Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Puyal Eppothu Oyum?
Puyal Eppothu Oyum?
Puyal Eppothu Oyum?
Ebook110 pages40 minutes

Puyal Eppothu Oyum?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மராத்தியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் திருமதி ஹம்சா தனகோபால் தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார். எண்ணில் அடங்கா புதினங்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் படைத்துள்ள இவர் இரண்டு கவிதை தொகுப்புக்களுக்கும் உரியவர். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் பெண் சிசு கொலையை வன்மையாக கண்டித்தும் எழுதியுள்ளார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாய் "அன்று ஒரு நாள் " என்ற புதினத்தை படைத்துள்ளார். இந்த புதினத்திற்கான அணிந்துரையை அழகுப்படுத்தியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்..

மத்திய அரசின் "பாஷா பாரதி சம்மான்" விருது, ரஷ்யா புஷ்கின் இலக்கிய விருது, தமிழக சிறந்த நூலாசிரியருக்கான விருது எனபற்பல விருது பெற்றுள்ள இவர் அண்மையில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான தமிழ் நாடு அரசின் "அம்மா இலக்கிய விருது - 2016" பெற்றது இவருக்கு தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் அளிக்கிறது.

நாற்பது ஆண்டுகளாய் தொடரும் இவரது எழுத்துப்பணி சமூக உயர்வுக்காக மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580114204013
Puyal Eppothu Oyum?

Read more from Hamsa Dhanagopal

Related to Puyal Eppothu Oyum?

Related ebooks

Reviews for Puyal Eppothu Oyum?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Puyal Eppothu Oyum? - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    புயல் எப்போது ஓயும்?

    Puyal Eppothu Oyum?

    Author:

    ஹம்சா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For more books

    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    அண்ணா சாலையில் ஓடுகிறது டாக்ஸி. ஸ்பென்ஸர் சிக்னல் சிகப்புக் கண் சிமிட்ட, டாக்ஸி பக்கத்து வெள்ளைக் கன்டெஸா டன் சமமாய் நிற்கிறது.

    டாக்ஸியின் பின்சீட்டின் வலப்புறம் கையிலிருக்கும் புத்தகத்தில் விழி இருந்தாலும் மனம் எங்கேயோ வட்டமிட டாக்ஸி டிரைவர் சின்னியின் கேள்வியில் திடுக்கிறாள் வினோதினி.

    இதய இரைச்சல், சாலை வாகனங்களை மிஞ்சிவிடுமோ என அஞ்சும் வினோதினி காக்கி உடுப்பணிந்த சின்னியின் பின் புறத்தைப் பார்க்கிறாள். அவள் பார்வை மீண்டு பக்கவாட்டில் திரும்ப, டாக்ஸிக்கு அடுத்து இடம் பிடித்து நிற்கும் வெள்ளைக் கன்டெஸாவில் இடப்புறக் கண்ணாடி திறந்திருக்க, அந்தப் பெரிய மனிதர் சஃபாரி சூட்டில் கண்ணாடியை மூக்கின் மீது தள்ளிவிட்டபடி மடியிலிருக்கும் ஃபைல்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

    டாக்ஸியிலிருந்து பார்க்கும் இவளை அவர் கவனிக்கவில்லை.

    நானும் ரெண்டுதரம் கேட்டுட்டேன் அண்ணி, உங்கப்பா உசிரோட இருக்கிறதா அண்ணன் சொல்லுது. ஆனா எங்கே இருக்காருன்னு நீங்களாவது சொல்லுங்க அண்ணி.

    சின்னியின் கேள்வியில் உடல் நடுங்க, கார் கண்ணாடி மேலேற்றி, தன்னை மறைத்தபடி அந்தக் கன்டெஸா மனிதர் பார்த்துவிடுவாரோ எனக் கிளிக் குஞ்சாய்ச் சுருண்டு உட்காருகிறாள் வினோதினி.

    என்னங்க அண்ணி, நான் கேட்டுட்டே இருக்கேன். பதில் பேச மாட்டேன் என்கிறீங்க அண்ணன் பேசக் கூடாதுன்னு சொல்லிட்டாரா?

    சின்னி கேட்டுக் கொண்டிருக்கும்போதே சிக்னல் கண் பச்சைக் கண்ணாடி அணிந்துகொள்ள டாக்ஸி எதிராஜ் சாலையிலும் வெள்ளை கன்டெஸா நேராகவும் பிரிந்து ஓடுகின்றன.

    ஊம்... இருக்கார் கிராமத்தில், சின்னி பிளீஸ்... குயிக்கா போயேன். நேரமாச்சு.

    இதோ ரெண்டே நிமிஷம். அண்ணன் வீட்லயும் இப்படித் தொட்டிலிட்டுப் பெயர் சூட்டுவிழான்னு நடத்தணும்னு எனக்குக் கொள்ளை ஆசை அண்ணி. அண்ணன் எப்ப கேட்டாலும் பேச்சை மாத்தறாரு.

    சின்னியின் பேச்சு அவளை வியக்க வைக்கிறது. தனியாக பஸ்ஸிலோ ஆட்டோவிலோ வந்திருக்கலாம். ஆனந்தன் இவனைப் பாதுகாப்பாய் அனுப்புவதாய் நினைத்து இந்த வாயாடி சின்னியுடன் வழிகூட்டி அனுப்பி...

    சின்னி, நேரமாச்சு... குயிக்கா போ, ஒரு நாள் சாவகாசமா உன் கேள்விகளுக்குப் பதில் சொல்றேன்.

    இவள் எரிச்சலில் மௌனிக்கிறான் சின்னி. அந்த இளைஞனுக்கு, நாம் நல்லதைத்தானே கேட்டோம் எதற்காக இவள் இப்படிக் கோபிக்கிறாள் தவிக்கிறாள். நாலு வார்த்தை தொடர்ந்து பேசாத அண்ணியா இது?

    சரிங்க அண்ணி. நீங்க திரும்ப வரவரைக்கும் நான் டாக்ஸியோட வெயிட் செய்யறேன்.

    வேணாம்.

    அண்ணன் திட்டும். அண்ணிக்கு இல்லாத காரான்னு என்னைப் பேசும்.

    நான் பார்த்துக்கறேன். நீ போயிரு.

    இப்பவே மணி ஆறு. இருட்டிரும் அண்ணி. திருவான்மியூருக்கு எப்படி தனியா...

    எனக்கு வழி தெரியும்.

    சாலைகளின் சப்தங்களைத் தவிர்த்து அந்தச் சந்தில் ஓடி நிற்கிறது டாக்ஸி.

    அந்தக் குட்டி பங்களாவின் முகப்பு வண்ணவிளக்குகளும் தோரணங்களுமாய் நல்வரவு சொல்கின்றன. சக பேராசிரியைகளின் சந்தடி தெரிகிறது.

    வினோதினி மெல்ல இறங்கி, டாக்ஸியிலிருந்து பரிசுப் பொருளைக் குனிந்து எடுக்கும்போது மாருதி ஜிப்ஸி வேகமாக வந்து சடன் பிரேக்கில் நிற்கிறது...

    திறந்த கதவிலிருந்து நட்சத்திரம் உதிர்வது போல மாணவி மஞ்சுபாஷிணி இறங்குகிறாள். உடன் அந்த மனிதர் இறங்கி அவள் கையில் பரிசுப் பொருளைக் கொடுக்கிறார்.

    ஓ.கே. டேட். நீங்க போயிட்டு வண்டிய அனுப்பிருங்க. பை.

    பை.

    மஞ்சுவின் தந்தை மீண்டும் மாருதியில் ஏற அது வேகம் பிடித்து இவள் பார்வையிலிருந்து மட்டுமே மறைகிறது.

    இவள்… இவள்..... அவர் மகளா... அதுதான் இத்தனை நாட்கள் இவளை எங்கோ நெருக்கமாய்ச் சந்தித்த உணர்வு இருந்ததா?

    நல்லகாலம் அந்த மனிதர் இவளைப் பார்க்கவில்லை.

    ஹலோ மேடம், குட் ஈவினிங்.

    மாணவியுடன் உள் நுழைகிறாள் வினோதினி. மாணவிகள், கல்லூரி பேராசிரியைகள், சொந்த பந்தம் என அந்தக் குட்டி பங்களா பிதுங்குகிறது.

    அன்றைய கதாநாயகனாகப் பூமிப்பந்தின் புதுவரவு தொட்டிலில் மைவிழியும் திருஷ்டி பொட்டுமாய்க் கை கால் உதைத்துப் பூங்குரல் கொடுக்கிறது.

    தொட்டிலிட்டுப் பெயர் சூட்டி இனிப்பு வழங்கி... லாலி பாடி... வினோதினி தாமரை இலையாய் ஒட்டாமல் அந்தக் கூட்டத்திலும் தனித்து விடப்பட்டவளாய்த் தெரிகிறாள்.

    கன்டெஸா மனிதரும், மாருதி மனிதரும் மனதில் விஸ்வ ரூபமெடுக்கிறார்கள். இத்தனை வருடங்கள் கண்ணில் படாத இவர்கள் இன்று மட்டும் சொல்லி வைத்தது போல ஏன் தென்பட்டார்கள்.

    பெண்களின் சிரிப்பொலி தொடர்ந்து, அடுத்த வருஷம் நம்ம வினோதினிக்கு மகன் பிறக்கணும். நம்ம புரொபஸர்ஸ்ல வினோதினிக்குத்தான் குழந்தை இல்ல. யாரோ சொல்கிறார்கள்.

    ஆமாம் வினோதினி. அடுத்து நீங்கதான்.

    யாரோ தோளைத் தொட, வினோதினி தவிப்பாய்த் தவிர்க்கப் பார்க்கிறாள். அவள் கவனம் மஞ்சுவையே சுற்றுகிறது. கல்லூரித் தோழிகளுடன் சிரித்து ஐஸ்கீரீம் சாப்பிடும் மஞ்சுவின் அங்கங்களின் செழுமை அளவுக்கதிகமாய் வெளியுலகு பார்க்கிறது.

    கூட்டத்தில் இருக்கும் சில ஆடவர்களின் திருட்டு விழிகள் மஞ்சுவிடம் ஊன்றுவது இவளுக்குச் சங்கடம்

    Enjoying the preview?
    Page 1 of 1