Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maalai Nera Kanavugal
Maalai Nera Kanavugal
Maalai Nera Kanavugal
Ebook82 pages30 minutes

Maalai Nera Kanavugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மாலை நேரக் கனவுகள் கதையில் வரும் ராதா, துணை நடிகையாகவே அவ்வப்பொழுது தலைகாட்டியவள். இன்று பிரபலமாயிருக்கும் நடிகைகள் பலர், அவள் மூலம் அறிமுகமானவர்கள். ராதா தன் வளர்ப்பு மகளுக்கு திருமணம் செய்து பார்க்க வேண்டுமென ஆசைப்படுகிறாள். அந்தப் பெண்ணோ பெரிய நடிகையாக வர வேண்டுமென்று விரும்புகிறாள்... அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறியவள், நடிகையானாளா?

இதைப் போன்ற இன்னும் பல வித்தியாசமான கதாபாத்திரங்கள் உயிரோடு உலாவும் இந்த கதை, இப்போது உங்கள் கைகளில்.

Languageதமிழ்
Release dateJan 14, 2023
ISBN6580110009132
Maalai Nera Kanavugal

Read more from Anuradha Ramanan

Related to Maalai Nera Kanavugal

Related ebooks

Reviews for Maalai Nera Kanavugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maalai Nera Kanavugal - Anuradha Ramanan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மாலை நேரக் கனவுகள்

    Maalai Nera Kanavugal

    Author:

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    முன்னுரை

    அனும்மாவும் நானும் இந்தக் கதைகளும்...

    அனுராதா ரமணனின் கதைகளை, அவருடைய முத்து முத்தான கையெழுத்தில், அச்சில் ஏறுவதற்கு முன் சுடச்சுட படித்து அனுபவித்த பாக்கியசாலி நான்...

    முன்னுரை எழுதுவதற்காக, மீண்டும் படிக்க சந்தர்ப்பம் கிடைத்ததில் எனக்கு மட்டில்லா மகிழ்ச்சி.

    மாலை நேர கனவுகள்:

    அனும்மா கதைகளில் வரும் கதாபாத்திரங்கள், நமக்கு மிகவும் பரிச்சயமான, நம்மிடையே நடமாடும் சக மனிதர்கள். அவர்களின் சந்தோஷங்கள், வருத்தங்கள், சோகங்கள், வாழ்க்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்கள், இவற்றைத் தன் எழுத்தில் பிரதிபலிப்பதே அனும்மாவின் வெற்றி ரகசியம்.

    படிப்பவர்களுக்கு அவர்களையோ, அவர்களைச் சேர்ந்தவர்களையோ கண்டிப்பாக ஞாபகப்படுத்தும். மனித உறவுகளை, அவர்களின் போராட்டங்களை இவ்வளவு அழகாகவும், நேர்த்தியாகவும் சொல்ல முடியுமா என்று வியந்திருக்கிறேன்...

    மாலை நேரக் கனவுகள் கதையில் வரும் ராதா, துணை நடிகையாகவே அவ்வப்பொழுது தலைகாட்டியவள். இன்று பிரபலமாயிருக்கும் நடிகைகள் பலர், அவள் மூலம் அறிமுகமானவர்கள். ராதா தன் வளர்ப்பு மகளுக்கு திருமணம் செய்து பார்க்க வேண்டுமென ஆசைப்படுகிறாள். அந்தப் பெண்ணோ பெரிய நடிகையாக வர வேண்டுமென்று விரும்புகிறாள்... அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறியவள், நடிகையானாளா?

    இதைப் போன்ற இன்னும் பல வித்தியாசமான கதாபாத்திரங்கள் உயிரோடு உலாவும் இந்த கதை இப்போது உங்கள் கைகளில்.

    அன்புடன்

    ஜெயந்தி சுரேஷ்

    1

    தாராவுக்கு எல்லாமே புது அனுபவமாக இருந்தது. இன்று நேற்றில்லை.

    ஒரு மாத காலமாக தினம் ஒரு அனுபவம்.

    எங்கேயோ சங்கிலியாண்டார் புரத்தில் அப்பனுக்கு சமைத்து போட்டுவிட்டு, கட்டிலோடு படுத்தபடி இவளை வாயில் வந்தபடியெல்லாம் திட்டும் சித்திக்காரிக்கு ஆயிரம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அவசர அவசரமாய் பக்கத்திலிருக்கும் பள்ளிக்கூடத்துக்கு ஓடுவாள்.

    இவள் படிப்பு என்னவோ பத்தாம் கிளாஸோடு சரி, ஆனால் ஊர் ஜனங்களுக்கு இவள் டீச்சரம்மா. பத்தாவது படித்தவளுக்கு யார் டீச்சர் உத்தியோகம் தருவாங்களாம்?

    சும்மா, அவளாக எடுத்து மாட்டிக்கொண்ட பட்டம்தான்.

    பக்கத்து டவுனில் இங்கிலீஷ் படிப்பு படிக்கும் வால்களைக் கட்டி ஒழுங்காய் ஸ்கூலில் கொண்டு விட்டு அழைத்து வரவேண்டிய ஆயா வேலைதான்.

    பதினெட்டு வயசுப் பெண்ணை - ஆயா என்று சொல்ல ஒரு மாதிரியாக இருந்ததால் அந்த ஊர் ஜனங்கள், அவளை ‘டீச்சரம்மா’வாக்கிவிட்டார்கள் போல!

    அப்படியே இருந்திருக்கலாம்!

    இப்படி - சென்னை ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் ஒவ்வொரு மூச்சுக்கும் அல்லாடி கொண்டிருக்கும்... இவள் பெயரென்ன...

    எழுப்பிக் கேட்டால் சொல்லும் நிலையில் அவள் இல்லை. தாராவுக்கும் நினைவில்லை...

    அவளை சந்தித்து முழுசாய் இன்னும் இரண்டு நாள்கூட ஆகவில்லை... நடுவில் யாரோ இந்த அம்மாளின் பெயரைச் சொன்னதாக ஞாபகம்...

    ‘என்னவோ சொன்னாங்களே...’

    ‘ஆங்... ரங்கோன் ராதாவுக்கு மறுபடியும் இசுப்பு கண்டுத்துடா... ரிக்‌ஷாவை எடு... இந்தாப் பொண்ணு, கொஞ்சம் சுடுதண்ணி கொண்டா...’

    தாரா, அவசரமாய் அடுப்பை பற்ற வைத்து, வெந்நீர் வைத்துக் கொண்டு வந்தாள்.

    இதற்குள் சேரியிலிருந்த எவளோ ஒருத்தி நெஞ்சிலும் தலையிலும் அடித்துக் கொண்டு அழுதாள்.

    என்னைப் பெத்த மகராசி... வந்த பொண்ணுங்களை எல்லாம் வாழ வைப்பியே! உன் சோத்தை தின்று, நீ செஞ்சு விட்ட அலங்காரத்தோட மேக்கப் டெஸ்ட்டுக்குப் போனவளுக எல்லாம் இன்னிக்கு தமிழ்லே மாத்திரமில்லாம, இந்தியில் கூட கொடிகட்டிப் பறக்கறாளுங்களேடி... அம்மா... உன் பேரு சொன்னா - கோடம்பாக்கமே என்னான்னு கேட்குமே... இன்னிக்கு உன்னை வந்து பார்க்க யாருமில்லையே... எவளுக்கும் உன்னைப் பார்க்க நேரமில்லாமப் போச்சே!

    "அத்த விடு... கண்ணே,

    Enjoying the preview?
    Page 1 of 1