Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ippadiyum Manithargal...!
Ippadiyum Manithargal...!
Ippadiyum Manithargal...!
Ebook82 pages30 minutes

Ippadiyum Manithargal...!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெண்களின் பல்வேறு நிலையினைப் பல்வேறு நாவல்களில் படம்பிடித்து காட்டியுள்ளார். பிரதானமாய் சேலம் மாவட்ட கிராமங்களில் நடைபெறும் "பெண் சிசு கொலையினைப்" பின்னணியாய் கொண்டு பல்வேறு நாவல்கள் சிறுகதைகள் கட்டுரைகள் புனைந்துள்ளார்.

இவர் கணவர் மின்வாாரியத்தில் பொறியாளராகப் பணிபுரிந்த காரணத்தால் இவருக்கு அந்த அனுபவங்களை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது, மனம் நெருட காலவோட்டத்தில் அதை நாவலாக்கினார்.

இவரது பல நாவல்கள் கல்லூரிகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பல மாணவ மாணவிகள் இவரின் நாவல்களை "எம்ஃபில்" படிப்பில் ஆய்வு செய்கின்றனர்.

Languageதமிழ்
Release dateMay 26, 2017
ISBN6580114202235
Ippadiyum Manithargal...!

Read more from Hamsa Dhanagopal

Related to Ippadiyum Manithargal...!

Related ebooks

Reviews for Ippadiyum Manithargal...!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ippadiyum Manithargal...! - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    இப்படியும் மனிதர்கள்...!

    Ippadiyum Manithargal...!

    Author:

    ஹம்சா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For more books

    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    இப்படியும் மனிதர்கள்...!

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    வசுமதி தன் தங்கையின் ஆடைகளுக்குப் பெட்டிப் போட்டுக் கொண்டிருந்தாள். அவள் தங்கை சுதாவிற்கு எதிலும் பொறுப்பு போதாது. நாம் இருப்பதே மற்றவர் இடத்தில், அவர்கள் என்னதான் தாய் தந்தையாக நடந்து கொண்டாலும் நாமும் பொறுப்பாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் இல்லாதவள்.

    வசுமதி செய்யாவிட்டால் அதையும் அவர்கள் சித்தி கவுசல்யாதான் செய்து வைப்பாள். இவர்கள் தாய், தந்தை உயிருடன் இருந்திருந்தால்கூட அத்தனை அக்கறையாய் எல்லாம் செய்து கொண்டிருப்பார்களா என்பது சந்தேகமே.

    வசுமதிக்கும் சுதாவிற்கும் பெற்றோர் இல்லை. எல்லாம் சித்தியும் சித்தப்பாவும்தான். அவர்கள் பெற்றோர் சாலை விபத்தில் இறந்து விட்டார்கள். இருவரும் ஒரு சேர போய் சேர்ந்துவிட்ட பின் சொந்தங்களிடையே குழந்தைகளை யார் பார்த்துக் கொள்வது என்கிற கேள்வி. சுமை சுமக்க வேண்டும் என்றதும், சொந்தங்கள் எல்லாம் ஆளுக்கொரு வேலை சொல்லி கழன்று கொண்டார்கள்.

    மிஞ்சி நின்றவர்கள் சித்தி கவுசல்யாவும் அவள் கணவன் வெங்கடேசனும் தான். இருவருக்கும் திருமணம் ஆகி பத்து வருடங்கள் ஓடிவிட்ட நிலை குழந்தைப் பேறு வேண்டி சுற்றாத கோவில்கள் இல்லை, ஏறி இறங்காத மருத்துவமனைகள் இல்லை. அப்போதுதான் நிழல் கிடைக்காதா என எண்ணி ஏங்கி அழும் பத்து வயது வசுமதியும், ஐந்து வயது சுதாவும் கண்ணில் பட்டார்கள்.

    இவர்கள் தாயின் சொந்த தங்கைதான் கவுசல்யா. சிறிதுகூட சுணக்கம் காட்டாது குழந்தைகளைத் தங்களுடன் அழைத்துக் கொண்டார்கள். தட்டு முட்டுச் சாமான்களை விற்று காசாக்கிக் கொண்டார்கள். இவர்கள் பெற்றோருக்கு எந்த சொத்தும் இருக்கவில்லை. வேலை பார்த்தால் பணம் என்கிற ரகம். வாடகை வீடு. ஒன்றும் தேறாது எனத்தெரிந்துதான் சொந்தங்கள் பிய்த்துக் கொண்டன. ஏதாவது தேறியிருந்தால் பராமரிக்க நான், நீ என போட்டியிட்டிருப்பார்கள்.

    அவர்கள் சித்தப்பா மட்டும் வசதியானவர் அல்ல. தனியார் கம்பெனி ஒன்றில் மானேஜர் என்கிற பெரிய பெயரில் குறைவாய் சம்பளம் பெறுபவர் பெற்றோரை இழந்து அழுது கொண்டிருந்த சுதாவை, அருகழைத்து தன் மடியில் புதைத்துக் கொண்டவள் கவுசல்யா. அன்றிலிருந்து அவள் இவர்கள் சித்தி அல்ல, தாய் என்றுதான் அழைக்க வேண்டும்.

    இவர்களை ஒரு தாயைப் போல அதைவிட கூட பொறுப்பாய் வளர்த்தாள். இவர்கள் முகம் சிவந்தால் கூட பொறுக்கமாட்டாள். ஒரு சொல் கடிந்து சொல்லமாட்டாள். ஒரு தும்மல் தும்மினால்கூட மிளகு சாம்பிராணி புகை என தேடுவாள். அப்படி கண்ணில் இமையாய் இவர்களைக் காத்தாள்.

    சுதாவிற்குத் தன் தாய் யார் என்றே தெரியாது. அம்மா என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாது எல்லாமே சித்திதான். அந்த சித்தி பல்வேறு தொழில் செய்து இவர்கள் படிப்பிற்கும் வளர்ச்சிக்கும் உதவினாள். ஊறுகாய் போட்டு அக்கம் பக்கம் பெண்களுக்குக் கொடுத்தாள். வடாம், அப்பளம் செய்து வேண்டியவர்களுக்குக் கொடுத்தாள். அதற்கு உதவ ஒரு வேலைக்காரியை வைத்துக்கொண்டாள்.

    வசுமதியும், சுதாவும் படிக்க வேண்டும் என அவர்களைச் சிரமப்படுத்தமாட்டாள் எதற்கும். தேவையானதைப் பெண்களுக்கு எடுத்துப்போய் கொடுக்கக் கூட இவர்களை ஏவ மாட்டாள் சித்தி சாதாரண நடுத்தர குடும்பத்திற்கும் கீழ் நிலையில் உள்ள குடும்பம் என்று சொல்ல முடியாதவாறு பெண்களை வளர்த்தாள் சித்தி.

    வசுமதி மட்டும் கவுசல்யாவை சித்தி என்று அழைப்பாள். சுதா எப்போதும் அம்மாதான். வசுமதிக்கும் அப்படி அழைக்க ஆசைதான். அம்மா இறந்தபோது இவளுக்கு பத்து வயது கொஞ்சம் விவரம் தெரிகின்ற வயது. அதனால் சித்தியை அம்மா

    Enjoying the preview?
    Page 1 of 1