Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Yarai Kandalum Aasai
Yarai Kandalum Aasai
Yarai Kandalum Aasai
Ebook172 pages1 hour

Yarai Kandalum Aasai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மராத்தியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் திருமதி ஹம்சா தனகோபால் தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார். எண்ணில் அடங்கா புதினங்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் படைத்துள்ள இவர் இரண்டு கவிதை தொகுப்புக்களுக்கும் உரியவர். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் பெண் சிசு கொலையை வன்மையாக கண்டித்தும் எழுதியுள்ளார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாய் "அன்று ஒரு நாள் " என்ற புதினத்தை படைத்துள்ளார். இந்த புதினத்திற்கான அணிந்துரையை அழகுப்படுத்தியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்..

மத்திய அரசின் "பாஷா பாரதி சம்மான்" விருது, ரஷ்யா புஷ்கின் இலக்கிய விருது, தமிழக சிறந்த நூலாசிரியருக்கான விருது எனபற்பல விருது பெற்றுள்ள இவர் அண்மையில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான தமிழ் நாடு அரசின் "அம்மா இலக்கிய விருது - 2016" பெற்றது இவருக்கு தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் அளிக்கிறது.

நாற்பது ஆண்டுகளாய் தொடரும் இவரது எழுத்துப்பணி சமூக உயர்வுக்காக மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580114204039
Yarai Kandalum Aasai

Read more from Hamsa Dhanagopal

Related to Yarai Kandalum Aasai

Related ebooks

Reviews for Yarai Kandalum Aasai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Yarai Kandalum Aasai - Hamsa Dhanagopal

    A picture containing icon Description automatically generated

    http://www.pustaka.co.in

    யாரைக் கண்டாலும் ஆசை

    Yarai Kandalum Aasai

    Author :

    ஹம்சா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For more books

    https://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    யோகேந்தர், எழுதரியா? மூக்கின் மீது சரிந்த கண்ணாடியை அழுத்திவிட்டு எதிரேயிருந்த யோகேந்தரைப் பார்த்தாள் ஜூலி மிஸ்.

    குனிந்து வகுப்புப் பிள்ளைகளின் கணக்கு நோட்டுக்களைத் திருத்திக் கொண்டிருந்த ஜூலி மிஸ்ஸின் கெளனின் கழுத்துப் பகுதி சரிந்துவிட, பிரா அற்ற மென்மையான பால் வெண்மையில் திரண்ட மார்பகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த யோகேந்தர் டக்கெனக் கண்களைத் தாழ்த்தி, எஸ் மேடம் என்றான் அவசரமாக, இடது கைவிரல் நகத்தைக் கடித்தபடி.

    காற்றோட்டமான பெரிய அறை. மின் விசிறி சுழலில் குளுகுளுவென்றிருக்க மாலை மயங்கும் நேரத்தில் மேசையின் ஒரு புறம் அவன் டியூஷன் மிஸ்ஸும், மறுபுறம் அவனும் எழுதிக் கொண்டிருந்தனர். ஜூலி உண்மையில் எழுத, அவனோ…

    கையில் பிடித்திருந்த பேனா கீழே விழக் குனிந்து எடுக்கப் போனான். பேனா ஜூலி மிஸ்ஸின் குதியுயர் செருப்புகள் பக்கம் இருந்தது. பேனா எடுத்தவனின் கண்களில் ஜூலியின் வழவழத்த பளிங்குத் தொடைகள்பட்டன. அதையே பெருமூச்சுடன் பார்த்துக் கொண்டிருந்த அவன் மறந்து கிறக்கத்துடன் மிஸ்ஸின் இடது காலைத் தொட்டான்.

    மினி கவுன். உட்கார்ந்ததால் மேலே ஏறிக் கொண்டிருக்கிறது. ஜூலி திடுக்கிட்டு, யோகேந்தர், கம் அவுட் சைட். இன்னா செயிறே நீ! எனக் கிறீச்சிட்டாள்.

    பயந்து வெளிப்பட்ட யோகேந்தர் நெற்றியில் படர்ந்த கிராப்பைத் தள்ளிவிட்டுக் கொண்டு, ஸாரி மேடம், ஸ்பைடரைத் தட்டிவிட்டேன், என்றான் லேசாக நடுங்கியபடி. வியர்த்திருந்தது.

    ஜூலி தரையில் சாவகாசமாக போய்க் கொண்டிருந்த எட்டுக்கால் பூச்சியைப் பார்த்துச் சமாதானம் அடைந்தாள். அப்போதுகூட உட்கார்ந்து எழுதாமல் நின்று கொண்டேயிருந்த யோகேந்தரை எரிச்சலுடன் பார்த்தாள்.

    பாவாடை போன்ற அகன்ற யானைக் காது பெல்ஸ். ‘டக்’ செய்திருந்த நீளக் கையை மடித்துவிட்டுக் கொண்டு இளைஞனைப் போன்று நின்றிருந்த அவன் முகத்தில் பூனை மயிராக முளை கட்டியிருந்த மீசை தாடி. கழுத்தளவு சரிந்த கறுத்த அடர்ந்த மயிர். நல்ல வெண்மை. அகன்ற முகம். பதினைந்து பதினாறு வயதான போதும் உடல் வளர்ந்திருந்த போதும் குழந்தை போன்ற களங்கமற்ற முகம். குழந்தையா இவன், பையனா, வாலிபனா? இனம் கண்டுகொள்ளமுடியாத புதிரான உடல், முகம், உள்ளம்.

    இன்னா மேன், இன்னும் நிக்கறே? ஹோம் ஒர்க் எழுதேன். ஆங்கிலோ இண்டியனான ஜூலி மூக்குக் கண்ணாடியை அழுத்திவிட்டபடி முறைத்தாள்.

    ம்… மிஸ்… மிஸ்… வந்து… வலது கைவிரல்களை மடித்து ஆட்காட்டி விரலை மட்டும் மார்புக்கு நேரே உயர்த்திக் கெஞ்சுதலுடன் காட்டினான் யோகேந்தர். அவன் இடது கை பாண்ட்டை அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தது. விட்டால் அங்கேயே அசுத்தம் செய்பவனைப் போலிருந்தான்.

    குபீரென்று சிரித்துவிட்டாள் ஜூலி.

    நான் வந்து டூ டைம்ஸ் போயிட்டே. இது தேர்ட் டைம். சரி, சரி, சீக்கிரம் வா. அவன் மகிழ்வுடன் அறையை விட்டு விடுதலை உணர்வுடன் வெளியே வந்தான். வந்தவன் பங்களாவின் பின்பக்கம் போகாமல் ஹாலிலிருந்த டெலிவிஷன் பக்கம் நின்று வேடிக்கை பார்க்கலானான். டெலிவிஷன் பெண்ணொருத்தி முகத்தைச் சுளுக்கிக்கொண்டு மூக்கை உறிஞ்சியபடி செய்தி படித்துக்கொண்டிருந்தாள். ஜலதோஷத்தினால் அவஸ்தைப்படுபவளைப் போலக் காணப்பட்டாள்.

    அவள் முகத்தருகே தன் கைக்குட்டையை நீட்டி மெல்லச் சிரித்துக் கொண்டான் யோகேந்தர். ஹால் எங்கும் விலையுயர்ந்த கலைப் பொருட்கள். ஹாலில் சப்தம் கேட்டுத் திரும்பினான்.

    ஆயா… ஆயா… எங்கே போயிட்டே கமான். மேனகா டீபாயின் மீதிருந்த பிளவர் வாஸைப் பார்த்து விட்டுக் கத்தினாள்.

    என்ன மம்மி? யோகேந்தர்.

    ஆயா எங்கே யோக்? மேனகா கேட்டுக் கொண்டிருக்கும்போதே வெள்ளை வெளேர் என்கிற சேலையும் சோளியுமாக நல்ல நிறத்துடனும் அழகுடனும் சோகமான வடிவுடனும் நளினா வந்தாள்.

    மேனகாவைப் பார்த்தவுடன், என்ன அம்மா? என்றாள் இனிமையாக.

    உனக்கு எத்தனை தரம் சொல்றது. புதுசா ரோஸஸ் வாஸ்லே வெச்சிருக்கணும். இப்படியா காய்ஞ்சி? வாடிய ரோஜாக்களைத் தூக்கி எறிந்தாள் மேனகா.

    வெள்ளை, மஞ்சள், சிவப்பு ரோஜாக்கள் காஷ்மீர் ரத்தினக் கம்பளத்தில் சிதறி விழுந்தன. ரோஜா இதழ்கள் கம்பளமெங்கும் சிதறிப் புள்ளிப் புள்ளியாக…

    ஸாரி. காலைலே புதுசா வெச்சேன். ஈவினிங்குக்குள்ளே… தலைகுனிந்து உண்மையில் வருந்தி இனிமையாக பேசினாள் நளினா.

    பிளவர் வாஸ் தண்ணீரிலே சர்க்கரை போட்டு வெச்சாக் காயாதுன்னு சொன்னேனே, ஷுகர் போட்டியா?

    தன் முன்னே நிற்பவள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதியாக நினைத்து மிரட்டினாள் மேனகா.

    இல்லே. இனிமே போடறேன்.

    இங்கே ஹாலில் இப்படித் தர்க்கம் நடந்து கொண்டிருக்கும்போதே பங்களாவில் பின்புறம் பங்களாவைப் பெருக்கித் துடைக்கும் வேலைக்காரி குஸுமாவும் சமையற்காரனும் கிசுகிசுத்துக் கொண்டனர்.

    மேம் சாஹப் ஏன் இப்படிக் கத்துது? குஸுமா முக்காட்டை இழுத்துத் தலையில் சரிப்படுத்திக் கொண்டு கிழ சமையற்காரனைக் கேட்டாள்.

    நீ புதுசு. உனக்கு அதான் தெரியலே. அம்மா எப்பவும் அப்படித்தான். ஒரு வாரமா டூர் போயிருந்த ஐயா வரப்போறாரு இல்லையா. அவர் வரப்போ பங்களா அழகா இருக்கணும்.

    எதுக்கு டூர்?

    ஐயோ உனக்கு ஒண்ணுமே தெரியாதா? புதுசா மந்திரி சபை அமைச்சிருக்காங்க. நம்ம ஐயா உள்துறை மந்திரிக்கு செக்ரடரி. மந்திரிக்கு எல்லா இடத்தையும் விளக்கிச் சொல்லணும் இல்லையா. சரி சரி. பூ கொட்டிக் கிடக்குது. போய்ப் பெருக்கு.

    குஸுமா பூந்துடைப்பத்தையும் முறத்தையும் எடுத்துக் கொண்டு முன்புறம் போனாள்.

    ஆயா, வாயிலே என்ன? மேனகா.

    ஒண்ணுமில்லே. சும்மா. மிரண்டாள் நளினி.

    புகையிலே போடக் கூடாதுன்னு எத்தனை தரம் சொல்றது. இனிமே போட்டியானா பார்? கண்களை உருட்டி விழித்தாள் மேனகா.

    நளினி மௌனமாகப் புதிதாக பறித்த ரோஜாக்களை அழகாக ஜாடியில் செருகலானாள்.

    யோக், டியூஷன் படிக்காமே, டெலிவிஷனைப் பார்த்துட்டு என்ன இது. மிஸ்கிட்டே போ! மேனகா டெலிவிஷனை ஆஃப் செய்ய யோகேந்தர் பங்களாவின் பின்புறம் போகாமலே ஜூலி மிஸ் இருந்த அறைக்குள் நுழைந்தான்.

    ஹலோ மேனு, ஹௌ டு யு டூ, செல்லமாகக் கேட்டுக்கொண்டே பானுபிரதாப் கம்பீரமாக உள் நுழைந்து விலை உயர்ந்த சோபாவில் சாய்ந்து கொண்டார். வாயில் சிகார் பைப் புகைந்து கொண்டிருந்தது. காதோரங்களில் லேசான நரை.

    நேத்திக்கே வரதாப் போன் செய்தீங்களே… கேட்டுக்கொண்டே மின் விசிறியைச் சுழலவிட்டு உட்பக்கம் பார்த்து, ஏ குஸுமா, ஐயா வந்தாச்சு. கிரேப் ஜூஸ் கொண்டா, எனக் கட்டளையிட்டுவிட்டு அவர் முன்பாக வந்து உட்கார்ந்தாள் மேனகா.

    புரோக்கிராம்படி புறப்பட முடியலே மேனு. கடைசி நேரத்திலே மினிஸ்டர்… டக்கென நிறுத்திக் கொண்டு மனைவியைப் பார்த்தார் பானுபிரதாப். காரியாலய நடவடிக்கைகளைக் கூடியமட்டும் யாரிடமும் – மனைவியிடம்கூட - சொல்லமாட்டார் அவர்.

    வாயில் புகைந்த சிகார் பைப்பை எடுத்துவிட்டு மேனகாவைப் பார்த்துப் புன்முறுவலுடன் அவள் கன்னத்தில் தட்டி, ஆர் யூ மிஸ்ஸிங் மீ? என்றார் மெல்லிய குரலில்:

    யூ… கண்ணடித்துச் சிரித்துக்கொண்டே அவர் கண்களை நேருக்கு நேராகச் சந்தித்துக் கேட்டாள் மேனகா.

    தலை உச்சியில் போடப்பட்ட பெரிய அஜந்தாக் கொண்டை. ஒற்றை ரோஜா. மெல்லிய சேலை. காதுகளில் மட்டும் வைரத் தோடுகள். கழுத்து கை எதிலும் நகைகள் இல்லை. செண்பகப் பூ நிறம். முட்டை வடிவ முகம். சந்தோஷமாக இருக்கும்போது யாரிடம் பேசினாலும் அடிக்கடி கண்ணடித்துப் பேசுகிற சுபாவம். உடனே கோபம் வந்து கத்திவிட்டு மறுகணமே சிரித்துப் பேசிவிடுவாள் மேனகா.

    நிஷா இருக்காயில்லே? அவ வயசுக்கு வந்துட்டாளாம். முரளிமனோகர் லெட்டர் எழுதியிருக்கார். தேவிகூட வருத்தப்பட்டு எழுதியிருக்கா.

    மை காட்! நிஷாவுக்கு வயது பன்னிரண்டு தானே ஆகுது?

    அதுதான் அவங்களுக்கு மன வருத்தம்.

    கிரேப் ஜூஸை ஸ்ட்ராவில் உறிஞ்சிக்கொண்டே கையில் அழகான ஒரு வயதுக் குழந்தையுடன் முக்காடை இழுத்து விட்டுக் கொண்டு அருகில் வந்த ஆயாவைப் பார்த்தார் பானுபிரதாப்.

    ஆயா அவரை முகம் நிமிர்ந்து பாராமலேயே குழந்தையை மட்டும் நீட்டினாள். குழந்தை அவர் மடிமீது தாவி ஏறியது.

    நான் போறப்ப புவனேந்தருக்கு உடம்பு சரியில்லியே. இப்ப எப்படியிருக்கான், நளினா? ஆயாவைப் பார்த்துக் கேட்டார்.

    இதற்கும் நிமிராமலே, புவனுக்கு இப்ப ஒண்ணுமில்லே, என்றாள் ஆயா.

    ம். ம். ஆயா, புவனை வாக் அழைச்சிட்டுப் போ. வெளியே வேண்டாம். பங்களாவே போதும். மேனகா குழந்தையை வாங்கி அவளிடம் கொடுத்தாள்.

    நளினா, புவனை ஜாக்கிரதையாப் பார்த்துக்கோ. கேட்டுக்கு வெளியே போயிடப் போறான். நான் கார்லே வரப்பக்கூட ஓடிட்டு இருந்தான். பானுபிரதாப் கனத்த குரலில் பைப்பைப் புகைத்துக்கொண்டே பேசினார்.

    உம். நளினா குழந்தையுடன் முகம் நிமிராமலே சென்றாள்.

    ஹலோ யோக், ஹௌ டு யூ டு? அங்கே வந்த யோகேந்தரின் கையைப் பிடித்துப் பாசத்துடன் குலுக்கினார் பானுபிரதாப்.

    ஓ.கே. டாடி.

    Enjoying the preview?
    Page 1 of 1