Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manam Veesum Malargal
Manam Veesum Malargal
Manam Veesum Malargal
Ebook90 pages40 minutes

Manam Veesum Malargal

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Parimala Rajendran, an exceptional Tamil novelist, written over 300+ novels. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateFeb 1, 2018
ISBN9781043466374
Manam Veesum Malargal

Read more from Parimala Rajendran

Related to Manam Veesum Malargal

Related ebooks

Related categories

Reviews for Manam Veesum Malargal

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manam Veesum Malargal - Parimala Rajendran

    13

    1

    மொட்டை மாடியின் கைப்பிடி சுவரில் உட்கார்ந்திருக்கிறான் விக்ரம். திருவண்ணாமலையில் ஏற்றி வைத்த மகா தீபம் செந்நிற கதிர்களுடன் ஒளி தரும் காட்சி, கண்ணெதிரே அற்புதமாய் தெரிகிறது.

    தன்னையறியாமலேயே அவன் கைகள் கன்னத்தில் போட்டுக் கொள்கிறது. படிப்பு முடிய இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. அதன்பின் ஒரு வேலை தேடிக்கொண்டு, இந்த ஊரையே மறந்துவிட வேண்டும்.

    ஹாஸ்டலில் இருந்து படிக்கிற பையன். லீவுக்கு கூட வீட்டுப்பக்கம் வராமல் இருக்கிறியேப்பா. குரல் தாழ்த்தி பவ்யமாக கேட்கும் அப்பாவை எரிச்சலுடன் பார்க்கிறான்.

    எதுக்கு வரணும். ஒரேடியாக உங்களையெல்லாம் விட்டு ஒழிஞ்சுபோக இன்னும் நாள் வரலையேன்னு காத்திட்டு இருக்கேன்.

    அமிலமாய் வார்த்தைகள் வந்து விழ, மேல் துண்டால் முகத்தை துடைத்தபடி இடத்தை விட்டு நகர்வார் மாணிக்கம்.

    மனைவி இறந்த ஆறு மாதத்தில் இன்னொருத்தியை தாலி கட்டி கூட்டி வந்தவர்தானே... மிருக ஜென்மம். ப்ளஸ்டூ படிக்கும் மகன். வயதுக்கு வரும் பருவத்தில் மகள்... இந்த வயதில் இன்னொரு கல்யாணம் தேவையா...?

    அதுவும் கல்யாணமான பத்தாவது மாதத்தில் அவள் மூலமாக இன்னொரு குழந்தை. இப்போது அவனுக்கு ஐந்து வயது.

    அப்பாவை நினைக்க எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது.

    இதேபோல ஒரு கார்த்திகை மாதம். அப்போது விக்ரம் ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தான்.

    அம்மா அழகாக கொண்டை போட்டு, அதில் முல்லை சரத்தை வளைவாக வைத்திருந்தாள். அகன்ற நெற்றியில் குங்குமப் பொட்டு, அதன் மேல் சிறுகீற்றாய் விபூதி. சிகப்பு நிற காட்டன் சேலை அவள் நிறத்தை கூட்டிக் காட்டியது.

    என் அம்மா... மகாலட்சுமி போல் அவ்வளவு அழகு. பார்க்கும் போதெல்லாம் மனதில் தோன்றும் எண்ணம்.

    என்ன விக்ரம் - அம்மாவை புதுசா பார்ப்பது போல அப்படி பார்க்கிறே.

    அம்மா நீ ரொம்ப அழகா இருக்கே தெரியுமா அவளருகில் வந்து தலையை கோதுகிறாள்.

    நீ கூடத்தான் அழகா இருக்கே...

    அதற்கு மேல் பேச முடியாமல் வழக்கமாக வரும் தொடர் இருமல் வர,

    சட்டென்று எழுந்தவன்,

    இரும்மா போய் தண்ணி எடுத்துட்டு வரேன் அவள் பதிலுக்கு காத்திராமல் உள்ளே ஓடுகிறான்.

    இப்ப எப்படிம்மா இருக்கு.

    அவள் நெஞ்சை மெல்ல நீவி விடும் அவன் கைகளை பிடித்தவள்,

    அம்மா மேலே உனக்கு அவ்வளவு பிரியமா விக்ரம் என்றாள்.

    அதோ தெரியுதே மலை, அதை விட அதிகமான அளவு உன்னை பிடிக்கும்மா...

    பளபளக்கும் அவன் கண்களை பார்த்தவள், மகனை தழுவுகிறாள்.

    அம்மா, அண்ணாமலையார் கோவிலுக்கு போறேன். நீ சமர்த்தா உட்கார்ந்து படிக்கிறியா விக்ரம். வித்யா பக்கத்து வீட்டில் விளையாடறா... வந்தா கை, கால் அலம்பிட்டு படிக்கச் சொல்றியா.

    சரிம்மா... நீ சீக்கிரம் வந்துடு... அம்மா... தினமும்தான் கோவிலுக்கு போறே... சுவாமின்னா... உனக்கு அவ்வளவு பிடிக்குமா.

    "சிறு பிள்ளைத்தனமாக கேட்கிறியே விக்ரம். நான் இந்த ஊரிலேயே பிறந்து, வளர்ந்து, இங்கேயே உன் அப்பாவை கல்யாணம் பண்ணி வாழ்ந்துட்டு இருக்கேன். இதுக்கெல்லாம் காரணம், நான் கும்பிடற அண்ணாமலையார்தான், தெரியுமா?

    அதுவும் இது கார்த்திகை மாதம். நாளைக்கு மலையில் மகா தீபம் ஏத்துவாங்க. அதையெல்லாம் அருகில் இருந்து தரிசனம் பண்ண கொடுத்து வச்சிருக்கோம் தெரியுமா?"

    அம்மா, நம்ப ஊரில் நிறைய கோவில் இருக்கு இல்லையாமா?

    ம்... ஆமாம் அப்பா வர இன்னைக்கு லேட்டாகும்னு சொல்லிட்டு போயிருக்காரு. அம்மா சீக்கிரம் வந்து டிபன் செய்து தரேன்.

    சொன்னவள், இரும தொடங்க,

    ஏன்ம்மா... உனக்கு இந்த இருமல் அடிக்கடி வருது. டாக்டர்கிட்டே போய் காண்பிக்க கூடாதாம்மா.

    விக்ரம் கண்ணா, அம்மா டாக்டர்கிட்டே காண்பிச்சு மருந்து சாப்பிட்டுகிட்டுதான் இருக்கேன். இந்த இருமல் என்கூடவே பிறந்தது. சரியாகும்போது ஆகட்டும்.

    அம்மா இங்கேயிருந்து கோபுரம் தெரியுதுதானே. அதை பார்த்து கும்பிடும்மா... கோவிலுக்கு போக வேண்டாம். அப்பாவும் இல்லை... நீ வீட்டில் இரும்மா. கெஞ்சுதலாக கேட்கும் மகனை பார்த்தவள்,

    சரி, இன்னைக்கு உனக்காக இங்கேயே இருக்கேன். சந்தோஷமா விக்ரம்.

    அருகில் உட்காரும் அம்மாவின் மடி மீது தலை வைத்து படுக்கிறான்.

    தினமும் கோவிலுக்கு போறியே. அந்த சாமியை பத்தி சொல்லும்மா...

    "சரி சொல்றேன் கவனமாக கேட்கணும். அந்த கோவிலில் வீற்றிருக்கும் தெய்வம் அண்ணாமலையார். பெண் தெய்வம் அபிதகுஜலாம்பாள், உண்ணா முலையாள்னு அழைப்பாங்க.

    லிங்கமே மலையாக அமைந்த ஊர்தான், திருவண்ணாமலை.

    ஒன்பது கோபுரம், ஏழு பிரகாரங்கள் இருக்கு. கோவில் இருக்கிற இடம் 25 ஏக்கர்.

    மலையில் நிறைய சித்தர்கள் இன்னும் வாழ்ந்துட்டு இருக்கிறதாக சொல்றாங்க."

    அம்மா, உனக்கு நிறைய விஷயங்கள் தெரியுதே, எப்படிம்மா.

    தலையில் செல்லமாக தட்டியவள்,

    Enjoying the preview?
    Page 1 of 1