Avan Peyar Aathithan
()
About this ebook
சதியால் கொல்லப்பட்ட அரசனின் மர்ம மரணத்தை ஆதித்தன் தன் பாணியில் கண்டுபிடிப்பதுதான் கதை.
Read more from Erode Karthik
Aaru Mani Nerangal Rating: 5 out of 5 stars5/5Kolvathellam Unmai Rating: 0 out of 5 stars0 ratingsKaala Vettai Rating: 0 out of 5 stars0 ratingsMannil Maraiyum Minnal Rating: 0 out of 5 stars0 ratingsMeendum Athithan Rating: 0 out of 5 stars0 ratingsSiraiyil Oru Siruthai Rating: 0 out of 5 stars0 ratingsIdhayathai Thirudiyavan Rating: 0 out of 5 stars0 ratingsVengiyin Mohini Rating: 0 out of 5 stars0 ratingsMarma Yogi Rating: 0 out of 5 stars0 ratingsThedathey! Kidaikkathu! Rating: 0 out of 5 stars0 ratingsNaangu Paathai Vazhi Ondru Rating: 0 out of 5 stars0 ratingsKulire! Kulire! Kollathey! Rating: 5 out of 5 stars5/5Ragasiya Theevu Rating: 0 out of 5 stars0 ratingsOonjal Rating: 0 out of 5 stars0 ratingsEllaiyil Oru Ethan Rating: 0 out of 5 stars0 ratingsAabathu Aarambam Rating: 0 out of 5 stars0 ratings
Related to Avan Peyar Aathithan
Related ebooks
Naangu Paathai Vazhi Ondru Rating: 0 out of 5 stars0 ratingsApril Raathiri Rating: 0 out of 5 stars0 ratingsSuvadikal Sonnathillai Rating: 0 out of 5 stars0 ratingsSiraiyil Oru Siruthai Rating: 0 out of 5 stars0 ratingsFBI Rating: 0 out of 5 stars0 ratingsThedathey! Kidaikkathu! Rating: 0 out of 5 stars0 ratingsUyir Rating: 0 out of 5 stars0 ratingsDhik Dhik Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsVivek Irukka Payamen-II Rating: 4 out of 5 stars4/5அன்பே இந்தியா Rating: 0 out of 5 stars0 ratingsVettri Thilagam Rating: 0 out of 5 stars0 ratingsAnbe India! Rating: 0 out of 5 stars0 ratingsUlavu Ranigal Rating: 0 out of 5 stars0 ratingsதொடுவானம் Rating: 0 out of 5 stars0 ratingsThoduvaanam Rating: 0 out of 5 stars0 ratingsSithainthavan Varugai Rating: 5 out of 5 stars5/5எல்லாச் சாலைகளும் குற்றங்களை நோக்கி... Rating: 0 out of 5 stars0 ratingsElla Saalaikalum Kutrangalai Nokki Rating: 5 out of 5 stars5/5Ini Ithu Vithi Rating: 0 out of 5 stars0 ratingsAsura Jathagam Rating: 5 out of 5 stars5/5Meen Kothi! Rating: 0 out of 5 stars0 ratingsPallava Sundari Rating: 0 out of 5 stars0 ratingsProfessional Killer Rating: 3 out of 5 stars3/5Mohini Illam Rating: 0 out of 5 stars0 ratingsOlivatharkku Idamillai Part - 2 Rating: 5 out of 5 stars5/5Aatril Oru Kaal Setril Oru Kaal Rating: 0 out of 5 stars0 ratingsPagalil Baama Iravil Hema Rating: 3 out of 5 stars3/5Nandhi Ragasiyam Rating: 5 out of 5 stars5/5Maranam Unnai Mannikkattum Rating: 5 out of 5 stars5/5Dinasari Moondru Kolaigal Rating: 4 out of 5 stars4/5
Reviews for Avan Peyar Aathithan
0 ratings0 reviews
Book preview
Avan Peyar Aathithan - Erode Karthik
https://www.pustaka.co.in
அவன் பெயர் ஆதித்தன்
Avan Peyar Aathithan
Author:
ஈரோடு கார்த்திக்
Erode Karthick
For more books
https://www.pustaka.co.in/home/author/erode-karthik
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 1
இரவுச் சூரியன் வானத்தின் உச்சியை நோக்கி பயணப்பட தொடங்கியிருந்தான். பகல் முழுவதும் இரை தேடி பறந்து களைப்படைந்த பறவையினங்கள் தங்கள் கூடுகளில் உறங்க தொடங்கியிருந்தன. ஊரும் நாடும் உறங்கி கொண்டிருந்த அர்த்தஜாம வேளையில் சில வண்டுகளின் ரிங்காரம் பிண்ணனி இசையாக ஓ லித்து கொண்டிருந்த இரவு பொழுதில் மதுராபுரியின் அரண்மனையில் இரண்டு பேர் உறங்காமல் விழித்துக் கொண்டிருந்தனர். ஒருவன் மதுராபுரியின் ராஜகுருவும் தலைமை அமைச்சருமான பிரம்மராயர். இன்னொருவன் அவரது அந்தரங்க உதவியாள். அறையில் தீபத்தின் ஓளி மங்கலாக விழுந்து பரவிக் கொண்டிருந்தது. அந்த வெளிச்சத்தில்ராயரின் முகத்தில் குழப்பத்தின் ரேகைகள் படர்ந்திருப்பது அரைகுறையாக தெரிந்தது.
ராயர் தன் தொண்டையை செருமிக்கொண்டு ஆரம்பித்தார். என்ன செய்வதென்று எனக்கு புரியவில்லை
என்றார் ராயர்.
இளவரசர் மன்னனாக பதவியேற்று ஒரு வாரம் கடந்து விட்டது.மன்னரை வேட்டைக்கு அழைத்து சென்று பிணமாக அழைத்து வந்திருக்கிறார் தளபதி நஞ்சுண்டன்.கானகத்தில் வழி தவறிய மன்னரை புலி தாக்கி கொன்றதாக தளபதி கூறுவதை நாடும் நம்பவில்லை.நாமும் நம்பவில்லை.அது அப்பட்டமான ஒரு கொலையென்றே மக்கள் கருதுகிறார்கள்.அதனால்தான் அவசர அவசரமாக இளவரசரை மன்னனாக்கினீர்கள்.முதல் வழக்காக மறைந்த மன்னரின் மரணத்தை எடுத்திருக்க வேண்டும். நஞ்சுண்டனை தண்டித்திருக்க வேண்டும்.மதியுக மந்திரியான நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள்.உங்கள் அமைதியின் பொருள் எனக்கு புரியவில்லை!
என்றான் ராயரின் உதவியாள் புகழேந்தி.!
பிரம்மராயரின் முகத்தில் ஒரு புன்னகை மலர்ந்தது.
புலி பதுங்குவது பாய்வதற்காகத்தான்.மன்னரை வஞ்சகமாக கொன்றுவிட்டு இளவரசரை கைப்பாவையாக்கி மறைமுகமாக தன்னுடைய ஆட்சியை செலுத்த நினைக்கிறான் நஞ்சுண்டன்.அதனால்தான் இளவரசரை மன்னனாக்கி யாக வேள்வி என்ற பெயரில் நஞ்சுண்டன் அவரை நெருங்காமல் பாதுகாத்து வைத்திருக்கிறேன். அரசருக்கு உலகம் புரியாத பால்ய வயது. வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கும் வயது .அவரைதீய பழக்கங்களுக்கு அடிமையாக்குவது எளிது.மது, மாது என்று ஏராளமான விசயங்கள் அவர் மதியை கெடுக்க இருக்கின்றன.அரசரோடு இயற்கை காட்சிகளை ஓவியமாக தீட்ட நம் அரண்மனை ஓவியரும் உடன் சென்றிருக்கிறார்.மன்னரின் மரணத்தின் போது அருகே இருந்தவர் அவர்தான்.அது மனித தாக்குதலா இல்லை நிஜமான புலியின் தாக்குதலா என்பதை அவர் வரைந்த ஓவியம் உறுதி செய்யும்!
அவர் பிறவி ஊமையாயிற்றே?
ஆனால் அவரின் ஓவியம் உண்மையை பேசுமே? அவர் என் கண்களை நேருக்கு நேராக பார்க்க மறுக்கிறார். அவருக்கு ஏதோ ஒரு உண்மை தெரிந்திருக்கிறது. அதை சொல்லவிடாமல் அவரது பிறவிக் குறையையும் தாண்டி வேறு ஏதோ ஓன்று தடுக்கிறது.
நஞ்சுண்டன் அவரை விலைக்கு வாங்கியிருந்தால் அல்லது அச்சுறுத்தியிருந்தால் அவர் பொய்யான விசயத்தைதானே வரைந்திருப்பார்?
அதற்கும் வாய்ப்பு இருக்கிறதுதான்.ஆனால் அதை கண்டு பிடிக்கவல்லவன் ஒருவன் இருக்கிறான். அவனால் மன்னரின் மர்ம மரணத்தை கண்டறிய இயலும்.
யார் அந்த மதியூகி? உங்களை விடவும் வல்லவனா?
ஆம்.என்னை விடவும் வல்லவன்தான்.நீரில் மீன் சென்ற தடத்தையும் துல்லியமாக அறியும் ஆற்றல் பெற்றவன். நான் அவரது ஓவியங்களை பார்வையிட்டு விட்டேன். என் அறிவுக்கு எட்டியவரை அந்த சித்திரங்கள் மன்னரின் இறுதி நேரத்தை பிரதிபலிப்பதாகவே தோன்றுகின்றன. அவற்றுள் புதைந்திருக்கும் மர்மத்தை என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை. ஆனால் ஒருவனால் அது முடியும். அவன் பல்துறை வல்லுநன் .
யார் அவன்?
அவனொரு கள்வன்!
என்ன கள்வனா?
பிறப்பால் கள்வன்.உள்ளத்தால்உயர்ந்த மனம் கொண்டவன்.அவனை தவிர வேறு யாராலும் இந்த முடிச்சை அவிழ்க்க முடியாது.
ஒரு கள்வனை நீங்கள் புகழ்ந்து பேசுவது எனக்கு வியப்பை தருகிறது!
"நான் அவனது திறமையை நேரிலேயே கண்டிருக்கிறேன்.நாளை அரசவையில் ஓவியர் வரைந்த மன்னரின் இறுதி காட்சிகள் அடங்கிய ஓவியம் மக்களின் பார்வைக்கு வைக்கப்படும். அந்த ஓவியங்களை பார்வையிடும் மக்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து கொள்ளட்டும்.அதை பார்வையிடும் மக்களே நஞ்சுண்டனின் மீதான தீர்ப்பை எழுதட்டும்.நஞ்சுண்டன் மீது எந்த சந்தேகமும் மக்களுக்கு