Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Karumbellam Kettupaar...
Karumbellam Kettupaar...
Karumbellam Kettupaar...
Ebook123 pages46 minutes

Karumbellam Kettupaar...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

புதுப் புது சர்க்கரை ஆலைகள்

புதிய புதிய சாகுபடியாளர்கள்

புதிய புதிய பணியாளர்கள்

புதுப் புது தொழில் நுட்பங்கள்

இவர்களை - இவைகளை மேலான்மை நோக்கில் நிர்வகிக்க கரும்பு சம்பந்தப்பட்ட அனைத்தையும் ஒருங்கிணைத்து சுருக்கமாகவும் - விளக்கமாகவும் தகவல் தர இந்நூல் மூலம் முனைந்திருக்கிறேன்.

இதனுள் –

பல கேள்விப்பட்டவை

பல படித்தவைகள்

பல பழக்கப்பட்டவைகள்

இவை அனைத்தையும் ஒருங்கே செயல்படுத்தினால் கரும்பில் கட்டாயம் நல்ல மகசூலாகும் - சர்க்கரை மீட்பும் கிடைக்கும்.

அதற்காகவே தொகுக்கப்பட்ட இந்நூலினைத் தொகுக்கச் செய்தி கொடுத்து உதவிய அத்துணை பேருக்கும் - எனது இனிய நன்றி.

இந்நூல்

கரும்பு நிர்வாகம் செழிக்கக்

கையில் இருக்க வேண்டிய நூல்.

Languageதமிழ்
Release dateMar 24, 2020
ISBN6580131705155
Karumbellam Kettupaar...

Read more from Dr. Ar. Solayappan

Related to Karumbellam Kettupaar...

Related ebooks

Related categories

Reviews for Karumbellam Kettupaar...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Karumbellam Kettupaar... - Dr. AR. Solayappan

    http://www.pustaka.co.in

    கரும்பெல்லாம் கேட்டுப் பார்…

    (கரும்பு சாகுபடி மற்றும் கரும்பு நிர்வாகம் பற்றிய முழு விளக்க நூல். கரும்பு சாகுபடி – சாகுபடி சம்பந்தப்பட்ட எல்லாமும் உள்ளது இந்த நூலில். இது கரும்பு சாகுபடியாளர்களுக்கு, சர்க்கரை ஆலை பணியாளர்களுக்கு கரும்பு நிர்வாகிகளுக்கு – இப்படி எல்லோருக்குமான தொகுப்பு நூல்.)

    Karumbellam Kettupaar...

    Author:

    முனைவர் அரு. சோலையப்பன்

    Doctor Aru. Solaiappan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/drarusolaiappan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    காணிக்கை

    நுழைவாயில்

    1. கரும்புக்கு உழவியல் குறிப்புகள்

    2. கரும்புக்குப் பயிர் பாதுகாப்பு

    3. கரும்பு சாகுபடிச் செலவுகள்

    4. கரும்பு நாற்றங்கால் திட்டம்

    5. மண் - மண் சார்ந்தவை

    6. கரும்புக்கு - விரிவாக்கம்

    7. கரும்பு ஆராய்ச்சிகள்

    காணிக்கை

    இந்நூல் - என்னைக் கரும்பின்பால்

    காதல் கொள்ளச் செய்த

    கரும்பாசிரியன்

    பேராசிரியர் பி. எஸ். சஞ்சீவி அவர்களுக்கு,

    அன்புடன்

    'அருசோ'

    *****

    நுழைவாயில்

    புதுப் புது சர்க்கரை ஆலைகள்

    புதிய புதிய சாகுபடியாளர்கள்

    புதிய புதிய பணியாளர்கள்

    புதுப் புது தொழில் நுட்பங்கள்

    இவர்களை - இவைகளை மேலான்மை நோக்கில் நிர்வகிக்க கரும்பு சம்பந்தப்பட்ட அனைத்தையும் ஒருங்கிணைத்து சுருக்கமாகவும் - விளக்கமாகவும் தகவல் தர இந்நூல் மூலம் முனைந்திருக்கிறேன்.

    இதனுள் –

    பல கேள்விப்பட்டவை

    பல படித்தவைகள்

    பல பழக்கப்பட்டவைகள்

    இவை அனைத்தையும் ஒருங்கே செயல்படுத்தினால் கரும்பில் கட்டாயம் நல்ல மகசூலாகும் - சர்க்கரை மீட்பும் கிடைக்கும்.

    அதற்காகவே தொகுக்கப்பட்ட இந்நூலினைத் தொகுக்கச் செய்தி கொடுத்து உதவிய அத்துணை பேருக்கும் - அத்துணை வெளியீடுகளுக்கும் எனது இனிய நன்றி.

    இந்நூல்

    கரும்பு நிர்வாகம் செழிக்கக்

    கையில் இருக்க வேண்டிய நூல்.

    அன்புடன்

    'அருசோ'

    *****

    1. கரும்புக்கு உழவியல் குறிப்புகள்

    1. கரும்பு - பொதுக் குறிப்புகள்

    எத்தனையோ பயிர்கள் நமது நாட்டில் சாகுபடியாகின்றன. அவ்வாறு நமது நாட்டில் சாகுபடி செய்யப்படும் வணிகப் பயிர்களில் கரும்பு ஒரு முக்கிய வணிகப் பயிராகும். இந்திய நாட்டின் சில பகுதிகளைத் தவிர அனைத்துப் பகுதிகளிலும் சாகுபடி செய்யப்படும் பயிர்களில் கரும்பும் ஒன்று. ஆண்டுதோறும் 40 இலட்சம் ஹெக்டேரில் கரும்பு பயிரிடப்பட்டு 280 மில்லியன் டன்கள் கரும்பு உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ் நாட்டின் சராசரி மகசூல் ஹெக்டேருக்கு 100 டன்கள் என இருந்தாலும் அகில இந்திய அளவில் சுமார் 70 டன்கள் மட்டுமே கிடைக்கிறது. பெருகிவரும் மக்கள் தொகையைக் கணக்கெடுத்து ஆய்வு செய்ததில் 2025ம் ஆண்டு நாம் விளைவிக்க வேண்டிய கரும்பின் அளவு 625 மில்லியன் டன்கள் ஆகும். இருக்கும் நிலம் பல்வேறு காரணங்களுக்குப் பயன்படுத்துவதால் பரப்பளவு அதிகமாகும் வாய்ப்பு குறைவாக இருக்கிறது. ஆகவே சராசரி மகசூலை உயர்த்துவதே குறியீட்டை அடைய ஒரே வழியாக இருக்க முடியும்.

    கரும்பு ஒரு பழமையான பயிர். நினைவு தெரிந்த நாட்களில் இருந்து நமது நாட்டில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 3000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட வேதங்களில் கூட கரும்பைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அவ்வளவு பழமையான கரும்புப் பயிர் நியு கினியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

    எது எப்படியோ - கரும்பு சாகுபடி முறைகளை தெரிந்து கொள்வதற்கு முன் கரும்பின் பாகங்களைப் பற்றிப் பார்ப்போம்:

    கரும்பு

    இலை மடல் (இலைப் பட்டை)

    கணு

    இடைக்கணு

    பருக்கள்

    பூக் கொத்து (அம்பு)

    வேர்கள்

    தட்ப வெப்ப நிலை

    வெப்ப அளவைப் பொறுத்த வரையில் 24 டிகிரி செல்ஷியஸ் முதல் 30 டிகிரி செல்ஷியஸ் வரையுள்ள வெப்பத்தில் கரும்பு நன்றாக வளர்கிறது. 12 டிகிரி செல்ஷியஸ் அளவிற்கு குறையும்போது முளைப்புத் திறன் பாதிக்கப்படுகிறது. எனவே தான் குளிர் பிரதேசங்களான ஊட்டி, காஷ்மீர் போன்ற பகுதிகளில் கரும்பு சாகுபடி செய்யப்படுவதில்லை. மழை அளவைப் பொறுத்த வரையில் வருடத்திற்கு 1200mm மற்றும் அதற்கு மேல் மழை பெய்யும் பகுதிகளில் கரும்பு நன்றாக வளர்கிறது. மழை அளவை விட வருடம் முழுவதும் - மழை சீராகப் பெய்வது கரும்பு வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது. மேலும் மழை பொழியும்போது கரும்பு எந்த வளர்ச்சிப் பருவத்தில் இருக்கிறது என்பதும் முக்கியமான ஒன்றாகும். முதிர்ச்சிப் பருவத்தில் இருக்கும் கரும்பு அதிகமான மழையை எதிர்கொள்ளும் போது அதனுடைய சர்க்கரைக் கட்டுமானம் பாதிக்கப்படுகிறது.

    கரும்பு அதிக சூரிய ஒளியை விரும்பும் பயிர். சூரிய ஒளியை அதிக அளவில் பயன்படுத்தி சத்துக்களைப் பயிரில் சேர்ப்பதின் மூலம் சர்க்கரையை அதிகம் சேர்க்க முடிவது இதன் நல்ல குணமாகும். எனவே ஒரு நாளைக்கு 7 முதல் 9 மணி நேரம் வரை சூரிய ஒளி இருக்கும் பகுதிகள் கரும்பு சாகுபடிக்கு உகந்தது.

    மேற்குறிப்பிடப்பட்டுள்ள சீதோஷ்ண நிலை காரணிகள் அனைத்தும் ஒரே இடத்தில் அனுகூலமாக அமைய வாய்ப்புகள் இல்லை. இதனால் தான் இந்தியாவின் பல பகுதிகளிலும் கரும்பு சாகுபடி செய்யப்பட்டாலும் ஒரு இடத்தில் மகசூல் கூடுதலாகவும் இன்னொரு இடத்தில் சர்க்கரை மீட்புக் கூடுதலாகவும் கிடைக்கிறது. எனவே இருக்கின்ற சீதோஷ்ண நிலையைக் கருத்தில் கொண்டு சாகுபடி முறைகள், இரகங்கள் போன்றவைகளை மாற்றியமைத்து ஆலை சிறப்பாக செயல்பட வழிவகுப்பது தற்போது இயங்கி வரும் சர்க்கரை ஆலைகளின் கரும்புத் துறையின் மிக முக்கியமான பணியாகும்.

    2. கரும்பு நடவுப் பருவங்கள்

    வருடம் முழுவதும் கரும்பு சாகுபடி என்பது நம் நாட்டில் ஒரு சில பகுதிகளில் சாத்தியம் என்றாலும் நடவு செய்யப்படும் மாதங்களை வைத்து நான்கு பட்டங்கள் / பருவங்களாகப் பிரிக்கப்படுகிறது.

    முன்பட்டம் - அக்டோபர் முதல் ஜனவரி

    நடுப்பட்டம் - பிப்ரவரி, மார்ச்

    பின்பட்டம் - ஏப்ரல், மே, ஜூன்

    தனிப்பட்டம் - ஜூலை, ஆகஸ்ட்

    அந்தந்தப் பகுதிகளில் நிலவும் தட்ப வெப்ப நிலைகளைப் பொறுத்து இந்த நடவுப் பட்டங்கள் ஆலைக்கு ஆலை மாறுபட வாய்ப்புள்ளது.

    நம்முடைய தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் முன் பட்டம் மிகவும் ஏற்றது. ஏனென்றால்,

    கரும்பு முளைப்புச் சீராக இருக்கும்.

    வளர்ச்சி சீராக இருக்கும்.

    பூச்சி நோய் தாக்குதல் குறைவு.

    கரும்பு வெட்டி ஆலைக்கு அனுப்ப எளிது -

    Enjoying the preview?
    Page 1 of 1