Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thanda Soru
Thanda Soru
Thanda Soru
Ebook108 pages37 minutes

Thanda Soru

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அன்பு, கல்வி, ஒற்றுமை, எளிமை, நேர்மை போன்ற உயர் குணநலன்களைச் சிறப்பிக்கும் குட்டிக் கதைகள். முதியோர் துயரம், கணவன் மனைவி இல்வாழ்க்கை, இந்த ஜெனரேஷன் பிரச்னைகள், போன ஜெனரேஷன் பிரச்னைகளுக்குத் தீர்வு காணுதலைத் தொடும் வரிகள்.

Languageதமிழ்
Release dateMay 28, 2022
ISBN6580154008475
Thanda Soru

Read more from Tamilselvan Ratna Pandian

Related to Thanda Soru

Related ebooks

Reviews for Thanda Soru

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thanda Soru - Tamilselvan Ratna Pandian

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தண்டச்சோறு

    Thanda Soru

    Author:

    தமிழ்செல்வன் ரத்னபாண்டியன்

    Tamilselvan Ratna Pandian

    For more books

    https://www.pustaka.co.in/home/author/tamilselvan-ratna-pandian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. கௌரவம்

    2. பாராட்டு

    3. கிராமத்து பங்களா

    4. வர்ஷா

    5. வீடு

    6. சின்னஞ்சிறு உலகம்

    7. விவாகரத்து

    8. பேத்தியும் அம்மாவும்

    9. மனைவியின் வாசம்

    10. இளநீர்

    11. பிறர்க்குதவி

    12. ஊர் மரியாதை

    13. ஆதர்ஷ தம்பதி

    14. விஷ்

    15. பாட்டியா big மம்மியா

    16. 'நான்' அழிந்த நேரம்

    17. தண்டச்சோறு

    18. மேகி

    19. கயல்

    20. நம்பிக்கை

    21. புல்

    22. தீ

    23. அம்மா எங்கு போவார்?

    24. 7 கிராம் தங்கம்

    25. காதல்

    26. காதல் போட்டி

    27. மகளுக்குக் கல்யாணம்

    28. எரியப்போகும் உடல்

    29. அண்ணன் தம்பி

    30. கந்தசாமி

    1. கௌரவம்

    ஆவணி மாதம் கிராமத்தில் திருவிழா… பெரும்பாலும் எல்லா குடும்பங்களும்

    'உள்ளேன் ஐயா' சொல்லும் நேரம். அங்குள்ள மூன்று கோவில்களிலும் பொங்கல் வைத்தல், வாண வேடிக்கை, அன்னதானம், தீபாராதனைகள் என ஜெகஜோதியாக இருக்கும். ஆண்கள் பெரும்பாலும் வெள்ளை வேட்டி அல்லது பட்டு வேட்டியில்... பெண்கள் பட்டுப் புடவையில்... கோடிக்கணக்கான பட்டுப்பூச்சிகளின் உயிர் மூச்சு ஒரு நாள் பகட்டுக்காக விலை போகிறது.

    சிறுவர்கள் ஓடியாடி கோவிலின் சுற்றளவை அளந்து கொண்டிருந்தனர். பூசாரி பக்கத்து கிராமத்திலிருந்து பைக்கில் வந்திருந்தார். அன்று மட்டும்தான் அவருக்குக் காணிக்கை ஆயிரங்களில் வரும். போடும் உடை, காணிக்கை, நன்கொடை, சொந்த வீடு மதிப்பு, கார் மதிப்பு இவை எல்லாம் சேர்ந்துதான் கிராமத்தில் கெத்து அளவை நிர்ணயிக்கிறது.

    மாணிக்கம் சென்னையில் சிறு மளிகைக்கடைக்குச் சொந்தக்காரர். கடையில் சாதாரண விலை லுங்கியும் பனியனும் போட்டிருப்பார். ஆனால் கிராமத்தில் இருக்கும் நாட்களில் தினமும் வெள்ளை சட்டை வெள்ளை வேஷ்டி என பெரிய தனக்காரர் மாதிரி வலம் வருவார். இருக்கோ இல்லையோ காணிக்கை நூறு ரூபாய் தீபாராதனை தட்டில் போட்டு விட்டு யாரும் பார்க்கிறார்களா என்று நோட்டமும் விடுவார். பூசாரியிடம் தினம் நலமும் விசாரிப்பார். சென்னை வந்தால் வீட்டுக்கும் கடைக்கும் வாங்க என்று விலாசமும் கொடுத்தார். பூசாரியும் சும்மா இருக்கட்டுமே என வாங்கி வேட்டியில் முடித்து வைத்துக் கொண்டார். மாணிக்கம் பெரிய பக்திமான். வருடா வருடம் சனவரி முதல் தேதி நங்கநல்லூர் அனுமன் வால் வரிசையில் நின்று அனுமானைக் கும்பிடத் தவறுவதில்லை. கிராமத்துக்கு வந்தாலும் பக்கத்திலுள்ள திருச் செந்தூர், வன திருப்பதி, ஆழ்வார் திருநகரி, தென்திருப்பேரை கோவில்கள் போக மறப்பதில்லை.

    பூசாரி மகளுக்கு ஒரு வரன் சென்னையில் ஜாதகம் பொருந்தி வந்திருந்தது என ஒரு நாள் வரனின் அலுவலகத்தில் விசாரிப்பதற்காகப் போயிருந்தார். விசாரித்து விட்டு பக்கத்தில் இருந்த கிராமத்துக்காரர்களின் கடைகள் சில, இவ்வளவு தொலைவு சென்னை வரை வந்தாச்சேன்னு விஸிட் போனார். கிராமத்து வியாபாரிகளுக்கும் ரொம்ப சந்தோஷம். கடைகளில் உட்கார வைத்து காப்பி வடை என ஜமாய்த்தனர். மாணிக்கம் ஐயா கடை எங்கே... பக்கத்தில்தானா ன்னு விலாசத்தைக் காட்டி ஊர்க்காரர்களிடம் விசாரித்தார்.

    இரண்டு கிலோமீட்டர் தூரம்தான்... நேரே மேற்கே போனா எச்பீ பெட்ரோல் பங்க் பக்கத்துச் சந்தில் சின்ன பலசரக்குக் கடை என கை காட்டினர்.

    அந்தச் சந்தில் நுழைந்தவுடனே சின்ன பலசரக்குக் கடையும் மாணிக்கத்தின் அசைவுகளும் தெரிந்தன. இன்னும் பக்கத்தில் போகும்போது துப்பாக்கிக் குண்டு துளைத்த மாதிரி நாலைந்து ஓட்டைகளுடன், அழுக்கான பனியன், சாயம் போன லுங்கியுடன் மாணிக்கம் தென்பட்டார். கடையில் நாலைந்து வாடிக்கையாளர்களை சமாளித்துக் கொண்டிருந்ததால் ஊர்ப் பூசாரியை அவரால் பார்க்கமுடியவில்லை.

    பூசாரி கண்களில் கிராமத்தில் வெள்ளையும் சொள்ளையுமாக பத்து நாள் கெத்து காட்டும் மாணிக்கமும் அவர் தட்டில் போடும் நூறு ரூபாய் நோட்டுகளும், பெரிய மனித தோரணையில் இவரை விசாரிப்பதும் ஞாபகத்துக்கு வந்தது. சினிமாவில் கனவுப்பாட்டில் மட்டும் விலை உயர்ந்த ட்ரெஸ், ஷூ போடும் ஹீரோ ஞாபகத்துக்கு வந்தார்.

    இந்த ஓட்டை பனியன் நிலையில் பார்க்க வேண்டாம், அவருக்கும் ஒரு மாதிரியாக இருக்கும். தன் மனதில் ஏற்கனவே இருக்கும் வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டையே மாணிக்கத்தின் அடையாளமாக என்றும் இருக்கட்டும் என திரும்பி நடந்தார் பூசாரி.

    2. பாராட்டு

    ராணீ...

    என்னங்க?

    நேத்து நீ வச்ச அவியல் பிரமாதம். இன்னிக்கு என்ன?

    சிறுகிழங்கு

    ஸூப்பர்... பிரமாதம்... அதும் உன் கை பட்டால்... அதெப்படி ராணி... நீ என்ன சமைச்சாலும் பிரமாதமா இருக்கு?

    எங்க பாட்டி, அம்மா எல்லோரும் சமைக்கிறதைப் பார்த்து பார்த்து நான் ஒரு காம்பினேஷன் உருவாக்கிட்டேன். உங்களுக்கும் அந்த காம்பினேஷன் பிடிச்சுருக்கு. அவ்வளவுதான்.

    "சரி... நான் துணிகளை வாஷிங் மெஷின்ல போட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1