Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaa.. Vaa.. Vasanthamey
Vaa.. Vaa.. Vasanthamey
Vaa.. Vaa.. Vasanthamey
Ebook139 pages41 minutes

Vaa.. Vaa.. Vasanthamey

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கணவனே கண் கண்ட தெய்வம் என்று நம்பி வாழும் ஒரு ஏழைப் பெண்ணுக்கு பணக்கார வீட்டு மாப்பிள்ளை கணவனாக அமைய, அவனோ அவளுக்கு துரோகம் செய்துவிட்டு வேறு ஒரு பெண்ணோடு வாழ்க்கை நடத்த அந்த சூழலை எதிர் கொண்டு போராடி தன் கணவனை அடைந்தாளா…? இழந்த அவள் உரிமைகளை மீட்டெடுத்தாளா.. அவள் மீது விழுந்த அபாண்ட பழிகளை துடைத்தெறிந்தாளா… அவள் வாழ்வில் வசந்தம் வீசியதா? என்பதை உணர வைக்கும் உன்னதமான நாவல்.

இந்த நாவலில் முந்திரிப் பருப்பு தொழிற்சாலை குறித்தும் தொழிலாளர்களின் வாழ்வியலும் வலிகளும் அடையாளப் படுத்தப்பட்டிருக்கிறது.

குமரி மாவட்டத்தின் செழுமையையும் இயற்கை எழிலையும் இணைத்து எழுதப்பட்ட வசந்தமான நாவல் தான் வா வா வசந்தமே நாவல். வாசியுங்கள். வசந்தம் உங்களைத் தேடி வரும்.

Languageதமிழ்
Release dateMar 12, 2022
ISBN6580153308188
Vaa.. Vaa.. Vasanthamey

Read more from Irenipuram Paul Rasaiya

Related to Vaa.. Vaa.. Vasanthamey

Related ebooks

Reviews for Vaa.. Vaa.. Vasanthamey

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaa.. Vaa.. Vasanthamey - Irenipuram Paul Rasaiya

    http://www.pustaka.co.in

    வா.. வா.. வசந்தமே

    Vaa.. Vaa.. Vasanthamey

    Author :

    ஐரேனிபுரம் பால்ராசய்யா

    Irenipuram Paul Rasaiya

    For more books

    https://www.pustaka.co.in/home/author/irenipuram-paul-rasaiya

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் -2

    அத்தியாயம் -3

    அத்தியாயம் -4

    அத்தியாயம் -5

    அத்தியாயம்- 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 1

    சூரியனைத் தேடிக்கொண்டிருந்தது இரவு. வெளிச்சமற்ற விடிகாலையில் இரவுக்கு ஏன் இந்த அவசரம் என்று தெரியவில்லை. அது பங்குனி மாதம் வேறு, விடிகாலையிலும் உஷ்ணம் கூடுதலாக இருந்தது.

    யார் சேவல்களுக்கு அலாரம் வைத்தார்களோ தெரியவில்லை, சரியான நேரத்தில் கூவிக்கொண்டிருந்தது.

    மரங்களைக் காற்று அசைத்து வேடிக்கை காட்டியது. காற்றின் குலுக்கலில் பழுத்த இலைகள் பிரியா விடை பெற்று எந்த காயமும் இன்றி தரையில் விழுந்து கிடந்தன. புற்களின் மீது படிந்திருந்த பனிகளில் வீரியம் குறைந்து ஈரப்பதம் மட்டுமே இருந்தது.

    வெளிச்சம் ஏற ஏற, கிழக்கில் சூரியனின் முகம் தெரிந்தது. மஞ்சள் தேய்த்த பெண்களின் முகம் போல, சூரியனின் முகம் இருந்தது.

    காலை ஆறு மணிக்கு ஆள் நடமாட்டம் இன்றி ஊர் அமைதியாகவே இருந்தது. சடையன்குழி சந்திப்பில் டீ கடைக்காரர் பாலை சூடு செய்து தயாராக வைத்திருந்தார்.

    காண்டிராக் கனகவேலும் டெம்போ வேன் டிரைவரும் வந்து சேர்ந்தார்கள். இருவரும் டீயை ஊதி குடித்துவிட்டு டெம்போவில் ஏறிக்கொண்டார்கள்.

    கனகவேல் டெம்போவின் இடது பக்கம் அமர்ந்து சாலையோரங்களை வேடிக்கை பார்த்தபடி இருந்தார்.

    ஐரேனிபுரம் ஆலயத்தின் முன்னால் இருந்த பஸ் நிறுத்தத்தில் டெம்போவை நிறுத்த சொன்னார் கனகவேல்.

    பஸ் நிறுத்தத்தில் வரிசையாக நின்றிருந்த பெண்களில் பதினைந்து பேர்கள் வேலைக்கு வேண்டும் என்று சொல்ல, நின்றிருந்த பத்து பெண்கள் சிமெண்ட் சட்டியைத் தூக்கிக்கொண்டு டெம்போவில் ஏறிக்கொண்டார்கள்.

    அன்றைய கான்கிரீட் வேலைக்கு இனியும் ஐந்து பெண்கள் வேண்டும், அடுத்த ஜங்ஷனில் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் வண்டியை எடுக்கச் சொன்னார்.

    டெம்போ காப்புக்காடு ஜங்ஷனுக்கு வந்தபோது பத்துக்கும் மேலான பெண்கள் கைகளில் சிமெண்ட் சட்டியை பிடித்தபடி நின்று கொண்டு இருந்தார்கள்.

    டெம்போ நின்றதும் கனகவேல் தலையை வெளியே நீட்டினான்.

    அஞ்சு பேர் மட்டும் ஏறுங்க...! சட்டென்று ஐந்து பெண்கள் முண்டியடித்துக் கொண்டு டெம்போவில் ஏறி, இன்று வேலை கிடைத்தது என்று பெருமூச்சு விட்டார்கள்.

    கண்றாக் ஐயா... ஒரு ஆள் கூட சேர்த்துக்குங்க, அவ வேலைக்கு வந்தா தான் அவ வீட்டில அடுப்பெரியும்...!கமலா வசந்தியின் கையைப் பிடித்துக்காட்டி கெஞ்சலாய் கேட்டாள். கனகவேல் அவளை ஏற இறங்க பார்த்தார்.

    வேலைக்குப் புதுசா...?

    ஆமாங்கய்யா... நல்லா வேலை செய்வா... சேர்த்துக்கோங்க...!

    உன் பேரென்ன...?வசந்தி...!

    சரி... ஏறு...! கனகவேல் சொன்னபோது வசந்தியின் முகம் பிரகாசமானது.

    டெம்போவில் ஏறிக்கொண்டாள் வசந்தி. டெம்போ புறப்பட்டது

    ரொம்ப நன்றி...! கமலாவின் கையைப் பிடித்தபடி சொன்னாள் வசந்தி.

    இதுக்கெல்லாம் எதுக்கு நன்றி சொல்லணும், முதல் நாள் வேலை செய்ய வந்திருக்கிற... கான்கிரீட் கலவை சிமெண்ட் சட்டியில நிறைச்சி கைமாத்தி விடுற வேலைதான், ஆரம்பத்துல கஷ்டமாத்தான் இருக்கும், பழக பழக சரியாகிடும்...! கமலா சொன்னதைக் கேட்டு தலையாட்டினாள் வசந்தி.

    டெம்போ கொடுங்குளம் சாலைக்குள் நுழைந்து அரை கிலோமீட்டர் தூரம் ஓடி நின்று கொண்டது.

    அனைவரும் இறங்கிக் கொண்டார்கள். கைகளில் வைத்திருந்த பிளாஸ்டிக் கூடையில் இருந்த மாற்றுத் துணிகளை எடுத்து உடை மாற்றி கொண்டார்கள்.

    மாற்று துணிகளில் சிமெண்ட் கலவை பட்ட இடங்களில் கறை படிந்திருந்தது. வசந்தியின் ஆடை மட்டும் விதிவிலக்காக இருந்தது.

    வசந்தி வசீகரமாயிருந்தாள். பழைய புடவை கட்டி ஆண்கள் அணியும் காட்டன் சட்டை அதற்கு மேலாக அணிந்திருந்தாள்.

    காதுகளில் கம்மல்கள் தொங்க வில்லை, கழுத்தில் தங்க செயின்கள் விழவில்லை, அவள் சிவந்த முகத்தில் ஸ்டிக்கர் பொட்டு கூட ஒட்டப்படவில்லை.

    கனகவேல் அவளை ஏற இறங்க பார்த்துவிட்டு இவையெல்லாம் அணிந்திருந்தால் வசந்தி எப்படி இருப்பாள் என்று ஒரு நிமிடம் அவனுக்குள் கற்பனை சுழன்றடித்தது.

    அவன் முகம் தானாகவே மலர்ந்து கொண்டது, அவளை ரசிக்க அந்த நேரம் சரியானதல்ல என்று கருதி தொழிலாளிகளை தயார்படுத்த சத்தமிட்டுக் கொண்டிருந்தான்.

    கமலா தனது அருகில் வசந்தியை நிறுத்தி இருந்தாள். சிமெண்ட் கலவை மெஷினிலிருந்து சட்டியில் சிமெண்ட் கலவை விழுந்து கொண்டிருந்தது. அது நிறைய நிறைய சட்டியை மாற்றிக்கொண்டிருந்தான் மாரி.

    அவனது கைகளில் உறை அணிந்திருந்தான். அவனது வேகம் கண்டு பிரம்மித்து போனாள் வசந்தி.

    அதற்கடுத்து நின்ற சுடலை குனிந்து சிமெண்ட் கலவை நிறைந்திருந்த சட்டியை வேகமாய் தூக்கி அடுத்துநின்ற கமலாவிடம் கைமாற்றினான்.

    கமலா லாவகமாய் வாங்கி வசந்திக்கு கை மாற்றினாள். சட்டியின் கனம் தாங்க முடியாமல் சற்று குனிந்தாள் வசந்தி. ஒரு நொடி தாமதித்து இருந்தாலும் சட்டி அவள் கைகளில் இருந்து நழுவி இருக்கக்கூடும்.

    அடுத்து நின்ற பெண்ணுக்கு சட்டியை கைமாற்றும் வரை அவள் முகத்தில் பதட்டம் வந்தமர்ந்தது. முதல் சட்டி கைமாறுவதற்குள் அடுத்த சட்டியை பிடித்த படி நின்றிருந்தாள் கமலா.

    அவளிடமிருந்து சட்டியை வாங்கி அதை மாற்றுவதற்குள் விரல்கள் விறைக்கத் துவங்கியது. தாங்கிக்கொண்டாள்.

    மூன்றாவது சட்டியைப் பெற்றுக் கொண்டபோது சட்டியின் கனம் பூமியை நோக்கி நகர, கைநழுவி சிமெண்ட் கலவை நிறைந்திருந்த சட்டி தரையில் விழுந்து சிமெண்ட் கலவை தெறித்தது. எல்லா முகங்களும் திரும்பிக் கொண்டன.

    பழக்கமில்லாத ஆட்கள வேலைக்கு சேர்த்தா இப்படித்தான், இவளுகளுக்கு துணிக்கடையில வேலைக்கு போகக்கூடாதா, மாசம் ஆறாயிரம் சம்பளமாவது கிடைக்கும்! மாரி உதட்டில் மென்று ஒதுக்கியிருந்த பான்பராக்க்கின் சாறை துப்பியபடியே சொன்னான்.

    அவ பாக்குறதுக்கு லட்சணமா இருந்ததால கண்டிறாக்கு ஜொள்ளு விட்டு வேன்ல ஏத்தியிருப்பார்! சுடலை கறை படிந்த பற்கள் தெரிய சிரித்தான்.

    அவளப்பத்தி எதுக்கு இந்தப் பேச்சு, யாரும் புறக்கும்போ தொழில் அனுபவத்தோட புறக்கல, எல்லாரும் ஆரம்பத்துல கத்துகுட்டிதான், அவ வேலைக்குப் புசுது அதனால கை தவறி சட்டி கீழ விழுந்துது, அதுக்கு குத்தம் சொல்லாதீங்க! கமலா சொல்லிவிட்டு குனிந்து சட்டியைத் தூக்கி மறுபடியும் வசந்தியின் கைகளில் வைத்தாள்.

    பாத்து வாங்கு...நல்லவேள கண்றாக் அந்தப்பக்கம் நின்னதால பார்க்கல, பாத்திருந்தா திட்டியிருப்பார்... வசந்தி வருத்தம் படிய சட்டியை வாங்கி கை மாற்றினாள். அவள் கைகளில் நடுக்கம் விலகாமலேயே இருந்தது.

    மொத்தம் பதினாறு பெண்களும் ஆண்களும் அந்த வீட்டின் தட்டு வேய்ந்திருந்த தகர சீட்டு களில் கான்கிரீட் கலவையை கொட்டி வேகமாய் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

    இடைவெளியற்ற வேலை, தண்ணீர் குடிக்க கூட நேரமில்லாத உழைப்பு, பழகியவர்களுக்கு வலி மறந்த வேலை, பழக்கமில்லாத வசந்திக்கு கால் வலியும், கை வலியும் சேர்ந்து கொண்டு பாடாய்படுத்தியது.

    வாழ்வதற்கு பிறந்தோம், வலிய வரும் வலிகளை சுமந்து தானே ஆக வேண்டும். அவளை சோர்வு பற்றிக் கொள்ளும் போதெல்லாம் இந்த வார்த்தையைச் சொல்லி தன்னை தானே தேற்றினாள் வசந்தி.

    பதினொன்று மணிக்கு இடைவேளை விடப்பட்டது. ஒவ்வொருவரும் கைகளையும் முகங்களையும் கழுவிவிட்டு, கொண்டு வந்திருந்த டிபன் பாக்சை திறந்து சாப்பிட ஆரம்பித்தார்கள்.

    வசந்திக்கு ஆசுவாசமாக இருந்தது. கமலா முன்கூட்டியே சொல்லி இருந்ததால் அவளும் இட்லி கொண்டு வந்திருந்தாள்.

    இட்லியைப் பிய்த்து சட்டினியில் நனைத்து வாயருகே கொண்டு வந்தபோது ஒரு கணம்

    Enjoying the preview?
    Page 1 of 1