Kathiyindri Rathamindri... Vidhya
()
About this ebook
பெரும்பாலும் நாவல்களில் காணப்படும் எதிர்மறையான எண்ணங்களும் போராட்டமும் சிரமங்களும் என்ற சூழலை மீறி நேர்மறையான எண்ணங்களைக் கொண்ட ஒரு பெண்ணை அவர் கதாபாத்திரமாக வடித்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.
இன்றைய நாவல்களில் பெரும்பாலும் சோகமான சூழ்நிலைகளும் போராட்ட சூழலும் அவற்றிலிருந்து வெளிவர முடியாத மனித வாழ்க்கையும் என்று சொல்லப்படுகிறபோது இந்த நாவலில் இந்த வாழ்க்கையிலிருந்து ஏதோ கற்றுக் கொள்வதற்காக வெளியே வருகின்ற பெண்ணைப் பற்றி முன் வைத்து ஒரு சித்திரம் வரையப்பட்டிருக்கிறது.
Related to Kathiyindri Rathamindri... Vidhya
Related ebooks
Ilamai Kaatru Rating: 5 out of 5 stars5/5Mudindhuvitta Aasai Rating: 0 out of 5 stars0 ratingsUyir Sumantha Urave Rating: 0 out of 5 stars0 ratingsAndhi Nerathu Udhayam Rating: 0 out of 5 stars0 ratingsAagayam Kaanatha Natchathiram Rating: 0 out of 5 stars0 ratingsSila Veshangal Kalaipadharkkalla Rating: 0 out of 5 stars0 ratingsAasai Thee Valarthen Rating: 5 out of 5 stars5/5Terror, Death, Devil Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Thantha Poove Rating: 5 out of 5 stars5/5Thoda Mudiyatha Uyarangal Rating: 0 out of 5 stars0 ratingsKanniley Anbirunthaal Rating: 5 out of 5 stars5/5Mellisaiyaai Oru Kaadhal... Rating: 0 out of 5 stars0 ratingsVelicha Poove Vaa… Rating: 0 out of 5 stars0 ratingsVizhiyele Malarnthathu Rating: 5 out of 5 stars5/5விழியிலே மலர்ந்தது Rating: 0 out of 5 stars0 ratingsPaarthirunthaal Varuven Vennilaviley... Rating: 0 out of 5 stars0 ratingsAzhagooril Poothavaley Rating: 5 out of 5 stars5/5Ninaivalaigal Thodarnthu Vanthal... Rating: 0 out of 5 stars0 ratingsVaa Vaa Vasandhame Rating: 4 out of 5 stars4/5Annachima Rating: 0 out of 5 stars0 ratingsYugangal Marumpothu Rating: 0 out of 5 stars0 ratingsPoo Mazhai Ennul...! Rating: 0 out of 5 stars0 ratingsManithargal Paathi Neram Thoongukirargal Rating: 5 out of 5 stars5/5Maatti Yosi Rating: 0 out of 5 stars0 ratingsAntha Ponnu Vendaam Rating: 0 out of 5 stars0 ratingsJanuary Iravugal Rating: 2 out of 5 stars2/5Uyiril Un Peyar Ezhuthugiren Rating: 5 out of 5 stars5/5Andha Maalai Mayakkam Rating: 0 out of 5 stars0 ratingsIrukodiyil Oru Malar Rating: 5 out of 5 stars5/5Thavam Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Kathiyindri Rathamindri... Vidhya
0 ratings0 reviews
Book preview
Kathiyindri Rathamindri... Vidhya - Veeranvayal V. Uthayakkumaran
https://www.pustaka.co.in
கத்தியின்றி ரத்தமின்றி... வித்யா
Kathiyindri Rathamindri... Vidhya
Author:
வீரன்வயல் வீ. உதயக்குமாரன்
Veeranvayal V. Uthayakkumaran
For more books
https://www.pustaka.co.in/home/author/veeranvayal-v-uthayakkumaran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
வாழ்த்துரை
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
வாழ்த்துரை
A person with a mustache and glasses Description automatically generatedதிருவாரூர் பற்றி நினைக்கிற போதெல்லாம் திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறை நண்பர்களும் திருவாரூர் எழுத்தாளர் வீரன்வயல் வீ.உதயக்குமாரன் அவர்களும் ஞாபகத்துக்கு வருவார்கள்.
உதயக்குமாரன் அவர்கள் ஐந்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி இருக்கிறார். கவிதைகள், குறுங்கவிதைகள், சிறுகதைகள், ஹைக்கூ என்றபடி தனது சிறுகதைகளையும் தொகுத்து நூலாக வெளியிட்டு இருக்கிறார். நாவல் முயற்சியில் கத்தியின்றி ரத்தமின்றி வித்யா என்ற நாவல் வெளிப்பட்டு இருக்கிறது.
பெரும்பாலும் நாவல்களில் காணப்படும் எதிர்மறையான எண்ணங்களும் போராட்டமும் சிரமங்களும் என்ற சூழலை மீறி நேர்மறையான எண்ணங்களைக் கொண்ட ஒரு பெண்ணை அவர் கதாபாத்திரமாக வடித்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.
கதாநாயகி வசிக்கும் இடத்தை விட்டு அவள் வெளியேற வேண்டியிருக்கிறது. காரணம் அந்த இடம் அவர்களுக்கு இல்லை என்று மறுக்கப்படுகிறது. அந்தச் சூழலில் அவள் போராட வேண்டியிருக்கிறது. ஆனால் ஒரு பெண் எப்படி போராட முடியும்? தனி மனுஷியாக இருந்து அவள் போராட்டத்திற்கு ஆதரவு பெரிதாக கிடைக்காது. இந்தச் சூழலை புரிந்து கொண்டு நிலைமை மாறும் என்றும் அவள் வேறிடத்திற்கு இடம் பெயர்கிறாள். அங்குதான் அவளுக்கு வாழ்க்கையில் திருப்பங்கள் நிகழ்கின்றன. அவள் ஒரு முக்கிய நிறுவனத்தில் முக்கிய பதவியை ஏற்றுக் கொள்கிறாள். அந்த நிறுவனத்தை வளர்த்து எடுக்கிறாள். அதன் மூலமாக தன்னுடைய வீடு இருந்த அந்தக் கிராமப் பகுதிக்கு சென்று அங்கு நலத்திட்டங்கள் செய்வதும் அந்த மக்களுடைய வாழ்க்கையை மேம்படுத்த முயல்வதும் என்று ஒரு நேர்மறையான எண்ணங்களைக் கொண்ட வாழ்க்கையில் முன்னேறி சாதனை படைக்கிற ஒரு பெண்ணின் வாழ்க்கையை வீரன்வயல் வீ.உதயக்குமாரன் அவர்கள் இந்த நாவலில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
இன்றைய நாவல்களில் பெரும்பாலும் சோகமான சூழ்நிலைகளும் போராட்ட சூழலும் அவற்றிலிருந்து வெளிவர முடியாத மனித வாழ்க்கையும் என்று சொல்லப்படுகிறபோது இந்த நாவலில் இந்த வாழ்க்கையிலிருந்து ஏதோ கற்றுக் கொள்வதற்காக வெளியே வருகின்ற பெண்ணைப் பற்றி முன் வைத்து ஒரு சித்திரம் வரையப்பட்டிருக்கிறது. ஒரு முக்கியமான தன்மை என்றுதான் நினைக்கிறேன்.
தொடர்ந்து வீரன்வயல் வி. உதயக்குமாரனுடைய முயற்சிகளில் இந்த நாவல் பணியும் ஒன்றாக அமைந்திருக்கிறது. அவர் தொடர்ந்து எழுதுவார் அவருடைய வாழ்க்கை அனுபவங்களை எல்லாம் இன்னும் பல பரிமாணங்களில் வெளிக்கொணர்வார் என்று நினைக்கிறேன்.
அன்புடன்
சுப்ரபாரதி மணியன்
திருப்பூர்.
1
தன் முகத்தை கண்ணாடியில் பார்த்த வித்யாவுக்கு மெல்லிய வருத்தம் படரத் தொடங்கியது.
‘எனக்கு இவ்வளவு சீக்கிரம் வயசாயிடுச்சா...’
அவளது தலை முழுவதும் நரை விழ தொடங்கியிருந்தது. கண்ணில் கருவளையம். முகத்தில் சுருக்கம். இன்னும் நிறைய மாற்றங்கள்.
‘நான் என்ன குமரியா பேரக் குழந்தைகளைப் பாத்தாச்சு இனிமே எனக்கு என்ன?’ தன்னைத் தானே சமாதானப்படுத்திக்கொண்டார் வித்யா.
அம்மா.
மகன் மோகன்தாஸ் அழைத்தாள்.
இதோ வந்துட்டேன்டா.
அறையில் இருந்த தாய் படத்தையும், கணவன் தனசேகரன் படத்தையும் வணங்கிவிட்டு அறையிலிருந்து வெளியே வந்தாள்.
இருபத்தைந்து வருடங்களுக்கு பிறகு தான் பிறந்த மண்ணில் காலை எடுத்து வைக்கிறோம் என்ற ஆனந்தம் அவருக்குள் பொங்கிக் கொண்டிருந்தது. மலரும் நினைவுகளை மனதில் அசைபோட்டபடி அவளது பயணம் தொடர்ந்தது.
சாரதா மகளிர் கல்லூரி ஆண்டு விழா கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது. நடனம், பாடல் என நாளைய சாதனையாளர்களின் அரங்கேற்றம் விழா அரங்கை அதிரலைத்துக் கொண்டிருந்தது. பேச்சுப் போட்டியில் முதல் இடம் பெற்ற வித்யா அழைக்கப்பட்டாள். அவளது ஒவ்வொரு கருத்துக்கும், கைத்தட்டல்கள் கூடுதல் பரிசாக கிடைத்துக் கொண்டிருந்தன.
இன்று நாம் தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அண்ணல் வாங்கிதந்த பொன்னான சுதந்திரம் அவருக்கே கிடைக்காமல் போனது, இந்த நாடு அவருக்கு தந்த பரிசு துப்பாக்கி தோட்டாக்கள். சுதந்திர தேசம் வன்முறைக்கும், மதவெறிக்கும் அடிமையாகிக் கொண்டிருக்கிறது. சுதந்திரப் பயிர்களில் ஊடுருவில் தீவிரவாதக்களைகள் களையப்பட இன்னொரு காந்தி உருவாக வேண்டும். ‘கத்தியின்றி ரத்தமின்றி’ மீண்டும் ஒரு சத்திய யுத்தம் தொடங்க வேண்டும்.
வித்யாவின் உணர்ச்சிகரமான பேச்சைக் கேட்டு அரங்கமே ஆர்ப்பரித்தது. கரங்கூப்பி அனைவருக்கும் புன்னகையால் நன்றி சொன்னாள்.
பேருந்திலிருந்து இறங்கிய வித்யா, வீடுகள் இல்லாத அந்த சாலையில் வந்து கொண்டிருந்தாள். வழக்கம்போல் அந்த மதில் சுவரில் அமர்ந்துகொண்டு சேட்டைக்கு தயாராகின அந்த மூன்று குரங்குகளும்.
இன்னைக்கு ஊரழகியா இருக்கிற இவ நாளைக்கு உலக அழகியா ஆயிடுவா