Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Poojaikku Vantha Malarae
Poojaikku Vantha Malarae
Poojaikku Vantha Malarae
Ebook128 pages49 minutes

Poojaikku Vantha Malarae

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திருமதி லட்சுமி ராஜரத்னம் திருச்சி நகரில் 27.3.1942ல் பிறந்தார் பத்தாவது வயதில் திருப்பாவை, திருவெம்பாவை போட்டியில் தங்க நாணயம் பரிசு பெற்றார்.

இதுவரை 1500 சிறுகதைகள், நிறைய நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள், 15 சென்னை தொலைகாட்சி நாடகங்கள், 3 மெகா தொலைகாட்சித் தொடர்கள், 3500 க்கும் மேற்பட்ட ஆன்மீகக் கட்டுரைகள் இவரின் எழுத்துலகச் சாதனைகளாகும். 40 சரித்திரச் சிறுகதைகள் எழுதிய பெண் எழுத்தாளரும் இவரே.

காஞ்சி சங்கர மடத்தினால் 1991ல் எழுத்துக்காகவும், 1993ல் ஆன்மீகச் சொற்பொழிவிற்காகவும் கௌர விக்கப்பட்டுள்ளார். இதுவரை 2500 சொற்பொழிகள் செய்துள்ளார். திருவையாறு தியாகராஜ ஆராதனையில் சின்ன கச்சேரி செய்த அனுபவம் உண்டு. இதைத் தவிர கோயம்புத்தூர், தஞ்சையில் கச்சேரிகள் செய்த அனுபவமும் உண்டு. மகள் ராஜஸ்யாமளாவின் நாட்டியற்குப் பாடிய அனுபவமும் உண்டு.

இவருடைய இதயக்கோயில் நாவல் கலைமகள் நாராயணஸ்வாமி ஐயர் பரிசு பெற்ற நாவல். இன்று வரை பலரால் பாராட்டைப் பெற்ற நாவல்.

1999ல் 'செந்தமிழ்ச் செல்வி' என்று ஸ்ரீகுக ஸ்ரீ வாரியார் விருதைப் பெற்றார். ஜனவரி 2002ல் கொழும்புவில் உள்ள இந்து மகா சபை இவருக்கு சொற்சுவை நாயகி என்ற விருதைக் கொடுத்து கௌரவப்படுத்தியுள்ளது. சங்கப்பலகை என்னும் புகழ் பெற்ற கலைமகள் பத்திரிக்கை ஜனவரி 2019-ல் சிறந்த எழுத்தாளருக்கான விருதை கொடுத்து கௌரவித்தது. ஒரே மகள் ராஜஸ்யாமளாவும் எழுத்தாளர் பரத நாட்டியக் கலைஞர்.

2011-ல் கணவனை இழந்த இவர் அதன்பின் உடல் நலம் குன்றி நான்கு அறுவை சிகிச்சைகள், இன்னும் பல உடல் தொந்திரவுகள் என்று சிரமப்பட்டாலும் 76 வயதிலும் மனம் தளர்வுளராமல் எழுதி வருகிறார். உங்கள் பாராட்டு என்ற பெரிய விருதை விட பெரிய உண்டா? என்கிறார்.

Languageதமிழ்
Release dateJun 17, 2020
ISBN6580115705560
Poojaikku Vantha Malarae

Read more from Lakshmi Rajarathnam

Related to Poojaikku Vantha Malarae

Related ebooks

Reviews for Poojaikku Vantha Malarae

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Poojaikku Vantha Malarae - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    பூஜைக்கு வந்த மலரே

    Poojaikku Vantha Malarae

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajaratnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    *****

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    *****

    அத்தியாயம் 1

    அலாரம் அடித்தும் விழிப்பு வரவில்லை. சட்டென்று விழிப்பு வந்த பொழுது விடியலைத் தாண்டி விட்டிருந்தது பொழுது. வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள் ஜனனி. மணி ஏழு. பக்கத்தில் படுத்திருந்த தங்கையைப் பார்த்தாள். இன்னும் விழித்திருக்காமல் சற்றே பாவாடை விலகி இருக்கப் படுத்துக் கிடந்தவளின் உறக்கம் கலையவில்லை. ஸ்பெஷல் கிளாஸ் இருக்கிறது. சீக்கிரம் போக வேண்டும் என்று சொன்னாளே… அது நினைவுக்கு வர மனசு பரபரத்தது.

    ஷீலா... ஷீலு... எந்திரிடி. மணி ஏழு சீக்கிரம் போகணும்னு சொன்னியே?

    புரண்டு படுத்த ஷீலா மணி ஏழு என்றதும் பரக்கப்பரக்க எழுந்தாள்.

    என்ன ஜனனி, சீக்கிரம் எழுப்பச் சொன்னேனில்ல? என்று எரிச்சல்பட்டாள் ஷீலா.

    ஸாரி ஷீலு... என்னனு தெரியல்ல... நானும் அசந்து தூங்கிட்டேன்.

    நான் தான் ரெண்டு மணி வரை படிச்சேன். உனக்கு என்ன கேடு சிடுசிடுத்தாள் ஷீலா.

    நீ படிக்கற வரை நானும் தச்சுட்டு இருந்தேன் ஷீலா

    மளமளவென்று வாசலைத் தெளித்து இரண்டே இரண்டு இழைகளைக் கோலம் என்ற பெயரில் இழுத்தாள்.

    ஜனனி, என்னம்மா இம்புட்டு நேரம்? தூங்கிட்டியா? எதிர் திண்ணை பாட்டிதான் கேட்டாள்.

    பாட்டி பேச நேரமில்ல. கொஞ்சம் பொறுங்க, காப்பி தரேன்.

    பாட்டிக்கு தினமும் ஐந்தரை மணிக்கெல்லாம் காப்பியைத் தந்து விடுவாள்.

    எதிர் திண்ணை பாட்டி அவளுக்கு ஒட்டுமில்லை, உறவும் இல்லை. மாமியாரின் தள்ளாமையைக் காரணம் காட்டி இரண்டு மருமகள்களும் திண்ணையில் படுதா மறைவில் போட்டு விட்டார்கள். சற்று பெரிதான வீடுதான். இரண்டு மருமகள்களும் தனித்தனி சமையல்தான். மாமியார்க்கு சாப்பாடு போடுவதிலும் நீ ஒருநாள் நான் ஒரு நாள் என்று பாகப்பிரிவினைதான்.

    பாட்டியின் அவல நிலையை உணர்ந்த ஜனனி பாட்டிக்கு தான் செய்யும் ருசியான பண்டங்கள், காப்பி என்று கொடுப்பாள்.

    பாட்டிக்கு ஜனனியை மிகவும் பிடிக்கும். பாட்டியை மகன்கள் வெளியே உட்கார வைத்து சரியான சாப்பாடு தராததற்கும் காரணங்கள் இருந்தன. பாட்டி செங்கமலத்திற்கு இரண்டு மகன்கள், ஒரு பெண்.

    அவளுடைய கணவன் ஒன்றும் ஓஹோ என்று வாழ்ந்து விடவில்லை. அடுக்கு மனை வீடுகள் எழும்பாத காலம் அது. வீடுகள் கட்டும் பணியில் மேஸ்திரிக்கு உதவியாளனாகப் பணி புரிந்து வந்தான். சுமாரான வருமானம், வீடு செங்கமலத்தின் மாமனார் கட்டிய வீடு, மாமியார் காலமாகி மாமனார் அவர்களுடன் தங்கிக் கொண்டார். தரகு வேலை பார்த்துச் சம்பாதித்து வந்தார். வரும் வரும்படியில் தனக்கு வெற்றிலை பாக்கு பீடி, பஸ் செலவு என்று வைத்துக் கொண்டு மீதியை மருமகள் செங்கமலத்திடம் கொடுத்து விடுவார்.

    அவர் காலத்திலேயே மாடியில் கட்டுமானப் பணியில் இருக்கும் பொழுதே தவறி விழுந்து மகன் இறந்து போனான். மருமகள் பெயரில் வீட்டை எழுதி வைத்தார் மாமனார்.

    என் பெயரில் ஏன் மாமா எழுதி வைக்கிறீங்க மாமா, உங்க பேரன்க பெயரிலே எழுதி வையுங்க என்றவளைப் பார்த்துப் பொருள் பொதிந்த சிரிப்பைச் சிரித்தார்.

    ஏன் மாமா சிரிக்கிறீங்க?

    உலகம் தெரியாதவளா இருக்கியேம்மா. உன் மக கல்யாணமாகி இன்னொருத்தன் வீட்டுக்குப் போயிடுவா. இன்னிக்கு ரெண்டு காசை உன் கைல கொண்டு தர்ற மகன்க நாளைக்கு உன் மருமகள்களுக்குப் புருஷன். அங்கே உன் பேச்சு செல்லாக் காசு தாயி. ஒன் கைல நாலு காசு புரளணும் தாயி. இதை மறந்துடாதே என்றார்.

    என்னுடைய மகன்கள் என்னுடைய மகன்கள் தான் என்று இறுமாந்திருந்தாள் செங்கமலம். வந்த மருமகள்களின் கண்களை அந்தப் பெரிய வீடு உறுத்தியது. கணவன்மார்கள் பலசரக்கு வியாபாரம் என்றும் ஸ்டேஷனரி வியாபாரம் என்றும் வைத்துப் பிழைப்பு நடத்துவது மனசுக்கு உவப்பாக இல்லை. கணவன்களைப்பற்றி பெருமை பேச எதுவுமே இல்லை.

    தலையணை மந்திரம் ஓத தன்னால் வந்துவிடும்,

    தாத்தா காலத்துப் பெரிய வீட்டைப் பார்த்துப் பிரமித்தனர். பின்னால் உள்ள பெரிய இடத்தில்தான் தோட்டம் போட்டு செங்கமலம் அதில் விளைந்தவற்றைக் கொண்டுதான் மகன்களை முன்னேற்றினாள். மகளைக் கண்ணைக் கசக்காத இடமாகப் பார்த்து மணமுடித்தாள். வரும் மருமகள்களிடமும் எதையும் எதிர்பார்க்கவும் இல்லை. செங்கமலம் ஒரு நல்ல மாமியார்தான். மருமகள்கள் மாமியாரின் உழைப்பு இருக்கும் வரை நல்ல மருமகள் தான்.

    அத்தை, ஏன் உங்க மகன்களை மேலே படிக்க வைக்கல்ல? அப்படிப் படிச்சிருந்தா இன்னிக்கு பெரிய உத்யோகத்துல இருந்திருப்பாங்க இல்ல? என்று மருமகள்கள் கேட்ட கேள்வியை எதார்த்தமாக எடுத்துக் கொண்டாள் செங்கமலம்.

    நான் படிக்க வேண்டாம்னு சொல்லலே, அவனுகளுக்குத் தொழில்ல நாட்டம் இருந்துச்சு. அவனவனுக ஆசைப்படி விட்டுரணும். மாச சம்பளம் வாங்கறவனுகளை விட ரெண்டு காசு அதிகம்தானேம்மா சம்பாதிக்கிறான்?

    என்ன சம்பாதிச்சு என்ன? வர்ற லாபத்தை திரும்ப சரக்கு வாங்கவே போட்டுடறாங்க. நல்லதா ரெண்டு பட்டுப் புடவை வாங்கலாம்னா முடியல்ல. இல்லேடி புஷ்பா? என்று மூத்தவள் கலாராணி இளையவனின் பெண்டாட்டியை சிபாரிசுக்கு அழைத்தாள்.

    ஓரகத்தியின் உதட்டசைவையும் கண்ணசைவையும் புரிந்து கொள்ளாத முட்டாளா என்ன புஷ்பா?

    ஆமாத்தே, கைக்கும் வாய்க்கும் சரியாப் போகுது. நாலு எடங்களுக்கு கௌரவமா வேளைக்கு ஒரு சேலைனு கட்டிட்டு போக முடியல்ல. 'ஆடிக்கும் அதே புருஷன்'னு ஒரு பழமொழி சொல்லுவாங்க என்று புஷ்பா நீட்டி முழக்க செங்கமலம் சிரித்து விடுவாள்.

    புடவையை மாத்தற மாதிரி ஆடிக்கு ஒரு புருஷன் ஆவணிக்கு ஒரு புருஷன்னு மாத்துவாங்களா என்ன? என்பாள்.

    மாத்தி உடுத்திட்டு போக பட்டுச் சேலை கூட எங்ககிட்ட இல்லையே அத்தை, போனவாரம் அடுத்த தெரு நளினாக்கா வீட்டு சடங்குக்கு போனோமே? அதை ஏன் அத்தை கேட்கிறீங்க என்று புஷ்பா இழுக்க மூத்தவள் கலா தொடரலானாள்.

    கணவன், வீட்டுச் செலவுக்குத் தரும் பணம் பீரோவினுள் பழைய புடவைகள் மடிப்பில் அடைக்கலமாவதை பாவம் செங்கமலம் அறியமாட்டாள். வேவு பார்க்கும் மாமியாரில்லை.

    ஆளாளுக்கு ரெண்டு பொட்டைப் புள்ளைகள்.

    "அத்தே, உங்க பேத்தி கண்மணி ஸ்கூல்ல டான்ஸ்ல சேர்ந்திருக்கா. தேவதை டான்ஸ்ஸாம். உங்க பிள்ளைகிட்ட கேட்டேன். இன்னிக்கு வாங்கினாத்தான் தைச்சு கொடுக்க

    Enjoying the preview?
    Page 1 of 1