Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Alaiyathikaadu
Alaiyathikaadu
Alaiyathikaadu
Ebook82 pages28 minutes

Alaiyathikaadu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அன்பு, பாசம், இல்லற மேன்மை, குடும்ப ஒற்றுமை, அறம் உண்மை காதல் போன்ற உன்னத பண்புகளின் மேன்மையை சித்திகரிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு.

Languageதமிழ்
Release dateNov 1, 2022
ISBN6580154009191
Alaiyathikaadu

Read more from Tamilselvan Ratna Pandian

Related to Alaiyathikaadu

Related ebooks

Reviews for Alaiyathikaadu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Alaiyathikaadu - Tamilselvan Ratna Pandian

    http://www.pustaka.co.in

    அலையாத்திக்காடு

    சிறுகதைகள்

    Alaiyathikaadu

    Sirukathaigal

    Author:

    தமிழ்செல்வன் ரத்னபாண்டியன்

    Tamilselvan Ratna Pandian

    For more books

    https://www.pustaka.co.in/home/author/tamilselvan-ratna-pandian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. அக்கா

    2. செஸ் போட்டி

    3. இதுதான்டா அன்பு

    4. நல்லினி

    5. அக்கா தங்கை

    6. அக்கா தம்பி

    7. நன்றி

    8. அப்பாவும் அவர் கொள்கையும்

    9. காதலாவது கத்தரிக்காயாவது

    10. ஜொள் மேலாளர்

    11. அலையாத்திக்காடு

    12. சிலை

    13. மணமகன் தேர்வு

    14. உயிர்

    15. டீஸிங்

    16. வகுப்பு 12

    17. கொன்றது யார்?

    18. பிடிக்காதது

    19. நல்லா படி

    20. யார் மணமகன்?

    21. இருபது ரூபாய் நாணயம்

    22. நெற்றி வடு

    23. இருபது பவுனு

    24. கையெழுத்து

    25. பருப்பும் உருளையும்

    26. வைராக்கியம்

    27. உங்களுக்கென்னப்பா ராஜாதான்

    28. நீதிக் கதை

    29. விவசாயியும் ராணுவ வீரனும்

    30. பட்டுப்பூச்சி

    31. ரத்து

    1. அக்கா

    தெருவுல சின்னப் பிள்ளைங்க 'அக்கா'ன்னு கூப்பிட்டா கூட திரும்பிப் பார்ப்பவள் 33 வயசு சுகுணா... மந்தவெளி ரயில் நிலையத்திலிருந்து ராமகிருஷ்ணா மடத்துச் சாலைக்குத் தினமும் நான் அலுவலகம் போகும்போது பார்க்கும் துப்புரவுத் தொழிலாளி. நெற்றியில் திருநீறும் அதன் நடுவே... தேசியக்கொடில நடுவுல அசோக சக்கரமிருக்குமே அதுபோல சிவப்பு குங்குமம் வட்டமாக அழகு சிந்தும்.

    அவள் மனதில் ஒரு சமாச்சாரம் நெருடிக் கொண்டிருந்தது... காலைல வேலைக்குப் போற அவசரத்துல மனைவிட்ட கணவன் வாங்குற அர்ச்சனை நாள் முழுதும் மனதைக் குடைவது போல... இன்னைக்குள்ள முடிவெடுத்தாகணும். நாளைக்குக் காலையில் வேலைக்கு வரும்போது அந்த முனுசாமிக்கு 'ஆம்' 'இல்லை'ன்னு கோன் பனேகா கோடிஸ்வரனில் அமிதாப்பிடம் சொல்வது போல சொல்லணுமாம்... அவனுக்கும் அவன் வீட்டில் சீக்கிரம் கல்யாணம் பண்ணு... பண்ணு என நெருக்குகிறார்களாம்... எங்கும் நெருக்கடி... நேர நெருக்கடி... பண நெருக்கடி... பாசத்துக்குப் பஞ்சம் என மனித வாழ்க்கையே போராட்ட களமாகி விட்டது நிறைய பேருக்கு.

    சுகுணாவால் வேலையில் முழுமனசும் செலுத்த முடியவில்லை. கூட வேலை செய்யும் தேவி வாய் விட்டு கேட்டே விட்டாள்... என்னக்கா உடம்பு பேஜாரா இல்லேங்காணும் மனஸா?

    மனசுதான்டி

    சுகுணா நிலைமை தேவிக்குப் புரியுமாதலால் மேலே கேள்வி கேட்கவில்லை.

    வீட்டுக்குத் திரும்பியதும்... அதே வேலை... கால் சுவாதீனமில்லாத ரெண்டு தம்பிகளுக்கும் கக்கூஸ் போக உதவி பண்ணினாள்; புத்தி சுவாதீனமில்லாத தங்கைக்கு சோறு ஊட்டினாள். இவர்களை அனாதையாக விட்டு விட்டு பதினஞ்சு வருஷமுன்னாடி சுனாமில செத்துப் போன பெற்றவர்களை மேல் சுவற்று ஃபோட்டோவில் நடுவில் ஒரு முறை எட்டியும் பார்த்துக் கொண்டாள். இந்த மூனு ஜீவன்கள் முக்கியமா அல்லது தனது கல்யாணம் பிள்ளை குட்டிகள்னு இயல்பு வாழ்க்கை முக்கியமா... வீட்டுக்குள் வந்தால் தம்பிகளும் தங்கையுமே முக்கியமாகத் தோணுகிறார்கள். முனுசாமி தானில்லாமல் வாழமுடியும் ஆனால் இந்த திக்கற்ற மூனு உடன் பிறப்புகளுக்கும் நாந்தானே எல்லாம்னு உள் மனது உரக்க முழக்கமிட்டது. இவர்களுக்காகத் தன் வாழ்க்கையையே தியாகம் பண்ண சித்தமாயிட்டாள் சுகுணா. மனம் இப்போது தெளிவாகி விட்டது... வானத்தில் மேகங்கள் ஒதுங்கி வெற்று வானம் நீலச் சேலையா பரந்து விரிந்த மாதிரி... பரிட்சையிலே கணக்குக்குச் சரியான விடை கிடைத்தது போல...

    சுகுணாவின் பெற்றோர்களுக்கு அஞ்சு பிள்ளைங்க... முதல்ல சுகுணா... கடைசில அருணா... இந்த இருவரைத் தவிர மீதி மூனு பேரும் குறைபாடு உள்ளவர்கள். மருத்துவரிடம்

    Enjoying the preview?
    Page 1 of 1