். அவன் அலற முயன்ற போது கத்தி அவனது குரல்வளையை அறுத்தது. அவனது துடிப்பு அடங்கும் வரை நிதானமாக பார்த்து கொண்டிருந்தவன் அவனது மூச்சு நின்று விட்டதை உறுதி செய்தவனாக அவனது வலது கையில் கத்தியால் ஒரு வட்டத்தை போட்டான். அதனுள் 4/10 என்று எழுதினான். பிறகு தன் நெற்றியில் சிலுவை குறியை போட்டு கொண்டு கத்தியோடு இருளில் மறைந்தான்.
அவன் உறுதியாக காரில் இறந்து போயிருந்தான்.
அத்தியாயம் 2
தன் செல்போனில் பப்ஜி விளையாடி கொண்டிருந்தான் வினோத். தன்னுடைய அறையிலிருந்து வெளியே வந்த அருண் ஹால் சோபாவில் விளையாட்டில் மூழ்கியிருந்த வினோத்தை பார்த்தான்.
முன்பெல்லாம் வேலை இல்லையென்றால் ஈ ஓட்டுவார்கள். இப்போது ஈ ஓட்டுவதற்கு பதிலாக வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
எந்த கேசும் கையில் இல்லை. வேறு என்ன செய்ய சொல்கிறீர்கள் பாஸ்.?
உன்னை கேம் விளையாடுமளவிற்கு ப்ரீயாக விட்டது என்னுடைய தப்பு. அலாவுதீன் பூதம் மாதிரி உனக்கும் ஏதாவது ஒரு வேலையை கொடுத்து கொண்டே இருக்கனும் போல.
வேலை ஏதாவது இருந்தால் கொடுங்கள் பாஸ். சும்மா இருப்பது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.
என்னடா! வடிவேல் மாதிரி பேசிக்கொண்டு இருக்கிறாய்?
என்ற போது கதவு தட்டப்பட்டது
அருண் கிளைண்ட்
என்றவன் நீ போய் கம்யூட்டர் முன்னால் உட்கார்ந்து இதே வேலையை செய்
பிசியாக இருப்பது போல் நடிக்க சொல்கிறீர்கள். புரிகிறது.
அதே
என்ற அருண் எஸ் கமின்
என்றான் கதவை பார்த்து.
கதவை திறந்து உள்ளே நுழைந்தவர் ரகுவரனின் உயரத்தில் இருந்தார்... கண்ணில் உயர்தரமான கூலிங் கிளாசும் உதட்டில் ஒரு பைப்பும் தொங்கியது. எதிரே நின்ற அருணை பார்த்தவர் ஐ ஆம் பிரான்சிஸ் அன்பரசு
என்று கையை நீட்டினார். அவரை சுற்றி ஒரு வினோத வாசனை சுற்றி சுழன்றது.
நீட்டிய கையை பற்றி குலுக்கிய அருண் பிளீஸ். உட்காருங்கள்
என்றான்
அன்பரசு சோபாவில் புதைந்தார். தன் கையில் இருந்த ஸ்டிக்கை சோபாவின் ஓரத்தில் வைத்தவர் சம்பிரதாயமான பேச்சுகள் வேண்டாம் மிஸ்டர் அருண். நான் ஒரு பிஸ்னஸ்மேன்.என் நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை
அப்படியானால் நேரடியாக விசயத்திற்கு வந்து விடுங்கள்
என்றான் அருண் அவர் கூலிங் கிளாசை நேராக பார்த்தபடி.
என் தம்பி சாமுவேல் ரத்னகுமாரை நேற்று இரவு யாரோ கொன்றுவிட்டார்கள். அந்த விலைமகள் மகனை நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும். இது பிளாங்க் செக். எவ்வளவு வேண்டுமோ அதை நிரப்பி கொள்ளுங்கள்
என்ற அன்பரசு கோட் பாக்கெட்டிலிருந்து ஒரு பிளாங்க் செக்கை நீட்டினார்.
அதை வாங்காமல் நின்ற அருண் நீங்கள் முழு விவரத்தையும் சொல்லவில்லையே?
என்றான்.
செக்கை டீப்பாயின் மேல் வைத்த அன்பரசு தன் போனை எடுத்து யாரையோ அழைத்தார்.
ரஞ்சன். நீ சொல்லித்தான் நான் இங்கு வந்தேன். நீயே பேசு.
என்றபடி போனை அருணிடம் நீட்டினார்.
ஹலோ
என்றான் அருண்.
நான் கமிசனர் ரஞ்சன். நான் தான் உங்களைரெக் கமண்ட் செய்தேன். இந்த கேசை எடுத்து கொள்ளுங்கள். எல்லா விவரங்களையும், உதவிகளையும் நான் செய்கிறேன்
"ஒகே சார். நான் உங்களை அலுவலகத்தில்