Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sutrupura Soozhal Sinthanaigal - Part 2
Sutrupura Soozhal Sinthanaigal - Part 2
Sutrupura Soozhal Sinthanaigal - Part 2
Ebook86 pages28 minutes

Sutrupura Soozhal Sinthanaigal - Part 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

புவி வெப்பமயமாதலின் தாக்கம் உலகளாவிய வகையில் வெளிப்பட்டு வருகிறது. அதற்கான விழிப்புணர்வு அனைவரிடமும் ஏற்படுத்தப்பட வேண்டிய இந்நேரத்தில் வெளிவந்திருக்கிறது இந்த முக்கியமான நூல்! திருச்சி, மதுரை, சென்னையில் இயங்கி வரும் அகில இந்திய வானொலி நிலையங்களின் வாயிலாக ஒலிபரப்பட்ட சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உரைகளின் தொகுப்பு நூல் இது. வானொலி நிலைய நேயர்களால் பெரிதும் பாராட்டப் பெற்ற இந்த உரைகள் இதுவரை ஆறு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் இரண்டாம் பாகம் இது!

ஓஜோன் உறையின் அவசியம், ஆர்க்டிக் உருகுகிறது!, பழைய காடுகளைக் காப்போம், சுத்த நீர் சேமிப்போம்,கடல் வளம் காப்போம், கணிணிகளால் ஏற்படும் மாசுகளைத் தவிர்ப்போம், மரங்களை வெட்டாதீர்கள்! மழைக்காடுகள் என்னும் இயற்கை அதிசயம்!, காடுகள் இல்லாத எதிர்காலம்!, புவி வெப்ப உயர்வு!, துருவக்கரடிகளுக்கு அபாயம்!, உலகின் ஒப்பற்ற ஒரு கிராமம், சுற்றுப்புறச் சூழலைப் பற்றிய சில உண்மைகள்! , பெட்ரோலுக்கு மாற்று, சுற்றுப்புறத்தைப் பாதுகாக்கும் சில மாற்று எரிபொருள்கள், ஹைட்ரஜன் வாகனங்கள், வியாதிகளைப் போக்கும் வேப்ப மரம்!, பூமி கிரகத்தின் சர்வதேச ஆண்டு!,சூரிய ஆற்றலைப் பயன்படுத்துவோம்!, நமது சுற்றுப்புறச் சூழல் உரிமைகள் உள்ளிட்ட நாற்பது கட்டுரைகள் இந்த இரண்டாம் பாகத்தில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தகுந்தது. இந்த இரண்டாம் பாகம் அனைவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய ஒன்று! பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்குப் பரிசாக அளிக்க உகந்த நூல் இது.

Languageதமிழ்
Release dateApr 16, 2024
ISBN6580151010996
Sutrupura Soozhal Sinthanaigal - Part 2

Read more from S. Nagarajan

Related to Sutrupura Soozhal Sinthanaigal - Part 2

Related ebooks

Reviews for Sutrupura Soozhal Sinthanaigal - Part 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sutrupura Soozhal Sinthanaigal - Part 2 - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் - பாகம் 2

    Sutrupura Soozhal Sinthanaigal - Part 2

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    பொருளடக்கம்

    இரண்டாம் பதிப்பின் முன்னுரை

    1. சுற்றுப்புறச் சூழ்நிலை மேம்பட இணையத்தைப் பயன்படுத்துவோம்

    2. இணையத்தால் சுற்றுப்புறச் சூழல் கேட்டைத் தவிர்க்கலாம்!

    3 ஓஜோன் உறையின் அவசியம்!

    4. பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்ப்போம்!

    5. கடல் நீர் சூடாகும் அபாயம்!

    6. ஆர்க்டிக் உருகுகிறது!

    7. பழைய காடுகளைக் காப்போம்!

    8. ஓஜோன் துளை

    9. சுத்த நீர் சேமிப்போம்

    10. கடல் வளம் காப்போம்!

    11. கணிணிகளால் ஏற்படும் மாசுகளைத் தவிர்ப்போம்!

    12. மழைக்காடுகள் மனிதரின் செல்வம்!

    13. மழைக்காடுகள் தரும் செல்வம்!

    14. மரங்களை வெட்டாதீர்கள்!

    15. கரியாலும் காகிதத்தாலும் பாதிக்கப்படும் சுற்றுப்புறச் சூழல்!

    16. மழைக்காடுகள் என்னும் இயற்கை அதிசயம்!

    17. மழைக்காடுகளின் பாதுகாப்பு!

    18. காடுகள் இல்லாத எதிர்காலம்!

    19. புவி வெப்ப உயர்வு!

    20. துருவக்கரடிகளுக்கு அபாயம்!

    21. உலகின் ஒப்பற்ற ஒரு கிராமம்

    22. சிந்தனை செய்வோம்!

    23. சுற்றுப்புறச் சூழலைப் பற்றிய சில உண்மைகள்!

    24. புதிய கோஷம் : குறைவாகப் பயன்படுத்துவோம்!

    25. சின்னச் சின்ன செயல்கள்!

    26. பெட்ரோலுக்கு மாற்று

    27. சுற்றுப்புறத்தைப் பாதுகாக்கும் சில மாற்று எரிபொருள்கள்

    28. ஹைட்ரஜன் வாகனங்கள்

    29. வியாதிகளைப் போக்கும் வேப்ப மரம்! -1

    30. வியாதிகளைப் போக்கும் வேப்ப மரம் - 2

    31. நீரைச் சுத்தமாக்க சுலபமான வழி!

    32. பூமி கிரகத்தின் சர்வதேச ஆண்டு!

    33. விஞ்ஞானிகளின் எச்சரிக்கை

    34. நீர்ப் பாதுகாப்பு

    35. சூரிய ஆற்றலைப் பயன்படுத்துவோம்!

    36. சுத்த நீர் தட்டுப்பாடு

    37. நீர் வளம் காப்போம்!

    38. நீரை வீணாக்காமல் இருக்க வழிகள்!

    39. சுற்றுப்புறச் சூழல் காக்க உபயோககரமான குறிப்புகள்

    40. நமது சுற்றுப்புறச் சூழல் உரிமைகள்

    இரண்டாம் பதிப்பின் முன்னுரை

    நாம் வாழும் இந்த பூமியின் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்ச்சி உலகெங்கும் வெகு வேகமாகப் பரவி வருவது மகிழ்ச்சிக்குரிய செய்தி/

    நமது நாட்டிலும் சுற்றுப்புறச் சூழலைக் காக்க நமது அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் மிகுந்த ஆதரவைத் தந்து வருகின்றனர்.

    சுற்றுப்புறச் சூழல் பற்றிய விழிப்புணர்வை அகில இந்திய வானொலி நிலையங்கள் ஏற்படுத்தி வருவது பாராட்டுக்குரிய ஒரு நற் செயல்.

    அகில இந்திய வானொலி நிலையங்களால் ஒலிபரப்பப்பட்ட எனது உரைகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

    இந்த உரைகள் இது வரை ஆறு பாகங்களாக வெளியிடப் பட்டுள்ளது.

    திருச்சி, மதுரை, சென்னையில் இயங்கி வரும் அகில இந்திய வானொலி நிலையங்களின் அதிகாரிகள் பலரும் இப்படிப்பட்ட உரைகளைத் தயாரித்து வழங்க எனக்கு உத்வேகம் ஊட்டினர். அவர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகுந்த சமுதாயப் பொறுப்புணர்ச்சியுடன் இவர்கள் ஆற்றி வரும் பணிகள் வெளி உலகத்தில் இன்னும் அதிகமாகப் போற்றப்பட வேண்டும். அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் கூடிய இவர்களது சேவை வியக்க வைக்கும் ஒன்று.

    பலரின் வேண்டுகோளுக்கிணங்க டிஜிடல் வடிவிலும், அச்சுப் பதிப்பாகவும் இரண்டாம் பாகத்தை மறு பதிப்பாகக் கொண்டு வர முன் வந்துள்ள பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தக்க ஆதரவைத் தந்த அனைவருக்கும் எனது நன்றியை மீண்டும் இங்கு பதிவு செய்கிறேன்.

    பங்களூரு

    ச. நாகராஜன்

    30-3--2024

    1. சுற்றுப்புறச் சூழ்நிலை மேம்பட இணையத்தைப் பயன்படுத்துவோம்

    இன்று தகவல் தொழில்நுட்பம் உலகில் ஏராளமான விந்தைகளைச் செய்து வருகிறது. சுற்றுப்புறச் சூழலைக் காக்க இணையம் நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவி புரிகிறது. அதைப் பயன்படுத்த

    Enjoying the preview?
    Page 1 of 1