Kannil Minnum Kaadhal
()
About this ebook
மராத்தியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் திருமதி ஹம்சா தனகோபால் தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார். எண்ணில் அடங்கா புதினங்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் படைத்துள்ள இவர் இரண்டு கவிதை தொகுப்புக்களுக்கும் உரியவர். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் பெண் சிசு கொலையை வன்மையாக கண்டித்தும் எழுதியுள்ளார்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாய் "அன்று ஒரு நாள் " என்ற புதினத்தை படைத்துள்ளார். இந்த புதினத்திற்கான அணிந்துரையை அழகுப்படுத்தியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்..
மத்திய அரசின் "பாஷா பாரதி சம்மான்" விருது, ரஷ்யா புஷ்கின் இலக்கிய விருது, தமிழக சிறந்த நூலாசிரியருக்கான விருது எனபற்பல விருது பெற்றுள்ள இவர் அண்மையில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான தமிழ் நாடு அரசின் "அம்மா இலக்கிய விருது - 2016" பெற்றது இவருக்கு தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் அளிக்கிறது.
நாற்பது ஆண்டுகளாய் தொடரும் இவரது எழுத்துப்பணி சமூக உயர்வுக்காக மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
Read more from Hamsa Dhanagopal
Deva Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsUnnodu Naan Ennodu Nee Rating: 4 out of 5 stars4/5Ingu Pengal Virpanaikku Alla! Rating: 0 out of 5 stars0 ratingsIraval Pondatti Rating: 0 out of 5 stars0 ratingsAnumathi Illamal Thodathey! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Silai Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Naanum...Naanum Neeyum... Rating: 0 out of 5 stars0 ratingsKanal Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsAndru Oru Naal... Rating: 0 out of 5 stars0 ratingsThisai Thedum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalenum Theevinile… Rating: 5 out of 5 stars5/5Sorna Rating: 0 out of 5 stars0 ratingsNe En Uyirthean Rating: 0 out of 5 stars0 ratingsEnna Theril Aval Rating: 0 out of 5 stars0 ratingsThirumana Malargal Rating: 0 out of 5 stars0 ratingsMona Paravai Rating: 0 out of 5 stars0 ratingsIraval Manaivi Rating: 0 out of 5 stars0 ratingsTheeratha Vilayattu Pillai Rating: 0 out of 5 stars0 ratingsThendralin Suvadu Rating: 0 out of 5 stars0 ratingsMannil Uthitha Vennila Rating: 0 out of 5 stars0 ratingsThisai Maariya Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhali, Meendum Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsKanneerai Thodatheergal Rating: 0 out of 5 stars0 ratingsKolai, Kolai Endru Sonnale! Rating: 0 out of 5 stars0 ratingsJathigal Illaiyadi Papa Rating: 0 out of 5 stars0 ratingsKanna Vaa Rating: 0 out of 5 stars0 ratingsAavi I Love You! Rating: 0 out of 5 stars0 ratingsYarai Kandalum Aasai Rating: 0 out of 5 stars0 ratingsSonnathu Neethaney? Rating: 0 out of 5 stars0 ratingsIndru Mattum Kol Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kannil Minnum Kaadhal
Related ebooks
Vizhi Vaasal Vasanthangal Rating: 0 out of 5 stars0 ratingsAzhagiya Maalaiyil Rating: 0 out of 5 stars0 ratingsOru Naal Iravu Rating: 0 out of 5 stars0 ratingsEttu Thisai Naangu Vasal Rating: 5 out of 5 stars5/5Pachai Kiliyai Maarava? Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Aasai Kodi Sumanthu… Rating: 0 out of 5 stars0 ratingsNaan Enbathey Neeyallavo Rating: 0 out of 5 stars0 ratingsNenjodu Than Poo Poothathu Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Enbathu... Rating: 5 out of 5 stars5/5Deivam Thantha Poove Rating: 5 out of 5 stars5/5Ellam Poi Rating: 0 out of 5 stars0 ratingsIdhayam Uruguthey Rating: 0 out of 5 stars0 ratingsKannethiril Thondrum Kanavu! Rating: 0 out of 5 stars0 ratingsPriya Ennai Piriyaathe Rating: 0 out of 5 stars0 ratingsVaigarai Ragangal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Payanangal Mudivathillai Rating: 3 out of 5 stars3/5Iraval Manaivi Rating: 0 out of 5 stars0 ratingsTwist Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Kaadhaliye Rating: 0 out of 5 stars0 ratingsUyir Chedi Rating: 5 out of 5 stars5/5Ini... Iniya... Rating: 5 out of 5 stars5/5Maaya Maan Rating: 0 out of 5 stars0 ratingsEzhavathu Jenmam Rating: 4 out of 5 stars4/5Mannikka Vendugirean Rating: 0 out of 5 stars0 ratingsSamathiley Naan Varava Rating: 0 out of 5 stars0 ratingsThendralin Suvadu Rating: 0 out of 5 stars0 ratingsEnna Solla Pogiraai Rating: 1 out of 5 stars1/5Karpura Kaatru Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Pon Nilaavey! Rating: 5 out of 5 stars5/5Solla Padatha Nijangal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kannil Minnum Kaadhal
0 ratings0 reviews
Book preview
Kannil Minnum Kaadhal - Hamsa Dhanagopal
http://www.pustaka.co.in
கண்ணில் மின்னும் காதல்
Kannil Minnum Kadhal
Author:
ஹம்சா தனகோபால்
Hamsa Dhanagopal
For more books
http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
1
கலங்கரை விளக்கின் பின்புறம் பரந்து விரிந்த கடற்கரை. மெரீனா போல இங்கே கூட்டமில்லை. வந்திருந்தோர் பலர் சாலையின் மருங்கே உள்ள புல்வெளியில் ஓய்வெடுத்து பேசிக் கொண்டிருந்தனர். சோளக்கதிர் தணலில் சுடும் வாசம் வீசிப் போயிற்று. கூவி அழைக்கும் மல்லிகையின் மணம்.
இதிலிருந்து விடுபட்டு கடற்கரையை ஒட்டினபடி ஈர மணலில் சுகுணாவும் அருணனும் அமர்ந்திருக்கிறார்கள். சுகுணாவின் சல்வார் கடற் காற்றில் பறந்து அருணனின் முகத்தில் படிந்து படிந்து சாமரம் வீசிக் கொண்டிருக்கிறது. அருண் அதை ரசிப்பவனாய் இருந்தான். சுகுணாவும் அதை இழுத்துக் கொள்ளவில்லை.
அருண், என்ன பேச்சையே காணோம்.
சிரித்தபடி சுகுணா அவனை லேசாய் உரசிக் கேட்கிறாள். நடுத்தர உயரமும் மாநிறமாய் பார்க்க லட்சணமாய் இருக்கும் அருணன் எதிரே கடல் அலைகளில் நிற்கும் அந்த குடும்பத்தைச் சுட்டி காட்டுகிறான்.
ஒரு மனிதனின் இருபுறக் கரங்களையும் இரு பெண்கள் பிடித்துக் கொண்டிருக்க தடிமனான பெண்ணின் வலது கரத்தில் ஒரு சிறுவன் கை. அவன் கையில் பெரிய பந்து. பையனுக்கு பத்தாவது வயது இருக்கும். அலையில் பந்தை எறிந்து விட்டு வந்து திரும்ப வருவதில் மகிழ்ச்சி அடைந்தான்.
அந்த குடும்பத்தைத்தான் நான் அப்ப பிடிச்சு பார்த்துட்டிருக்கேன். அந்த மனுஷனின் இரண்டு புறமும் இரண்டு பெண்கள் நிக்கறாங்க, அதில் யார் அவருக்கு மனைவி. இல்லை இரண்டு பேருமான்னு யோசிச்சு பார்த்துட்டிருக்கேன்.
'
"அவன் அப்படி சொன்னதும் அவன் முதுகில் சுளீர் என்று அறைகிறாள் சுகுணா.
ஆசையைப் பார். அவனைப் பார்த்தா ஒரு பெண்டாட்டிய வச்சே பொழைக்க முடியாதவன் போல இருக்கு. அவன் கெட்ட கேட்டுக்கு ரெண்டு பெண்டாட்டி கேட்குதா.
அப்போது அலை ஒன்று இவர்கள் அருகே புரண்டு வர அதில் அந்த பையனின் பந்து உருண்டு வருகிறது. அதை எடுக்க பையன் இவர்கள் அருகே வருகிறான். பந்தை அருணன் எடுத்து அவன் கையில் கொடுத்தப்படி, அது யார். உங்க அம்மாவா இன்னொரு அம்மா நிக்கறாங்களே அவங்க யார்.
என்கிறான்.
பையன் நன்றியுடன் பந்தை பெற்றுக்கொண்டு எங்கப்பா அது. எங்கம்மா அது எங்கம்மாவோட தங்கச்சியதான் எங்கப்பா ரெண்டாந்தாரமா கட்டியிருக்கார், சித்திக்கு குழந்தை இல்லை.
சொல்லிவிட்டு பெற்றோரைத் தேடி ஓடுகிறான் பையன்.
அருணன் பார்த்தியா நான் சொன்னது சரியாப் போச்சு. அந்த மனுஷர் கொடுத்து வச்சவர் அனுபவிக்கவும் ஒரு அதிர்ஷ்டம் வேணுமில்லையா.
என்கிறான் சிரிப்புடன்.
அவன் கன்னத்தில் ஒங்கி குத்துகிறாள் சுகுனா டேய் பையா உனக்கு நான் மட்டும் தான் பெண்டாட்டி. வேற ஒருத்திய நீ தொட்டேன்னு வை. நீ தொலைஞ்சே.
என்ன செய்வே சுகுண்.
"ஊம்…. என்ன செய்வேனா உன்னைக் கொன்னுட்டு நானும் தற்கொலை செய்துக்குவேன். எங்கோ பார்த்தபடி சொல்கிறாள் சுகுணா.
அவள் குரலில் இருக்கும் வேகத்தைப் பார்த்து திடுக்கிட்டுப் போகிறான் அருணன். அவளுக்குப் பிடிவாதமும் பொய்மை கலவாத பேச்சும் அதிகம். சொன்னது போல செய்யக் கூடியவள்தான்.
என்ன அருண், பேச்சையே காணோம். வேற ஒருத்திய செட்டப் செய்து வச்சிருக்கியா.
அவன் தூக்கி வாரிப்போட தோள்கள் குலுக்கிக் கொள்கிறான். ‘’’’’’சே…. சே… நாளைக்கு சினிமாக்குப் போகலாமா டிராமாக்குப் போகலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன்."
அவர்களுக்குச் சற்று தள்ளி ஒரு இளம் ஜோடி அமர்ந்து உலகை மறந்து பேசி களிக்கின்றனர்.
‘'ஓ…. நோ. உன்னோட என்னாலே எங்கேயும் வர முடியாது. நீ கையை வச்சுட்டு சும்மா இருக்க மாட்டே. இங்கே பாரு. நாம மேரேஜ் செய்துக்குவோம். எதுக்கு வீணா நாட்களைக் கடத்திட்டு போகணும்."
யோசனையுடன் கடற்காற்று புகுந்து அலையும் தன் கிராப்பை அவன் கோதிக்கொள்கிறான்.
யூ… ஸி…. சுகுண். நீ சொல்றது சரிதான். ஆனா நினைச்சப்ப போய் கல்யாணம் செய்துக்க முடியுமா. நீ ஒரு பெண்கள் ஹாஸ்டல்ல இருக்கே. நானோ பேச்சலர்ஸ் மேன்ஷனில் இருக்கேன். நாம எப்படி கல்யாணம் செய்துக்கறதாம்.
ஏன் மத்தவங்களைப் போலத்தான். கோயில்ல கல்யாணம் முடிச்சிட்டு ரிஜிஸ்டர் ஆபிஸில் பதிவு செய்திருவோம். கல்யாணத்தை அவசியம் பதிவு செய்யனும்னு அரசாங்கம் சொல்லுது.
நீ கல்யாணத்தை மட்டுமே யோசிச்சு பார்க்கறே. மேரேஜ் முடிஞ்சதும் நாம என்ன பிளாட்பாரத்திலேயா குடும்பம் நடத்த முடியும். ஒரு வீடு வேணும். அதில் நாம தங்கி சமைத்து சாப்பிட சாமான்கள் வேணும். இதைப் பத்தியெல்லாம் நீ யோசிச்சு பார்த்ததா தெரியலை.
"உக்கும்... அதைப் பத்தி நான் நல்லாகவே யோசிட்டேன் எங்க ஆயாக்கிட்ட சொன்னா பத்தாவது நாளே வீடு பார்த்து தரதா சொல்லியிரக்கா
அவளையே வச்சுட்டு வீட்டுக்குத் தேவையானதை வாங்கிருவோம். அங்கங்கே சரியானபொண்ணு கிடைக்கலை மாப்பிள்ளை கிடைக்கலைன்னு கல்யாணத்தைத் தள்ளிப் போடு வாங்க நீ என்னடான்னா…."
அருணன் யோசனையுடன் தலையைக் குனிந்து ஈர மணலில் கோடுகளை இழுத்துக் கொண்டிருக்கிறான்.
பாரு சும்மா கோடு கிழிக்கறதை, சுகுணா அருணனனு எமுதின என்னவாம். அது தோணுதா பார். போப்பா. போயும் போயும் உன்னை நான் காதலிச்சேனே. நீ காதலிக்கவே தகுதியில்லாதவன். சரி நேரமாச்சு. ஹாஸ்டல்ல நேரம் கழிச்சு போனா வார்டன் கன்னாபின்னான்னு பேசுவாங்க. நாளைக்கு சரியா அஞ்சு மணிக்கு காமராஜர் சிலைகிட்ட வந்து. அப்படியே கல்யாணத்தைப் பத்தி நல்ல பதிலைச் சொல்லு என் பிரண்ட்ஸ் கூட அதான் சொல்றாங்க. பார்ட்டி கைமாறிப் போறதுக்குள்ள குயிக்கா மேரேஜ் செய்துக்கப்பாண்ணு.
அவன் ஈர மணலில் எழுந்து கொள்ள அவள் கரம் கொடுக்கிறாள்.
உடையில் படிந்த ஈர மணலைத் தட்டிக்கொண்டு காலணிகளை அணிந்து கொள்கிறார்கள். அவன் கரத்தை அவள் கரம் தேடிப் பிடித்துக் கொள்கிறது.
என்னவோப்பா. இன்னிக்கு நீ ஒரு மாதிரியாவே இருக்கே என்னன்னு தெரியலை உற்சாகத்தையும் சில்மிஷத்தையும் கழட்டி ஆபிஸில் வச்சுட்டு வந்துட்டியா.
அவள் உற்சாகக் குரலில் பேசிக்கொண்டு வர அவன்