Anbulla Ammavukku
()
About this ebook
Read more from Lakshmi Rajarathnam
Thiruppugal Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsThalattum Poongatru Rating: 0 out of 5 stars0 ratingsNesam Marakavillai Nenjam! Rating: 0 out of 5 stars0 ratingsEn Anni - En Manaivi? Rating: 0 out of 5 stars0 ratingsNavagrahangal Rating: 1 out of 5 stars1/5Ezhu Swarangalukkul… Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Niraintha Ragam! Rating: 0 out of 5 stars0 ratingsThanthaiyumaagi Thayumaagi Rating: 5 out of 5 stars5/5Ninaivalaigal Thodarnthu Vanthal... Rating: 0 out of 5 stars0 ratingsMarakkuma Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsEnakkul Nee! Rating: 5 out of 5 stars5/5Aval Varuvala? Rating: 0 out of 5 stars0 ratingsBhavishya Puranam Rating: 2 out of 5 stars2/5En Uyir Neethane Un Uyir Naanthane Rating: 1 out of 5 stars1/5Poomaalaiye Thol Serava Rating: 3 out of 5 stars3/5Ashtalakshmi Rating: 0 out of 5 stars0 ratingsKaaviyama Nenjin Ooviyama Rating: 0 out of 5 stars0 ratingsVaana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsAanmeega Amudham Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsArputha - Athisaya Aalayangal Rating: 5 out of 5 stars5/5Deivam Thantha Poove! Rating: 0 out of 5 stars0 ratingsBramma Mudichu Rating: 0 out of 5 stars0 ratingsPoochudum Naal Paarkkava Rating: 0 out of 5 stars0 ratingsMinnal Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsLakshmi Rajarathnam Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsYaarukku Mappillai Yaaro? Rating: 0 out of 5 stars0 ratingsAanmeega Amudham Part - 2 Rating: 5 out of 5 stars5/5
Related to Anbulla Ammavukku
Related ebooks
Devathai Vandhal Rating: 2 out of 5 stars2/5Oomai Kuyil Rating: 0 out of 5 stars0 ratingsMaaya Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsமலரே என்னை நெருங்காதே! Rating: 0 out of 5 stars0 ratingsMalare Ennai Nerunkaathe Rating: 4 out of 5 stars4/5Poi Kaal Purushan Rating: 3 out of 5 stars3/5Vallamai Thaaraayo? Rating: 5 out of 5 stars5/5Oru Sangamathai Thedi… Rating: 5 out of 5 stars5/5Kalyana Thean Nila Rating: 5 out of 5 stars5/5Ninaivey Sangeethamai... Rating: 4 out of 5 stars4/5Anthikaala Mogam Rating: 0 out of 5 stars0 ratingsT.R.vin Thernthedukkappatta Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyir Kaadhaliye! Rating: 0 out of 5 stars0 ratingsOru Mudivin Aarambam Rating: 0 out of 5 stars0 ratingsUnakkagavey Naan... Rating: 5 out of 5 stars5/5Mann Bommai Rating: 5 out of 5 stars5/5மஞ்சள் மத்தாப்பு! Rating: 0 out of 5 stars0 ratingsManjal Maththaappu Rating: 0 out of 5 stars0 ratingsUyir Unarum Va(li)zhiyo Kaadhal Rating: 3 out of 5 stars3/5Ammavin Anbu Rating: 0 out of 5 stars0 ratingsIrukodiyil Oru Malar Rating: 5 out of 5 stars5/5Suzhalil Mithakkum Deebangal Rating: 0 out of 5 stars0 ratingsOomai Kuyil Rating: 5 out of 5 stars5/5பூவும்... பொட்டும்..! Rating: 0 out of 5 stars0 ratings...Endral Aval Rating: 0 out of 5 stars0 ratingsThaimaiyil Kaniyum Iraimai Rating: 0 out of 5 stars0 ratingsRagasiyathai Sol Kiliye..! Rating: 0 out of 5 stars0 ratingsEn Ninaivu Neethane Rating: 0 out of 5 stars0 ratingsPeiyena Peiyum Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsMagalukkaga Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Anbulla Ammavukku
0 ratings0 reviews
Book preview
Anbulla Ammavukku - Lakshmi Rajarathnam
http://www.pustaka.co.in
அன்புள்ள அம்மாவுக்கு
Anbulla Ammavukku
Author:
லட்சுமி ராஜரத்னம்
Lakshmi Rajarathnam
For more books
http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
1
கையில் உள்ள பை அழுந்தவே, மாற்றி இன்னொரு கையில் பிடித்துக் கொண்டாள் ப்ரீதா. கீழே வைக்க முடியாமல் சேறு படிந்திருந்தது தரை. இரண்டு தினங்களாக விடாமல் பெய்த மழையால் கால் வைக்கவே இயலாதபடி ஒரே சொதசொதப்பு... அவள் போக வேண்டிய பஸ் இன்னும் வரவில்லை.
பையை மீண்டும் மாற்றிக் கொள்கிறாள். வீட்டுக்குப் போக மனசு பரபரக்கிறது. குழந்தை மைதிலி பள்ளிக் கூடத்திலிருந்து வந்திருப்பாள். கைக்குழந்தை புவனியை வேலைக்காரி வசம் விட்டுவிட்டு வந்திருக்கிறாள். தாய்ப்பால் குடிக்கும் குழந்தை. நினைக்கும்பொழுதே நெஞ்சு கனக்கிறது. திட்டாகப் புடவை நனையும் போல சுரப்பு...
மைதிலிக்கும் மூத்தவன் ரவி, அவளைத் தேட மாட்டான். அக்கம்பக்கம் வீடுகளுக்குப் போய் தன் வயிற்றை நிரப்பிக் கொள்ளுவான். இது கெட்ட பழக்கம் என்று பல தடவை சொல்லியும் அவன் கேட்பதாக இல்லை. பிடிவாதத்தில் அப்பாவையும், பாட்டியையும் கொண்டிருக்கிறான்.
அவள் கணவன் பார்த்திபன் சொன்னதை கேட்பவனா?
அவனைப் பற்றி நினைத்தாலே கண்கள் கண்ணீரில் நிறையும், தனக்கு விடிவே இல்லையோ என்ற தவிப்பு நெஞ்சில் எழுந்து, வழக்கம் போல அவளையே வீழ்த்துகிறது. மாற்ற முடியாத பந்தம்..
ஏம்மா எங்கே பார்த்துட்டு நிக்கிறீங்க? நீங்க எந்த பஸ்ல போகணும்? வெறிச்சுப் பார்த்துட்டு நின்னா பஸ் வந்து கூப்பிடுமா? அதோ பஸ் வரது பாரும்மா
என்று அருகில் நின்ற கூடைக்காரி ப்ரீதாவை உசுப்புகிறாள்.
நினைவலைகளில் சுழன்று ஆழ அழுந்தி தன் பார்வையை வெறிக்க விட்டதை இவள் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும். தலையை உதறிப் பையை மாற்றிக்கொண்டு கவனிக்கிறாள். இவள் போக வேண்டிய பஸ்தான். சேற்றில் செருப்பு அழுந்த, ஓடிப் போய் கூட்டத்தைப் பிளந்து ஏறுகிறாள். இரட்டை இருக்கையின் ஓரமாகப் பையை வைத்ததும் 'அப்பாடா' என்று இருக்கிறது.
ஓட்டமும், நடையுமாக இவள் வீட்டை அடையும் பொழுது ஈஸிச்சேரில் படுத்திருந்த மாமனார், நிமிர்ந்து பார்த்துவிட்டு தலையைத் திருப்பிக் கொள்கிறார். சிலீரென்று பயம் பந்தாக இவள் நெஞ்சில் உருளுகிறது. ஐந்து மணிக்குத் தர வேண்டிய காபியை வெளியே போனதால் தவற விட்ட கோபம். இவர் கோபம் ஊர் பிரசித்தம். உடம்பு பூராவும் கோபம்.
கோபம் வந்துவிட்டால் ஊர்க் கோவில் பெரிய திண்ணையில் போய்ப் படுத்துக் கொண்டு மூன்று நாட்கள் வர மாட்டாராம். மாமனாரின் அம்மா கெஞ்சிக் கூத்தாடி கூட்டிக்கொண்டு வருவார்களாம். சென்னியப்பன் என்பவன் இவரிடம் எதையோ மறைத்து விட்டதாக குடையே பிய்ந்து போன கதையை கிராமத்துக் கடைக்காரர், இவள் கல்யாணமான பொழுது சொல்லி இருக்கிறார்.
இப்ப மட்டும் என்ன வாழ்கிறதாம்? அளவுக்கு மிஞ்சியே கோபத்தைக் காட்ட மாடி அறையில் போய்த் தாளிட்டுக்கொண்டு விடுவார். மாமியார் மூட்டு வலிக்காரி. மாடி ஏற முடியாது. இவள் கணவனிடம் கெஞ்சுவாள்.
அப்பாவைக் கெஞ்சிக் கூத்தாடிக் கூட்டிட்டு வாங்க.
ஈர முத்துக்கள் இவள் மேல் உதிரும் வகையில் தலையைத் துடைப்பான் பார்த்திபன்.
ஏய்... பசிச்சா வந்து திங்கணும் எனக்கு வேற வேலை இல்லை பார்... சோத்தைப் போடு
. என்று கத்துவான்.
கடைசியில் இவள்தான் கதவைத் தட்டிக் கெஞ்சி கூட்டிக் கொண்டு வருவாள். அவர் குளிக்க வரும்பொழுது பாத்ரூம் காலியாக இருக்க வேண்டும். டாய்லெட் காலியாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் அவ்வளவுதான்!
இன்றைக்கும் மாமனாரின் கோபத்தை இவள் சந்தித்தாக வேண்டும். சாத்திய கதவின் முன்பு நின்று தவம் கிடக்க வேண்டும். கதவு திறக்க பூபாளம் பாட வேண்டும். கையில் கனத்த பையைச் சுவரில் சாய்த்து வைக்கிறாள்.
இவள் வந்துவிட்டதை அறிந்த வேலைக்காரி, கைக்குழந்தையைக் கொண்டு வந்து நீட்டுகிறாள்.
கொஞ்சம் வச்சுக்க கமலி. பாத்ரூம் போயிட்டு வந்துர்றேன்
என்றவள், ரொம்பவும் அழுதுச்சோ?"
என்று கேட்டபடி பாத்ரூம் கதவைத் தாளிட்டுக் கொள்கிறாள்.
ரொம்பவும் அழுதுச்சும்மா!
மாமனாரின் மூஞ்சியடியோ என்னவோ இப்பொழுது அழுகை இவளுக்கு வருகிறது. வாஷ்பேஸினில் முகத்தைக் கழுவுகிறாள். மூக்கை இரண்டு தடவை உறிஞ்சியதில் அழுகை கட்டுப்பட்டு கண்ணிமைகள் கனத்து மூக்கு சிவக்கிறது. குழந்தையின் அழுகைக் குரல் அழைக்கிறது. வெளியே வருகிறாள்.
நான் வூட்டுக்குப் போகட்டுமாம்மா?
குழந்தை நெஞ்சை முட்டுகிறது.
போயிட்டு வா
பெரியம்மா, நீங்க இன்னும் வரல்லையானு கேட்டுகிட்டே இருந்தாங்காம்மா
என்று செய்தியை எட்டவிட்ட கமலி போய் விட்டாள்.
ப்ரீதா அப்படியே குழந்தையுடன் உட்கார்ந்து கொள்கிறாள். குழந்தை பசியாறப் பசியாற மனசு இலேசாகிப் போகிறது. ஒட்டிய வயிறு பெட்டிக் கூடையாக உப்ப குழந்தையின் மணிக் கண்களை உறக்கம் அணைக்கின்றன. மெல்ல ஏணையில் போட்டு விட்டு மாமியாரின் அறைக்குப் போனாள் ப்ரீதா.
மாமனார் உட்கார்ந்திருந்த நடையின் விளக்கொளியே மாமியாரின் அறைக்குள் மெல்லிய ஒளியைச் சிதற விட்டிருந்தது.
அத்தை...
மாமியார் திரும்பிப் பார்க்கிறாள்.
மணி என்ன இப்ப?
ஏழரை
இன்னும் மத்யானக் காப்பியே ஒருத்தரும் குடிக்கல்ல... தெரியுமில்ல?
அப்படியே நிற்கிறாள் ப்ரீதா. இந்த நேரங்களில் அவள் பேசக் கூடாது. மரக்கட்டையாகி விடவேண்டும்.
ஒரு பொம்பளை வெளியே போனா இத்தனை நேரமா? கைக்குழந்தைக்காரி.. உடம்புல பயம் இருக்கணும் உனக்கு துளிக் கூட கிடையாது. என்ன மனுஷியோ சரி.. சரி.. போ. சூடா காப்பி கொண்டு வா.
அறையை விட்டு வெளியே வந்தவள், தயங்கி மாமனார் முன்பு நிற்கிறாள். உறுமிய சிங்கம் களைத்தது போல் பார்த்த பார்வையாய் பார்க்கிறார் இவளை, கொடூரம் அதிகம்தான். வெம்மை வீச்சாய் விழும் அக்னித் தூள்கள். இறுகிய உதடுகள் வெளியே விடாத எரிமலைப் பாறைகள். இரண்டு அடிகள் அடித்தால் கூடப் பட்டுக் கொள்ளலாம்.
என்னை மன்னிச்சுருங்க.. ரொம்ப நேரமாயிடுச்சி. பஸ் வரல்ல...
என்றவள் சரிந்து உட்கார்ந்து காலில் வணங்கி அழுகிறாள்.
கற்சிலையாக உட்கார்ந்திருக்கிறார் மாமனார். பிரவாகமாகப் பெருகிய அழுகை மெல்லத் தேய்ந்தது. எழுந்து முகத்தைத் துடைத்துக்