Aval Mugam Kaana
()
About this ebook
Read more from Vidya Subramaniam
Chinna Chinna Minnalgal Rating: 0 out of 5 stars0 ratingsAtchaya Paathiram Rating: 5 out of 5 stars5/5Ullam Kuliruthadi Rating: 0 out of 5 stars0 ratingsMuthal Paarvai Rating: 5 out of 5 stars5/5Unakkey Uyiraanen Rating: 2 out of 5 stars2/5Oru Naal Iravu Rating: 0 out of 5 stars0 ratingsMaaresa Maangal Rating: 5 out of 5 stars5/5Nadhavadivanavale Kannamma Rating: 4 out of 5 stars4/5Thandanai Rating: 0 out of 5 stars0 ratingsVeezhven Endru Ninaithayo? Rating: 4 out of 5 stars4/5Mann Bommai Rating: 5 out of 5 stars5/5Ottrai Roja Rating: 5 out of 5 stars5/5Androru Naal Rating: 3 out of 5 stars3/5Kasthuri Maane... Rating: 4 out of 5 stars4/5Shanthi Nilava Vendum Rating: 0 out of 5 stars0 ratingsSuzhal Rating: 5 out of 5 stars5/5Ullam Kavarven Rating: 5 out of 5 stars5/5Kanniley Anbirunthal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Enbathu... Rating: 5 out of 5 stars5/5Engirundhu Vanthayadi Rating: 5 out of 5 stars5/5Purusha Nila Rating: 0 out of 5 stars0 ratingsThennangkaatru Rating: 5 out of 5 stars5/5Udal Inge Uyir Ange Rating: 5 out of 5 stars5/5Nilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsKundrena Nimirnthu... Rating: 0 out of 5 stars0 ratingsMadhavi Pon Mayil Rating: 5 out of 5 stars5/5Aagasa Thoothu Rating: 5 out of 5 stars5/5Aasai Thee Valarthen Rating: 5 out of 5 stars5/5Chinnanchiru Kiliye! Rating: 5 out of 5 stars5/5Kalyana Sathurangam Rating: 0 out of 5 stars0 ratings
Related to Aval Mugam Kaana
Related ebooks
Summa Irukkatha Pena Rating: 0 out of 5 stars0 ratingsBalakumaran Sirukathaigal Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsSolladi Sivasakthi Rating: 5 out of 5 stars5/5Kaadhal Palavitham Rating: 0 out of 5 stars0 ratingsPennodu Oru Kanavu Rating: 0 out of 5 stars0 ratingsAinthum Moondrum Onpathu Rating: 1 out of 5 stars1/5Ammavukku Piditha Paadal Rating: 0 out of 5 stars0 ratingsJodi Sera Aasai Rating: 0 out of 5 stars0 ratingsVazhvin Oli Rating: 0 out of 5 stars0 ratingsEn Peyar Ranganayagi Rating: 0 out of 5 stars0 ratingsPulveli Payanangal Rating: 0 out of 5 stars0 ratingsManasellam Maya Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Bommaigal Rating: 0 out of 5 stars0 ratingsMayavan Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsNarthamalai Rating: 0 out of 5 stars0 ratingsMalar Vanam Rating: 0 out of 5 stars0 ratingsAnbin Mugavari Neeyanal... Rating: 0 out of 5 stars0 ratingsSoundarya... Rating: 0 out of 5 stars0 ratingsKoothadiyum Naaru Pettiyum Rating: 0 out of 5 stars0 ratingsIlakkilaatha Kirukkalgal Rating: 0 out of 5 stars0 ratingsOru Manithan Oru Veedu Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsUnmaiyin Darisanam Rating: 0 out of 5 stars0 ratingsAnuradha Ramananin Sirukathaigal Part - 1 Rating: 5 out of 5 stars5/5Arabu Desathil Thagappan Samy Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Kuthiraigal Rating: 0 out of 5 stars0 ratingsUlagam Enbathu... Rating: 0 out of 5 stars0 ratingsMercury Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Sathurangam Rating: 0 out of 5 stars0 ratingsEnakkagava Babu? Rating: 0 out of 5 stars0 ratingsNesathil Nanaintha Nenjangal Rating: 5 out of 5 stars5/5
Reviews for Aval Mugam Kaana
0 ratings0 reviews
Book preview
Aval Mugam Kaana - Vidya Subramaniam
https://www.pustaka.co.in
அவள் முகம் காண
Aval Mugam Kaana
Author:
வித்யா சுப்ரமணியம்
Vidya Subramaniam
For more books
https://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels
பொருளடக்கம்
முன்னுரை
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
முன்னுரை
திருமதி சுகந்தா காளமேகம்
கர்நாடக சங்கீதப் பாடகி
சென்னை - 4
திருமதி வித்யா சுப்ரமணியம் என்னிடம் இந்தப் புத்தகத்திற்கு முன்னுரை எழுதுமாறு கேட்டபொழுது, கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது. நான் அவருடைய கதைகளைப் படித்திருக்கிறேன். ஆனால் எழுதும் அளவிற்கு எனக்குத் திறமை கிடையாது.
இவருடைய கதைகள் எல்லாம் யதார்த்தமானவை. அவர் குறிப்பாகக் குடும்ப உறவுகளை மையமாக வைத்துத்தான் அதிகமாகவும், ஆழமாகவும் எழுதுகிறார். அதனால் எல்லாக் கதாபாத்திரங்களும் நமக்குப் பரிச்சயமானவர்களாகவே தோன்றுகிறார்கள். இவருடைய Plot என்பது வாழ்க்கைதான்.
இந்தக் கதையின் கதாநாயகி சஞ்சனா காணத் துடிக்கும் முகத்திற்குச் சொந்தக்காரியான நிருபமா, நமக்கு ‘ஆசை முகம் மறந்தாயோ’வில் ஏற்கெனவே அறிமுகமானவர்தான். இந்தக் கதையில் தனது கணவனைச் சூழ்நிலையால் பிரிந்து ஆன்மீகத்தில் இழுக்கப்பட்டு இமயத்தில் அமைதியைத் தேடும் அவள் முகத்தைக் காண, சஞ்சனா அவளைத் தேடிச் செல்கிறாள். அவள் முகத்தை சஞ்சனா கண்டாளா என்பதுதான் கதை. தெளிந்த நீரோடையைப்போல் செல்கிறது கதை.
வித்யாவின் சில சிறப்புகள்
1. திருமூலரின் திருமந்திரம், கீதை இவற்றை மிகவும் அழகாகக் கதையுடன் இணைத்திருப்பார். இது ஒரு இனிமையான சங்கீதம்போல் மனதை வருடிக் கொடுக்கும்.
2. இடங்களை இவர் வர்ணிக்கும்பொழுது ஏற்கெனவே பலமுறை இவர் அந்த இடத்திற்குச் சென்றிருக்கிறாரோ என்று பிரமிக்க வைக்கும் அளவுக்கு வர்ணனைகள் அவ்வளவு துல்லியமாக இருக்கும். ‘ஆசை முகம் மறந்தாயோ’வில் கைலாஷ் மானஸரோவரை வர்ணித்திருப்பதே இதற்குச்சான்று. அங்கு செல்வதற்கு முன்னமே அதை அவர் எழுதினார் என்றறிந்தபோது பிரமித்து விட்டேன்.
ராக ஆலாபனை செய்யும்போது கற்பனைகள் பெருகி எடுப்பதற்குச் சமமாக இதைச் சொல்லலாம்.
மொத்தத்தில் இவருடைய கதைகளைப் படிக்கும்போது ஒரு உயர்ந்த சங்கீதக் கச்சேரி கேட்ட உணர்வு ஏற்படுகிறது.
சங்கீதத்தில் லயம் எவ்வளவு சுத்தமாக இருக்க வேண்டுமோ, அதேபோல் கதையில் லயம் தொய்வில்லாமல் செல்வது ஒரு சிறப்பு.
இவர் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். இவர் மேலும் புகழுடன் தீர்க்காயுளுடன் இருக்க, கைலாசநாதர் அருள் புரிவாராக.
முன்னுரை
மதிப்பிற்கும் அன்புக்கும் உரிய திருமதி வித்யா மேடம்,
முதற்கண் ‘ஆசை முகம் மறந்தாயோ’ என்ற இந்தக் கதையை நான் படிக்கக் காரணமாக இருந்த நூலகத்திற்கு மறக்காத என் நன்றிகள்.
ஆரம்பத்தில் இப்புத்தகத்தை நானும் சராசரியாகத்தான் படித்தேன். அதன்பின் ஆழ்ந்து படித்து அதன் வரிகள் அனைத்தும் மனதிலே பசுமையாகப் பதிந்துபோனதற்கு இரண்டு காரணங்கள். முதல் காரணத்தைச் சொல்லுமுன் என்னைப்பற்றிய சில முன்னுரை எழுத அனுமதிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
நான் வங்கிப்பணியிலிருந்து விருப்ப ஓய்வு ஊதியத்தில் வெளிவந்து குடும்பத் தலைவியாய் உள்ள ஒரு சராசரிப் பெண்மணி. என் வாழ்வின் ஆரம்ப கட்டத்திலிருந்தே ஏதோ ஒரு வெறுமை என்னுடனேயே வளர்ந்து வந்தது. அதன் தாக்கத்தினால் நிறையவே நானும் என் குடும்பமும் ஏறக்குறைய புயல், பூகம்பம் என்று சொல்லும் அளவிற்கு அல்லல்பட்டோம். அத்தனைக்கும் ஈடுகொடுத்து என்னை இன்றளவும் இந்தக் கதைக்கு முன்னுரை எழுத வைத்திருப்பதுவரை தோள்கொடுத்த என் கணவரும் என் முத்தான இரு பெண்குழந்தைகளும் கடவுள் எனக்கு அளித்த பரிசு. ‘தெய்வம் மனுஷ்ய ரூபேண’ என்பதுபோல அதலபாதாளத்திலிருந்து என்னை மீட்ட டாக்டர் சந்திரசேகர் அவர்களுக்கு இதைச் சமர்ப்பிக்கிறேன்.
எனக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கும் என் வாழ்வின் பல கேள்விகளுக்கும் விடை அளித்த இந்தக் கதை என்னைப் பொறுத்தவரையில் பகவத்கீதை, குரான், பைபிள். இந்தக் கதையால் எனக்குள் ஏற்பட்ட தாக்கத்தை விவரிக்க முன்னுரையில் பக்கங்கள் போதாது.
ஆன்மீகம் என்பது எளிமையான விஷயம். அதை அடையப் பெரிய முயற்சி ஏதும் தேவையில்லை. சாதாரணப் பாமரனிலிருந்து பெரிய ஞானி வரைக்கும் கிடைக்கக்கூடிய பாரபட்சமற்ற ஒன்றுதான் ஆன்மீகம் என்ற இந்த அரிய உண்மையை இந்தக் கதையின் கதாபாத்திரங்கள் மூலம் தெளிவுபடுத்தி உள்ளீர்கள். இந்தக் கதையில் என்னைப் பாதித்தவர்கள் அனேகமாக எல்லாக் கதாபாத்திரங்களுமே என்றாலும், முக்கியமாகக் கதையின் நாயகி நிருபமா, பவானி, ப்ரணவின் அப்பா ஜெயராமன் மற்றும் தஞ்சாவூர் பெரியவர்.
கதையின் மையமாகிய நிருபமா ஏழே நாட்கள் கணவருடன் வாழ்ந்துவிட்டு, அவனைக் கண்டுபிடிக்க முடியாது என்று தெரிந்ததும் தன் புகுந்த வீட்டில் ஐக்கியமான பண்பைப் பற்றிச்சொல்வதா, சிற்றின்பம்தான் பேரின்பத்திற்குப் படிக்கட்டுகள் என்று கூடுவிட்டுக் கூடு பாய்ந்து ஆதிசங்கரர் கற்றுக் கொடுத்ததை எடுத்துரைத்த நேர்த்தியைச் சொல்வதா, காமம், கருவறையில் இருக்கும் தீபம்போல இருக்க வேண்டும் என்ற அறிவுரையைச் சொல்வதா, ஆத்மா உடம்பு என்ற சட்டையை எப்படி அடைகிறது என்று ஜெயராமன் வாயால் புரியவைத்த பஞ்சாக்னி வித்தையைப் பற்றிச் சொல்வதா, கதாநாயகி, தஞ்சாவூர் பெரியவரின் மார்ஜால பக்தி, மர்கட பக்தியைப் பற்றிய விளக்கம் கேட்டுப் பிரமித்து, நான் பூனைக்குட்டியா, குரங்குக்குட்டியா என்று கேட்க, அவர் இதுவரை எப்படி இருந்தால் என்ன, இனிப் பூனைக்குட்டியாகிவிடு என்று மனதைத் தொட்ட வெகுளித்தனமான வரிகளைச் சொல்வதா, மனுஷனுக்கு எப்பொழுதும் பிரியமானது என்று எதுவும் கிடையாது; எப்பொழுதுமே பிரியமானது ஆத்மா ஒன்றுதான் என்று கூறி, எல்லோருக்குள்ளும் உறைந்து இருக்கிற இறையுணர்வைத் தட்டி எழுப்பிய விசாலமான மனதைப் பற்றிச் சொல்வதா?... அம்மாடி! எனக்கு மூச்சு முட்டுகிறது.
கதை வரிக்குவரி சங்கீதலயத்துடன் சத்தியத்தை மட்டுமே பற்றிக் கொண்டு நகர்கிறது. படிக்கும்பொழுது நம் ஐம்புலன்களும் மந்திரத்திற்குக் கட்டுப்பட்டதைப்போல ஒரு உணர்வு ஏற்படுகிறது. கடைசியில் கதாநாயகி, இதற்குத்தானா, என்னை உன்னிடம் சேர்க்கத்தானா இத்தனை விளையாட்டும்...?!
என்று கயிலைநாதனை நோக்கி மனமுருகிச் சொல்லும்பொழுது, நான் என்னை அந்த நிமிடத்தில் அந்த இடத்தில் பொருத்திக்கொண்டு ஆழ்ந்த அமைதியையும் சாந்தத்தையும் உணர்ந்தபொழுது நான் பட்ட இன்னல்கள் எல்லாம் பனிபோல நீங்கியது போன்ற உணர்வு என்னை இன்னமும் ஆட்கொண்டிருக்கின்றது.
இதனுடைய தொடர்ச்சியாக வரும் இரண்டாம்பாகம், ஒரு தவத்தை, ஒரு மோனத்தைக் கலைத்துவிடுமோ என்ற ஒரு பயம் என் மனதில் இருந்தது. ஆனால் உலகம் யாருக்காகவும் எதற்காகவும் நிற்காமல் இயங்கிக் கொண்டேதான் இருக்கும் என்ற மகாவாக்கியத்தை நிரூபிக்கும் வகையில் நாயகியின் எதிர்காலம் என்ன என்பதை அறிந்து கொள்ளவும், ‘அவள் முகம் காண’ ஆவலாய் இருக்கிறேன். மீண்டும் உங்கள் பெட்டகத்திலிருந்து இன்னொரு பொக்கிஷத்தைப் படிக்கக் கசக்குமா என்ன? படிக்க மனம் பெரிதும் விழைகிறது.
இரண்டாம் காரணத்தைப்பற்றி ஒரு சிறுவரைவு. நம் இதயத்தில் நேர்மை, அன்பு, உற்சாகம், ஒருமைப்பாடு, புத்திக்கூர்மை இவை எல்லாம் மலர்வதுதான் ஆன்மீகம் என்று எடுத்துரைத்து என் மனதை ஒருமுகப்படுத்தி இந்தக் கதையின் ஆழத்தைப் புரியவைத்த வாழும் கலை நிறுவனத்திற்கும், அதை உலகிற்கு அருளிய பூஜ்யஸ்ரீ ஸ்ரீஸ்ரீரவிசங்கர் குருஜிக்கும், இறைவனுக்கும், எனக்கு இறையருளைப் புரியவைத்த தங்களுக்கும் இதை சமர்ப்பணம் செய்கிறேன்.
என்றென்றும் உங்கள் படைப்புகளுக்குத் தலைவணங்கும்,
ரேவதி ராமச்சந்திரன்.
இனிய நட்புக்கு,
நாவலுக்குள்ளே நுழைவதற்கு முன் கொஞ்சம் பேசிவிடுகிறேனே. என்னுடைய ‘ஆசை முகம் மறந்தாயோ?’ படித்தவர்களுக்கு ‘அவள் முகம் காண’ மற்றொரு ஆச்சர்யமாக இருக்கும். அதன் இரண்டாவது பகுதிதான் இது. அதேநேரம் அதைப் படிக்காதவர்களுக்கும் இது புரியும். இதைப் படித்தபிறகு அதைத் தேடிப்பிடித்துப் படிக்கும் ஆவல் வரும். ‘ஆசை முகம் மறந்தாயோ’ எழுதும்போது, நான் கயிலாயம் சென்றதில்லை. ஆனால் ‘அவள் முகம் காண’ எழுதும்போது நான் இரண்டுமுறை கயிலாய தரிசனம் செய்திருந்தேன். முக்கியமாக எவருக்கும் எளிதில் கிடைக்காத ஆத்மலிங்கத்தைத் தரிசிக்கும் பெரும்பேறு எனக்குக் கிடைத்திருந்தது. ‘பார்க்காமல் ஒன்று எழுதினாயே,... பார்த்துவிட்டு இன்னொன்று எழுது’ என்று இறைமை தன் முழு அருளையும் என்மீது வாரி இறைத்தாற்போல் உணர்கிறேன். ‘இதற்குத்தானா அந்த தரிசனம்!’ என்று கண்கலங்கியபடிதான் இதன் கிளைமாக்ஸை எழுதினேன். யாரைக் கொண்டு எதைச்செய்ய வேண்டும் என்று முடிவுசெய்வது இறைமைதான். அதுவே இந்த இரண்டு புதினங்களையும் என்னைக் கொண்டு வடித்திருக்கிறது. மற்றப்படி இதில் என் பெருமை என்று சொல்லிக்கொள்ள எதுவும் இல்லை. இந்த நாவலை எழுதுவது என முடிவு செய்ததும் இதற்கான மிகப்பொருத்தமான தலைப்பைக் கூறிய என் மூத்த மகளுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்.
இதற்கு முன்னுரை எழுதியுள்ள திருமதி சுகந்தா காளமேகம் சாதாரண ஆள் அல்ல. மிகச்சிறந்த பாடகி. 2006இல் என்னோடு கயிலாய யாத்திரை வந்தவர். இவர் குரல் மட்டுமல்ல, இவரும் இனிமையானவர்தான். எனக்கு கர்நாடக சங்கீதம் என்றால் உயிர். ஆனால் இன்றைய சில பாடகிகளின் அதீத அலட்டல்களும், அலங்காரங்களும். ஆபரண மோகங்களும் எனக்கு ஒவ்வாதவை. அவர்கள் ஒரு கோயிலின் சுற்றுப் பிராகாரத்தில் மின்னும் மெர்க்குரி விளக்குகள் என்றால், சுகந்தா காளமேகம் கர்ப்பகிருஹத்தில் அமைதியாகச் சுடர்விடும் தீபம். அதன் மதிப்பு புரிந்தவர்களால் மட்டுமே அதை ரசிக்க முடியும். அவரவர்க்குப் பிடித்த விஷயத்தைக் கொண்டுதான், ஒன்றை எடைபோட முடியும் என்பார்கள். சுகந்தா என் நாவலைத் தன் சங்கீதத்தால் விமர்சித்திருக்கிறார். சந்தோஷமாக இருக்கிறது. அவருக்கு என் நன்றி.
திருமதி ரேவதி ராமச்சந்திரன் எனது ரசிகை. ‘ஆசைமுகம் மறந்தாயோ’ நாவலால் மிகவும் ஈர்க்கப்பட்டவர். பலநூறுமுறை அந்நாவலைப் படித்திருப்பவர். அவரது கருத்துக்களையும் இங்கே கூறியிருக்கிறார். அவருக்கும் என் நன்றி.
இனி நீங்கள் நாவலுக்குள் நுழையத் தடையேதுமில்லை. உங்கள் உணர்வுகளை என்னோடு பகிர்ந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். எனது மின்னஞ்சல் முகவரி: nilavidya@yahoo.com.
என்றென்றும் அன்புடன்
வித்யா சுப்ரமணியம்
அத்தியாயம் 1
சிலீரென வீசிய பெருங்காற்றில் தேகம் ஒருமுறை காலோடு தலை நடுங்கிற்று. சுற்றிலும் பெரிய பெரிய மலைகள். அவள் தன்னந்தனியே நடந்தாள். ஏன் நடக்கிறோம் எங்கு செல்கிறோம் என்று புரியாத நிலையில் ஒவ்வொரு அடியாய் எடுத்துவைத்து மூச்சுவாங்க நடந்தாள்.
இது எந்த இடம்? எப்படி இங்கே வந்தோம்? ஒன்றும் புரியவில்லை. ‘அதோ பார்!’ திடீரென ஒருகுரல் கேட்க, திடுக்கிட்டுத் திரும்பினாள். யாரையும் காணவில்லை. ‘நிமிர்ந்து பார்!’. மறுபடியும் அதேகுரல். அவள் நிமிர்ந்து நோக்கினாள். சிலையாய் நின்றாள்.
மிக அழகான ஒரு பனிச்சிகரம். வெண்பனி படர்ந்திருந்த அந்தச் சிகரத்தில் ஒரு முகம் அவளையே உற்றுப்பார்த்தது. அந்தப் பார்வையின் தீட்சண்யம் தாங்கமுடியாமல் அவள் உடல் துவண்டது. கண்களை மூடினாள். கீழே விழுந்துவிடுவோம் போலத் தோன்ற… பிடிமானம் தேடிக் கைகள் காற்றில் ஆடின. உடல் மண்ணில் மெல்லச் சரிய…
சஞ்சனா திடுக்கிட்டுக் கண்விழித்தாள். உடல் வியர்த்திருக்க, படுக்கையிலிருந்து எழுந்தமர்ந்தாள். என்ன கனவு இது! யோசித்தபடி அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து ஒருவாய் குடித்தாள். அதன் பிறகு உறக்கம் வரவில்லை. விடிவிளக்கின் ஒளியில் மணியைப் பார்த்தாள். மூன்றுமணி.
சரியான பிரம்மமுகூர்த்தம். அது என்ன இடம்? எவ்வளவு அழகான மலைகள்! எத்தனை அழகான முகம்! மலைக்கு முகம் இருக்குமா? சஞ்சனா கண்மூடி மீண்டும் அந்தக் கனவிற்குள் புக முயன்றாள். அதன் இனிமையில் லயித்தபடி வெகுநேரம் கிடந்தாள். அப்படியே தூங்கிப் போனாள்.
உறக்கம் கலைந்தபோது நன்கு விடிந்திருந்தது. புது ஊர், புதுச்சூழலில் தாய் தந்தையைப் பிரிந்திருக்கிறோம் என்ற உணர்வுடன் எழுந்தாள். எல்லாம் புதுமுகங்கள். இந்தியாவின் வெவ்வேறு மூலைகளிலிருந்தெல்லாம் வந்திருக்கிற புத்திசாலி இளைஞர்கள்.
ஹைதராபாத் நகரின் ஐஎஸ்பி வளாகத்தில் இனிய சூழலில் இருந்த ஒரு தங்கும் விடுதியில் ஒரு அழகிய அறை அவளுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. நான்கு படுக்கையறைகளும் அதற்கு நடுவே ஒரு பொதுவான வரவேற்பறையும் ஒரு சிறிய நவீனச் சமையல் மேடையுமாய் இருந்த அந்த அபார்ட்மெண்டில் தற்சமயம் அவள் மட்டுமே இருந்தாள். மற்றவர்கள் அநேகமாக இன்றோ நாளையோ வந்துவிடக்கூடும். இன்னும் வகுப்புகள் ஆரம்பிக்கவில்லை.
அப்பாவும் அம்மாவும் அவளை விட்டுவிட்டு நேற்றுக் காலையே கிளம்பிச் சென்றுவிட்டார்கள். முதன்முறையாக வாழ்க்கையில் அவர்களைப் பிரிந்திருக்கிறாள். அம்மாகூட இயல்பாக இருந்தாள். அப்பாதான் மிகுந்த கவலையோடு இருந்தார்.
தனியா இருந்துடுவியா சஞ்சனா?
மீண்டும் மீண்டும் கேட்டார்.
நா மேல்படிப்புக்காக வந்திருக்கேம்ப்பா. எனக்கு இருபத்தோரு வயசாகுது. என்னைப் பார்த்துக்க எனக்குத் தெரியும். கவலைப்படாம கிளம்புங்கப்பா...
அதுக்கில்லடா… நினைச்சப்ப பார்க்க முடியாது. அடிக்கடி வரவும் முடியாது…
"யார் சொன்னாங்க? இங்க இல்லாத வசதியே கிடையாது. பாத்ரூம்லகூட ஃபோன்வசதி இருக்கு. இருபத்துநாலு மணிநேரமும் நல்ல வேகத்தில் இண்டர்நெட் வசதி இருக்கு. எப்ப வேணா பேசிக்க செல்போன் இருக்கு. மும்பைலேர்ந்து விமானம் ஏறினா மிஞ்சிப்போனா மூணு மணிநேரம். பறந்து வந்து என்னைப் பார்க்கலாம். என் விருந்தாளியா என்னோட நாலஞ்சுநாள் தங்கிட்டுப்