Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Yaarai Kolai Seyyanum?
Yaarai Kolai Seyyanum?
Yaarai Kolai Seyyanum?
Ebook102 pages38 minutes

Yaarai Kolai Seyyanum?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மராத்தியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் திருமதி ஹம்சா தனகோபால் தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார். எண்ணில் அடங்கா புதினங்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் படைத்துள்ள இவர் இரண்டு கவிதை தொகுப்புக்களுக்கும் உரியவர். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் பெண் சிசு கொலையை வன்மையாக கண்டித்தும் எழுதியுள்ளார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாய் "அன்று ஒரு நாள் " என்ற புதினத்தை படைத்துள்ளார். இந்த புதினத்திற்கான அணிந்துரையை அழகுப்படுத்தியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்..

மத்திய அரசின் "பாஷா பாரதி சம்மான்" விருது, ரஷ்யா புஷ்கின் இலக்கிய விருது, தமிழக சிறந்த நூலாசிரியருக்கான விருது எனபற்பல விருது பெற்றுள்ள இவர் அண்மையில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான தமிழ் நாடு அரசின் "அம்மா இலக்கிய விருது - 2016" பெற்றது இவருக்கு தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் அளிக்கிறது.

நாற்பது ஆண்டுகளாய் தொடரும் இவரது எழுத்துப்பணி சமூக உயர்வுக்காக மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580114203292
Yaarai Kolai Seyyanum?

Read more from Hamsa Dhanagopal

Related to Yaarai Kolai Seyyanum?

Related ebooks

Reviews for Yaarai Kolai Seyyanum?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Yaarai Kolai Seyyanum? - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    யாரைக் கொலை செய்யணும்?

    Yaarai Kolai Seyyanum?

    Author:

    ஹம்சா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For more books

    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    சிவகாமி அம்மாள் லாமினேஷினில் சிரிக்கும் மகள் துஷ்யந்தியின் படத்தைப் பார்த்தார். இருபது நிறையாத அல்லி மலரென மகள் விழிகளில் மின்னல். இந்தச் செல்ல இளவரசிக்கு ஏற்ற இளவரசனைத் தேடியாக வேண்டும். இந்தப் பருவ மலர் இவள் தோளில் கனக்கும் இரும்புத் தூண்.

    தரகர் கொடுத்துப் போன புகைப்படங்களைப் பார்த்தாள் சிவகாமி. இளம் வாலிபர்கள் புகைப்படங்களாய்... டாக்டர், என்ஜினியர், வியாபாரிகள் என இவள் மருமகனாய் வரத் தூது அனுப்பி.. அவர்கள் கல்வி, குடும்பப் பின்னணி ஒவ்வொரு புகைப்படத்துடன் இணைக்கப்பட்டு...

    தொலைபேசி சுநாதமாய்க் குரல் கொடுக்கிறது.

    ஹலோ, யாருங்க?

    நான் டாக்டர் சுகந்தன் பேசறேன்.

    சுகந்தனா. அப்படி யாரும் எனக்குத் தெரியாதேப்பா, நீ யார்?

    உங்க மருமகன் டாக்டர் சுகந்தன். உங்க மகள் துஷ்யந்தியோட கணவன்.

    உளராதே, பைத்தியக்கார ஹாஸ்பிடல்ல இருந்து பேசறியா? என் மகளுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை. முதல்ல நீ போனைக் கீழே வை. இல்லே, போலீஸை அழைப்பேன்.

    பதறாம கேளுங்க. துஷ்யந்தியும் நானும் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்துட்டோம். கோயில்லயும் மாலை மாத்திக் கல்யாணம் செய்துட்டோம். உங்ககிட்ட ஆசி வாங்கத்தான் அழைச்சேன்.

    "சிவகாமிக்குக் கண்கள் இருண்டு, இதயம் புறாவாய் அடித்துக் கொள்கிறது. மயக்கம் வரும்போல உடல் சில்லிடுகிறது, போனருகில் கிடந்த நாற்காலியை இழுத்து அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொள்கிறாள்.

    தம்பி… உன் பெயர் என்னப்பா சொன்னே?

    சுகந்தன் அத்தை.

    அத்தைன்னு அழைக்கறது இருக்கட்டும். துஷ்யந்தி அங்கே இருக்காளா?

    என் பக்கத்தில் பூமாலையோட வெக்கப்படாம நிக்கறா அத்தை. சில்க் ஸாரி, நகைன்னு தேவதைக் கணக்கிலே இருக்கா.

    சிவகாமிக்குள் அதிர்ச்சி வெளியேறிக் கோபம் குடி கொள்கிறது.

    அவளைப் பேசச் சொல்லுப்பா.

    மறு விநாடி இவன் மடியேந்தி தோள் சுமந்து வளர்த்த கிளியின் குரல் இவள் செவிகளில்.

    அம்மா, என்னை மன்னிச்சிரும்மா.

    துஷ்யந்தி, உனக்கு நாங்க என்னம்மா தீங்கு செய்தோம்? ஏம்மா இப்படிச் செய்துட்ட. உனக்கு இப்பத்தான் நான் வரன் பார்த்துட்டிருக்கேன். பிக்னிக் போறதாச் சொல்லிட்டுப் போனே, இப்ப புருஷனோட… என்னம்மா இது! என்னாலே நம்பவே முடியலை. உன் அண்ணா எப்படித் தாங்கிப்பான், மத்தவங்க முன்னாடி எப்படிம்மா தலை நிமிர்ந்து...

    பார்த்தியாமா. இதுக்குத்தான், இந்த உபதேசம், அறிவுரைக்குப் பயந்துதான் நான் பேசலை. என் மனசுக்குப் பிடிச்சவரை நானே தேர்ந்தெடுத்துட்டேன். இதில் என்ன தப்பு?

    இப்படிச் சொல்ல உனக்கு வெட்கமா இல்லை துஷ்யந்தி? இன்னும் உனக்கு இருபது வயசு கூட நிறையலை. எங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லலை...

    அம்மா, அதிகம் பேசாதே. உனக்கோ பி.பி, உடம்புக்கு ஆகாது. நாளைக்கு ஈவினிங் ‘உட்லண்ட்ஸ் ஹோட்டல்’ல எங்க ரிஸப்சன். நீயும் விஜியண்ணாவும் வந்திருங்க, அண்ணா கிட்ட சொல்லிரு.

    நீ எங்கேருந்து பேசறே துஷ்யந்தி?

    சிவகாமி, தொலைபேசியைக் காதருகில் வைத்திருக்கும்போதே அது இவளுக்கும் மகளுக்குமான உரையாடலை வெட்டியிருந்தது.

    சிவகாமியால் உடனே தன் உணர்வுகளைச் சம நிலைக்குக் கொணர முடியவில்லை. சமையற்காரி மரகதத்தை அழைத்துக் காப்பி கொணரும்படி சொன்னாள்.

    மரகதம் போய்விட்டாள். இப்போதைக்கு இவளிடம் விஷயத்தை மறைத்தாகிவிட்டது. பிறகு…

    சிவகாமி எழுந்து கண்களைத் தேய்த்து விட்டுக் கொண்டாள். கூடத்தில் சுவரில் பதிக்கப்பட்டிருந்த பெரிய கண்ணாடி, அவள் நாற்பத்தைந்து வயதை அறுபதாய்க் கூட்டிற்று. காலமும் வாழ்க்கையும் கைகோர்த்துக் கொடுத்த சுருக்கமும் வெள்ளியிழைகளும் கூடிவிட்டது போல...

    மெல்லத் தடுமாறியபடி மாடியேறினாள் சிவகாமி.

    'துஷ்யந்தி... என் மகள் துஷ்யந்தியா இப்படிச் செய்தாள்! இந்த வீட்டின் செல்லப் பெண்ணிற்கு என்ன குறை வந்தது? வாராமல் வந்துதித்த மாமணி, செல்வத்தைக் கையோடு அள்ளி வந்த தேவமகள்…"

    மாடியின் கடைசியில் இருக்கும் பூட்டிய அறைக் கதவு திறந்தாள். பீரோவைத் திறந்து நடுங்கும் கைகளால் அந்தப் பெட்டியை எடுத்தாள்.

    உடல் வியர்வையில் நனைந்தது. மின்விசிறி அவளைக் குளிர வைக்க இயலாமல் தவித்தது. அதை எடுத்துச் சோபாவில் வைத்துப் பார்த்தாள்.

    துஷ்யந்தி, பூம்பிஞ்சாய்... மழலை பேசும் யாழாய்... மொட்டாய்… பூவாய்…

    விம்மினாள் சிவகாமி.

    'என்னை மன்னிச்சிரு. என்னை மன்னிப்பியா? நான் மகா பெரிய பாவி ஆகிட்டேன்.’

    அம்மா, போன்ல உங்க மகன் அழைக்கறார். கதவருகில் வந்து நிற்கும் மரகதத்தின் விழிகளில் அந்தப் பெட்டி ஆல்பம் பட்டது.

    சிவகாமி நடுங்கிப் போய் அதை மறைக்கப் பார்த்தாள்.

    மரகதத்திற்கு விநோதமாய் இருந்தது. நகைகளைகூடக் கழற்றி இவளிடம் கொடுத்து வைக்கச் சொல்லும் சிவகாமி... அப்படி என்ன ரகசியத்தை மறைக்கப் போகிறாள்?

    சரி… சரி, நீ போ. நான் வரேன்.

    கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறை. மரகதம் மெல்ல இறங்கிப் போனாள். அவள் மனம் முழுதும் சந்தேகம். என்னவாக இருக்கும்?

    சிவகாமி அம்மாள் அறையைப் பூட்டி வெள்ளிச் சாவிக் கொத்தை இடுப்பில் சொருகி, தள்ளாடியபடி மாடிப்படிகளில் இறங்கலானாள்.

    ***

    2

    Enjoying the preview?
    Page 1 of 1