Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Pakka Iru Pakka Kurunkathaigal
Oru Pakka Iru Pakka Kurunkathaigal
Oru Pakka Iru Pakka Kurunkathaigal
Ebook96 pages33 minutes

Oru Pakka Iru Pakka Kurunkathaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பக்கத்து வீட்டுக்காரர்கள், சொந்தங்கள், இவர்களுடான உறவு, பாசம், காதல் போன்ற நிஜ சம்பவங்களுக்கிணையான தொகுப்பு.

Languageதமிழ்
Release dateJan 14, 2023
ISBN6580154009486
Oru Pakka Iru Pakka Kurunkathaigal

Read more from Tamilselvan Ratna Pandian

Related to Oru Pakka Iru Pakka Kurunkathaigal

Related ebooks

Reviews for Oru Pakka Iru Pakka Kurunkathaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Pakka Iru Pakka Kurunkathaigal - Tamilselvan Ratna Pandian

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    ஒரு பக்க இரு பக்கக் குறுங்கதைகள்

    Oru Pakka Iru Pakka Kurunkathaigal

    Author:

    தமிழ்செல்வன் ரத்னபாண்டியன்

    Tamilselvan Ratna Pandian

    For more books

    https://www.pustaka.co.in/home/author/tamilselvan-ratna-pandian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. தாழ்வு மனப்பான்மை

    2. கத்தரிக்காய்

    3. தன்னம்பிக்கை

    4. விழியே கதை எழுது

    5. பின்னாடியே ஒருவன்

    6. தன்வி

    7. லைக் கமெண்ட்

    8. நிம்மதி எங்கே?

    9. பக்கத்து வீட்டு பொண்ணு

    10. மூன்றாம் பால்

    11. சக்கரைப் பொங்கல்

    12. மனைவி

    13. அழுகை

    14. லட்சம்

    15. அக்கா செயின்

    16. அக்கா செயின்

    17. குண்டு

    18. நாத்தனாரும் அத்தை சொத்தும்

    19. கொச்சியும் மதுரையும்

    20. 500 ரூபாய்

    21. அம்மா அம்மாதான்

    22. அப்பா

    23. யார் கிட்ட?

    24. அப்பாவைப் பின்பற்றி

    25. ராதா

    26. ஒழுக்கம்

    27. தெய்வம் நின்று கொல்லும்?

    28. ஆப்பிள் துண்டும் நாலு குட்டும்

    29. அருவி

    30. ஒரு ஃபோட்டோவின் கதை

    31. தோசை

    1. தாழ்வு மனப்பான்மை

    வளமதி சொன்னா சரிதான்.... தம்பிக்கு பொண்ணு பாக்க ஆரம்பிச்சுடலாம்என்றார் அப்பா முருகனிடம். அப்பாக்கு வளமதியின் சமையல் மற்றும் பாசமான செயல்கள் ரொம்பப் பிடிக்கும். முருகனின் பெற்றோரையும் தம்பியையும் ஒரு குறை இல்லாது குடும்பத்தை நடத்தினாள் வளமதி. குடும்பத்தில் நல்ல மருமகள்னு குறுகிய காலத்திலேயே பெயரெடுத்து விட்டாள் வளமதி.

    முருகன் வளமதி ஜோடிக்கு ஒரே பெண் இளமதி. தாத்தா பாட்டிக்கு செல்லம். பள்ளிக்கூடம் போக ஆரம்பித்தாள். சித்தப்பாவே சைக்கிளில் கொண்டு இறக்கி விடுவார்.

    சைக்கிள் உருண்டதைப் போல காலமும் விரைந்து ஓடியது. இளமதி இப்போது சித்தி செல்லமாகி விட்டாள்."சித்தி சித்தி.. ..என அவளையே சுற்றி வர ஆரம்பித்தாள். சித்தி பார்ப்பதற்கு புற அழகு மட்டுமல்ல அறிவிலும் குணத்திலும் சிறந்தவள். இளமதிக்கு பாடங்களில் சந்தேகம் வந்தால் அப்பா அம்மாவிடம் போவதில்லை; எல்லாமே சித்திதான். வளமதிதான் எதற்கெடுத்தாலும் நிறைய குறைப்பட்டுக் கொள்ள ஆரம்பித்தாள் அந்த தம்பி கல்யாணத்துக்குப் பிறகு. மகளும் சித்தி சித்தி என அம்மாவிடம் போவதைக் குறைத்தவுடன் அந்த அகக்குமுறல் கடலில் ஏற்படும் சூறாவளி போல வெகுண்டது. முருகன் தம்பி மனைவியிடம் பேசினால் கூட கணவனிடம் கோபிக்க ஆரம்பித்தாள். திடீர் திடீரென மனைவி தன்னை படுக்கையறையில் உதாசினப்படுத்துவதும், பேசாமல் இருப்பதும் சிடுசிடுவென தம்பியிடமும் தம்பி மனைவியிடமும் பேச ஆரம்பித்ததும் ஏனென்று உடனே புரியவில்லை. வீட்டின் இனிய சூழ்நிலையே தலைகீழாக போனது. பெற்றோர்களும் திகைத்து என்ன சொல்ல என வாயை மூடிக் கொண்டிருந்தனர். அவர்களின் செல்ல மருமகள் இப்படி மாறுவாள் என அவர்களும் எதிர்பார்க்கவில்லை.

    அதையும் கூடிய சீக்கிரம் கடவுளே உணரவைத்தார். மகளின் பிறந்தநாளுக்கு அலுவலகத்திலிருந்த நண்பர்களைக் கூப்பிட்டிருந்தான் முருகன். நாலு பெண்களும் ஆறு ஆண்களும் வந்திருந்து கலகலப்பாக எல்லோரிடமும் பேசி மகளை வாழ்த்திச் சென்றனர். வளமதி ஆரம்பத்தில் வரவேற்று பேச ஆரம்பித்தவள் கணவனுடன் அலுவலக பெண்களும் ஜாலியா கிண்டலடித்து பேச ஆரம்பித்தவுடன் முகத்தைச் சுருக்க ஆரம்பித்தாள் நண்பகலில் சூரியனை அண்ணாந்து பார்த்தவள் போல. அன்றிரவு மறுபடியும் சுணக்கம். பால்கனியில் நின்று நிலாவைப் பார்த்தபடி யோசிக்க ஆரம்பித்தான் முருகன். வளமதியின் பிரச்னை புரிய ஆரம்பித்தது. தைராய்ட் உருவாக்கிய உடல் மாற்றம் , இளநரை எல்லாம் சேர்ந்து மனைவியை தாழ்வு மனப்பான்மைக்கு இட்டுச் சென்றிருக்குமோ என யோசித்தான். ஒரு மன இயல் மருத்துவரிடம் ஆலோசிப்பது என முடிவெடுத்தான்.

    இதை மனைவியிடம் பேசவே முருகனுக்கு சில நாட்களாயின. முதலில்எனக்கொன்னுமில்லை; உங்களுக்கு வேணும்னா டாக்டரைப் பாருங்கஎன குண்டை மாத்திப் போட்டாள். இப்படியே இரண்டு வருடங்கள் ஓடின. மனைவிக்காக தனிக்குடித்தனம் போனான் முருகன். அப்படியும் வளமதியின் போக்கு குறையவில்லை. எந்த பெண்ணும் கணவனிடம் பேசினால் முகம் சுளிக்க ஆரம்பித்தாள். அவளின் போக்கு வளர்ந்து வரும் இளமதிக்கும் எரிச்சலாயிருந்தது. தோழிகளின் அம்மாமார்களிடம் கூட சரியாக பேசுவதில்லை வளமதி.என்னடி.... உங்கம்மா ரொம்ப ரிஸர்வ்டா இருக்காங்க. ...எப்பவுமே இப்படித்தானா இல்லை இப்படித்தான் எப்பவுமாஎன கிண்டல் பண்ணினர்.

    இரண்டு வருட போராட்டத்துக்குப் பின்

    Enjoying the preview?
    Page 1 of 1