Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Mazhainaal Pagalil
Oru Mazhainaal Pagalil
Oru Mazhainaal Pagalil
Ebook92 pages31 minutes

Oru Mazhainaal Pagalil

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பக்கத்து வீட்டுக்காரர்கள், சொந்தங்கள், இவர்களுடான உறவு, பாசம், காதல் போன்ற நிஜ சம்பவங்களுக்கிணையான தொகுப்பு.

Languageதமிழ்
Release dateDec 17, 2022
ISBN6580154009296
Oru Mazhainaal Pagalil

Read more from Tamilselvan Ratna Pandian

Related to Oru Mazhainaal Pagalil

Related ebooks

Reviews for Oru Mazhainaal Pagalil

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Mazhainaal Pagalil - Tamilselvan Ratna Pandian

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஒரு மழைநாள் பகலில்

    Oru Mazhainaal Pagalil

    Author:

    தமிழ்செல்வன் ரத்னபாண்டியன்

    Tamilselvan Ratna Pandian

    For more books

    https://www.pustaka.co.in/home/author/tamilselvan-ratna-pandian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1.கத்தல்

    2.பச்சைப்புடவை

    3.வேஷம்

    4.காதலும் கத்தரிக்காயும்

    5.பட்டாசு

    6.பாதுஷா

    7.பொங்கல் வாரம்

    8.அப்பாவா இப்படி?

    9.ஒரு மழை நாள் பகலில்...

    10.குணம்

    11.நகம்

    12.அக்காவும் தங்கையும் அந்த செயினும்…

    13.ஸீனியர் லிவிங் ஹோம்

    14.சங்கரும் நண்பனும்

    15.வாத்தியார்

    16.நம்பிக்கைத் துரோகம்

    17.காது

    18.மனிதன்

    19.அண்ணன் மனசு

    20.தாத்தாவும் பேத்தியும்

    21.அந்தப் பெண் வேண்டாம்

    22.மொய்

    23.அக்காவும் தம்பிகளும்

    24.பாச ஈரம்

    25.கழுதை... கழுதை...

    26.லவ்ஸ்டோரி

    27.நன்றியுடைமை

    28.சில்லறை

    29.குலதெய்வம்

    1.கத்தல்

    காலைல சாப்பிடாமலேயே கோபத்துடன் கத்திவிட்டு பைக்கைக் கிளப்பி அங்கங்கே அலறவிட்டு அலுவலகம் போனான் ஹ்ரிதிக்.

    காலைச் சிற்றுண்டி எப்பவுமே ஒன்பது மணிக்கு தயாராகி விடும். இன்று இதயா தனது சகோதரியுடன் கைபேசியில் கதைத்ததில் கால் மணி நேரம் தாமதமாகி விட்டது. இவனுக்கோ அலுவலகத்தில் தாமதமாக போனால் வீட்டுக்குத் திருப்பி அனுப்பி விடுவர். அந்த காலை நேர எரிச்சலில் கல்யாணம் பண்ணி இந்த இரண்டு வருடத்தில் முதல் முறையாக குரலை உயர்த்தி சிடுசிடுப்புடன் சாப்பிடாமல் அலுவலகம் வந்து விட்டான் ஹ்ருதிக்.

    ஆனால் அலுவலகம் வந்த பின்னும் மனசு இதயாவையே நினைத்துக் கொண்டிருந்தது... சில பாடல்களை நாம் நாள் முழுக்க முணுமுணுப்போமில்லயா அதுபோல. அவள் என்ன நினைப்பாளோ... கதைகள்ல படிக்கிற மாதிரி கோபிச்சுட்டு அம்மா வீட்டுக்குப் போய்விடுவாளோ? தான் கத்தியது சரிதானா... அவள் நேரம் கடத்தியது சரியா... தங்கையிடம் ரெண்டு வார்த்தை பேசிட்டு இரவு பேசறேன்னு சொல்லியிருக்கக்கூடாதா? மனதில் ஒரு பட்டி மன்றமே நடந்தது நடுவரில்லாமல்.

    அலுவலகத்தில் அவனுக்கு வேலையே ஓடவில்லை. எல்லாமே மெதுவாகத்தான் குட்ஸ் வண்டி போல நகர்ந்தது. அவன் அவனாகவேயில்லை. மேலதிகாரி கூட உடல் சரியில்லையெனில் விடுப்பு எடுத்துக்க சொன்னார். இல்லை ஸார்... அவளும் ஆஃபிஸ் போயிருப்பா... வீட்ல தனியாத்தான் இருக்கணும் னு மறுத்து விட்டான்.

    இரவு வரை பொறுத்திராமல் அவள் மொபைலுக்கு அழைத்தான். ஸாரி பேபி... ஆஃபிஸூக்கு லேட் ஆயிடுமோன்னு கத்திட்டேன்...மனசே சரியில்லை... வேலை ஓடமாட்டேங்குது

    கலகலவென சிரித்தாள் இதயா.

    தப்பு என் மேலேதான்... நான் அவ்வளவு நேரம் பேசியிருக்கக் கூடாது... சரி... சாப்பிட்டியா இல்லியா...

    இல்லை... மூட் அவுட்... ஓங்கிட்டே கோபிச்சுக்கிட்டா டிஃபன் எப்படி உள்ளே இறங்கும்?

    சரியான மக்கு நீ... இதெல்லாம் எனக்கு சகஜம்... எங்கப்பாக்கு கோபமே வராது...அம்மா தொடர்ந்து தப்பா பண்ணிட்டிருந்தா திடீர்னு ஒரு நா கத்துவார்... பிறகு ஒரு நிமிஷத்திலே அப்பா கூலாயிடுவார்... இதெல்லாம் பார்த்து பார்த்து நெருங்கியவர்களின் கத்தல் எனக்கும் தங்கச்சிக்கும் பழகிப் போச்சு... சரி... நீ போய் எதையாவது முழுங்கு என கைபேசியை வைத்தாள்.

    மாமனாரைப் பாராட்டிக் கொண்டே கேண்டீனுக்குப் போனான் ஹ்ரிதிக்.

    2.பச்சைப்புடவை

    இணையத்தில் வலம் வந்த அந்த அழகான பச்சைப் புடவையைப் பார்த்தவுடன் கோமளாவுக்கு பார்த்திபன் நினைவு வந்ததில் ஆச்சரியமில்லை. ஈருடல் ஓருயிராக இருந்தவர்கள் எப்படி விதிவசத்தாலோ, கோமளாவின் பாராமுகத்தாலோ பிரிந்து விட்டனர். கோமளா, தப்பு பார்த்திபன் மேலென கோபத்தில் பார்த்திபனின் ஃபோன் அழைப்புகளை ஏற்காதது மட்டுமல்ல சந்திக்கவும் விரும்பவில்லை. உண்மை என்னவென்று இதுநாள் வரை கோமளாவுக்கும் தெரியாது. பார்த்திபனுக்கோ இதெல்லாம் புரியாத புதிர். தன் அழைப்புகளை கோமளா நிராகரிப்பது தன்னையே நிராகரித்தது மாதிரி வருத்தத்தில் ஆழ்த்தியது கரை புரண்டு ஓடும் ஆற்றில் தற்காலிகமாக முங்கிக்கிடப்பது போல.

    விஷயம் இதுதான். கோமளாவின் மகனுக்குப் பெண் பார்க்க போயிருந்தனர். பார்த்திபனும் தாய்மாமா கோதாவில் வந்திருந்தார். பெண்ணை ஹாலில் முதலில் பார்க்கும்போதே பார்த்திபனுக்கு எங்கேயோ பார்த்தோமேன்னு மூளைக்குள் நியூரான் ஓவர்டைம் பார்க்க ஆரம்பித்தது. அப்போதைக்கு நினைவுக்கு வரவில்லை. பெண் பார்க்கும் வைபவம் முடிந்த பிறகு இரு நாள் கழித்து பார்த்திபனுக்குக்

    Enjoying the preview?
    Page 1 of 1