Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thedathey! Kidaikkathu!
Thedathey! Kidaikkathu!
Thedathey! Kidaikkathu!
Ebook110 pages40 minutes

Thedathey! Kidaikkathu!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காணாமல் போன ஒரு மல்டி மில்லியரின் மகனை இரண்டு துப்பறிவாளர்கள் தேடி கண்டு பிடிப்பதுதான் கதை.
Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580135306614
Thedathey! Kidaikkathu!

Read more from Erode Karthik

Related to Thedathey! Kidaikkathu!

Related ebooks

Related categories

Reviews for Thedathey! Kidaikkathu!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thedathey! Kidaikkathu! - Erode Karthik

    https://www.pustaka.co.in

    தேடாதே! கிடைக்காது!

    Thedathey! Kidaikkathu!

    Author:

    ஈரோடு கார்த்திக்

    Erode Karthik

    For more books

    https://www.pustaka.co.in/home/author/erode-karthik

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 1

    சாலையில் தன் கண் பார்வையை வைத்திருந்த அருணை நோக்கி கிருஷ்ணமூர்த்தி நம்மை எதற்காக கூப்பிட்டு இருப்பார் என்று நினைக்கிறீர்கள் பாஸ்! என்றான் வினோத்.

    பணம் நிறைய இருக்கும் இடத்தில் குற்றங்களும் நிறைய இருக்கும். அப்படியான ஏதோ ஒரு குற்றத்தில் நம் ஆள் அகப்பட்டு கொண்டிருக்கலாம். அதிலிருந்து விடுபட நம் உதவியை நாடி இருக்கலாம் என்றான் அருண் கரும் பாம்பாக நீண்டதார்சாலையிலிருந்து கண்களை விலக்காமல்.

    அந்த குற்றம் எந்த மாதிரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?எதிரிகளின் கொலை முயற்சி, பயமுறுத்தல், ஷேர் மார்கெட் தகிடுதத்தம், பெண் விவகாரம். எனி கெஸ்? என்றான் வினோத்.

    எதிர்பாராததை எதிர்பார் என்பது தான் வாழ்க்கையின் தத்துவம். இன்னும் பத்து நிமிடம் பொறு. அவர் நம்மை அழைத்த காரணம் வெளிச்சத்திற்கு வந்துவிடும்

    கிருஷ்ணமூர்த்தி நகரத்தின் மல்டி மில்லியனர்கள் லிஸ்டில் முதலிடத்தில் இருப்பவர். அவர் கம்பெனிகளின் பங்கும் அவரும் எப்போதும் உயரத்தில் இருப்பார்கள். உயரம் மீன்ஸ் ஏரோப்ளேன் பயணங்கள்.அவரது பாஸ்போர்ட் மூன்று மாதங்களில் நிரம்பி வழியுமளவிற்கு விமானத்தில் பறப்பவர். சமீபமாக தன் பயணங்களை குறைத்து கொண்டு இந்தியாவில் முடங்கி கிடப்பவர். அரசியல் ஆதாயத்தோடு எம் பி யாகி தேர்தல் நிதி மூலம் சில பல ஆதாயங்களை பெற்று பல கம்பெனிகளை திவாலாக்கி தான் ஈடுபட்ட எல்லா துறைகளிலும் தன் கொடியை பறக்க விட்டு கண்ணுக்கு தெரியாத பல எதிரிகளை சம்பாதித்து வைத்திருப்பவர். புது தொழிலதிபர்களுக்கு ரோல் மாடல். மனைவி இறந்த பின் தினம் ஒரு மனைவியை தற்காலிகமாக தேர்ந்தெடுத்து சூரியன் உதித்ததும் டைவர்ஸ் செய்பவர்.

    கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி இப்போது இவ்வளவு போதும். இனி கதை.

    J K இண்டஸ்ட்ரீஸ் என்ற கவர்ச்சிகரமான நியான் லைட் போர்ட் இருந்த அலுவலக முகப்பில் காரை நிறுத்திவிட்டு இருவரும் இறங்கினர். செக்யூரிட்டியின் விறைப்பான சல்யூட்டை ஏற்றுக் கொண்டு கண்ணாடி கதவை திறந்ததும் ஏ சி யின் குளிர் குபீரென உடலில் மோதியது.

    மைதா மாவை முகத்திற்கு கோட்டிங் கொடுத்திருந்த ரிசப்சனிஸ்ட் தன் லிப்ஸ்டிக் உதடுகளை திறந்து வாட் யூ வாண்ட் ஸார்? என்றாள்.

    உங்க பாசை பார்க்க வந்திருக்கோம். அருண், வினோத் என்று சொல்லுங்கள் என்றான் வினோத்.

    அவள் இண்டர்காமில் பேசிவிட்டு உங்களுக்காக காத்திருக்கிறார். வலது புறம் முதல் அறை என்றாள்.

    நன்றி! சண்டே இஸ்லாங்கர் தென் மண்டே என்றான் வினோத் வளைவு திரும்பும்போது. அவள் சட்டென்று ஜாக்கெட்டிலிருந்து விலகியிருந்த ஸ்ட்ராப்பை உள்ளே தள்ளினாள்.

    என்ன கருமம்டா இது?

    இனி எப்போதும் அந்த பொண்ணு என்னை மறக்காது.நினைவில் நீடித்திருக்க இதெல்லாம் சும்மா ஒரு டிரிக். கண்டுக்காதீங்க என்றான் வினோத்.

    எக் கெடோ கெட்டு ஓழி

    பொறாமை?

    அருண் தேக்கு கதவை தட்டி மே ஐ கம் இன் என்றான்.

    எஸ்'கம் இன் என்ற குரலுக்கு பின்னால் இருவரும் உள்ளே நுழைந்தனர். உள்ளே ஏசியின் விர் ஒலியும் ரூம் பிரஸ்னரின் வாசனையும் கலந்து வீசியது.

    உட்காருங்கள் என்ற கிருஷ்ணமூர்த்தியின் கைகளை பற்றி குலுக்கினான் அருண்.

    இவன் என்னோட அசிஸ்டெண்ட் வினோத் என்றதும் வினோத் கைகளை நீட்டினான். மூலவரே பிரதானம் என்று அந்த கையை புறக்கணித்தவர் பீ சிட்டேட் என்றார்.

    வினோத் அவசரமாக அவமானத்தை தவிர்க்க பேண்ட் கர்ச்சிப்பை எடுத்து கொண்டு நாற்காலியில் புதைந்தான்.

    எனக்கு ஒரு பிரச்சனை என்றார் கிருஷ்ணமூர்த்தி தாடையை சொரிந்தபடி.

    பிரச்சனை வந்தால் தான் கடவுள், எங்களையெல்லாம் உங்களுக்கு ஞாபகம் வரும்

    என் ப்ரண்ட் சாரதி உங்களைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறான். இந்த பிரச்சனையை நீங்கதான் தீர்க்க முடியும். அதனால் தான் உங்களை அழைத்தேன்.

    சொல்லுங்கள்

    என் மகனை காணவில்லை. நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும்.

    எங்கள் எதிர்பார்ப்பு பட்டியலில் இது இல்லை! என்றான் வினோத்.

    பையனுக்கு பெயர் வைச்சிருந்தா அதை சொல்லுங்க!  வயது, போட்டோ?

    எல்லாம் இந்த பைலில் இருக்கிறது. படித்து தெரிந்து கொள். அமுதன் தாய் இல்லாத பிள்ளை.செல்லம் கொடுத்து வளர்த்தது தப்பாகி விட்டது.

    அமுதன் காணாமல் போய் எத்தனை நாட்களாகிறது?

    இன்றோடு 40 நாட்கள்

    வாட்? ஏன் இன்னும் போலீசில் புகார் செய்யவில்லை.

    "என்னுடைய கம்பெனி ஷேர் முழுவதும் அவன் பெயரில் வாங்கி வைத்திருக்கிறேன். அதனுடைய மொத்த மதிப்பு 300 கோடி.அவன்அவனுடைய கையெழுத்தோட மதிப்பு 300 கோடி. தொலைந்து போன அவனை யாராவது கண்டுபிடிப்பது புதையல் கிடைப்பது மாதிரி..அவனை யாராவது கண்டுபிடித்து அவற்றில்கையெழுத்து வாங்கி விட்டாலோ ப்ளாக்மெய்ல்

    Enjoying the preview?
    Page 1 of 1