Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanaiyazhi - May 2022
Kanaiyazhi - May 2022
Kanaiyazhi - May 2022
Ebook177 pages53 minutes

Kanaiyazhi - May 2022

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

May 2022 month issue of Kanaiyazhi Magazine.
Languageதமிழ்
Release dateJun 4, 2022
ISBN6580109508556
Kanaiyazhi - May 2022

Read more from Kanaiyazhi

Related authors

Related to Kanaiyazhi - May 2022

Related ebooks

Reviews for Kanaiyazhi - May 2022

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanaiyazhi - May 2022 - Kanaiyazhi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கணையாழி மே 2022

    மலர்: 57 இதழ்: 02 மே 2022

    Kanaiyazhi May 2022

    Malar: 57 Idhazh: 02 May 2022

    Author:

    ம.ரா

    Ma. Raa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    கட்டுரை – கவிஜி

    கவிதை – சன்மது

    சிறுகதை - ப. தனஞ்ஜெயன்

    கவிதை –சாய்

    கட்டுரை - மு. இராமசுவாமி

    கவிதை - ப்ரியா பாஸ்கரன்

    சிறுகதை - கே.எஸ்.சுதாகர்

    கவிதை - ந.சிவநேசன்

    கவிதை - ரகுநாத் வ

    கவிதை - ரகுநாத் வ

    கோதுமை ரங்கோலி

    சிறுகதை -செய்யாறு தி.தா.நாராயணன்

    கவிதை - நேசன் மகதி

    கவிதை - கி.சரஸ்வதி

    கவிதை – கி.சரஸ்வதி

    கவிதை - சாமி கிரிஷ்

    சிறுகதை - ந. ஜெயரூபலிங்கம்

    சிறுகதை - வாசுதேவன் அருணாசலம்

    கவிதை - புலமி

    கவிதை - தசாமி

    கவிதை - சே கார்கவி

    கவிதை - இளையவன் சிவா

    சிறுகதை –

    தெலுங்கில் பேராசிரியா் தும்மல ராமகிருஷ்ணா, தமிழில் : முனைவர் பா.அ.முனுசாமி

    கவிதை - வீரசோழன் க.சோ. திருமாவளவன்

    கடைசிப் பக்கம் - இந்திரா பார்த்தசாரதி

    மானுடம் போற்றுதம்மா!!

    உச்சத்தில் இருக்கிறது கோடை!

    வெள்ளை அங்கி நிகழ்ச்சியில்

    மாணவர்களை

    மருத்துவக் கல்லூரி முதல்வர்

    சமஸ்கிருத உறுதிமொழியை

    எடுக்க வைத்திருக்கிறார்!

    பொருளாதார நெருக்கடியின்

    முள்வேலி முகாமில்!

    ஒட்டுமொத்த இலங்கை!

    உள்ளம் குளிரத் தமிழக முதல்வரின்

    சட்டமன்றத் தீர்மானம்!

    மக்களைப் போலவே ஜனநாயகத்தையும்

    கொள்ளை நோய்கள் பிடிக்குமாம்

    இந்த நூற்றாண்டின் அறிவுஜீவி என்று

    உலகம் கொண்டாடும்

    ருட்கர் பிரெக்மென்

    ஜனநாயகக் கொள்ளை நோய்களின்

    பட்டியல் தருகிறார்.

    ஆளும் கட்சி பிற கட்சிகளை அழித்தல்

    மற்றவர் மீது நம்பிக்கை இழத்தல்

    சிறுபான்மையினரைப் புறக்கணித்தல்

    வாக்காளர்கள் தேர்தலில் ஆர்வம் இழத்தல்

    ஊழல் அரசியல்வதிகள்

    பணக்காரர்களுக்கு வரிச் சலுகை

    சமத்துவம் இன்மை!

    இப்போது

    இந்தக் கொள்ளை நோய்களின் பிடியில்

    இந்திய ஜனநாயகம்!

    ஆனாலும் ஒவ்வொருவருக்குள்ளும்

    மனசாட்சிக்குக் கட்டுப்பட்ட

    ஒரு குடிமகன் உறங்கிக் கொண்டிருக்கிறான்.

    தமிழ்நாடு முதல்வரின் தனிநபர் தீர்மானம்

    நவீன ஜனநாயகம் எனும் விழிப்புணர்வைத்

    தட்டி எழுப்பி இருக்கிறது.

    இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்

    பரந்து கெடுக உலகு இயற்றியான் என்றார் திருவள்ளுவர்

    தனி ஒருவனுக்கு உணவிலை எனில்

    ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதியார்

    கூழுக்கு ஒருவனுக்கு உணவில்லை எனில்

    கோலை முறித்திடுவோம் என்றார் பாரதிதாசன்

    பாவேந்தர் பாரதிதாசனைத்

    தலையில் ஏந்தி களத்தில் நிற்கிறார்கள்

    இலங்கை மக்கள்!

    அதிகாரம் கைக்கு வந்ததும்

    ஆணவம் தலைக்கு ஏறி

    மக்களை அடிமையாக்கும்

    மனநிலைக்கு இலங்கை காட்டும்

    எடுத்துக் காட்டு இது!

    வல்லரசுகளின் வணிகத்திற்காக

    ஆட்சியாளர்கள் மக்களைப் பிரித்தால்

    மக்களின் முற்றுகையில்

    ஆட்சியாளர்கள் சிறைப்படும்

    வரலாற்றுக்கு மற்றுமொரு சான்று இது!

    மனிதர்கள் கூட்டு வாழ்வை நேசிக்கும்

    மாண்பு உடையவர்கள்!

    மக்களுக்குச் சுயநலம் இயல்பு இல்லை

    அவர்கள் பொதுநல விரும்பிகள்!

    பேரிடர்க் காலங்களில்

    மக்களின் ஆழ்மனம் வெளிப்படும்!

    பயிர்கள் சில பாதுகாப்புக்காக

    இலைகளிலும் முட்களைச் சுமக்கும்!

    பறவைகளும் விலங்குகளும்

    பாதுகாப்புக்காகவும் உணவுக்காகவும்

    பற்களையும் நகங்களையும் பயன்படுத்தும்!

    விலங்குகள் சில தற்காத்துக் கொள்ளத்

    தாக்குவதற்காகவே

    கொம்புகளைத் தூக்கித் திரியும்!

    பாம்புகள் பயமுறுத்தவும் இரை எடுக்கவும்

    பல்லிடுக்கில் நஞ்சு கொண்டு போகும்!

    ஆனால் மனிதர்களிலும் சிலர்

    உணவுக்காக இல்லாமல்

    உயிரை எடுக்கிறார்கள்!

    இவர்கள் மக்களே போல்வர்!

    வெறுப்பில் இல்லை வளர்ச்சி!

    வலிமை உள்ளது மட்டுமே

    வாழ முடியும் என்பது பழைய பொய்யானது.

    மனிதர்களைவிட

    வலிமை மிக்க உயிரினங்களும்

    இப்போது

    மனிதர்களின் அடைக்கலத்தில்!

    சேர்ந்து வாழும் மனித மனமே

    உலக உயிரினங்களின்

    தலைமை ஆகி இருக்கிறது

    உடல் வலிமையின் பரிணாம வளர்ச்சி

    மன வலிமை!

    சமுதாயம் உலக மயமாகி வருகிறது

    உலகம் முழுதும் ஒரே சமுதாயம்

    ஒவ்வொருவரும்

    உலகச் சமுதாயப் பிரதிநிதி என்று

    பங்களிப்பு வழங்கும் காலத்தை நோக்கி

    மக்களை இயக்கும் தலைவர்களுக்காகக்

    காத்துக் கிடக்கிறது பூமி!

    அவநம்பிக்கையில் மக்களை ஆழ்த்தும்

    அராஜகத் தொட்டிலுக்கும் அன்புகாட்டி

    நம்பிக்கையை மீட்டெடுத்திருக்கிறார்

    தமிழக முதல்வர்!

    பொறை எனப்படுவது

    போற்றாரைப் பொறுத்தல் என்று

    சொல்லித்தரும் கலித்தொகைதான்

    ஆற்றுதல் என்பது ஒன்று

    அலர்ந்தார்க்கு உதவுதல் என்றும்

    கற்றுத் தருகிறது!

    கடந்த காலப் பகை ஒதுக்கித்

    துன்புறும் இலங்கை மக்கள் அனைவருக்கும்

    உதவிக்கரம் நீட்டுகிறார் தமிழ்நாட்டு முதல்வர்!

    "வேறுளக் குழுவை எல்லாம்

    மானுடம் வென்றதம்மா" என்று

    சுக்கிரீவனைக் கொண்டு

    இராமரைப் பாராட்டுகிறார் கம்பர்!

    சூரிய மரபின் தோன்றல்

    இராமரின் வெற்றியைக்

    கடவுளின் வெற்றி அல்லது

    அரசனின் வெற்றி என்று சொல்லாமல்

    மானுடம் வென்றது என்று கம்பர் சொல்கிறார்!

    இதோ உதய சூரிய மரபின் மைந்தர்

    முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்

    மனுட நேயத்திற்காகக்

    கட்சி வேறுபாடு கடந்து

    சட்டமன்றத்தில் பாராட்டப் பட்டிருக்கிறார்!

    இன்றைய உலகம்

    பொருட்படுத்துவதில்லை வெற்றி தோல்வியை!

    போற்றுகிறது மானுட நேயத்தை!

    எனவே

    மானுடம் வென்றதம்மா என்பதைவிட

    மே தினக் கொண்டாட்டத்தோடு

    முதல்வரின் தீர்மானத்தை

    இப்படிச் சொல்லலாம்

    மானுடம் போற்றுதம்மா!!

    ***

    கட்டுரை – கவிஜி

    கவிஜி.jpg

    பின்நவீனத்துவம் - ஒரு பார்வை

    நுட்பமான எதிர்வினைகளோடு வினைகளின் தீர்க்கம் குறித்து... குவிந்து எழும் சந்தேகம் உள்பட நாம் அறிந்தும் அறியாமலும் தான் எப்போதும் இருக்கிறது....பின் நவீனத்துவம் என்பதன் சாரத்தில்... கண்டறிய உள்ளதும்... கண்டறிந்த உள்ளதும் நிறைய. அது ஒரு தொடர் கவனிப்பு.

    எங்கு யாரை கேட்டாலும்.. சரியான வரையறைக்குள் அடங்காத... வரைமுறைக்குள் நிகழாத வடிவமாகவே தான் இது இருந்து வந்திருக்கிறது. பொதுவாக பலராலும் எதிர்க்கப்பட்ட... விவாதத்துக்கு உட்பட்ட வாதமாகவே தான் இந்த பின் நவீனத்துவம் எனும் தத்துவம் இருக்கிறது. இது ஒரு இயக்க விதியாக மாறியதை மேலை நாடுகள் அங்கீகரித்தன என்றால்... அதனுள் இருக்கும் நுணுக்கத்தின் வெடிப்பை அவர்கள் எப்படியோ உள் வாங்கி இருந்தார்கள் என்றே பார்க்கிறோம். சிந்தனை உலகில் வெடித்து கிளம்பிய ஒரு உடைப்பு தான் பின்நவீனத்துவம் என்றால்... ஆம் என்பதற்கு ஒரு கூட்டமும்.... இல்லை இல்லவே இல்லை என்பதற்கு ஒரு கூட்டமும்... எப்போதும் எங்கும் இருப்பது தான் அதன் வடிவத்தில் இருக்கும் ரகசியமும் சுவாரஸ்யமும்.

    பின்நவீனத்துவம் என்றாலே நவீனத்துவம் என்றொரு பதமும் முன்னமே வந்து உட்கார்ந்திருப்பதை நாம் உணர்கிறோம். ஒன்று இல்லை என்று சொன்னாலே... ஒன்று அங்கே இருந்திருக்கிறது என்று தானே பொருள். அதன் அடிப்படையில்... நவீனத்துவத்தின் அடுத்த கட்டம் அல்லது அடுத்த மூவ்... என்று பின்நவீனத்துவத்தை சொல்லலாம் தானே.

    18-ஆம் நூற்றாண்டில் உருவான அறிவுக்கான தேடல் கொண்ட உலக மாற்றத்தை நவீனத்துவம் என்று சொன்னார்கள். எங்கெங்கோ எப்படியோ கிடந்தவைகளை ஓர் ஒழுங்குக்குள் கொண்டு வந்தவை அவை. அறிவியலும் விஞ்ஞானமும் சேர்ந்து ஒரு புதிய உலகை பரிணமித்ததை... தர்க்க ரீதியாக அணுகி ஒப்புக் கொண்டது தான் நவீனத்துவம். தொழில்நுட்பத்திலும் தொல்லியலிலும் வெகு தூரம் முன்னே சென்றது நவீனத்துவம். அறிவு சார்ந்து எதை ஒன்றையும் நோக்குவது அதன் ஆழத்துக்கு சென்று முத்தெடுக்கும் அனுபவத்தை மானுட சமூகத்துக்கு அது வழங்கியது என்றும் ஒரு முடிவுக்கு வரலாம்.

    16-ஆம் நூற்றாண்டில் கிறிஸ்துவத்தில் இருந்து உலகம் வெளியேறுகிறது. அதன் நீட்சியில் 18-ஆம்

    Enjoying the preview?
    Page 1 of 1