Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanmaniye... Kadhal Enpathu
Kanmaniye... Kadhal Enpathu
Kanmaniye... Kadhal Enpathu
Ebook121 pages48 minutes

Kanmaniye... Kadhal Enpathu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காதலை உச்சரிக்கும்போதே உள்ளத்திற்குள் குளிரடிக்கும். ஒரு பெண் பழகுவது நட்பு என்று புரியாமல் காதல் என்று தவறாகப் புரிந்து கொண்டு வாழும் சராசரி மனிதனின் குமுறல் ஒருபுறம் என்றால் அவனது அண்ணன் அந்த பெண்ணை திருமணம் செய்த பிறகு தான் அவளுக்கே தெரிகிறது அவள் மனதில் விரிந்த நட்பு அவன் மனதில் காதலாய் பூத்திருக்கிறதென்று.

தாலி கட்டிய பிறகு தன் மனைவி தம்பியின் காதலி என்று அறிந்த அண்ணன் தனது மனைவியை அவளது காதலனாகிய தம்பியிடம் ஒப்படைக்கிறானா?… அண்ணியாய் வந்தவளை அண்ணனே அவனிடம் ஒப்படைத்த போது தம்பி ஏற்றுக் கொண்டானா…? அவளோடு சேர்ந்து வாழ்ந்தானா இல்லையா என்பது தான் இந்த நாலின் பயணம்.

இந்த நாவலில் பணக்காரர்களின் வாழ்வியலும் ஏழைகள் படும் வேதனைகளும் குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தையை தனக்கு பிறந்தவன் அல்ல என்று வாதிடும் மூடத்தனங்களையும் அதன் புரிதல்களும் நாவலில் நடமாடியிருக்கிறது.

வாசித்தால் நாவலை நேசிப்பீர்கள்.

Languageதமிழ்
Release dateFeb 26, 2022
ISBN6580153308191
Kanmaniye... Kadhal Enpathu

Read more from Irenipuram Paul Rasaiya

Related to Kanmaniye... Kadhal Enpathu

Related ebooks

Reviews for Kanmaniye... Kadhal Enpathu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanmaniye... Kadhal Enpathu - Irenipuram Paul Rasaiya

    https://www.pustaka.co.in

    கண்மணியே… காதல் என்பது

    Kanmaniye... Kadhal Enpathu

    Author:

    ஐரேனிபுரம் பால்ராசய்யா

    Irenipuram Paul Rasaiya

    For more books

    https://www.pustaka.co.in/home/author/irenipuram-paul-rasaiya

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 1

    வானம் வழக்கத்திற்கு மாறாக வெளிச்சமின்றியே கிடந்தது.... காற்று பெரும் இரைச்சலோடு சுழன்றடித்துக் கொண்டிருந்தது. மேகங்கள் கட்டியிருந்த வெள்ளாடையின் நிறம் மாறி கறுப்பாகியிருந்தது.

    வானத்தில் மேகங்கள் திரண்டு செல்வது படையெடுத்துச் செல்லும் படை வீரர்களைப் போலவே இருந்தது.

    மழையின் வரவு தாமதமாகிக் கொண்டே இருந்தது. எங்கும் குளிர் கவ்வி இருந்தது. மரங்கள் போர்த்திக் கொள்ள வழியின்றி குளிரில் விறைத்து நின்றன.

    லேசான தூறல் விழுந்து கொண்டிருந்தது. தூறல் விழுந்த சாலைகளில் கறுப்பு நிறம் படர்ந்திருந்தன. வாகனங்கள் வேகமாய் ஓடி ஈரத்தை வழித்தெடுத்துக் கொண்டு போனதில் சாலை மறுபடியும் பழைய நிலமைக்கு வந்து சேர்ந்தது....

    மாலை மணி நான்கு என்பதை அங்கிருந்த தேவாலயத்தின் மணிச்சத்தம் நான்கு முறை அடித்து ஓய்ந்தது.

    வீட்டின் வராந்தாவில் போட்டிருந்த டீபாயில் ஆவி பறக்கும் டீ கொண்டு வைத்த பிறகும் அதைக் குடிக்காமல் காலையில் வாசிக்க தவறவிட்ட செய்திகளை மாலையில் மேய்ந்து கொண்டிருந்தார் மகேந்திர பூபதி.

    வயது ஐம்பது கடந்திருந்தாலும் நரைத்த முடிகளுக்கு டை அடித்து இழந்து போன இளமையை திரும்ப அழைத்தார்.

    தடித்த உடல். அளவுக்கு மீறி வளர்ந்த தொப்பை. சிரிக்கும் போது கோடு விழும் கன்னங்கள். இருபத்தி ஐந்து வருட அனுபவங்களை சேமித்திருக்கும் ஒரு பழுத்த மர வியாபாரி.

    சட்டென்று பொலோரோ கார் மின்னல் வேகத்தில் வந்து அவர் வீட்டு முன்பு பிரேக்கிட்டு நின்றது.

    கண்களில் கூலிங்கிளாசைச் சொருகி மடக்கி வைத்திருந்த ஜிப்பாவின் முளங்கைப் பகுதியை மேலும் மடக்கி முறுக்கேற்றியபடி நடந்தான் காசிலிங்கம்.

    வேட்டி ஜிப்பா அணிவது அவனது பழக்கங்களில் ஒன்றாகவே இருந்தது. வயது முப்பது முடியாமல் இருந்தது. விரிந்த மார்பில் தங்கச் சங்கிலி படுத்துக் கிடந்தது.

    அவனது கடா மீசை கன்னங்களின் தாழ்வான பகுதியை ஆக்ரமித்து பலத்த கிருதா வரைப் பற்றியிருந்தது. நாடியை சேவ் செய்து பளீச்சென்று வைத்திருந்தான்.

    அவனுக்குப் பின்னால் அடியாட்கள் நடந்தார்கள். ஒவ்வொருவர் கைகளிலும் ஆயுதங்கள் ஆக்ரமித்து இருந்தன.

    உருட்டுக் கட்டை வைத்திருந்த அடியாள் ஒருவன் ஓடிச்சென்று மகேந்திர பூபதியை பலமாய் தாக்கினான்.

    அய்யோ என்று அலறக்கூட சக்தியின்றி குழைந்து சரிந்தான் மகேந்திர பூபதி.

    காசிலிங்கம் சிகரெட் பத்த வைத்து சைகையால் நிறுத்தச்சொன்னான். தரையில் விழுந்து கிடந்தவனைத் தூக்கி இருக்கையில் அமர வைத்து இடுப்பில் சொருகியிருந்த கத்தியை உருவினான் காசிலிங்கம்.

    என்ன ஒண்ணும் பண்ணீடாத… என்ன ஒண்ணும் பண்ணீடாத, உன்ன கையெடுத்து கும்பிடுறேன், என்ன விட்டிடு… அவன் கைகூப்பியபடியே உயிர் பிச்சை கேட்டான்.

    இந்த காசிலிங்கம் யார்மேலயும் வீணா கை வைக்க மாட்டான், மீறி வெச்சுட்டா அவன் புணம் தாண்டா விழும். நான் மர வியாபாரம் மட்டும்தான் பண்ணுவேன்னு நினைச்சியா...? மரத்த அறுக்கிறது மாதிரி தேவைப்பட்டா மனுஷனயும் அறுத்து கூறு போட்டிடுவேன்,

    "இப்ப நான் என்ன செஞ்சிட்டேன்னு உன் அடியாளோட வந்து என்ன அடிக்கிற...?

    என் றூட்டில யார் வேணுமிண்ணாலும் வரலாம் போலாம், ஆனா என்ன கிராஸ் பண்ணி ஓவர்டேக் பண்ண நினச்சா அவன டேக் ஆப் பண்ணி குளோஸ் பண்றதுதான் என் பாலிசி. இந்த காசிலிங்கம் ஒரு கட்டித்தங்கம், வெட்டி எடுக்க நினைச்சா வேரோட சாய்ச்சிடுவான். அவன் முகம் கோபத்தில் சிவந்து கொடூர முகமாக மாறியது.

    நீயும் வியாபாரம் பண்றவன், நானும் வியாபாரம் பண்றவன், நீ வாங்க இருந்த மரத்துக்கு நான் வில பேசி அட்வான்ஸ் குடுத்திட்டேன், வியாபாரத்தில இது சகஜம் தானே…

    இந்த காசிலிங்கம் கணக்கு போட்டா கூட்டிக் கழிக்கவேண்டிய அவசியமிருக்காது, கரைக்டாவே இருக்கும், பூதப்பாண்டி மர வியாபாரி மாசில்லாமணிகிட்ட இருந்த தேக்கு மரத்துக்கு நான் வெச்ச விலை ரெண்டு கோடி, நீ வெச்ச விலை மூணு கோடி, வித்தியாசம் ஒரு கோடி, என் றூட்டில குறுக்க வராதேன்னு ஆள் மூலமா சொல்லி அனுப்பினேன், இந்த காசிலிங்கம் பேச்ச கேட்காம ஐந்து லட்சத்த அட்வான்ஸ் குடுத்திட்ட, இதுக்கமேலயும் உன்ன சும்மா விட்டு வெச்சா அவமானம் எனக்குத்தான், அதான் உன்ன மேல அனுப்ப முடிவு பண்ணீட்டேன். பொறியில சிக்கின எலி மாதிரி நீ வசமா மாட்டிகிட்ட, உன்ன பொழந்து கட்டிகிட்டுதான் எனக்கு மறுவேல காசிலிங்கம் மீண்டும் தன் கோர முகத்தைக் காட்டினான்.

    என்ன ஒண்ணும் பண்ணியிடாத... குடுத்த அட்வான்ச திரும்ப வாங்கிக்கிறேன், இனிமே மர வியாபாரத்தையே மறந்திடுறேன், உன் றூட்டில நான் குறுக்க வரவே மாட்டேன், இந்த ஒரு தடவ மட்டும் என்ன மன்னிச்சி விட்டிடு.

    வியாபாரத்தில நீதி நேர்மை பார்த்தா லாபம் வராது, நஷ்டம் தான் வரும், நீ எந்த வியாபாரம் வேணுமிண்னாலும் பண்ணு, ஆனா என்னப் பகைச்சிகிட்டு எந்த வியாபாரமும் பண்ணியிடாத... பொழச்சிப்போ... டேய் வாங்கடா. சொல்லிவிட்டு கத்தியை இடுப்பில் சொருகிக் கொண்டான்.

    காசிலிங்கம் ஒரு நிமிஷம்… நீ சொன்னது மாதிரியே அந்த ஆர்டரை கேன்சல் பண்ணியிடுறேன், மாசில்லாமணிகிட்ட குடுத்த ஐஞ்சு லட்ச ருபா அட்வான்ச நிச்சயம் அவன் திரும்ப தரமாட்டான், அப்போ நான் குடுத்த அஞ்சு லட்சம் ருபா அட்வான்ஸ் அவ்வளவுதானா...?

    பணம் பத்தும் செய்யுமுண்ணா இந்த காசிலிங்கம் பதினொண்ணையும் செய்வான், ஆர்டர கேன்சல் பண்ணியிடு, நாளைக்கு சாயங்காலம் அஞ்சு மணிக்கு நீ குடுத்த அட்வான்ஸ் உன் வீடு தேடி வரும், அதுக்கு நான் கியாரண்டி. காசிலிங்கம் பொலோராவுக்கு நடக்க அவனுக்கு பின்னால் அடியாட்கள் நடந்தார்கள். அவன் போவதை பயந்தபடியே பார்த்துக் கொண்டிருந்தார் மகேந்திர பூபதி.

    "காசிலிங்கம்… ஊருக்குள்ள வியாபாரி மாதிரி நடந்துகிட்டு உள்ளுக்குள்ள அடியாள வெச்சிகிட்டு அராஜகமா பண்ற, உன்ன மடக்கி, உன் பிசினெஸ்ச உடச்சி பல கோடி ருபா நஷ்டத்த நீ சந்திக்கப் போற… முள்ள முள்ளால எடுக்குறது மாதிரி உன்ன விட பெரிய பிசினஸ்மேன் மாரியப்பன் மூலமா உன் பவர குறைச்சி உன்ன இந்த பிசினஸ் விட்டே துரத்தல… என் பேரு மகேந்திர பூபதி

    Enjoying the preview?
    Page 1 of 1