Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Roja Iru Raja
Oru Roja Iru Raja
Oru Roja Iru Raja
Ebook114 pages1 hour

Oru Roja Iru Raja

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெண்களின் பல்வேறு நிலையினைப் பல்வேறு நாவல்களில் படம்பிடித்து காட்டியுள்ளார். பிரதானமாய் சேலம் மாவட்ட கிராமங்களில் நடைபெறும் "பெண் சிசு கொலையினைப்" பின்னணியாய் கொண்டு பல்வேறு நாவல்கள் சிறுகதைகள் கட்டுரைகள் புனைந்துள்ளார்.

இவர் கணவர் மின்வாாரியத்தில் பொறியாளராகப் பணிபுரிந்த காரணத்தால் இவருக்கு அந்த அனுபவங்களை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது, மனம் நெருட காலவோட்டத்தில் அதை நாவலாக்கினார்.

இவரது பல நாவல்கள் கல்லூரிகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பல மாணவ மாணவிகள் இவரின் நாவல்களை "எம்ஃபில்" படிப்பில் ஆய்வு செய்கின்றனர்.

Languageதமிழ்
Release dateMay 26, 2017
ISBN6580114201887
Oru Roja Iru Raja

Read more from Hamsa Dhanagopal

Related to Oru Roja Iru Raja

Related ebooks

Reviews for Oru Roja Iru Raja

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Roja Iru Raja - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    ஒரு ரோஜா இரு ராஜா

    Oru Roja Iru Raja

    Author:

    ஹம்சா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For more books

    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    ஒரு ரோஜா இரு ராஜா

    1

    வானத்திற்கு ஏகக் குஷி. கரு மேகங்களை ஏகமாய் விளையாட விட்டு, பூமிக்கு மழைத் திரை போர்த்துக் கிசுகிசு பேசிக் கொண்டிருக்கிறது.

    இவர்களின் உல்லாசத்தில் சூரியன் மேற்கில் எப்போதோ துரத்தப்பட்டுவிட, மக்களின் ஆரவாரம் முற்று மாய்த் துறந்த பிராட்வே பஸ் நிலையம்.

    மத்தியில் முக்கிய கட்சியின் தலைவர் யாரோ ஒருவரால் கடத்தப்பட்டுச் சுடப்பட்டுவிட்டார். நகரமெங்கும் மெளனம் வீதி உலா போகிறது. மூடாத கடைகளை மூடச் சொல்லும் சைக்கிள் செயின்கள்; சோடா பாட்டில்கள்.

    நல்லவேளை, பெருந்தொகைக்கான செக்கை வங்கியில் டெபாசிட் செய்த பின்னரே, இந்த மெளன அனுசரிப்பு. அந்த வகையில் துஷ்யந்தி நிம்மதி மூச்சு விட்டாள். முழங்கால் அளவுச் சேறிலும் நீரிலும் சுத்தமாய் நனைந்தவளாய் ஒவ்வொரு பஸ்ஸாய்ப் பார்த்துக் காணாமல், ராஜா அண்ணாமலை மன்றத்தருகே மழை நீரை முகத்தில் வழித்தபடி நிற்கிறாள்.

    நெரிசலிலும் விழி பிதுங்கும் சாலை ஊமையாகி வெறிச்சோடுகிறது. ஆங்காங்கே மழைக்கும் புயலுக்கும் நடக்கும் சமரசப் பேச்சில் ஒதுங்கி நிற்கும் மனித விழிகள், துஷ்யந்தியின் மேனித் துகிலைச் சுதந்திரமாய் உரித்து விளையாடுகின்றன.

    கொட்டுகிற மழையில் நனைந்த தங்கப் பதுமையாய் இளமையும் பெண்மையும் வேடிக்கை காட்ட; அவளுள் வீசும் மழையும் சூறைக் காற்றும் அறியாதவர்களாய் ரசிக்க, இவையேதும் உணராமல், திருமுல்லைவாயில் வரை போக ஒரு வாகனம் கிடைக்காதா எனத் தவிக்கிறாள் துஷ்யந்தி.

    புயல், மழை எச்சரிக்கை தொலைக்காட்சியில் பார்த்திருந்தும் செக் வாங்கவும் அதை டெபாஸிட் செய்யவும் புறப்பட்டது தவறோ? இரண்டு மாதங்களாய் அலைந்ததில் இன்று கொடுப்பதாய்ச் சொன்னார்கள். வாங்காமல் இருப்பது எப்படி?

    பாவம் அம்மா. அங்கே தனிமையில் அந்தப் பெரிய வீட்டில் இவளுக்காக எப்படித் தவிக்கிறாளோ? மழைக் காற்றில் இவள் தடுமாறுவாள் என்பதே அவளுக்குக் கிலேசத்தை அளிக்கும்.

    வயது இருபத்தாறு. ஐந்தரை அடி உயரம். அளவெடுத்துச் செதுக்கிய கைதேர்ந்த சிற்பியின் தந்தப் பதுமை போன்ற இவளுக்கு வயது இருபதைக் கூட நிர்ணயிப்பது கடினம்தான். பெண்களையே பொறாமைப்படச் செய்யும் அவள் அழகு, ஆண்களின் பார்வைக்கு ஒரு சவால்தான்.

    இருள் மெல்ல விரிந்து பூமியைத் தழுவிக் கொள்ளத் துடிக்கிறது. மழைச் சாரலின் ஸ்பரிசத்தில் சாலையில் பெரிய பெரிய நீர்க் குமிழ்கள். துஷ்யந்தியின் பெரிய விழிகள் வானத்துடன் சேர்ந்து கண்ணீர்ப் புஷ்பங்களைத் தொடுக்கத் துடிக்கும் நேரம்.

    சேற்று நீரை இவள் சேலையின்மீது அபிஷகித்து வேகமாய்ப் போன புல்லட் இவளைக் கடந்து போய் மீண்டும் வட்டமடித்துத் திரும்ப வந்து சடன் பிரேக்கில் இளைப்பாறுகிறது.

    மழைக்கோட்டில் மறைந்திருக்கும் இளைஞன், ஹலோ, நீங்க துஷ்யந்திதானே? எங்கே இப்படி, நிலாக்கால நடைபோல மழையில் வாத்திங்கா, சரி...சரி... வண்டியில் ஏறுங்க. உங்க வீட்ல விட்டுடறேன். என்றான் சிரித்தபடி.

    எல்.ஐ.ஸி.யில் அந்தச் செக்குக்காக அலைகையில் நாலைந்து முறைகள், விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யச் சந்தேகம் கேட்க, பேனா வாங்க, அவனுக்குப் பேனா கொடுக்க என அவள் அவனிடம் பேசியிருக்கிறாள். அவனை இனம் காணவே கொஞ்சம் நேரம் பிடித்தது. அவன் பெயர்கூட அவளுக்குத் தெரியாது.

    வேணாங்க, நான் திருமுல்லைவாயல் வரை போகணும். அவ்வளவு தூரம் உங்களால வர முடியாது.

    இதோ பாருங்க, இப்ப பஸ் வராது. பஸ் ஓடலை, தலைவருக்காக வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருக்கு. நாளைக்கும் ஒடுமா என்கிறது சந்தேகம்தான். எங்க வீடு சேந்தமங்கலத்தில்தான் இருக்கு. ஆக உங்க ஊரைத் தாண்டித்தான் போகணும். என்னை நம்பி வரதா இருந்தா வாங்க. இல்ல, நான் புறப்படட்டுமா. மழையும் இருட்டும் பயணத்துக்குத் தொல்லை. அதவும் மோட்டார் சைக்கிள் பயணத்துக்கு.

    முந்தானையைப் பிழிந்து முகம் கழுத்து என துடைத்துக் கொண்டிருந்த துஷ்யந்தி அவனின் சொற்களில் பொதிந்துள்ள உண்மையை உணர்ந்தவளாய் அவன் விழிகளைப் பார்க்கிறாள்.

    ஏன், என்னை நம்பி வரப் பயமா இருக்கா. என் மேலே நம்பிக்கை இருந்தா வாங்க. இல்ல...

    இவனை விட்டால் இப்போது வேறு மார்க்கமில்லை என்பது கும்மிருட்டில் ஏற்றின அகல் விளக்கு.

    நோ... நோ... இதோ... அவள் பதுமையாய்ப் புல்லட்டின். பில்லியனில் ஏறிக் கொள்கிறாள். இந்த மட்டிலாவது ஒரு வண்டி கிடைத்ததே.

    புல்லட் பிராட்வேயைக் கடந்து சென்ட்ரலைக் கடந்து பூந்தமல்லி ஹைரோடில் நீரை இறைத்துக்கொண்டு ஜெட்டாகப் பறக்கிறது. ஆங்காங்கே வண்டியை ஓட்டாதே என்கிற சோடா பாட்டில் சைக்கிள் செயின், சாராய நெடிகள். அவர்களைக் கண்டதும் இவன் வண்டியை வேகமாக்குகிறான். பின்னால் பிலியனில், நனைந்த கிளிக் குஞ்சாய் ஒண்டியிருக்கும் துஷ்யந்தியைப் பார்த்துக் கும்பல் ஒதுங்கிக் கொள்கிறது.

    இதற்குள் இருள் முழுதுமாய்ப் போர்த்துவிட, புல்லட்டின் விளக்கு சாலையில் நனைந்த் ஒளிச்சீலையாய் விரிகிறது.

    அவன் ஹெல்மெட்டில் விழும் மழைநீர் அவள் விழிகளில் பாய்ந்து எரிகிறது. வேகமாய்ப் போவதால் மழை மேலும் மேலும் அருவியாய் மேலே கொட்டுகிறது.

    ம்... ம்... மழைச் சத்தத்தில் காது கேட்கலை. சத்தமாப் பேசுங்க.

    கொஞ்சம் மெல்லப் போங்க, பயமா இருக்கு.

    "டோன்ட் ஒர்ரி. இந்த வருஷம் மோட்டார் ரேஸ்ல நான் கலந்துக்கப் போறேன். உங்களைப் பத்திரமா வீட்ல சேர்த்துடறேன். அதுசரி, கூட யாரையாவது அழைச்சுட்டு வந்திருக்கலாமில்ல? இப்படித் தனியா, ஸாரி, தப்பா இருந்தா மன்னிச்சிருங்க.

    இதற்குள் அமைந்தகரையைக் கடந்து கொண்டிருக்கிறது புல்லட்.

    ..ப்ச்... கூட வர யாருமில்லை. அம்மா வெளியே வரமாட்டாங்க. நீங்க... உங்களுக்கு...

    "ஐ யாம் கெளதம், கெளதம்னே நீங்க அழைக்கலாம். எனக்கு சிரமமெல்லாம் ஒண்ணும் இல்லை.நான் வரலைன்னா உங்க நிலைமை? நல்ல காலம் எங்கப்பாவுக்கு மருந்து வாங்கணும். அதுக்காக

    Enjoying the preview?
    Page 1 of 1