Valartha Kada
By Sivasankari
()
About this ebook
She has many novels, novellas, short stories, travelogues, articles and biographies to her credit. Her works have been translated into several Indian languages, English, Japanese and Ukrainian. Eight of her novels have been made into films, having directed by renowned directors like K. Balachander, SP Muthuraman and Mahendran. Her novel 'Kutti' on girl child labour, filmed by the director Janaki Viswanathan, won the President's Award. Sivasankari's novels have also been made as teleserials, and have won the national as well as regional 'Best Mega Serial' awards.
As a multi-faceted personality, she has won many prestigious awards including Kasturi Srinivasan Award, Raja Sir Annamalai Chettiyar Award, Bharatiya Bhasha Parishad Award, 'Woman of the year 1999-2000' by the International Women's Association, and so on.
'Knit India Through Literature' is her mega-project involving intense sourcing, research and translations of literature from 18 Indian languages, with a mission to introduce Indians to other Indians through culture and literature.
Read more from Sivasankari
Andhamma Romba Nallavanga Rating: 5 out of 5 stars5/5Mookkanaangayiru Rating: 5 out of 5 stars5/5Nappaasai Rating: 0 out of 5 stars0 ratingsAairam Kaalathu Payir Rating: 5 out of 5 stars5/5Amma Rating: 5 out of 5 stars5/5Vetkam Kettavargal Rating: 0 out of 5 stars0 ratingsAmma Sonna Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsSuriya Vamsam - Part 1 Rating: 5 out of 5 stars5/5Thavam Rating: 5 out of 5 stars5/5Deivam Nindru Kollum Rating: 0 out of 5 stars0 ratingsPaarvai Rating: 0 out of 5 stars0 ratingsPrayachchitham Rating: 4 out of 5 stars4/5Payirai Meyum Veligal Rating: 5 out of 5 stars5/5Ivalum Avalum Rating: 0 out of 5 stars0 ratingsVimochanam Rating: 4 out of 5 stars4/5Kuzhappangal Rating: 0 out of 5 stars0 ratingsAvargalukku Puriyathu Rating: 5 out of 5 stars5/5Paalangal Rating: 0 out of 5 stars0 ratingsNooleni Rating: 5 out of 5 stars5/5Overdose Rating: 0 out of 5 stars0 ratingsVerillatha Marangal Rating: 5 out of 5 stars5/5Uyarndhavargal Rating: 5 out of 5 stars5/5
Related to Valartha Kada
Related ebooks
Kutty Rating: 0 out of 5 stars0 ratingsKadaisiyil Rating: 0 out of 5 stars0 ratingsAvargalukku Puriyathu Rating: 5 out of 5 stars5/5Nazhuvum Nerangal Rating: 5 out of 5 stars5/5Anuradha Ramananin Sirukathaigal Collection - 4 Rating: 3 out of 5 stars3/5Vetkam Kettavargal Rating: 0 out of 5 stars0 ratingsYugangal Marumpothu Rating: 0 out of 5 stars0 ratingsDevakiyin Kanavan Rating: 0 out of 5 stars0 ratingsUravukkendru Virintha Ullam Rating: 1 out of 5 stars1/5Durga Rating: 0 out of 5 stars0 ratingsAppalakacheri Rating: 2 out of 5 stars2/5Irandavathu Thenilavu Rating: 0 out of 5 stars0 ratingsMalathi Oru Athirchi Rating: 0 out of 5 stars0 ratingsMaalayil Pookkum Malargal Rating: 0 out of 5 stars0 ratingsKappal Paravai Rating: 0 out of 5 stars0 ratingsKaaranangal Rating: 5 out of 5 stars5/5Nagarangal Manithargal Panpaadugal Rating: 0 out of 5 stars0 ratingsSuttaman Rating: 5 out of 5 stars5/5Amma, Please, Enakkaga... Rating: 2 out of 5 stars2/5Kan Ketta Pin Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Enbathu Ethuvarai? Rating: 0 out of 5 stars0 ratingsSivasankari Sirukathaigal Mudhal Thoguppu Rating: 5 out of 5 stars5/5Janaki Maami Rating: 4 out of 5 stars4/5Amma Sonna Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsKizhakkey Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsNathiyin Vegathodu… Rating: 5 out of 5 stars5/5Indre Nesiyungal Rating: 0 out of 5 stars0 ratingsEn Yaaththirai Anubavangal Rating: 0 out of 5 stars0 ratingsVaasalvarai Vandhaval Rating: 0 out of 5 stars0 ratingsAasai Kiliye! Azhagiya Rani! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Valartha Kada
0 ratings0 reviews
Book preview
Valartha Kada - Sivasankari
http://www.pustaka.co.in
வளர்த்த கடா
Valartha Kada
Author:
சிவசங்கரி
Sivasankari
For more books
http://www.pustaka.co.in/home/author/sivasankari-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
1
அம்மா...
அடுப்பில் வாணலியை ஏற்றி, எண்ணெய் விட்டு, கடுகைப் போட்டிருந்தாள் ராஜி. வெடிக்கும் சமயம், இஞ்சி, பச்சைமிளகாய், கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், மசாலாத்தூள் ஆகியவற்றை வதக்கி, வேகவைத்த உருளைக் கிழங்கைப் போட்டுவிட்டால், பொரியல் தயாராகிவிடும், அப்புறம் மாவைப் பிசைந்து பூரிகளை இட்டு, பொரிக்க வேண்டியதுதான்.
அம்மா...
பாத்ரூமிலிருந்து துளசி பெரிதாய் இரண்டாம் முறை கத்தவே, என்னம்மா?
என்றாள் ராஜி, இருந்த இடத்திலிருந்தே.
தாயின் குரல் துளசிக்குக் கேட்கவில்லை. அம்மா...
என்று மீண்டும் கூவினாள், இன்னும் சற்று உரத்த குரலில்.
கடுகு வெடித்துவிட்டது. பச்சைமிளகாய் இஞ்சியை வதக்கிக்கொண்டே, ரத்னா... அக்கா கூப்பிடறா... என்னனு கேளு...
என்றாள் ராஜி.
பக்கத்து அறையில் பள்ளிக்குத் தேவையான புத்தகங்களைப் பெட்டியில் அடுக்கிக்கொண்டிருந்த ரத்னா, அதை அப்படியே விட்டுவிட்டுப் பின்பக்கம் போனாள்.
என்னக்கா? என்ன வேணும்?
கதவைச் சிறிது திறந்து எட்டிப்பார்த்தாள் துளசி.
பெளர்ணமி நிலா, மேகத்தினுள் மறைந்து கொஞ்சம்கொஞ்சமாய் எட்டிப் பார்ப்பதைப் போல துளசியின் ஈரக்கூந்தல் புரளும் நெற்றி தெரிந்தது. பெரிய கறுப்பு வண்டுகள் இரண்டு சிறகுகளைப் படபடவென்று அடித்துக்கொள்கிற மாதிரி, அவளுடைய குண்டுக் கண்களில் இமைகள் படபடத்தன.
அம்மா எங்க?
அடுப்புல வேலையா இருக்காங்க...
நா கூப்பிட்டேன்னு சொல்லு...
ரத்னா திரும்பிப் போனாள்.
அக்கா உங்களைத்தான் கூப்பிடறாம்மா...
வெங்காயத்தை வாணலியில் போட்ட ராஜி, அடுப்பை அணைத்து, அதைக் கீழே இறக்கி வைத்தாள்.
துளசி இருந்த குளியலறைக்குப் போய் கதவைத் தட்டி, என்னம்மா?
என்றாள்.
டவல் வேணும்மா.
ராஜிக்கு சிரிப்புதான் வந்தது. பன்னிரெண்டு வயசுப் பெண் குளிக்கப் போகும் முன், துண்டு, உள்பாவாடை வகையறாக்களை எடுத்துக்கொண்டு போகாதோ! ஒருநாளைப்போலத் தினம் பாத்ரூமில் நின்றுகொண்டு, 'அம்மா, அம்மா' என்று கொள்ளைபோய்விட்ட மாதிரி கத்தவேண்டியது, கைக்காரியத்தைப் போட்டுவிட்டு ராஜியும் ஓடவேண்டியது. அம்மாவுக்கு பதிலாக வேறு யார் வந்தாலும் பிரயோஜனமில்லை. 'அம்மாவைக் கூப்பிடு' - இதே பல்லவிதான். சரியான அம்மாக்கோண்டு!
ரத்னாகிட்ட கேட்டா டவல் குடுக்க மாட்டாளா? இதுக்கு நாந்தான் வரணுமா?
அவ ஈர டவல் தருவாம்மா... இல்லேன்னா, அழுக்கு டவல் தருவா...
சுத்தமான துண்டை எடுத்து மகளிடம் நீட்டிய ராஜி, சரி, சரி... மளமளன்னு துடைச்சுகிட்டு வாம்மா... மணி என்ன தெரியுமா? அப்பா டிபன் சாப்பிட வந்துடுவாரு... சீக்கிரம் வா...
என்று சொல்லி, மீண்டும் சமையல்கட்டிற்குள் புகுந்தாள்.
தினமும் காலையில் வந்து சமையல் வேலைகளைக் கவனித்து, மாலையில் வீடு திரும்பும் அலமேலும்மா, இரண்டு நாள்களாய் வரவில்லை. அவள் மகனுக்கு உடம்பு முடியவில்லையாம். டாக்டரிடம் கொண்டு காட்ட வேண்டுமாம். முந்தா நாளே சொல்லி லீவு வாங்கிக்கொண்டுவிட்டாள்.
ராஜியின் குடும்பம் சின்னதுதான். மாமியாரும் மாமனாரும் மைத்துனரும் நாத்தனாரும், ஜகஜகவென்று வீட்டை நிறைக்கும் குழந்தைகளும் கிடையாது. சவரணையாய் இரண்டு பெண்கள்... பன்னிரண்டு வயசு துளசி, பத்து வயசு ரத்னா, அப்புறம் சம்பத், இவள்... இவ்வளவு பேர்தான். ஆனால், இந்த நான்கு பேர்களுக்குச் சமைத்து, அவரவர் காரியங்களைக் கவனிப்பதற்குள் வரவர ராஜிக்கு விழிபிதுங்கித்தான் போகிறது.
வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்த ராஜி என்கிற ராஜலட்சுமிக்கு, சின்னவயசு முதற்கொண்டே எதையும் கையில் ஆட்கள் எடுத்துக் கொடுத்துப் பழக்கம். ராஜியின் தந்தை நாகபூஷணம், நாகப்பட்டினத்துக்கு அருகே மிராசுதார். ராஜியைச் சேர்த்து அவருக்கு மொத்தம் மூன்று பெண்கள். நிலபுலன்கள் செளகர்யமாய் இருப்பதால், பெண்களைக் கல்லூரியில் படிக்க வைத்ததோ, இல்லை, அந்தஸ்தான மாப்பிள்ளைகளைப் பிடித்ததோ அவருக்குச் சிரமமாகவே இல்லை.
சம்பத், சென்னைக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு வந்து வருஷங்கள் இரண்டாகிவிட்டன. மெளண்ட் ரோடில் இருந்த பாங்கில் மானேஜர் உத்தியோகம். கை நிறைய சம்பளம்.
ஆபீஸுக்குப் போகவும், பெண்கள் பள்ளிக்குச் செல்லவும், மற்றபடி கடைகண்ணிகளுக்குச் சென்றுவரவும் வசதியாய் இருக்கும்படி, ஆழ்வார்பேட்டை மோபரிஸ் சாலையிலிருந்து பிரிந்து சென்ற குறுக்குத் தெருவில் எழுநூறு ரூபாய் கொடுத்து ஜாகை.
காலையில் நித்தமும் காரில் அலுவலகம் போகும் வழியில், சம்பத் பெண்களைப் பள்ளியில் இறக்கிவிட்டுப் போவார்.
மாலையில் அவர் வீட்டுக்குத் திரும்ப முன்னேபின்னே ஆகும் என்பதால், துளசியும் ரத்னாவும் பஸ்ஸில் இடிபட்டுக்கொண்டு வராமலிருக்க சைக்கிள் ரிக்ஷா ஒன்றை அமர்த்தியிருந்தார்.
வீட்டில் ராஜிக்கு சமையலில் உதவ அலமேலும்மா, மற்ற உபரிக் காரியங்களைக் கவனிக்க சரோஜா என்ற பெண் வேறு.
அலமேலும்மா இருந்தால் கவலையில்லை. காலையில் ஐந்தரைக்கு எழுந்து, காபி ஃபில்டரில் வெந்நீர் கொதிக்கவைத்து ஊற்றி, சுவாமி அலமாரியைத் துடைத்து, விளக்கேற்றி ராஜி நமஸ்கரிப்பதற்கும், அலமேலும்மா வருவதற்கும் சரியாக இருக்கும். அப்புறம், சமையல்கட்டுப் பொறுப்பு ராஜிக்கு இருக்காது.
சரோஜா வீட்டைப் பெருக்கி மெழுகும் நாழிகையில், அவள் குளித்து விடுவாள். மணி ஆறரை ஆவதற்குள் கணவருக்குக் காபியும் பேப்பரும் கொடுத்துவிட்டு, பெண்களை எழுப்பப் போவாள்.
தலையணை ஒருபக்கம், பெட்ஷீட் ஒருபக்கம் என்று கட்டிலில் உருண்டு கிடப்பாள் துளசி. முந்தின இரவு படுக்கவைத்த தினுசிலேயே அலுங்காமல், உடை நெகிழாமல் படுத்திருப்பாள் ரத்னா.
எழுந்திரும்மா...
என்று மெல்ல குரல்கொடுத்துத் தொட்டு அசைப்பதற்குள், ரத்னா எழுந்துவிடுவாள். அவளை முகம் கழுவ அனுப்பிவிட்டு துளசியிடம் வருவாள் ராஜி. இப்படி வந்து, 'துளசி' என்று அழைத்தால், அப்படித் திரும்பிப் படுப்பாள். 'எழுந்திரும்மா' என்றால், 'என்னம்மா இவ்வளவு சீக்கிரம்!' என்று முணுமுணுப்பாள். 'நாழியாச்சும்மா' என்று ராஜி சொல்வதைக் காதில் வாங்காமல் போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு, 'இன்னும் பத்து நிமிஷம்மா, ப்ளீஸ்' என்று கெஞ்சுவாள்.
தூக்கம் வந்தா தூங்கட்டும், விடு ராஜி, அவளை... கால்மணி கழிச்சு எழுந்திருக்கட்டுமே...
என்று ஒருநாளைப்போல அப்பாவின் சிபாரிசும் கிடைக்குமாதலால், ஒருவழியாய் துளசி எழுந்து, பல் விளக்கி, பால் குடித்து ஹாலுக்கு வருமுன், ரத்னா குளிக்கக்கூடப் போயிருப்பாள்.
சாதாரண நாளாய் இருந்தால், துளசியோடு மன்றாடுவதற்கு ராஜியும் தயார்தான். ஆனால், இரண்டு நாள்களாய் அலமேலும்மா வராததால், சமையல், டிபன், மற்ற காரியங்களையும் கவனித்துக்கொண்டே துளசியைக் கிளப்புவது கஷ்டமாகத்தான் இருந்தது.
துளசிக்கு டவல் கொடுத்துவிட்டு சமையலறைக்குள் நுழைந்த ராஜி, பரபரவென்று காரியங்களைக் கவனிக்கத் தொடங்கினாள்.
அணைத்திருந்த காஸை ஏற்றி, பாதியில் நிறுத்திவைத்திருந்த பொரியலைச் செய்தாள். கோதுமை மாவைப் பதமாய் பிசைந்து ஒருபக்கமாய் வைத்தாள். கணவருக்கு சாம்பார், தயிர் சாதங்களைப் பிசைந்து ஹாட்கேஸில் நிரப்பி, அதோடு தண்ணீர் பாட்டில், கைத்துண்டையும், அதற்கென வாங்கியிருக்கும் பிளாஸ்டிக் கூடையில் அடுக்கி, சரோஜாவை அழைத்து, கூடைய பத்திரமா கார்ல கொண்டுபோய் வை...
என்று பணித்தாள்.
சாப்பாட்டு டேபிளில் கணவரும் பெண்களும் காலை டிபன் சாப்பிடுவதற்காகத் தட்டுக்களை வைக்க வந்தபோது, பள்ளிக்குப் போகத் தயாரான நிலையில் ரத்னா வந்தாள்.
தட்டு வெக்கட்டுமாம்மா?
பதவிசாய் ராஜியின் கைகளிலிருந்த தட்டுக்களை வாங்கி மேஜையில் வைத்து, டம்ளர்களில் குடிக்கத் தண்ணீரை நிரப்பினாள்.
வாயைத் திறக்காமல் காரியம் செய்யும் ரத்னாவை ஒரு நிமிஷம் நின்று கவனித்தாள் ராஜி. துளசியைப் பார்த்த கண்களுக்கு வேண்டுமானால், ரத்னா பிரமாதமான அழகியாகத் தென்படாமல் இருக்கலாம். ஆனால், தனியாய்ப் பார்த்தால், ரத்னாவிடம் ஓர் அடக்கமான கவர்ச்சி இருக்கத்தான் செய்கிறது.
சம்பத் சாப்பிட வந்துவிட்டார்.
மேஜையில் அவர் அமர்ந்ததும், ராஜி பூரிகளை அவசரம்அவசரமாய் இட்டு, பொரிக்க ஆரம்பித்தாள்.
துளசி, சாப்பிட வாம்மா... நாழியாகல?
- சம்பத் குரல்கொடுத்தார்.
வந்துட்டேம்பா...
பதில் வந்ததே ஒழிய, பத்து நிமிஷங்கள் ஆனது ஆள் வர.
துளசி தன்னைத் தயார்செய்துகொண்டு டிபன் சாப்பிட வருவதற்குள், சம்பத்தும் ரத்னாவும் எழுந்து கைகழுவிவிட்டார்கள்.
மேஜையின் முன் அமர்ந்து, தட்டில் விழுந்த பூரிகளைப் பார்த்த துளசி, முகத்தைச் சிணுங்கிக்கொண்டாள்.
என்னம்மா... பூரியா? சொதசொதன்னு எண்ணெய் கோத்துகிட்டு... இந்தக் காலை நேரத்துலயா? வேற டிபன் பண்ணக்கூடாதாம்மா?
முதல்நாள் மாலை பள்ளியிலிருந்து திரும்பியவளுக்கு உப்புமாவை டிபனாகக் கொடுத்ததும், என்னம்மா நீங்க! சும்மா உப்புமா பண்ணிகிட்டு! ஜம்முனு பூரி, மசால் தோசைன்னு செய்யக்கூடாதா?
என்று துளசி கேட்டதற்காக இந்தக் காலை நேரத்தில் காலில் வெந்நீரைக் கொட்டிக்கொண்டு பூரி கிழங்கு செய்திருந்த ராஜி, நிமிர்ந்து பெண்ணைப் பார்த்தாள். துளசியின் சுபாவம் அவளக்குத் தெரியாதா என்ன? ஒரு நிமிஷம் ஒன்று சொல்வாள், மறுநிமிஷம் அதை அடியோடு மறந்து விடுவாள். 'ஏன் துளசி?' என்றால், 'நானா? அப்படிச் சொன்னேனா?' என்று கண்களை மலர்த்திக்கொண்டு குழந்தைத்தனமாய் பதில்கேள்வி கேட்பாள்.
துளசி இன்னும் குழந்தையாய் இருக்கிறாளே! மனசில் கபடில்லாமல் இரண்டுங்கெட்டானாய் இருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது... ஆனால், ஊரும் உலகமும் இவளைச் சரியாக உணர்வார்கள் என்பது என்ன நிச்சயம்! வயசு பாட்டுக்கு ஏறிக்கொண்டு போகிறது... நாளைக்குப் பெண்ணைச் சமர்த்தாய் வளர்க்கத் தெரியவில்லை என்று என்னைத்தானே ஏசுவார்கள்!
அதட்டலாய் ஒரு வார்த்தை சொல்ல எண்ணிய ராஜியை, கெஞ்சும் அழகிய முகம் வாளாதிருக்கச் செய்துவிட்டது. கூடவே, பூரி வேண்டாமென்று வெறும் வயிற்றோடு மகள் பள்ளிக்குப் போய்விடப்போகிறாளே என்ற ஆதங்கம் எழ, வேற என்னம்மா சாப்பிடத் தரட்டும்?
என்றாள். அவள் கேட்டபடி ரொட்டியில் வெண்ணெய் ஜாம் தடவித் தருவதற்குள், ரத்னா தன் புத்தகப் பையையும் துளசியின் பெட்டியையும் கொண்டுபோய் காரில் வைத்தாள்.
ரொட்டியைத் திணித்துக்கொண்டதில் இரண்டு கன்னங்களும் உப்பிப்போக, தண்ணீரைக் குடித்துவிட்டு துளசி எழுந்தாள்.
கணவரையும் பெண்களையும் தொடர்ந்து ராஜியும் வாசலுக்கு வந்தாள்.
ஷெட்டிலிருந்து வண்டியை வெளியே எடுத்த அப்பாவுக்கு அருகில் துளசியும், அவளை அடுத்து ஜன்னலை ஒட்டி ரத்னாவும் அமர்ந்தார்கள்.
டாட்டா...
மூவரும் ஒருசேரக் கைகளை ஆட்டி விடைபெற்றதும், வண்டியைத் தெருவில் திருப்பி வேகத்தை அதிகரித்தார் சம்பத்.
கார் கண்ணிலிருந்து மறையும்வரை கையை வீசிய ராஜி, உள்ளே போக எண்ணித் திரும்பியபோது, அந்த அம்மாளைப் பார்த்தாள்.
ஓ! பூட்டியிருந்த பக்கத்து வீட்டுக்குப் புதுசாய்க் குடித்தனம் வந்திருப்பவரின் தாயாரா!
முதல் நாள் லாரிலாரியாய் சாமான்கள் வந்து இறங்கின. பிறகு மாலையில் டாக்டர் விஸ்வநாத்தும் அவர் மனைவி நிர்மலாவும் வலிய வந்து இவர்களிடம் அறிமுகம் செய்துகொண்டார்கள்.
சின்ன வயசுக்காரர்கள். கல்யாணமாகி ஒரு வருஷம்தான் ஆகிறதாம்.
எங்க அம்மாவும் எங்களோட இருக்கார்...
என்று டாக்டர் விஸ்வநாத் சொன்னாரே, அந்த அம்மாதானா இவர்!
ஆபீஸுக்கும் ஸ்கூலுக்கும் புறப்பட்டுப் போறாங்களாக்கும்! வேலை சரியாய் இருந்திருக்குமே!
என்று பக்கத்து வீட்டு அம்மாள் வினவ, 'ஆமாம்' என்பதுபோலத் தலையை ஆட்டிச் சிரித்தாள் ராஜி.
வெடவெடன்னு சிவப்பா இருக்கறது மூத்த மகளா? ரெண்டாமவளும் நல்ல வளத்திதான். வயசு வித்தியாசம் ரொம்ப இருக்காதோ? குழந்தைங்க சாயல் வித்தியாசமா இருக்கே? அக்கா தங்கைனு சொல்ல முடியாதபடி ஜாடை மாறுதலாய் இருக்கு, இல்லை?
நீளமாய் அந்தப் பெண்மணி பேசியதற்கு ராஜியால் சட்டென்று பதில் ஏதும் சொல்ல இயலவில்லை.
எப்படி முடியும்?
ஒன்று, வயிற்றில் பிறந்தது; இன்னொன்று, எடுத்து வளர்ப்பது. ஜாடை எங்கிருந்து வரும்?
அடுப்புல பாலை வெச்சிருக்கேன்... அப்பறமா பாக்கறேன்...
என்று சொன்ன ராஜி, சின்னதாய் புன்னகைத்தவண்ணம் திரும்பி வீட்டுக்குள் நுழைந்தாள்.
***
2
ராஜி பி.ஏ. இறுதியாண்டில் இருந்தபோது, அவளுக்கும் சம்பத்துக்கும் திருமணமானது.
படிப்பு முடிய நாலு மாசம் இருக்குப்பா... அதுக்குள்ள என்ன அவசரம்? படிப்பு முடியட்டுமே...
என்று ராஜி கெஞ்சின கெஞ்சல்களை அவள் தகப்பனார் நாகபூஷணம் காதில் போட்டுக்கொள்ளவேயில்லை. அம்மா பாகீரதியும் அப்பாவின் கட்சி.
அதது நேரங்காலத்துல நடக்கணும், ராஜி... சம்பந்தி வீட்டுக்காரங்க ரொம்ப நல்ல மாதிரியா தெரியறாங்க... மாப்பிள்ளை பெரிய படிப்பு படிச்சிருக்காரு, ஒரே பிள்ளை, பிக்கல் பிடுங்கல் இல்லை, கண்ணுக்கும் நல்லா இருக்காரு... இன்னும் வேறென்ன வேணும்?
அப்பா அம்மாவின் வாதங்கள் நியாயமாக இருந்ததால், மேற்கொண்டு ராஜி ஏதும் வாதாடவில்லை. அவர்கள் விருப்பப்படி திருமணத்துக்குச் சம்மதித்தாள்.
நாகப்பட்டினத்தில் கல்யாணம் அமர்க்களமாய் நடந்தேறியது.
இத்தனை வருஷம் படிச்ச படிப்பை முடிக்காமல் விட்டால் எப்படி? பரிட்சை எழுதினப்பறம் தனிக்குடுத்தனம் வெக்கலாம்...
என்று மாமனார் யோசனை பண்ணிச் சொன்னதில், ராஜிக்கும் அவள் சொந்தக்காரர்களுக்கும் ஏக சந்தோஷம்.
சம்பத்துக்குச் சொந்த ஊர், மதுரைப் பக்கம். பெற்றோர் சொந்த ஊரில் நிலபுலன்களைக் கவனித்துக்கொண்டிருக்க, சம்பத் மட்டும் எம்.ஏ. படித்துவிட்டு பாங்க் ஒன்றில் நிர்வாகப் பயிற்சி பெற்று, பெங்களூர்க் கிளையில் பணியாற்றிக் கொண்டிருந்தான்.
ஒரே பிள்ளை... என்னத்துக்காகக் கண்காணாத எடத்துல வேலை பாக்கணும்? சரியா வயத்துக்கு சாப்பிட முடியாம திண்டாடணும்? பேசாம நம்ம கூடவே இருந்து விவசாயத்தைப் பாக்கக்கூடாதா?
என்று அம்மா லட்சுமி சதா புலம்பினால், சம்பத் பதிலேதும் சொல்லாமல் சிரிப்பான்.
பையன் படிக்க ஆசைப்படுவது புரிந்ததால், அவன் கல்லூரியில் பெரிய படிப்பு படிப்பதற்கோ, பாங்கில் சேர்ந்து பயிற்சி பெறுவதற்கோ, அவன் தந்தை சதாசிவம் தடையாய் நிற்கவில்லை.
மண்ணில் இறங்கி, சகதியில் நடந்து, வெயிலில் பாடுபட்டு விவசாயம் செய்வதில் மகனுக்கு ஈடுபாடு இல்லை என்பதை, என்றைக்கோ அவர் உணர்ந்து விட்டாரே... இனி பிள்ளையை அவன் போக்குக்கே விடாமல் வேறு என்ன செய்ய?
தானே பழுக்காத பழத்தைத் தடியால் அடித்துப் பழுக்கவைக்க இயலுமா, என்ன?
படிப்பில் சம்பத் அதிசூரன். எல்லாவற்றிலும் முதல் மார்க். இருபத்தோராவது வயசில், முதல் தேதி பிறந்தால் சுளையாய் எழுநூற்று ஐம்பது ரூபாய் வாங்கியபோது, லட்சுமிக்கு வாயெல்லாம் பல். சதாசிவத்துக்கு மனசில் குறை ஒன்றுமில்லை.
ஊரோடு இருந்து விவசாயம் பார்க்கச் சொல்லுங்க...
என்று இதுநாள் புலம்பின புலம்பலை இப்போது அவள் மாற்றிக்கொண்டாள்.
இத்தனை சம்பாதிச்சு என்ன புண்ணியம்? வாய்க்கு ருசியா ஒரு சாப்பாடு உண்டா? செளகர்யம் உண்டா? ஹோட்டல் சாப்பாடும் லாட்ஜ் ஜாகையும் பையன் உடம்பைப் பாதியாக்கிடுச்சுங்க...
என்று வருத்தப்படத் தொடங்கினாள்.
தாய் தனக்கு ஒரு கால்கட்டுப் போட எண்ணிவிட்டாள் என்பது சம்பத்துக்குத் தெளிவானது.
ஹோட்டல் சாப்பாடு எனக்கு ஒத்துக்குதும்மா... நீங்க ஏன் வீணா அவஸ்தைப்படறீங்க?
என்றவன், ஊர்ல நீங்களும் அப்பாவும் தனியா இருந்து ஏன் சிரமப்படணும்? பேசாம நிலத்தையெல்லாம் குத்தகைக்கு விட்டுட்டு இங்க என்னோட வந்துடுங்க. பெங்களூர் குளுகுளுன்னு நல்லாயிருக்கு... வயசான காலத்துல நீங்களும் ஹாய்யா இருக்கலாம்...
என்று புதுக்கோணத்தில் பேச்சை எடுத்தான்.
சதாசிவத்துக்கும் லட்சுமிக்கும் இந்த ஏற்பாட்டில் சம்மதமில்லை.
அதெப்படி, பழகிய ஊரை, சொந்த ஊரை, விட்டு வர இயலும்? தினமும் திருப்பரங்குன்றம் குமரனைத் தரிசனம் பண்ணாவிட்டால் தூக்கம் வராதே! ஏதோ ஒரு வாரம், பத்து நாள்கள் என்றால் புது இடத்தில் பல்லைக் கடித்துக்கொண்டு ஓட்டிவிடலாம். அதெப்படி ஒரேயடியாய்க் குடித்தனத்தை மாற்றுவது? ம்ஹூம்... சரிப்படாது.
ஆக, இப்படியும் அப்படியுமாக எப்படியோ இரண்டு வருஷங்களுக்குக் கல்யாணத்தைத் தள்ளிப்போட்ட சம்பத், இனியும் அம்மாவின் தொணதொணப்பைத் தாள இயலாது என்ற நிலைக்கு வந்த பிறகு, பச்சைக்கொடியைக் காட்டினான்.
சம்பத் பார்த்த முதல் பெண், ராஜிதான்.
சந்தையில் மாடுகளை 'பல்' பிடித்துப் பார்ப்பது போல பெண்களைத் தேர்ந்தெடுப்பதை அறவே வெறுத்த சம்பத்துக்கு, முதன்முதலில் தான் பார்த்த பெண்ணே குதிர்ந்துபோனது குறித்து ரொம்ப திருப்தி.
ராஜியின் அழகு அவனுக்குப் பிடித்திருந்தது. இரண்டு வார்த்தைகளை அடக்கமாய், மென்மையாய்ப் பேசினது பிடித்திருந்தது. சின்னக் குரலில் சுருதியோடு இணைந்து தியாகய்யர் கீர்த்தனத்தைப் பாடியதும் ரொம்பப் பிடித்திருந்தது.
பெண் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து சம்மதத்தைத் தெரிவித்தவன், பைசாகூட வரதட்சணை வாங்கக் கூடாது என்பதையும் பெற்றோருக்குத் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டான்.
இந்த வகையில், சதாசிவமும் லட்சுமியும் மகனுக்குச் சரியான பெற்றோர்தாம்.
பெண்ணைப் பெற்றவருக்குத் தெரியாதா, பெண்ணுக்குத் தேவையான